என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை மகன்"

    • டெல்லியில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் இருவரும் சேர்ந்து படித்து வந்தோம்.
    • மகனுடன் சேர்ந்து நாட்டுக்கு உழைப்பதில் பெருமையாக உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள உதய ராம்பூர் நாக்லா கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் (வயது45). முன்னாள் ராணுவ வீரர்.

    இவர் கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்று டெல்லியில் உள்ள ராணுவ அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். யஷ்பாலின் மூத்த மகன் ஷேகர் (21) இவர் கடந்த 2½ ஆண்டுகளாக போலீஸ் வேலைக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். மகனின் ஈடுபாட்டை பார்த்து தானும் போலீஸ் வேலைக்கு படித்தால் என்ன என்று, தந்தை யஷ்பாலும் போலீஸ் வேலைக்கு தன்னை தயார் செய்ய தொடங்கினார்.

    எஸ்.சி. பிரிவின் கீழ் வயது தளர்வு பெற்று, மேலும் முன்னாள் ராணுவ வீரராக இருந்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கான மறு ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வில் பங்கேற்கவும் அனுமதி பெற்றார்.

    இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் போலீஸ் வேலைக்கு 60 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான தேர்வும் நடந்தது. இந்த தேர்வை தந்தை யஷ்பாலும், மகன் ஷேகரும் எழுதினர். தேர்வு முடிவுகள் தந்தை மகன் இருவருக்கும் ஆனந்த அதிர்ச்சியை தந்தது. தேர்வில் இருவரும் வெற்றி பெற்றனர். இது அந்த கிராமத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    பணி ஆணையை உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரிடமிருந்து இருவரும் பெற்றனர்.

    இதுகுறித்து தந்தை யஷ்பால் கூறியதாவது:-

    கடந்த 2½ ஆண்டாக என் மகனுடன் சேர்ந்து போலீஸ் வேலைக்கு தயாராகி வந்தேன். டெல்லியில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் இருவரும் சேர்ந்து படித்து வந்தோம்.

    அன்றாடம் நூலகத்திற்கு நானும் மகனும் சேர்ந்தே சென்று எங்களை தயார் படுத்தினோம். ஆனால் நாங்கள் தந்தை மகன் என்று யாருக்கும் தெரியாது. தேர்வு எழுதுவதற்கு முன்பாக போலீஸ் சூப்பிரண்டு ஞானஜெய் சிங்கிடம் வாழ்த்து பெற சென்ற போது அவரிடம் உண்மையை சொன்னேன்.

    தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது எல்லோருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும் என அவர் எங்களை ஊக்குவித்தார். நானும் மகனும் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மகனுடன் சேர்ந்து நாட்டுக்கு உழைப்பதில் பெருமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    மேட்டுப்பாளையத்தில் பணம் கொடுக்க மறுத்ததால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி புதுநகரை சேர்ந்தவர் மீனாட்சி. (வயது 50). இவருக்கும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அருகே மதனகோபாலபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராதாகிருஷ்ணனுக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். மீனாட்சி தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ராதாகிருஷ்ணன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண் மூலம் அருணகிரி என்ற மகன் உள்ளார்.

    விவாகரத்து பெற்றாலும் ராதாகிருஷ்ணன் அடிக்கடி மீனாட்சியிடம் பணம் கேட்டு மிரட்டி வாங்கி செல்வார். அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் லாரியை பழுது பார்ப்பதற்காக மீனாட்சியிடம் ரூ.1 லட்சம் கேட்டார். ஆனால், மீனாட்சி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் தனது 2-வது மனைவி மகன் அருணகிரியுடன் சேர்ந்து மீனாட்சியை தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த மீனாட்சி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து ராதாகிருஷ்ணன் மற்றும் அருணகிரி ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்.

    ×