search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father and son"

    • வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.
    • இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியில் ரவி-ரங்கநாயகி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு இவர்களுக்கு தெரிந்த சிவக்குமார்-பிரவீனா ஆகியோர் தனது உறவினர் உதயகுமார் என்பவர் பவானியில் புதிதாக ஜவுளி நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும், அதற்கு பங்குதாரர்கள் வேண்டும் என கூறியுள்ளனர்.

    மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் அதிக லாபம் கிடைக்க உள்ளதாக ஆசை வார்த்தை கூறியு ள்ளனர்.இதனை நம்பிய தம்பதியினர், ரங்கநாயகிற்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை உதய குமா ரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் பவானியில் விநாயகா இன்டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    தொடர்ந்து ரங்கநாயகியின் சொத்து ஆவணங்களை சிவக்குமார், உதயகுமார், பிரவீனா மற்றும் 2 ஆகிய 5 பேர் கும்பலாக சேர்ந்து கொண்டு வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.

    பின்னர் ரங்கநாயகி தான் ஏமாற்றப்பட்டது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனை யடுத்து போலீசார் தலைமறை வான 5 பேரையும் தேடி வந்தனர். இதில் தாராபுரத்தை சேர்ந்த ஜவுளி கடையில் பணியாற்றி வரும் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த மோசடிக்கு முக்கிய காரணமான சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    குடவாசல் அருகே அ.தி.மு.க. கொடிமேடை இடிப்பு பிரச்சினையில் அ.தி.மு.க. தொண்டரை அடித்துக் கொலை செய்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
    குடவாசல்:

    குடவாசல் அருகே பருத்தியூர் பள்ளிகூட தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது45). அ.தி.மு.க. தொண்டர். இவரது வீட்டின் எதிரே அ.தி.மு.க. கொடி மேடை இருந்துள்ளது. அதனை தேர்தல் நேரத்தில் அரசு துறை அதிகாரிகள் இடித்துவிட்டனர். அந்த கற்களை அதே தெருவை சேர்ந்த ராமசந்திரன் மகன் ராஜப்பா (40) மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் அள்ளி சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த குமார் தகாத வார்த்தைகளை பேசி நான் கட்டிய கொடிமேடை கற்களை யாரோ அள்ளி சென்றுவிட்டனர் என்று திட்டியுள்ளார்.

    இதனை ராஜப்பா தட்டிக்கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து ராஜப்பா இரும்பு கம்பியை எடுத்து வந்து குமாரை தாக்க முயன்றுள்ளார். அப்போது ரம்யா என்ற பெண் தடுத்து இரும்பு கம்பியை பிடுங்கிவிட்டார். அந்த சமயத்தில் அருகில் கிடந்த கருவேலம் கட்டையை எடுத்து ராஜப்பா, குமாரை தாக்கியுள்ளார். இதில் குமாரின் மண்டை உடைந்தது. அப்போது அங்கு ஓடி வந்த ராஜப்பாவின் தந்தை ராமச்சந்திரன் (60) 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து குமாரை அதில் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்து விட்டார்.

    ராமச்சந்திரன் மருத்துவமனையில் தனது மகன் ராஜப்பா கட்டையால் அடித்ததை மறைத்து குமார் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்து அடிப்பட்டதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

    இதுகுறித்து குமாரின் மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ் பெக்டர் வெங்கடாஜலம், ராஜப்பா, ராமச்சந்திரன் ஆகியோர் மீது கொலைவழக்கு பதிவுசெய்து ராமச்சந்திரன், அவரது மகன் ராஜப்பா ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் தகராறு செய்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அய்யப்பன் என்ற நிஜாம் (வயது 39) கூலித் தொழிலாளி. இவருக்கும், சாத்தான்குளத்தை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரியா நெல்லையில் நர்சாக உள்ளார். திருமணம் ஆன 2 ஆண்டுகளில் கணவன்-மனைவி பிரிந்து விட்டனர்.

    இந்தநிலையில் அய்யப்பனுக்கு திருச்செந்தூர் அருகே காட்டுமுகதும்பள்ளி அம்பேத்கர்புரம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சரோஜா என்ற பாத்திமா (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. சரோஜாவுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் ரமேஷ் (23). கட்டிட தொழிலாளி.

    அய்யப்பன் அடிக்கடி சரோஜாவிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று இதுபோல் அவர் சரோஜாவிடம் தகராறு செய்ததோடு அவரை தாக்கினாராம். இதுபற்றி சரோஜா தனது மகன் ரமேசிடம் கூறினார். இதனால் ர‌மேசுக்கு அய்யப்பன் மீது கோபம் ஏற்பட்ட‌து.

    இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி அய்யப்பன், சரோஜாவை பார்க்க வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் அருகே அரிவாளுடன் பதுங்கி இருந்த ரமேஷ், அய்யப்பனை வழிமறித்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இற‌ந்தார்.

    இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை வலைவீசி தேடி வந்தனர். இதை தொடர்ந்து கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ரமேஷ் சரணடைந்தார். இந்நிலையில் கொலைக்கு தூண்டியதாக சரோஜாவை கோவில்பட்டி தாலுகா போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் நேற்று போலீசார் சரோஜாவின் தம்பி சங்கர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதன் விபரம் வருமாறு:-

    சரோஜாவுடன் அய்யப்பன் அடிக்கடி தகராறு செய்து அவரை அடித்து தாக்கியுள்ளார். இது குறித்து அய்யப்பனிடம் சங்கர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், சங்கரை தாக்கியுள்ளார். இதையடுத்து தன்னை தாக்கிய அய்யப்பனை கொலை செய்ய சங்கர் திட்டம் தீட்டியுள்ளார். இதனை தனது சகோதரியிடம் கூறினார். இதை தொடர்ந்து சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த அய்யப்பனை சரோஜா, அவரது மகன் ரமேஷ் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் இந்த கொலையில் சங்கரின் 17 வயது மகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சங்கர் மற்றும் அவரது 17 வயது மகனை நேற்று கைது செய்தனர்.

    பண்ருட்டி 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து பண்ருட்டிக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நேற்று மாலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், போலீஸ்காரர் விமல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். போலீசார் அந்த மொபட்டை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனையிட்டனர். அதில் 152 மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த கோவிந்தன் (வயது 44), அவரது மகன் வெங்கடேசன் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரிந்தது.

    உடனே 2 பேரையும் பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய கோவிந்தன், அவரது மகன் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். கடத்தப்பட்ட மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சொத்து தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

    சங்கரன்கோவில்:

    பனவடலிசத்திரம் அருகே உள்ள கற்படத்தை சேர்ந்தவர் வெயிலுமுத்து மனைவி அங்கயற்கண்ணி (வயது 35). இதே ஊரை சேர்ந்த இவரின் தாய்மாமா ராஜேந்திரன் (49). ராஜேந்திரனிடம் கடந்த 20 வருடத்திற்கு முன்பு அங்கயற்கண்ணியின் தாயார் 45ஆயிரம் ரூபாய் கொடுத்து தற்போது குடியிருந்து வரும் வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் உறவினர்கள் என்பதால் நம்பிக்கையின் பேரில் பத்திரம் எழுதி வாங்க வில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் அங்கயற்கண்ணியிடம், ராஜேந்திரன் வீட்டை காலி செய்ய வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அங்கயற்கண்ணி நான் தான் வீட்டை விலைக்கு வாங்கி விட்டேனே என கூறி மறுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த அங்கயற்கண்ணியை அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கற்பகபாண்டியன் (25) ஆகியோர் சேர்ந்து வீட்டை காலி செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அரிவாளால் அங்கயற்கண்ணியை வெட்டி விட்டு வீட்டில் உள்ள பொருள்களை அடித்து உதைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டார்.

    இதில் காயமடைந்த அங்கயற்கண்ணி மருத்து மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அய்யாபுரம் போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கற்பகபாண்டியனை கைது செய்தனர்.

    ×