search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property issue"

    • ராஜபாளையம் அருகே சொத்து பிரச்சினையில் விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உமாகாந்த் (வயது40). இவரது பெரியப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது சொத்தை பிரிப்பதில் உமாகாந்த்துக்கும், உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது.

    சம்பவத்தன்று உமாகான் அதே ஊரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்கள் சஞ்சய்குமார், ராஜ்குமார், தவ சத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உமாகாந்த்திடம் சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார் தான்கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து உமாகாந்த்தை சரமாரியாக வெட்டினார். ராஜ்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.

    இதற்கு தவசத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த உமாகாந்த் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை நடத்தி பெண்கள் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.
    • தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பால் பொது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் வினியோகம் செய்கிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது.

    ஆவின் பால் 4 வகையான பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து வருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (1.5 சதவீத கொழுப்புச் சத்து), சமன் படுத்தப்பட்ட பால் (3 சதவீத கொழுப்புச் சத்து), அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் (4.5 சதவீதம் கொழுப்புச் சத்து) பச்சை நிற பாக்கெட்டில் வினியோகிக்கப்படும் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

    மொத்த விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் 40 சதவீதம் இடம் பெற்று உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இது மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக அமைந்துள்ளது. பச்சைநிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டிலைட் ஊதா பாக்கெட் 3.5 சதவீத கொழுப்புச் சத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாலின் விலையும் லிட்டர் ரூ.44 ஆகும். ஆனால் கிரீன் மேஜிக் பச்சைநிற பால் பாக்கெட்டுகளை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

    மற்ற தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.54 முதல் ரூ.56 வரை உள்ள நிலையில் நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் ரூ.44-க்கு கிடைப்பதால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

    4.5 கொழுப்பு சத்துள்ள பாலை லிட்டர் ரூ.44-க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.

    சென்னை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டுவிட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் இன்னும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையாகிறது. அதுவும் மிக குறைந்த அளவிலேயே வினியோகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் (மார்க் கெட்டிங்) சுனேஜா கூறுகையில், பால் அட்டை கார்டுதாரர்களுக்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் அதே விலையில் டிலைட் பால் வினியோகிக்கப்படும். டிலைட் பால் கார்டு விற்பனையை செயல்படுத்தவும், டிசம்பர் 16-ந் தேதி முதல் வினியோகத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தரப்படுத்தப்பட்ட பால் கார்டு வைத்திருப்பவர்கள் (பச்சை நிறம்) இருமுறை சமன்படுத்தப்பட்ட மற்றும் புல் கிரீம் பால் ஆகிய 3 வகைகளில் ஏதாவது ஒன்றிற்கு மாற வேண்டும் என்றார்.

    செலவை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. ஆவின் பால் அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 15-ந் தேதி வரை பால் வினியோகத்தை செய்கிறது.

    வருகிற 25-ந் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.
    • சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருக்காணி என்பவருக்கும் அவரது அக்கா மாரத்தாள் என்பவருக்கும் பூர்வீக சொத்தாக திருப்பூர் மாவட்டம் முத்து கவுண்டம்பாளையத்தில் 5.30 ஏக்கர் நிலம் உள்ளது. இருவருக்கும் பாகப்பிரி வினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் மாரத்தாள் மற்றும் அவரது மகன் ஆகியோர் அருக்காணிக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அருக்காணி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்தநிலையில் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அருக்காணி மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 2பேர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • திருச்சுழி அருகே சொத்து பிரச்சினையில் மகன், தாயை உருட்டு கட்டையால் தாக்கினார்.
    • இந்த சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேலப்பாறைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது63). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். முத்தம் மாளின் கணவர் முத்துச் சாமி ஏற்கனவே இறந்து விட்டார்.

    அதன் பின்னர் தனது தோட்டத்தில் அவர் தனியாக வசித்து வந்தார். மேலப்பாறைக் குளத்தில் வசிக்கும் மகள்கள் முரு கேஸ்வரி, முனியம்மாள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்.

    இந்த நிலையில் அவர் தோட்டத்தில் தனியாக இருந்தபோது மகன் முத்துக் குமார் வந்தார். அவர் சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என கூறி தகராறு செய்தார். மேலும் மகள்கள் வீட்டிற்கு முத்தம் மாள் செல்லக்கூடாது எனவும் கூறி வாக்குவாதம் செய்தார்.

    ஆனால் அதற்கு சம்மதிக் காமல் முத்தம்மாள் பதில் வாக்குவாதம் செய்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அங்கு கிடந்த உருட்டுக் கட்டையால் தாயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

    இதில் காய மடைந்த முத்தம்மாள் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து பரளச்சி போலீஸ் நிலையத்தில் முத்தம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 40) கூலித்தொழிலாளி. கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு கொடைரோடு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் மறுநாள் ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் உள்ள புளியமரத்தோப்பில் சுந்தரேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரேசன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், இன்ஸ்பெக்டர் குருவத்தாய் தலைமையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் சுந்தரேசன் தலையில் வெட்டுக்காயம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுந்தரேசனின் தாய் ராஜாமணி, சகோதரர் முருகன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி தாய் மற்றும் வீட்டில் உள்ளவர்களை அடித்து தாக்கியுள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரேசன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் சொத்து பிரச்சினையில் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மேல ஆவாரம்பட்டி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 60). இவரது மனைவி அழகம்மாள் (57). கோபால் வீட்டின் அருகே அவரது சகோதரர் கிருஷ்ணன் (58) வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் தனது அண்ணியின் உறவினருக்கு சொந்தமான வீட்டை வாங்கியதாக தெரிகிறது. அதை ஏமாற்றி வாங்கி விட்டதாக கோபாலும், அவரது மனைவியும் கருதினர். இதனால் சகோதரர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி 2 குடும்பத்தினரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணன், தனது மனைவி பொன்னுத்தாயுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த அண்ணி அழகம்மாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கிருஷ்ணன், அவரது மனைவிக்கு தலை, கைகளில் வெட்டு விழுந்தது.

    அப்போது கிருஷ்ணன் அங்கிருந்த மண்வெட்டியால் அழகம்மாளை தாக்கினார். இதில் அவரும் படுகாயமடைந்தார். 3 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விரிவான நில தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக அரசின் சி.எல்.ஐ.பி. இணையத்துடன் இணைப்பதற்கு இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உதவியாக இருக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் சொத்துப்பிரச்சினை வழக்கில் நில விவரங்களை, விரிவான நில தகவல் இணையதளத்தில் (சி.எல்.ஐ.பி.) பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.

    மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், மகளிர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், அரசு வக்கீல்கள், மூத்த சிவில் வக்கீல்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். வக்கீல்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தங்களது வழக்குகளில் தொடர்புடைய சொத்து விவரங்களை கோர்ட்டு மென்பொருளில் பதிவேற்றம் செய்யும்போது, தானாகவே தமிழக அரசின் சி.எல்.ஐ.பி. இணையத்துடன் இணைப்பதற்கு இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உதவியாக இருக்கும்.

    மேலும் வக்கீல்களும், பொது மக்களும் மேற்கூறிய சி.எல்.ஐ.பி. இணையத்தில் ஒரு சொத்து சம்பந்தமாக தற்போது வில்லங்கசான்று பதிவுத்துறையில் இருந்து பெறுவது போலவே, நிலுவை வழக்குகள் பற்றிய விவரங்களை அறிய வசதியாக அமையும். பதிவுத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் வழக்குகளில் தொடர்புடைய சொத்து விவரங்களை விரைந்து வழங்குவதாக உறுதி அளித்தனர்.

    • முதல் மனைவி மகனுக்கு சேர வேண்டிய சொத்தை, இரண்டாவது மனைவி மகனுக்கு எழுதி வைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
    • 2-வது மனைவியின் மகன் சுகுமார் என்பவரும் சேர்ந்து அடித்து விரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாக ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தனசேகரன், கோகிலாமணி இருவரும் புகார் அளித்தனர்.

    ஓமலூர்:சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாசநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தனசேகரன், கோகிலாமணி தம்பதியினர். தனசேகரின் தந்தை பழனிசாமிக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி மகனுக்கு சேர வேண்டிய சொத்தை, இரண்டாவது மனைவி மகனுக்கு எழுதி வைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், மேட்டூரில் வசித்து வந்த தனசேகரன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, மனைவியுடன் வந்து தாசநாயக்கன்பட்டி வீட்டில் வசித்து வருகிறார். இங்கு குடியிருக்கக்கூடாது என்று பழனிசாமியும், 2-வது மனைவியின் மகன் சுகுமார் என்பவரும் சேர்ந்து அடித்து விரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாக ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தனசேகரன், கோகிலாமணி இருவரும் புகார் அளித்தனர்.இந்த புகார் குறித்து ஓமலூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் தனசேகரன், கோகிலாமணி இருவரையும் கையையும், கழுத்தையும் பிடித்து வெளியே தள்ளியாதாக கூறப்படுகிறது.

    போலீசாரின் இந்த செயலை கண்டித்து தனசேகரன், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் முன்பாகவே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நியாயத்தை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதா குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால், காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.இதையடுத்து அங்கு வந்த ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர்களின் புகார் குறித்தும், போலீசார் வெளியே தள்ளியது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, காவல் நிலையத்திற்கு உள்ளேயே ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்தனர். அதனால், வெளியே சென்று பேசுங்கள் என்று கூறி அனுப்பி வைக்கப்பட்டது. வேறு ஒன்றும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர்.

    ஒகேனக்கல் அருகே சொத்து தகராறில் சத்துணவு அமைப்பாளரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஒகேனக்கல்:

    தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மா (வயது53). இவரது தம்பி சாம்ராஜ் (48). ராஜம்மாவுக்கும், சாம்ராஜிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. ராஜம்மா கணவர் இறந்ததால் ஒகேனக்கல் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை ராஜம்மா வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த சாம்ராஜ் சொத்து பிரச்சனை குறித்து பேசினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

    ஆத்திரமடைந்த சாம்ராஜ் தனது அக்கா என்று கூட பார்க்காமல் வீட்டில் ராஜம்மாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ராஜம்மா பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்து விட்டு அங்கிருந்து சாம்ராஜ்  ஒகேனக்கல் போலீசில் சரண் அடைந்தார். 

    இது குறித்து ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த ராஜம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதுபாவாசத்திரம் அருகே சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தி.மு.க. பிரமுகரை வெட்டி கொன்ற உறவினர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் சங்கர் (வயது 45). தி.மு.க. பிரமுகர். பள்ளத்தூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இவருக்கும், அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மையின் கணவர் அன்பரசு ஆகியோருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக பட்டுக்கோட்டை கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்று ஆஜரானார். பின்னர் அங்கு விசாரணை முடிந்ததும் ஆண்டிக்காடு புறப்பட்டார். அவர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் சென்ற போது அவரை பின் தொடர்ந்து ஒரு மர்ம கார் வந்தது. அந்த கார் திடீரென கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நின்றது. இதைத்தொடர்ந்து காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல் கோபால் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சேதுபாவாசத்திரம் போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையுண்ட கோபால் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கோபால் சங்கரை அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மை கணவர் அன்பரசு ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட உஷாராணி மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலையுண்ட கோபால் சங்கருக்கு ஜான்தேவி (32) என்ற மனைவியும், நிவேதா (8) ஹரிணி (3) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    முன்னாள் தி.மு.க. கவுன் சிலரை சொந்த அக்காள் கணவர் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாசரேத்தில் சொத்து தகராறில் தந்தையை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    நாசரேத்:

    நாசரேத் ஏதேன் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 84). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஜோசப் எட்வர்டுராஜ் (வயது 50) டிரைவர். இவருக்கு திருமணமாகி தூத்துக்குடி பிறமுத்துவிளையில் தனியாக வசித்து வருகிறார். இவர் தந்தை வீட்டிற்கு அடிக்கடி சென்று சொத்தை பிரித்து தருமாறு கேட்டு வந்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று ஜோசப் எட்வர்டுராஜ் நாசரேத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்று தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜோசப் எட்வர்டுராஜ், செல்லத்துரையை  அடித்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து புகாரின் பேரில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ஜோசப் எட்வர்டுராஜை கைது செய்தார்.
    சொத்து தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

    சங்கரன்கோவில்:

    பனவடலிசத்திரம் அருகே உள்ள கற்படத்தை சேர்ந்தவர் வெயிலுமுத்து மனைவி அங்கயற்கண்ணி (வயது 35). இதே ஊரை சேர்ந்த இவரின் தாய்மாமா ராஜேந்திரன் (49). ராஜேந்திரனிடம் கடந்த 20 வருடத்திற்கு முன்பு அங்கயற்கண்ணியின் தாயார் 45ஆயிரம் ரூபாய் கொடுத்து தற்போது குடியிருந்து வரும் வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் உறவினர்கள் என்பதால் நம்பிக்கையின் பேரில் பத்திரம் எழுதி வாங்க வில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் அங்கயற்கண்ணியிடம், ராஜேந்திரன் வீட்டை காலி செய்ய வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அங்கயற்கண்ணி நான் தான் வீட்டை விலைக்கு வாங்கி விட்டேனே என கூறி மறுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த அங்கயற்கண்ணியை அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கற்பகபாண்டியன் (25) ஆகியோர் சேர்ந்து வீட்டை காலி செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அரிவாளால் அங்கயற்கண்ணியை வெட்டி விட்டு வீட்டில் உள்ள பொருள்களை அடித்து உதைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டார்.

    இதில் காயமடைந்த அங்கயற்கண்ணி மருத்து மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அய்யாபுரம் போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கற்பகபாண்டியனை கைது செய்தனர்.

    ×