என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாள் வெட்டு"

    • லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.
    • இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல்நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சோனகன்விளை நீல்புரம் பகுதியில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு லோடு ஆட்டோவில் சென்றுள்ளார்.

    அப்போது நீல்புரத்தை சேர்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (வயது 60) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்துள்ளார். அப்போது லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் கண்ணனை, ஜெபராஜ் அடித்தாராம். இது தொடர்பாக நேற்று இரவு கண்ணனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நீல்புரம் ஜெபராஜ் வீட்டிற்குச் சென்று தட்டிகேட்டுள்ளனர்.

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் ஆதரவாளர்கள் ஜெபராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை ஜெபராஜ் தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன் நவீன்(32) திருச்செந்தூருக்கு விரைந்து வந்துள்ளார்.

    அங்கு அவரது தந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நவீன் ஆதரவாளர்களும், மற்றொரு தரப்பினரும் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    அப்போது இருதரப்பின ரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவரை மாறி மாறி அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.

    இந்த சம்பவத்தில் நவீன், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தவேல் (21), நட்டார் ஆனந்த் (20) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதற்கிடையே சம்பவ இடத்தில் தெருவோர ஓட்டலில் பிரைடு ரைஸ் வாங்க வந்த தூத்துக்குடி பூபால்ராயபுரம் விஜயபி ரகாஷ் (27) என்பவருக்கு முதுகு, கால் ஆகிய இடங்கள் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

    காயமடைந்த அனைவருக்கும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த கந்தவேல், நட்டார் ஆனந்த் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெபராஜ், அவரது மகன் நவீன் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சி்கிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஏ.டி.எஸ்.பி. திபு, டி.எஸ்.பி. மகேஷ்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குரும்பூர் மற்றும் திருச்செந்தூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இந்த சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
    • மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு.

    பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் மு.க. இனியாவது உணர வேண்டும்.

    பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    • தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
    • மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.

    இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.

    தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.

    மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலை, ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை வந்தார். நேற்று காலை அவர் தனது குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பொன்விழா நகர், ஜூப்ளி டவுன் அருகே 2 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். அவர்கள் செந்தில்குமாரை கீழே தள்ளி, சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் உள்ளது தெரிய வந்தது. இது தவிர செந்தில்குமாருக்கு நண்பர்கள் சிலருடனும் முன்விரோதம் உள்ளது.

    எனவே அவரை முன்விரோதம் காரணமாக தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை யார் தாக்கினார்கள்? என்பது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக உதவி கமிஷனர் ஜெகநாதன் உத்தரவின் பேரில், திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பெய்த மழையால் சக்திவேல் வீட்டின் மழைநீர் சுப்பிரமணியன் வீட்டுசுவரின் மீது விழுந்துள்ளது.
    • இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்(வயது62). சக்திவேல் (65). இவர்கள் இருவரும்பக்கத்து பக்கத்துவீட்டுக்காரர்கள். சம்பவத்தன்று பெய்த மழையால் சக்திவேல் வீட்டின் மழைநீர்சுப்பிரமணியன் வீட்டுசுவரின் மீதுவிழுந்துள்ளது. இதனைஅவர்தட்டிக்கேட்டு தண்ணீரைதிருப்பிவிடசொல்லியுள்ளார். ஆத்திரமடைந்த சக்திவேல், அவரதுமகன்கள்வினோத், விக்னேஷ், மருமகள் பிரியங்கா ஆகியோர் சேர்ந்துசுப்பிரமணியன் மற்றும்அவரது மகன்களை அரிவாளால் வெட்டி இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் அவரது மகன் கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குதீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாகசுப்பிரமணியன் கொடுத்தபுகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து சக்திவேல், அவரது மகன்கள் வினோத்,விக்னேஷ்,மருமகள் பிரியங்கா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் சொத்து பிரச்சினையில் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மேல ஆவாரம்பட்டி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 60). இவரது மனைவி அழகம்மாள் (57). கோபால் வீட்டின் அருகே அவரது சகோதரர் கிருஷ்ணன் (58) வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் தனது அண்ணியின் உறவினருக்கு சொந்தமான வீட்டை வாங்கியதாக தெரிகிறது. அதை ஏமாற்றி வாங்கி விட்டதாக கோபாலும், அவரது மனைவியும் கருதினர். இதனால் சகோதரர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி 2 குடும்பத்தினரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணன், தனது மனைவி பொன்னுத்தாயுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த அண்ணி அழகம்மாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கிருஷ்ணன், அவரது மனைவிக்கு தலை, கைகளில் வெட்டு விழுந்தது.

    அப்போது கிருஷ்ணன் அங்கிருந்த மண்வெட்டியால் அழகம்மாளை தாக்கினார். இதில் அவரும் படுகாயமடைந்தார். 3 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இரு தரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு நடந்துள்ளது.
    • ஜெகநாதன் தரப்பினர் அய்யாச்சாமியை இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதாக தெரிகிறது.

    பல்லடம் : 

    பல்லடம் - தாராபுரம் ரோட்டில் உள்ள கள்ளிப்பாளையம் அரிசன காலனியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெகநாதன்( 37). இவரது உறவினர்கள் முருகன் (40), முருகன் மகன் பிரதீப்( 22). இந்த நிலையில் அய்யாசாமி மற்றும் ஜெகநாதன் தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று இரு தரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு நடந்துள்ளது. அப்போது ஜெகநாதன் தரப்பினர் அய்யாச்சாமியை இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அய்யாசாமியின் வலது கையின் கட்டை விரல் வெட்டுப்பட்டது.

    மேலும் அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அய்யாசாமி காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெகநாதன், முருகன் மற்றும் பிரதீப் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள். காயம் அடைந்த அய்யாசாமி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஜவுளி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
    • அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர்

    கரூர்,

    கரூர் திரு.வி.க., சாலையை சேர்ந்த ஜோதி லிங்கம் மகன் கார்த்தி (வயது34) இவர், கரூர் உழவர் சந்தை அருகே, ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை, ஜவுளி கடையில் இருந்த போது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்இரண்டு பேர் , கார்த்தியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட் டனர். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஜான்சிராணி வடக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கள பொறுப்பாளராக உள்ளார்.
    • சம்பவத்தன்று இரவில் ஜான்சிராணியின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக, அவரது தந்தை போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜான்சிராணி (வயது 43) வடக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கள பொறுப்பாளராக உள்ளார். இவருக்கும், இவரது தம்பியான அதே ஊரை சேர்ந்த எட்வர்டு ராஜனுக்கும் பணம் மற்றும் நகை கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று இரவில் ஜான்சிராணியின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக, அவரது தந்தை போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஜான்சிராணி கீழரதவீதியில் உள்ள தந்தை வீட்டிற்கு தாயாரை பார்ப்பதற்காக சென்றார்.

    அப்போது எட்வர்டு ராஜன் எங்கள் வீட்டிற்கு எப்படி வரலாம் என கேட்டு ஜான்சிராணியை அவதூறாக பேசினார். மேலும் அரிவாளால் வெட்டினார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இதனால் காயமடைந்த ஜான்சிராணி சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எட்வர்டு ராஜனை தேடி வருகின்றனர்.

    • வேலாயுதம் இறைச்சி கடையில் 20 வருடங்களாக காசாளராக வேலை செய்து வருகிறார்.
    • 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    கோவை,

    கோவை போத்தனூர் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 69). இவர் பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள இறைச்சி கடையில் 20 வருடங்களாக காசாளராக வேலை செய்து வருகிறார்.

    அந்த இறைச்சி கடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த கதிர்வேல் (21) என்பவர் இறைச்சி வெட்டும் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல இறைச்சி கடையில் 2 பேரும் வேலை செய்து கொண்டு இருந்தனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கிருஸ்துமஸ் என்பதாலும் கடையில் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது கதிர்வேல் வேலையை மெதுவாக செய்து கொண்டு இருந்தார்.இதனை பார்த்த வேலாயுதம் அவரிடம் வேலையை வேகமாக செய்யும் படி கூறியுள்ளார். ஆனால் கதிர்வேல் தொடர்ந்து ேவலையை மெதுவாக செய்து கொண்டு இருந்தார்.

    இதுகுறித்து வேலாயுதம், கதிர்வேலிடம் கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கதிர்வேல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி இறைச்சி வெட்டும் அரிவாளை எடுத்து வேலாயுதத்தை வெட்டினார்.

    அரிவாள் வெட்டில் அவருக்கு காது, கழுத்து, வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுகுறித்து வேலாயுதம் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கதிர்வேலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • முத்துக்குமார் என்ற மதுரை முத்து கடந்த ஆறு மாதங்களாக குரும்பூரில் வீடு எடுத்து தங்கி வருகிறார்.
    • மாரியப்பனை, முத்துக்குமார் அரிவாளை எடுத்து காலில் வெட்டி கொலை மிரட்டல் வைத்துள்ளார்.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள அழகப்பப்புரத்தை சார்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது நண்பர் தூத்துக்குடி அண்ணா நகர் சார்ந்த முத்துக்குமார் என்ற மதுரை முத்து (32). இவர் கடந்த ஆறு மாதங்களாக குரும்பூரில் வீடு எடுத்து தங்கி வருகிறார். கடந்த சில நாட்களாக மாரியப்பன், முத்துக்குமார் மனைவியிடம் அடிக்கடி தண்ணீர் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. முத்துக்குமார் வீட்டு அருகே நடந்து வந்தபோது மாரியப்பனை, முத்துக்குமார் தனது வீட்டில் உள்ள அரிவாளை எடுத்து காலில் வெட்டி கொலை மிரட்டல் வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குரும்பூர் போலீசார் நண்பனை அரிவாளால் வெட்டிய முத்துக்குமாரை கைது செய்தனர்.

    • 5 பேர் கைது செய்யபட்டனர்
    • அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    திருச்சி:

    திருச்சி பீமநகர் யானைக் கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவநேசன் (வயது 60). திருமணமாகாத இந்த முதியவர் ரேஷன் அரிசி வாங்கி விற்பனை செய்து வந்தார். அதைத்தொடர்ந்து அவர் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக பொது விநி–யோகத்திட்ட சி.ஐ.டி. போலீ–சார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து சிவநேசன் யானைக்கட்டி மைதானத்திற்கு தனது மொபட்டில் புறப்பட்டுச் சென்றார். பீமநககர் காவிரி தியேட்டர் மேம்பாலத்தில் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கும்பல் அவரை வழிமறித்தனர். திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்தி–ருந்த அரிவாளால் சிவநே–சனின் பின்னந்தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அவருக்கு தலையில் மூன்று இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உயி–ருக்கு ஆபத்தான நிலையில் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தப்பி ஓடிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். இதில் அரிவாளால் சிவநேசனை வெட்டியவர்கள் ஒரு ஜாதி அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்கள் ரேஷன் அரிசி கடத்தும் சிவநேசனிடம் மாமூல் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்துவிட்டார். இத–னால் ஆத்திரமடைந்த ஐந்து பேரும் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தும் முதியவர் மாமூல் தர மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பீமநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    ×