search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "antagonism"

    • கொடியரசிக்கும் அதே பகுதியை 2 பேருக்கும் முன்விரோதம் இருந்தது.
    • இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    நாகப்பட்டினம்;-

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்.

    இவரது மனைவி கொடியரசி (வயது 28).

    இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் (23), ரஞ்சித் (22) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகானந்தமும், ரஞ்சித்தும் சேர்ந்து கொடியரசி வீட்டின் அருகே சென்றுள்ளனர்.

    பின்னர் வீட்டில் இருந்த கொடியரசியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கொடியரசி வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஸ்வநாதன் தனது நண்பர் பாவாணனு டன் நத்தப்பட்டு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • கபில்தேவுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எஸ்.குமராபுரத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 41). ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும் தோட்டப் பட்ைட சேர்ந்த விஸ்வநாத னுக்கும் முன்விரோத தக ராறு இருந்து வந்தது. சம்ப வத்தன்று விஸ்வநாதன் தனது நண்பர் பாவாணனு டன் நத்தப்பட்டு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கபில் தேவ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விஸ்வநாதன் மீது இடிப்பது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் விஸ்வ நாதன் மற்றும் கபில்தேவுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து விஸ்வ நாதன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கபில்தேவ் மீதும், கபில்தேவ் கொடுத்த புகா ரின் பேரில் விஸ்வநாதன், பாவாணன் ஆகியோர் மீதும் போலீசார் தனித்தனி யாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • படுகாயம் அடைந்த இளையராஜா தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • திட்டமிட்டபடி ஆடலரசு தரப்பினர் இளைய ராஜாவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவரது மகனான இளையராஜா. தி.மு.க பிரமுகர். நேற்று முன்தினம் மாலை இவர் மணவாளநல்லூர் அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கியால் சுட்டது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த இளையராஜா தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமை யிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் தே.கோபுராபுரம் அருகே பதுங்கி இருந்த மணவா ளநல்லூரை ஆடலரசு, புகழேந்தி, சரவணன், வெங்கடேசன், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விஜயகுமார், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சூர்யா, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அருண்குமார் மற்றும் வெங்கடா ம்பேட்டையை சேர்ந்த சதீஸ்வரன் ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்படட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், 2 இரும்பு ராடுகள், 1 கத்தி, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணைக்கு பின் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ப ட்டவர்கள் பின்னர் கோ ர்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கூறிய தாவது:- இளையராஜாவின் அண்ணன் நீதிராஜன் மணவாள நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்த லின்போது ஆடலரசு வின் தாய் மங்கையர்கரசி தேர்தலில் போட்டியிட்டார் அப்போது இளையராஜா தரப்பினருக்கும் ஆடலரசு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இளையராஜா ஆடலரசுவை தாக்கி உள்ளார். இந்த தாக்குதல் அடிக்கடி நடந்துள்ளது. இந்த விளைவின் காரணமாக ஆடலரசு சென்னையில் உணவு டெலிவரி வேலை செய்யும் பாளைய ங்கோட்டை நண்பரான விஜயகுமாரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி விஜயகுமார் சென்னையில் சலீம் என்பவர் மூலம் பீகாரில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு 2 துப்பாக்கிகள் மற்றும் 3 புல்லட்டுகளை கடந்த 2 மாதத்திற்கு முன்பு வாங்கியு ள்ளார். திட்டமிட்டபடி ஆடலரசு தரப்பினர் இளைய ராஜாவை துப்பா க்கியால் சுட்டுள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்த சென்னையை சேர்ந்த சலீமை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்னை விரைந்து ள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

    • 2 பேர் கைது
    • கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை,காரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவில் ராணிப்பேட்டை பஜாரில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தனது நண்பர்களிடம் பைனான்ஸ் வசூல் செய்வதற்காக வந்து வசூல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளா என்கிற இளம்பரிதி (32), ஆர்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்த லொட்டா என்கிற சண்முக பிரியன் (26) ஆகிய இருவரும் ஏற்கனவே சினிமா தியேட்டரில் படம் பார்த்தபோது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜீவ் காந்தியை வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்.

    கையால் தாக்கி அவர் வைத்திருந்த பணம் ரூ.7ஆயிரத்து 500 மற்றும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக ராஜீவ் காந்தி ராணிப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதி, சண்முக பிரியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் விவகாரம்
    • 3 பேருக்கு வலைவீச்சு

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது தம்பி ஏழுமலை (வயது 55). இருவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுப்பிரமணி வீட்டுக்கு சென்ற ஏழுமலை மற்றும் அவரது மகன்கள் ரஞ்சித், சூர்யா, கணபதி ஆகியோர் வீட்டுமனை விவகாரம் தொடர்பாக அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

    அப்போது சுப்பிரமணிக்கு ஆதரவாக வந்த அவரது மருமகன் அருண்குமாரை (38) கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் சுப்பிரமணி, அவரது மகன் கருணாகரனையும் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் படுகாயமடைந்த அருண்குமார் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் கொடுங்காலூர் போலீசார் ஏழுமலை, ரஞ்சித், சூர்யா, கணபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • அம்மாப்பேட்டை முருகன் கோவில் அருகே ெவட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
    • முன்விரோதத்தில் இளங்கோ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள மெலட்டூர் பகுதி, வெண்ணுக்குடியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் கோபி என்ற இளங்கோ(வயது31).

    கூலித்தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக, அம்மாப்பேட்டை மேட்டுத் தெருவிலுள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இளங்கோ நேற்றுமுன்தினம் அம்மாப்பேட்டை முருகன் கோவில் அருகே ெவட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

    இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோ கொலை தொடர்பாக அம்மாப்பேட்டையை சேர்ந்த பாபு என்ற ஆனந்தபாபு(வயது30), பிரவீன்(24), திருவாரூர் மாவட்டம் மணக்கால் பகுதியை சேர்ந்த மதன்(24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இளங்கோ ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்ததாவும் இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளங்கோ கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

    மேலும், இளங்கோ கொலை வழக்கில், தப்பிஓடிய சேர்மாநல்லூர் பகுதியை சேர்ந்த பாபு, தினேஷ், வடபாதி உடையார்கோவில் பகுதியை சேர்ந்த அனீஸ் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சங்கருக்கும் இவரது அண்ணன் கார்த்திக்குக்கும் சொத்து பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • இருவரும் சேர்ந்து கார்த்தியின் மனைவி சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அண்ணா நகரில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் சங்கர்( வயது 35). இவருக்கும் இவரது அண்ணன் கார்த்திக்குக்கும் சொத்து பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கார்த்தி, அவரது தம்பி ராஜீவ்காந்தி, கார்த்தியின் மனைவி சத்தியா, ராஜீவ் காந்தியின் மனைவி பிரியா ஆகிய 4 பேரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    அதேபோல் சங்கர் மற்றும் அவரது தந்தை ராமலிங்கம் இருவரும் சேர்ந்து கார்த்தியின் மனைவி சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சங்கர் மற்றும் சத்யா ஆகியோர் தனித்தனியாக கொடுத்த இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட திருக்கோவிலூர் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த6 பேர் மீது 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.
    • இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேக்அலி(வயது 42) பெயிண்டர். இவருக்கும் கோசாகு ளத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் பாஸ்கரை தேடி வந்த பெயிண்டர் சேக்அலிக்கும் பாஸ்கர் மகன் ஸ்ரீபனுக்கும் தகராறு ஏற்பட்டது.

    பின்னர் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீபன் மற்றும் அவரது தயார் செல்வி ஆகியோர் சேக் அலியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த சேக்அலி இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபனை கைது செய்தனர்.

    அவரது தயார் செல்வியை தேடி வருகின்றனர்.

    • முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற சோனையா (42). சத்யா நகரை சேர்ந்த ராஜா, நவீன்.

    இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் ராஜா, நவீன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வி என்பவர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் என்ற சோனனை யாவை கைது செய்தனர்.

    • விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
    • வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி நடுஓடுதுறை பிள்ளை யார் கோவில் தெருவில் வசிப்பவர் வாசுகி (வயது30). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜசேகர் (50). இவர் ரியல் எஸ்டே தொழில் செய்து வருகிறார். இரு வர்கள் வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் மரபொருட்கள், விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில், சம்பவத் தன்று இருவரும் தங்கள் பொருட்கள் போட்டு வைத்திருந்த இடத்தில் குப்பைகளை எரித்ததாக கூறப்படுகிறது. இதில் இரு வருகும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, ராஜசேகர், வாசுகியை மரக்கட்டையால் தாக்கி, வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.

    • ஜெயசூர்யா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது.
    • 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே முன் விரோத தகராறில் இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது.கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு வி. பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெய்சூரியாவும், பழனிவேலுவும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஞானசவுந்தரி, வள்ளி ஆகிய 2 பெண்கள் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் பழனிவேல், பாலாஜி, சங்கீதா, வள்ளி ஆகியோர் மீதும் , வள்ளி கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், ஜெயசூர்யா, ஞானசவுந்தரி என தனி தனியாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயக்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
    • சம்பவத்தன்று மணிகண்டன், ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுக்கு தீ வைத்தாக கூறப்படுகிறது

    கடலூர்:

    கடலூர் அடுத்த காரை க்காட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரு க்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ த்தன்று மணிகண்டன், ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுக்கு தீ வைத்தாக கூறப்படுகிறது. இதில் கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×