search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் பரபரப்பு: முன்விரோத தகராறில்   வாலிபருக்கு கத்திவெட்டு
    X

    கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனயில் சேர்ததனர்.

    திண்டிவனத்தில் பரபரப்பு: முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திவெட்டு

    • பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார்.பயணக் களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது,அருள் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம்ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார்.
    • இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பயணக் களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கினார். ,அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார்.

    பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து அருள், பிரேம் ராஜை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. பிரேம்ராஜை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அருளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.குளம் அருகே தூங்கினார். அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து அருள், பிரேம் ராஜை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. பிரேம்ராஜை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அருளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×