search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குவாதம்"

    • பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    • சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைக்காக சண்டையில் ஈடுபட்ட காட்சிகள், இளம்ஜோடிகளின் அத்துமீறல், ஆபாசமாக உடை அணிந்து வந்த பயணிகள் என பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் டோக்கன் கவுண்டரில் 2 பயணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    அப்போது சக பயணி ஒருவர், அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்‌.

    கடலூர்:

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து 60 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று சட்ட ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று காலை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. இதற்காக மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகில் மேடை அமைக்கப்பட்டது. அந்த சாலையில் கட்சி கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையை அகற்றும் நடவடிக்கையை தொடங்கினர்.

    இத்தகவல் அறிந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையிலான நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.

    ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தொடர்பாக ஏற்கனவே மனு அளித்து விட்டோம். இதனை தொடர்ந்து மேடை, பேனர் மற்றும் கொடி வைக்கப்பட்டுள்ளது. எதற்காக திடீரென்று நள்ளிரவில் மேடை, பேனர் ஆகியவற்றை அகற்ற வந்துள்ளீர்கள்? என போலீசாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்பதால் மேடையை அகற்றுகிறோம் என கூறிய போலீசார், மேடையை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி கொள்ளவும் என அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அ.தி.மு.க. கொடிகளை அகற்ற முயன்ற போது, அ.தி.மு.க. நிர்வாகிகள் தாமாக முன்வந்து 300-க்கும் மேற்பட்ட கொடிகளை அகற்றினார்கள்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் தலைமையிலான நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, நள்ளிரவில் மேடை, கொடிகள், பேனர்களை அகற்றிய சம்பவம் கடலூர் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.
    • கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    மதுரை:

    அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.கதிரவன் இல்ல திருமண விழா மதுரை வேலம்மாள் ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இந்த திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற் காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 7 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.

    எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியே வரும் பாதை வழியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வருகை தந்தார். அவர் அங்கிருந்து விமான நிலையத்திற்குள் சென்ற பின்னரும் அவரது வாகனம் அங்கேயே நினறு கொண்டிருந்தது.

    இதைப்பார்த்த விமான நிலைய பாதுகாப்பு போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத் துமாறு கூறினர். ஆனால் கார் எடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சற்று நேரத்தில் காரை அகற்றாவிட்டால் லாக் செய்து விடுவதாக கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். கைகளை நீட்டியவாறு அவர்கள் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    கவலைப்படாதீர்கள் 2026-ல் நம்மதான்

    மேலும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமிக்கு திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியிடம், தொண்டர் ஒருவர் உரத்த குரலில் 'கவலைப்படாதீர்கள் 2026 நம்ம தான்' என்று கூறினார். அதைக்கேட்ட எடப்பாடி பழனிசாமி சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டார்.

    • முகவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர்.
    • சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணம் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    அந்தப் பகுதயில் போக்கு வரத்தும் மாற்றி அமைக்கப் பட்டு இருந்தது. அந்த பகுதி யில் பேரி கார்டுகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் பணிக்கான ஊழியர்கள் மற்றும் முகவர்கள் அடையாள அட்டை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    வாக்கு எண்ணிக்கை நடை பெறும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட முகவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர். அவர் களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் படிவம் 18 வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்று பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் ஒரு சில முகவர்கள் மட்டுமே படிவம் 18 வைத்திருந்தனர். படிவம் 18 இல்லாத முகவர்களை போலீசார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் முகவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு படிவம் 18 இல்லாமல் அடையாள அட்டை வைத்திருந்த முகவர்களை போலீசார் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் நாகர்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • ஒடிசாவில் நடந்த 6 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் மேசையில் இருந்த EVM இயந்திரத்தைக் கீழே இழுத்துள்ளார்.

    ஒடிசாவின் குர்த்தா மாவட்டத்தில் நேற்று (மே 25) நடந்த 6 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நேற்று நடந்த நிலையில், குர்தா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக எம்எல்ஏவான பிரசாந்த் ஜக்தேவ், நேற்று பிரசாந்த் ஜக்தேவ் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.

     

    வாக்களிக்க நீண்ட வரிசையில் அவர் காத்திருந்த நிலையில் EVM இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு மேலும் தாமதமானது. இதனால் பொறுமை இழந்த அவர், தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

     

    ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் மேசையில் இருந்த EVM இயந்திரத்தைக் கீழே இழுத்துள்ளார். இதனால் EVM இயந்திர விழுந்து உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை இன்று (மே 26) கைது செய்துள்ளனர். அப்பகுதியில் செல்லாக்கு மிக்க பாஜக வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக குர்குரே தயாராகிறது
    • தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் , ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் குர்குரே வாங்கி வர மறந்துள்ளார்.

    இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ஜங்க் நொறுக்குதீனியாக குர்குரே உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக குர்குரே தயாராகிறதுகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறிவந்தாலும் இன்றளவும் குர்குரே அதிகம் விரும்பி உண்ணப்படும் பண்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கணவன் குர்குரே வாங்கித் தராததால் மனைவி அவரைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குர்குரே சாப்பிடுவதில் அதீத நாட்டம் இருந்துள்ளது. கிட்டத்தட்ட குர்குரேவுக்கு அடிமையான அப் பெண் தனக்கு தினமும் ஒரு பாக்கெட் குர்குரே வாங்கித்தர வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் , ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் குர்குரே வாங்கி வர மறந்துள்ளார். இதனால் கணவரைப் பிரிய முடிவெடுத்து வீட்டை விட்டு அப்பெண் வெளியேறியுள்ளார்.

    பின்னர் காவல் நிலையத்துக்கு சென்ற அப்பெண் , தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக முறையிட்டுள்ளார். ஆனால் கணவர் அதை மறுத்துள்ளார். குடும்பநல ஆலோசனை மையத்துக்கு இருவரும் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களிடம் பல அமர்வுகளில் தொடர்ந்து பேசிய ஆலோசகர் தெரிவிக்கையில், அப்பெண்ணுக்கு குர்குரே மீது இருந்த அதீத நாட்டமே அவர் கணவரைப் பிரிய காரணம் என்று தெரிவித்துள்ளார். 

    • வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.
    • பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளைஞர் மற்றும் பெண் தோழி இருவரும் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞர் அந்த பெண் தோழியை சரமாரியாக தாக்கினார். வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். நிலை தடுமாறிய அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

    இதை அந்த வழியாக வந்த வக்கீல் ஒரு தனது செல்போனில் வீடியோவாக பதிவேற்றினார். இதை கண்ட அந்த வாலிபர் சற்று சுதாரித்து கொண்டு எதுவும் நடைபெறாததது போல், மயங்கிய அந்த பெண்ணை காப்பாற்றுவது போல் நடகமாடினார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், வழக்கறிஞரையும் உதவிக்கு அழைப்பது போலும் நாடகமாடினார்.

    இதை செல்போனில் வீடியோ எடுத்த வழக்கறிஞர் மற்றும் அந்த வாலிபர் இருவரும் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனை அழைத்து சென்றனர். அந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    இந்த சம்பவத்தையடுத்து கோயம்பேடு போலீசார் அந்த வாலிபரின் வண்டி எண்ணை வைத்தும், அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இதையடுத்து அந்த வாலிபருக்கும், பெண்ணும் இடையே ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், வாலிபர் ஏன் அந்த பெண்ணை தாக்கினார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணையும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் போது அந்த வாலிபர் மீது ஏதேனும் தவறு இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
    • பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நிஜாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் யாகூப் பாஷா. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சமீனா. தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சமீனா தன்னுடைய கணவரிடம் கம்மல் வாங்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமீனா தனக்கு உடனடியாக கம்மல் வேண்டுமென கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.

    மேலும் கணவர் என்று கூட பார்க்காமல் அவரது உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் ஷேக் யாகூப் பாஷா அலறினார் .அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைத்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்

    இது குறித்து பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார் . ஷேக் யாகூப் பாஷாவும் மனைவி தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஊராட்சி தலைவியின் கணவர் தயாளனுக்கும், மகாலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.

    திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (60). இவரது மனைவி தேவி. இவர் தண்ணீர்குளம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.

    இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பு அருகே சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அப்போது சாலை வழக்கத்தை விட சற்று உயரமாக அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுபற்றி அங்கிருந்த ஊழியர்களிடம் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகாலிங்கம் கேட்டார். மேலும் சாலை உயரமாக இருந்தால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமமாக இருக்கும் என்று கூறினார். இதனால் அங்கிருந்த ஊராட்சி தலைவியின் கணவர் தயாளனுக்கும், மகாலிங்கத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் கோபத்தில் தயாளன் மீது பாய்ந்து அவரது இடது காதை கடித்து துண்டாக துப்பினார். இதில் வலிதாங்க முடியாத தயாளன் காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துண்டான காதையும் ஐஸ்கட்டி நிரப்பிய டப்பாவில் வைத்து எடுத்து சென்றனர். அங்கு தயாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.

    • கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
    • டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரெயில் நிலையம் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில்வே நிலையங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி என 4 மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரெயில் பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் வருமானத்தினை ஈட்டி வருகிறது.

    இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க அந்த ஒரே ஒரு கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர் கவுண்டரில் இருந்துள்ளார். அவருக்கு தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தி மட்டும் தெரிந்து இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்தவர்கள், தட்கல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.

    மேலும் இந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும். இல்லை என்றால் மெதுவாக தான் தருவேன் என்று கூறியுள்ளார். இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பரிதவித்துள்ளனர். மேலும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமம் அடைந்துள்ளனர்.

    30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை டிக்கெட் எடுக்க நேரமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தும் ரெயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இது குறித்து நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுக்க சென்ற போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினையும் சமதானப்படுத்தி புகார் அளிக்குமாறு கூறினர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த பிரச்சினையினால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இது குறித்து கோவில்பட்டி ராகவேந்திரா சேவை அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கூறியதாவது:-

    கோவில்பட்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர், முன்பதிவு கவுண்டர் என இருந்தாலும் ஒரு ஒரு கவுண்டர் தான் செயல்படுகிறது. அந்த கவுண்டரிலும் தமிழ், ஆங்கிலம் தெரியாத நபர்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்தி மட்டும் அவர்களுக்கு தெரிவதால், தமிழ், ஆங்கிலத்தில் பேசினால் புரியவில்லை என்று கூறி டிக்கெட் தர மறுக்கின்றனர். அப்படியே தந்தாலும் நீண்ட நேரம் காக்க வைத்து டிக்கெட் வழங்கி வருகின்றனர். குறிப்பாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்டால் திண்டுக்கலுக்கு டிக்கெட் வழங்கிவிடுகின்றனர். இதனால் சரியான நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாத நிலை இருப்பதால் ரெயில் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ஊழியரை பணியில் அமர்த்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் தெரிந்த பணியாளரை உதவிக்கு அமர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் உடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • 3 பேர் மீது புகார்

    ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கொண்ட குழு நேற்று உழவர் சந்தை, ராயக்கோட்டை ரோடு, காமராஜர் காலனி, பஸ் நிலையம், பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பரிசோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, உழவர் சந்தை பகுதியில் 8.7 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8,700 அபராதமும், ராயக்கோட்டை ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 4 மாடுகளுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பூ மார்க்கெட் பகுதியில் சுமார் 13 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, பூ மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதன்பேரில் ஓசூர் ராம் நகரை சேர்ந்த வினோத்குமார் (23), சிவசக்தி நகரை சேர்ந்த ககன் (22) மற்றும் பாகலூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த முரளி (25) ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 10 ஆடுகள் பலியானதால் ஆத்திரம்
    • கிராமத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவது தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதனாஞ்சேரி ஊராட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை கொட்டகைகள் கட்டி வைத்திருந்தார். நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு, கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் அங்கேயே பலியானது. தகவலறிந்து வந்த வாணியம்பாடி வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து வனத்துறையினர் அந்த கிராமத்தில் நேற்று இரவு 11 மணி வரை முகாமிட்டு, தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    வனத்துறையினருடன் சேர்ந்த கிராம மக்களும் இரவு தூக்கமின்றி விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் ஆடுகளை கடித்துக் குதறியது நாய்கள் என்று கிராம மக்களிடம் கூறிவிட்டு வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட முயன்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வனத்து றையினர் வாகனத்தை சிறைப்பிடித்து, வனத்துறை யினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் இங்கு ஏதோ ஒரு வன விலங்கு நட்டமாட்டம் உள்ளது, அது என்ன விலங்கு என்று கண்டறிந்து கிராம மக்களுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிக ளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அந்த கிராமத்தை சுற்றி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    ×