search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councilor Argument"

    • நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்க மளித்தார்.
    • இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டியில் உள்ள குறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.

    ஈரோடு, அக்.31-

    ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் 30 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

    கூட்டம் தொடங்கியதும், பேசிய 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆதி பேசும் போது, தனது வார்டில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.

    இதனால் அவருக்கும் மேயர் நாகரத்தினம், துணைமேயர் செல்வராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்க மளித்தார்.

    இதனை ஏற்காமல் தொடர்ந்து கவுன்சிலர் ஆதி வாக்கு வாதம் செய்து கொண்டிருந்ததால் ஆவேசமடைந்த மேயர், தனது இருக்கையில் இருந்து எழுந்து கவுன்சிலர் இருக்கைக்கு சென்று அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து சமாதான ப்படுத்தினார்.

    மற்ற கவுன்சிலர்களும் சமாதானப்படுத்தினர். இதனால் மாநகராட்சி கூட்டரங்கில் பரபரப்பு நிலவியது.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளை தனியாருக்கு விடும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    அப்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து பேசும்போது, வார்டை நான்காக பிரிப்பது குறித்து எங்களுடன் கலந்தோசி க்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எங்களையும் அந்த குழுவில் இடம் பெற செய்ய வேண்டும். அப்போதுதான் வளர்ச்சிப் பணி தங்கு தடை இன்றி நடைபெறும் என்றார்.

    மேலும் தூய்மை பணியாளர்கள் அவர்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். தனியார் மயமாக்கு வதை கைவிட வேண்டும் .

    அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

    அப்போது பேசிய ஆணை யாளர் சிவக்குமார் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இது குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

    இதனை ஏற்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்யாமல் சபை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றனர்.

    36-வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் பேசும்போது, என் வார்டில் நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது.

    அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என் வார்டில் குண்டும் குழியுமாக ரோடுகள் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என்றார்.

    இதேப்போல் 43- வது வார்டு கவுன்சிலர் சபுராமா சாதிக் பேசும்போது, என்னுடைய வார்டில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இதேபோல் மற்ற மாநகராட்சியில் குப்பை வரி எடுக்கப்பட்டுவிட்டது.

    இதனால் சொத்து வரி வசூல் பாதிக்கப்படுகிறது.

    எனவே நமது மாநகராட்சியில் குப்பை வரி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டியில் உள்ள குறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.

    ×