என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gram Sabha"

    • நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறி வர வேண்டும் என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
    • டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளின் பொதுமக்களுக்கு சிறப்புரை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இணையத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    வணக்கம். எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

    நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது, கிராமங்கள்தான். உங்கள் ஆதரவோடு முதலமைச்சரான பிறகு, இப்போது 3-வது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். வேறெந்த முதலமைச்சரும் இப்படி கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை.

    உங்களில் நிறைய பேர் சுய உதவிக்குழுக்களால் பயனடைந்திருப்பார்கள். துணை முதலமைச்சராக இருந்தபோது, நானே பல மணிநேரம் மேடைகளில் நின்று சுழல்நிதி வழங்கியிருக்கிறேன்.

    இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகதான், மகளிர் உரிமைத்தொகை வழங்குகிறோம். நீங்கள் எல்லோரும் கட்டணமில்லாமல் பஸ்சில் செல்கிறீர்களே, அந்த விடியல் பயணத் திட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வளவு பெரிய பங்களிப்பை செலுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள்…

    நீங்கள் காலையில், சீக்கிரம் வேலைக்கு போக வேண்டும் என்று அவசர அவசரமாக கிளம்புவீர்கள்.. அதற்கு நடுவில் சமையல் செய்யவேண்டும்.. ஆனால், அந்த சுமையை குறைக்க – அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற நம்முடைய குழந்தைகளுக்கு சத்தாகவும் – சுவையாகவும் காலை உணவு வழங்குகிறோம்.

    நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் காலேஜ் முடித்துவிட்டு வேலைக்குப் செல்வதற்கு தயாராக இருக்கின்ற அளவுக்கு – நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறோம்.

    நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறி வர வேண்டும் என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்படி, ஒவ்வொரு துறையிலும், பல திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

    இவையெல்லாம் முத்திரைத் திட்டங்கள். இதே போல, கிராம வளர்ச்சிக்கு என்று பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். கிராம மக்கள் தங்களுடைய ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவும், வளர்ச்சிப் பாதையில், கிராம ஊராட்சியை கொண்டு செல்லவும், உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம்.

    அதற்காக, ஆண்டுதோறும் ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தக் கிராம சபைக் கூட்டங்கள்தான், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கின்ற முக்கிய தருணம்.

    நம்முடைய கிராமங்களின் தற்போதைய தேவைகள், வளர்ச்சி இலக்குகள் மற்றும் நலன்கள் குறித்து நேரடியாக விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

    நம்முடைய திராவிட மாடல் அரசு - சமூகநீதி, சமத்துவத்தை நிலைநாட்ட, சுயமரியாதை அடிப்படையிலான சமூகத்தை உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் இழிவான தன்மையோடு சாதிப் பெயர்கள் இருந்தால், அதை மாற்றி பொதுப் பெயர்களை சூட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    மேலும், 'நம்ம ஊர், நம்ம அரசு' என்ற பெயரில், கிராம சபையில் மக்கள் கலந்தாலோசித்து, 3 முக்கிய தேவைகளைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

    அப்படி கண்டறியப்படும் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

    குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிவிடும் வகையில், 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற புரட்சிகரத் திட்டம் துவங்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முடிவெடுத்து, 2024-25-ல் இதுவரை, 99 ஆயிரத்து 453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    2025-26-ல், இன்றைய நிலையில், 78 ஆயிரத்து 312 வீடுகள் கூரை மட்டம் நிலைக்கு மேல் முன்னேற்றத்தில் இருக்கிறது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட் டத்தின்கீழ், கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள், நூலக வசதிகள் போன்ற சேவைகள் விரிவாக்கப்படுகிறது.

    தாயுமானவர் திட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    நம்முடைய வீடு குப்பைக் கூளமாக இருந்தால், சும்மாவா இருப்போம்? நம் எல்லோருடைய வீடும் சேர்ந்ததுதான் நம்முடைய கிராமம்… அதை சுத்தமாக வைத்துக் கொள்கின்ற பொறுப்பு நமக்குதான் இருக்கிறது. முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்… குப்பைகள் – ஊராட்சிகளில் வரு கின்ற பேட்டரி வண்டிகளில், மக்கும் குப்பை - மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துப் போடவேண்டும். கண்ட இடத்தில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும்.

    ஊராட்சி நிர்வாகங்களை சேர்ந்தவர்கள் குப்பைகளை பிரிப்பது, கழிவுநீர் மேலாண்மை பற்றியெல் லாம், மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    என்னடா, இதையெல்லாம் சிறிய சிறிய விஷயம் தானே, இதையெல்லாம் முதலமைச்சர் சொல்ல வேண்டுமா என்று நினைக்கிறீர்களா? சிறிய சிறிய விஷயங்களை நாம் கரெக்டாக செய்தாலே, பெரிய பெரிய நன்மைகள் நிச்சயம் உண்டாகும். நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம் என்று எல்லோருக்குமே தெரியும். இந்த நோயற்ற வாழ்வுக்கு சுகாதாரம்தான் அடிப்படை.

    அடுத்து, மக்களுடைய முக்கிய பிரச்சனையாக இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை. "பணத்தைத் தண்ணியாக செலவழிக்கிறார்கள்" என்று சில பேர் சொல்லுவார்கள்… உண்மையில், "தண்ணியைத் தான் பணம் போல பார்த்து, பார்த்து செலவழிக்க வேண்டும்".

    தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருப்பதற்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானது. இதனால் தான், நிலத்தடி நீர்வளம் மேம்பட்டு, கிராமங்களுக்கு நீண்டகால நீர்ப் பாதுகாப்பு ஏற்படும். இதற்கான பொறுப்பு, நம்முடைய எல்லோரிடமும் தான் இருக்கிறது.

    எனவே, இதற்காக அரசும், ஊராட்சிகளும் எடுக்கின்ற முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அடுத்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, அனைத்து ஊராட்சிகளிலும், அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வீதிகள், குடிநீர், மின்சாரம், வடிகால் போன்ற அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவசரத் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்புக் குழுக்களை அமைத்து, அவசர கால நடவடிக்கைகளை திட்டமிடவேண்டும். இதனால், பேரிடர் நேரங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கலாம்.

    அடுத்து, நான் முக்கியமாக சொல்ல விரும்புவது - கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும். கிராம சபை மூலம் வரவு – செலவு கணக்குகள் மக்களிடம் விளக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலோடு செயல்பட வேண்டும்.

    ஒவ்வொரு ஊராட்சியும் எப்போது, எவ்வளவு செலவிட்டது என்று மக்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் தகவல்கள் பகிரப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில், நீங்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறை வேற்றப்படும்.

    நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதி செய்கின்ற அரசு இது.

    "கிராமத்தின் வலிமை தான் மாநிலத்தின் வலிமை" என்று நம்முடைய செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வழங்கும் திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என கேட்டறிந்தார்.
    • எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதுடைந்துள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியொட்டி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    விழுப்புரம் மாவட்டம், கொண்டாங்கி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது ரேவதி என்ற பெண்ணிடம் அவர் கலந்துரையாடினார்.

    அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தில் ஊராட்சியில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள். அதே போல் முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வழங்கும் திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என கேட்டறிந்தார். அதற்கு அப்பெண் 24 பேர் இத்திட்டத்தில் பயன் பெறுகின்றனர் என கூறினார்.

    தொடர்ந்து அவர் சுயஉதவி குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். இக்குழுவானது ஊராட்சி அளவில் தொழில் கடனாக ரூ.1.50 லட்சம் வழங்கியது. அதில் நான் 2 தையல் எந்திரம் வாங்கி கடை நடத்தி வருகிறேன். அதில் இருந்து வரும் வருமானத்தில் எனது குடும்ப செலவிற்கும், குழந்தைகள் படிப்பு செலவிற்கும் பயனுள்ளதாக உள்ளது. என்னை போல் உள்ள 2 மகளிருக்கு இந்த தொழிலை கற்று கொடுத்து அவர்களையும் வேலைக்கு வைத்துள்ளேன். என்னாலும் 2 பேருக்கு வேலை வழங்கி சம்பளம் வழங்கி வருவதை பெருமையாக தெரிவிக்கிறேன்.

    தொடர்ந்து 3 கோரிக்கைகளை அவர் தெரிவித்தார். அதில் எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதுடைந்துள்ளது. அதனை புதுப்பித்து தர வேண்டும். அதேபோல், கொண்டாங்கியில் இருந்து ஈச்சத்திரம் சாலையில் மின்விளக்கு அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொண்டாங்கி முதல் தொகைப்பாடி வரை சாலை பகுதியில் தடுப்பு சுவர் கட்டி தர வேண்டி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து அவர் எங்கள் மகளிர் குழு கொரோனா காலத்தில் ரூ.7 லட்சம் கூட்டுறவு சங்கத்தில் வங்கி கடன் வாங்கி இருந்தோம். தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்கு அந்த கடனை தள்ளுபடி செய்தீர்கள் அதற்கு எங்கள் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்ற தெரிவித்தார்.

    • பெண்கள் முன்னேற்றத்தில் மிகப்பெரிய அளவில் விடியல் பயணம் பங்காற்றுகிறது.
    • கிராம ஊராட்சிகளில் நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

     

    எல்லோரும் நல்லா இருக்கீங்களா என பொதுமக்களிடம் கேட்டு தனது உரையை முதலமைச்சர் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் தான், இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என கூறினார் காந்தியடிகள்.

    * மக்களுடன் மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா.

    * அண்ணா காட்டிய பாதையில் கலைஞர் கருணாநிதி உயர்ந்த லட்சியங்களை செயல்படுத்தினார்.

    * தமிழக வரலாற்றில் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்து கிராம சபை கூட்டங்களை நடத்துவது இதுவே முதல்முறை.

    * பெண்கள் முன்னேற்றத்தில் மிகப்பெரிய அளவில் விடியல் பயணம் பங்காற்றுகிறது.

    * மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * குழந்தைகள் அனைவரும் படிப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

    * நாம் தான் நமது கிராமத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    * 100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    * பல்வேறு திட்டங்களின் கீழ் 21 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தி உள்ளோம்.

    * சமத்துவம், சமதர்மம், சமூகநீதியை நிலையாட்டி வருகிறது திராவிட மாடல் அரசு.

    * கிராமங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

    * சின்ன சின்ன விஷயங்களை செய்தால் பெரிய பெரிய நன்மைகள் வந்து சேரும்.

    * கிராமங்களை சுத்தமாக வைத்திருப்பதில் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

    * தண்ணீரை பணம் போன்று பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும்.

    * மழை நீரை சேமிக்கும் பொறுப்பு நாம் அனைவரிடம் உள்ளது.

    * இழிவான தன்மையுடன் சாலை பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * கிராம ஊராட்சிகளில் நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும்.

    * மக்கள் முன்வைக்கும் குறைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என அவர் உறுதி அளித்தார்.

    • கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
    • ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.

    கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும். சிறப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இது கிராமப்புறங்களிலும் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்புகள் கிடைத்துள்ளன என்பதற்கு சான்றாகும். 11 ஆயிரத்து 100 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் இணைப்புகள் இருந்தாலும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் பேசி முடிந்த பிறகு கிராம சபைகளில் தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவது, மழைநீர் சேகரிப்பு, கொசு - டெங்கு ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் நிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல்-அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.

    • அனைத்து மரபுகளையும் தடை செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இங்கு கிராம சபை நிறைவேற்றியது.
    • இந்த முயற்சி ஒரு பெரிய சமூகப் புரட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

    மகாராஷ்டிராவில் கணவனை 7000க்கும் மேற்பட்ட கிராமங்கள் விதவைகளுக்கு எதிரான பாகுபாடு, ஒடுக்குமுறைகள் மற்றும் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளன.

    மூடநம்பிக்கைகள் மிகுந்த இந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாகப் பரவியிருந்த இந்தப் பழக்கவழக்கங்கள் பெண்களுக்கு மன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் துன்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவும் செய்தன.

    இந்நிலையில் 27,000 கிராம பஞ்சாயத்துகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில், 7,683 கிராமங்கள் கிராம சபைகளைக் கூட்டி அங்குள்ள கைம்பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்களை அகற்றுவதாக அறிவித்துள்ளன.

    இந்த மாற்றம் 2022 ஆம் ஆண்டு கோலாப்பூர் மாவட்டத்தின் ஹெர்வாட் கிராமத்தில் இருந்து தொடங்கியது. வளையல்களை உடைத்தல், தாலியை அகற்றுதல், வண்ண ஆடைகளை அணிய தடை போன்ற பழக்கவழக்கங்களைப் பின்பற்றும்படி விதவைகளை கட்டாயப்படுத்தும் அனைத்து மரபுகளையும் தடை செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இங்கு கிராம சபை நிறைவேற்றியது.

    அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களை கணபதி பூஜையில் ஈடுபடுத்தி, விழாக்களில் கொடியேற்றுதல், ஹல்தி - குங்குமம் சூட்டுதல் போன்ற திருமண நிகழ்வுகளில் பங்கேற்க வைத்தல் போன்றவையும் கிராமத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

    இந்த ஊக்கமளிக்கும் முடிவு ஒரு பிரச்சார வடிவத்தை எடுத்து படிப்படியாக ஆயிரக்கணக்கான கிராமங்கள் இந்த இயக்கத்தில் இணைந்தன. கோயில் பூஜைகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கைம்பெண்கள் கலந்துகொள்வதை தடுக்கக் கூடாது எனவும், இதற்காக கிராமங்களில் கண்காணிப்பு குழு அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டது.

     

    இந்த பிரச்சாரம் மகாராஷ்டிராவின் சாங்லி, சதாரா, கோலாப்பூர், நாசிக், பீட், உஸ்மானாபாத் போன்ற மாவட்டங்களில் வேகமாகப் பரவியது.

    இப்போது விதவைகள் பண்டிகைகளில் பங்கேற்கவும், வண்ணமயமான ஆடைகளை அணியவும், சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் திருமண விழாக்களுக்கு அழைக்கப்படுகிறார்கள், மேலும் பல கிராமங்களில் விதவைகள் மறுமணம் செய்து கொண்டுள்ளனர்.

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய முகமாக சமூக ஆர்வலர் பிரமோத் ஜின்ஜாடே திகழ்கிறார். "ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியமான வாழ்க்கை வாழ உரிமை உண்டு. கணவரின் மரணத்திற்குப் பிறகு அவளுடைய வாழ்க்கை முடிவடைவதில்லை, ஆனால் அது ஒரு புதிய தொடக்கமாகும்" என்று அவர் கூறுகிறார்.

    பல கிராமங்களில் இன்னும் மாற்றம் தேவை என்றும், ஆனால் இந்த முயற்சி ஒரு பெரிய சமூகப் புரட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

    • நாமக்கல் மாவட்டத்தி லுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தி லுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல்.

    கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு,

    ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி/சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குதல்,

    2021 -22 மற்றும் 2022 - 23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.

    • ஒன்றிய அரசிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.36,000-ம் கோடி பெறப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கப்படுகிறது.
    • விளாத்திகுளம் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் நேற்று உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் அமுதா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் திட்டங்கள் செயல்ப டுத்துவதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.36,000-ம் கோடி பெறப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கப்படுகிறது. பணி வாரியாக, திட்டங்கள் வாரியாக வரவு- செலவு கணக்குகளை எழுதி வைக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களில் அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

    மேலும், திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி தேவைப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் மூலமாக கோரிக்கை வைத்தால், கூடுதலாக அரசிடமிருந்து பெற்று தரப்படும். ஆனால், இருக்கும் தொகையை முறையாக செலவழிக்க வேண்டும். உங்கள் பணத்தை வைத்து உங்கள் கிராமத்தை மேம்படுத்த வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை சிறந்த முறையில் பயன்படுத்தி ஊராட்சிகளை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குளங்களை தூர்வார கோரிக்கை

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், விளாத்திகுளம் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. விளாத்திகுளம் தொகுதியில் 139 ஊராட்சிகள் இருக்கிறது. விளாத்திகுளம் வட்டத்தில் மட்டும் 92 வருவாய் கிராமங்கள் இருக்கிறது. அனைத்து கிராமங்களிலும் பாசன குளங்கள் உள்ளன. இவை சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளங்கள் நூற்றாண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது.

    இப்பகுதிகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து அந்த குளங்களை 2 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஏனென்றால் வில்வமரத்துப்பட்டியில் உள்ள 380 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தினை சுமார் 10 அடி ஆழத்திற்கு தூர்வாரினால் ஒரு நீர்த்தேக்கம்போல் மாறி தண்ணீரின் உப்புத்தன்மை நீங்கி அனைவருக்கும் நல்ல குடிநீர் கிடைக்கும். தாமிரபரணி தண்ணீரினை செலவு செய்து கொண்டு வர வேண்டியதில்லை. இங்குள்ள குளங்களை தூர்வாரினாலே போதும் இங்கேயே குடிநீருக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன், என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோட்டாட்சியர் மகாலெட்சுமி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீரபத்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் நடராஜன், மிக்கேல் நவமணி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் முனியசக்தி ராமசந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், ஹெச்.சி.எல். பவுண்டேஷன் வைபவ் சவுக்கான், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்ன பொன்னு, புஷ்பவல்லி, மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் நடந்தை ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த வசந்தா உள்ளார். உப தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி செயல்பட்டு வருகிறார். ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா தலைமையில் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியசூரம்பாளை யத்தில் கடந்த 40 ஆண்டு

    களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக கூறி பலமுறை கிராமசபா கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2-ல் நடந்த கிராம சபை கூட்டங்களும் குவாரி எதிர்ப்பால் புறக்கணிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது நடந்த கிராம சபை கூட்டத்தில், குவாரிக்கு ஆதரவாக கிராம சபை கூட்டம் நடைபெறு வதாகவும், தீர்மானங்களை படிக்காமலேயே கையெ ழுத்து வாங்குவதா கவும், தலைவர், உபதலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பினர்.

    தொடர்ந்து, வார்டு உறுப்பினர்கள் கையெழுத்து வாங்குவதிலேயே தீவிரமாக இருக்க, தீர்மானத்தை படிக்க வேண்டும் என ஒரு தரப்பு வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய பி.டி.ஓ

    நடராஜன் கிராமசபை கூட்டத்தில் போடப்பட்டுள்ள தீர்மா னங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டது என அறி வித்தார். அசம்பா விதத்தை தடுக்க நல்லூர் போலீ சார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து ஊர்ப்பொது மக்கள் சிலர் கூறும்போது, இங்குள்ள குவாரிகளால் நாங்கள் நிம்மதி இழந்து தவிக்கிறோம். ஆனால் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறி குவாரி பிரச்சனையை அப்படியே விட்டு விட்டனர் என்றனர்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 22-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
    • கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 22-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

    இதில், உலக தண்ணீர் தின கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவா தித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் பணிகள் நடக்கின்றன.

    மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சித்திட்டம் , தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன்(குடிநீர்) இயக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மேலும், ஊராட்சிகளில் தற்போது நடைபெறும் அனைத்து பணிகள், கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.

    துணை தலைவர் அமலா கிராம நிர்வாக அலுவலர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரஜினி வரவேற்றார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கலந்துகொண்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.

    நடைபெற்று வரும் திட்ட பணிகளை தரமுடன் செயல்படுத்தி வருவதாகவும், சுகாதாரம், குடிநீர், தெரு விளக்கு பராமரித்து வருவதாகவும் இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    பின்னர் ஊராட்சிக்கு தேவையான 2023-24 ஆண்டிற்க்கான கிராம வளர்ச்சி திட்ட பணிகளை தயார் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அபிராமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கமுதி அருகே கிராம சபை கூட்டம் நடந்தது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குளம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.

    இளநிலை உதவி யாளர் நிறைபாண்டியன் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் ராஜேசுவரி கதிரேசன், ஊராட்சி செயலாளர் வேல் முருகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி முழுவதும் கூடுதல் மின்விளக்கு அமைத்தல், கருங்குளம் மயானத்திற்கு எரிமேடை மற்றும் காத்திருப்போர் கூடம், தடுப்புச்சுவர் அமைத்தல், புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பது குறித்தும், பாக்குவெட்டி, கருங்குளம் கிராமத்தில் மயானச்சாலை அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இதேபோல் ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்காளர் தெய்வ மணிகண்டன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராமநாதன், ஊராட்சி செயலர் ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தூய்மையான கிராமம் உறுதிமொழி எடுத்தல், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு ஒப்புதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    கீழராமநதி ஊராட்சி யில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் முத்துமாரி முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் மைதீன், ஊராட்சி செயலர் முத்துராமு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    தூய்மையான கிராமம் உறுதிமொழி எடுத்தல், உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கே.நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    • உத்திரகோசமங்கையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு பங்கேற்று ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். ''நம்ம ஊரு சூப்பரு'' குறித்த விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    ×