search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலனூர் பகுதியில் கிராமசபை கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு
    X

    பெரமியம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் பலரை படத்தில் காணலாம். 

    மூலனூர் பகுதியில் கிராமசபை கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

    • மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி மாதவநாயக்கன்பட்டி பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    மூலனூர்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூலனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குமாரபாளையம் ஊராட்சி மற்றும் பெரமியம் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி மாதவநாயக்கன்பட்டி பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பற்றியும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பள்ளி குழந்தைகளின் கல்வி ஆகியவை பற்றி சிறப்பாக எடுத்துக்கூறினார்.

    கூட்டத்தில் குமாரபாளையம் ஊராட்சி தலைவர் செந்தில் வடிவு சிவசாமி, மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து பெரமியம் ஊராட்சியில் ஊராட்சித் துணைத் தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு இரு ஆண்டுகளில் செய்த சாதனைகள் காணொளி காட்சி மூலமாக அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி அந்த பகுதி விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் பொருட்களை வழங்கினார். கூட்டத்தில் பெரமியம் ஊராட்சி தலைவர் ராணி , போளூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சுமதி கார்த்திக் , மூலனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் துரை , மூலனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, ஒன்றிய இளைஞரணி மற்றும் மாநில விளையாட்டு துறை துணை செயலாளர் கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×