என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Siege"
- தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.
- மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்புரம் பகுதியில் 100 குடும்பங்கள் 4 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் பல கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் அபகரிப்பு முயற்சி செய்து வருவதாக அப்பகுதி பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆவுடையார்புரம் பகுதியில் மது போதையில் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மத்திய பாகம் போலீஸ் நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர்.
அப்போது தூத்துக்குடி மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை செயலாளர் வக்கீல் செல்வகுமார் கூறுகையில், இப்பகுதியில் 3 நபர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
அதை பொதுமக்கள் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர்களின் வீட்டை அந்த 3 பேரும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளோம் என்றார்.
இதுகுறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே உள்ள வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கருணாகரனை விழுப்புரம் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர், ஆசிரியர் கருணாகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு நேற்று சென்றனர். ஆசிரியர் கருணாகரன் மிகவும் நல்லவர். ஆசிரியர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டினால் அவர் மீது பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் மீதான வழக்கை நீக்க வேண்டும். அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவரை மீண்டும் இதே பள்ளியில் ஆசிரியராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனை செய்யவில்லை என்றால், எங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் அவர்களை சேர்த்துக் கொள்கிறோம் என வலியுறுத்தினர்.இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததின் பேரில் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்நிலையில் வாக்கூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்களுடன் அதே பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளும் வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.அங்கு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து 10 பெற்றோர், 5 மாணவிகளை கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். மற்றவர்களை வெளியில் இருக்கும்படி போலீசார் கூறினர்.அதன்படி 10 பெற்றோர், 5 மாணவிகளையும் உள்ளே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வழக்கத்தை விட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கூர் பள்ளியில் பயிலும் 157 மாணவர்களில் 6 பேர் மட்டுமே இன்று பள்ளிக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பாவாடை மனைவி கனகாம்பரம் (வயது 55).இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் திருவெண்ணைநல்லூர் மலட்டாற்று பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.இதைத் தொடர்ந்து அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு போய் தேடி பார்த்தனர். ஆற்று பகுதியில் பழமையான உரை கிணறு அருகே கனகாம்பரம் வைத்திருந்த வெற்றிலை பாக்கு வைக்கும் சுருக்கு பை, குடை மற்றும் காலனி கிடந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவி னர்கள், அவர் கிணற்றில் விழுந்திருக்காலம் என கறுதி திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிணற்றில் இறங்கி தேடினர். அங்கு அவர் விழுந்ததற்கான எந்த தடயமும் இல்லை. கனகாம்பரமும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று காலை மலட்டாறு வா ய்க்காலில் கனகாம்பரத்தின் உடல் பிணமாக மிதந்தது. அதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து அவரது மகனுக்கும் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.அப்போது அங்கு திரண்ட கனகாம்பரத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, கனகாம்பரத்தின் உடலை விழுப்புரம் - திருவெண்ணைநல்லூர் - அரசூர் கூட்டுச்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, அதன் அறிக்கை வந்த பிறகு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க ப்படுமென கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இறந்த கனகாம்பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கனகாம்பரத்தில் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கனகாம்பரத்தின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பைக் பேரணியாக சென்றதால் பரபரப்பு
- மரணமடைந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் கடந்த 4-ந்தேதி ஏற்பட்ட விபத்தில் 14 பேர் தீக்காயமடைந்தனர்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெடுஞ்செழியன் என்ற தொழிலாளி மரணமடைந்தார். இந்த தொழிற்சாலை வரம்பை மீறி அதிகளவில் உற்பத்தி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மரணமடைந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிவாரணத்தொகையை குறைந்தபட்சம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
சிகிச்சை பெறுவோரில் எத்தனை பேர் அபாயகட்டத்தில் உள்ளனர்? என தெரிவிக்க வேண்டும். தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். ரூ.பல கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என புகார் கூறி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்.
மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். மக்கள் கருத்தறிய குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளுவர் சாலையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்திலிருந்து மோட்டார் சைக்கிள்களில் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மனிதநேய மக்கள சேவை இயக்க நிர்வாகிகள், ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர்.
பேரிகார்டு அமைத்து போலீசார் அவர்களை தடுத்தனர். போலீசாருடன் நேரு எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அரசு விழாவுக்கு கலெக்டர் சென்றுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து சப்-கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். அவரின் கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. மற்றும் ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பல சமயங்களில் பால் சப்ளை செய்யும் வாகனங்களை திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பால் வாங்க வரும் பொதுமக்கள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு தனியார் பால் வாங்கி சென்று விடுகின்றனர்.
மதுரை:
மதுரையில் ஆவின் பால் விநியோகம் தாமதமாவது தொடர்கதையாகி வருகிறது. அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் காலை 2 மணி முதல் 3 மணிக்குள் பால் சப்ளையாகிவிடும்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆவின் பால் தாமதமாக வருவதாக முகவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பல சமயங்களில் பால் சப்ளை செய்யும் வாகனங்களை திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மதுரை சாத்தமங்கலம் பகுதியில் இன்று காலை 7 மணி வரை ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த முகவர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7 மணி வரை பால் வாகனம் வரவில்லை. அடிக்கடி தாமதமாக வருகிறது. பால் வாங்க வரும் பொதுமக்கள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு தனியார் பால் வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டால், ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அனைத்து பகுதிகளும் தனியார் பால் மட்டும் வந்து விடுகிறது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் தனியார் பால்கள் கூட சரியான நேரத்தில் மதுரைக்குள் சப்ளை செய்யப்படுகிறது.
ஆனால் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஆவின் பாலை சப்ளை செய்வதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என தெரியவில்லை. நிர்வாகத்திடம் பல முறை கூறியும், முழு அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து ஆவின் பால் சரியான நேரத்தில் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- புதிய அரசு குவாரிகளை இயக்க கோரி திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது
- மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது
திருச்சி,
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி சுப்பிரம ணியபுரத்தில் பொதுப்ப ணித்துறை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தொடர் காத்திருப்பு முற் றுகை போராட்டம் மாநில தலைவர் செல்ல.ராஜாமணி தலைமையில் நடந்தது.
செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி உள்பட 200-க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், மணல் லாரி டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் ஐம்பதாயிரத் துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்க ணக்கான லாரி ஓட்டுனர்க ளின் வாழ்வா தாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழகம் முழு வதும் அதிக எண்ணிக் கையில் புதிய மணல் குவாரி களை இயக்கிட வேண்டும்,
ஒவ்வொரு மணல் குவா ரியிலும் உள்ள விற்பனை கிடங்குகளில் குறைந்தபட்சம் 200 லாரிகளுக்கு லோடு செய்ய அனுமதிக்க வேண் டும்,
மணல் லாரிகளுக்கு வாகன சோதனையின் போது ஆன்லைன் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண் டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோரிக்கை களை நிறைவேற்றாவிட் டால் தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
- மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
- நாங்கள் காலம், காலமாக இங்கு கடை நடத்தி வருகிறோம்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் சாலை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியபகுதிகளில் சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன. இதில் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாக கணக்கெடுத்து அதன் உரிமையாளருக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சி செயற்பொறியாளர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் குருமூர்த்தி, பாஸ்கரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்களுடன்2 ஜே.சி.பி. மற்றும் 4 டிப்பர் வாகனம் கொண்டு வந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் வளாகம் உள்ள இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
முன்னதாக மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு மற்றும் அங்கு கடை வைத்திருப்பவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டனர். நாங்கள் காலம், காலமாக இங்கு கடை நடத்தி வருகிறோம். இங்குள்ள கடைகளை அகற்றக் கூடாது. எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தற்போது அகற்றப்படும் கடைகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கி கடைகளை அப்புறப்படுத்த அவகாசம் வழங்க வேண்டும். மேலும் கடந்த பல ஆண்டுகளாக ஏற்கனவே நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெற்று வாடகை செலுத்தி வரும் கடைகளுக்கு நிரந்தரமாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது முதல் கட்டமாக தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றோம். மேலும் 15 நாட்களுக்கு பிறகு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தால் கண்டிப்பாக அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபடும். வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- கரூர் நன்னியூர் புதூரில் அரசு மணல் கிடங்கை முற்றுகையிட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
- மீண்டும் மணல் அள்ள அனுமதி கோரி போராட்டம்
கரூர்,
கரூர் மாவட்டம் நன்னியூர் புதூரில் செயல்பட்டு வரும் அரசு மணல் கிடங்கை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கரூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,
கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் நன்னியூர் புதூர் கிராமத்தில் அரசு மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மணல் கிடங்கில் கடந்த ஒன்றரை மாதங்களாக அமலாக்கத்துறை சோதனையால் குவாரிகள் மூடப்பட்டு மாட்டு வண்டியில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது மாடுகளுக்கு தீவனமாக வாங்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் குவாரியில் மணல் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தஞ்சை போன்ற மாவட்டங்களில் மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி இருக்கும் நிலையில் கரூர் மாவட்டத்திலும் மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி வழங்க வேண்டும். இந்த நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் மூலம் லாரிகளுக்கு மணல் அல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்தவுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு மணல் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி கொடுக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
- குளித்தலையில் லாரி மோதி தொழிலாளி பலி; உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்
- விபத்து ஏற்படுத்திய வாகனம் வழக்கில் சேர்க்கவில்லை என்று குற்றச்சாட்டு
கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயக்கூலித் தொழிலாளி. இவர், மேட்டு மருதூரில் இருந்து பணிக்கம்பட்டிக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.அப்போது அந்த வழியாகவந்த டிராக்டர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்த நிலையில் போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆறு முகம் இறந்ததாக வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் வழக்கில் சேர்க்கப்பட்டது என கூறியதை அடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
- 3 இடங்களில் மட்டுமே எரிவாயு பங்குகள் அமைக்கப்பட்டன.
- ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
பெட்ரோல், டீசல் எரிபொருளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க அதற்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சி.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை விற்பனை செய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 400 ஆட்டோக்கள் சி.என்.ஜி எரிவாயு(அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மூலம் இயங்கி வருகிறது.
மயிலாடுதுறை லட்சுமிபுரம், சேத்திரபாலபுரம் மற்றும் சீர்காழி ஆகிய 3 இடங்களில் மட்டுமே எரிவாயு பங்குகள் அமைக்கப்பட்டன.
இங்கும் கடந்த 6 மாதங்களாக சரிவர எரிவாயு விநியோகம் செய்யப்படாததால், நகரில் கூடுதல் சி.என்.ஜி எரிவாயு பெட்ரோல் பங்குகளை அமைக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட சி.என்.ஜி. எரிவாயு ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை அருகில் ஒரு பங்கில் சி.என்.ஜி. இயற்கை எரிவாயு இல்லாததைக் கண்டித்து, ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க சிறப்புத் தலைவர் தங்க.அய்யாசாமி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரம்பூர் ராம்மோகன், மயிலாடுதுறை சின்னகடைவீதி ராஜகோபால், மணிக்கூண்டு முருகன், மார்கெட் பகுதி சாமிநாதன் உள்ளிட்ட ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதைத்தொடா்ந்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
- சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம் எதிரொலியால் ஆத்திரம்
திருச்சி,
சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்அருகில் அவரது உருவப் படத்தை வைத்து மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று நடந்தது.அப்போது அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை எனக் கூறி படத்தை அங்கிருந்து அகற்றி போலீஸ் ஸ்டேஷன் எடுத்துச் சென்றார். இதனையடுத்து ராமசாமி படையாட்சி படத்தை அவமரியாதை செய்ததாக கூறி, வன்னியர் சங்கத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டதோடு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் போலீசார் ராமசாமி படையாட்சி படத்தை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைத்தனர். இதனையடுத்து அவரது உருவப்படத்திற்குவன்னியர் சங்க பொறுப்பாளர் ராஜேந்திரன், படையப்பா ரெங்கராஜ், சந்தோஷ், சக்தி, சிவாஜி சண்முகம், அதிமுக டைமண் திருப்பதி, வன்னியர் சங்கத்தினர், பாமகவினர் மற்றும் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்தப் போராட்டக் காரணமாக ஸ்ரீரங்கத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 165 பேரை கைது செய்தனர்.
கும்பகோணம்:
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு இன்மை போன்றவற்றுக்கு காரண மான மத்திய அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலை யத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.
தேசியக்குழு உறுப்பினர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார்.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராதாகி ருஷ்ணன், குமரப்பா, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலன், ராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், தண்டபாணி, கண்ணகி, நாராயணன், ராஜலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி. கைத்தறி மாநிலத்தலைவர் மணிமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அழகேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 165 பேரை கைது செய்தனர்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு தலைமை தபால் நிலையம் பகுதிக்கு ஊர்வ லமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்