என் மலர்
நீங்கள் தேடியது "Corporation"
- இந்த கோவில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
- இதேபோல் கோவில் அருகே இருந்த கடைகளையும் இடித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை எம்.கே. மூப்பனார் சாலை மற்றும் வி .எம். பெருமாள் கோவில் தெரு ஆகியவற்றை இணைக்கும் ஒரு தனியார் பள்ளி அருகே விநாயகர் கோவில் உள்ளது.
இந்த கோவில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதேபோல் கோவில் அருகே இருந்த கடைகளையும் இடித்தனர்.
- அனைத்து மண்டலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
- பெருநகர சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்கு படுத்துதல், சட்டம் 2014ன்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
களப்பணியாளர்கள் மூலம் இணையதள இணைப்புடன் கூடிய கைபேசி தரவு மூலம் தெருவோர வியாபாரி மற்றும் விற்பனை புகைப்படம், சுய விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேவையான இதர தகவல்கள் ஆகியவற்றை பெற்று பதிவு செய்யும் பணி தற்பொழுது கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மண்டலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை மற்றும் விற்பனை சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும்.
தெருவோர வியாபாரிகள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பெறவும் வழிவகை செய்யப்படும்.
மேலும், தெருவோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார நிதியிலிருந்து பல்வேறு மேம்பாட்டு வசதிகளை பெறவும், உணவு விற்பனை கடைகள் நடத்திட தமிழக உணவு பாதுகாப்பு துறையின் தரச் சான்றிதழ் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக, இஸ்ராம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் மத்திய அரசு நிறுவனத்தின் களப்பணியாளர்கள் மூலம் பதிவு கட்டணமின்றி தெருவோர வியாபாரிகளை பதிவு செய்யவும், அவ்வாறு பதிவு செய்யும் வியாபாரிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கு மருத்துவ, விபத்து காப்பீடு வசதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சியின் சார்பில் தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளர்களிடம் வியாபாரிகள் தங்களுடைய சுய விவரங்கள், விற்பனை பற்றிய தகவல்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை காண்பித்து இலவசமாக பதிவு செய்து கொண்டு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக ரூ.21 லட்சத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
- ஒரே நேரத்தில் சுமார் 25 பஸ்கள் வரை வந்து நிற்கும் வகையில் சந்திப்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
சந்திப்பு பஸ்நிலையம்
அதன் ஒரு பகுதியாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சந்திப்பு பஸ் நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக ரூ.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டது.
உடனடியாக பணிகள் தொடங்கிய நிலையில் பள்ளம் தோண்டும்போது தண்ணீர் அதிக அளவு ஊறியதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் சுமார் ஓராண்டுக்கு பிறகு 2019-ம் ஆண்டு கடைசியில் பணிகள் மீண்டும் தொடங்கின. அங்கு தற்போது ஒரு பகுதி பணிகள் முடிவடைந்து உள்ளது.
144 கடைகள்
இந்த பஸ் நிலையத்தில் 144 கடைகளை உள்ளடக்கிய வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடைகள் மூலமாக மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த 3 அடுக்கு வணிக வளாகங்களுக்கு கீழே 106 கார்கள், 1,629 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கீழ்த்தளம் அமைக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் சுமார் 25 பஸ்கள் வரை வந்து நிற்கும் வகையில் சந்திப்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.மழைக்காலத்தில் இந்த பகுதியில் அதிகமாக தண்ணீர் தேங்கும் என்பதால் அதனை சமாளிக்கும் வகையிலும் தண்ணீர் தேங்காத அளவுக்கு நவீன முறையில் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
காமிரா
திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக ரூ.21 லட்சத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இது தவிர மேல் தளங்களுக்கு செல்வதற்காக தானியங்கி படிக்கட்டுகள், தேவையான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட உள்ளது.
மேலும் பயணிகள் அமர்வதற்கு துருப்பிடிக்காத இருக்கைகள், 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகள் வசதி, ஆங்காங்கே தொலைக்காட்சிகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.
மாநகராட்சி ஏற்பாடு
தற்போது ஒரு பகுதி பணி முடிவடைந்துள்ளதால் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் சந்திப்பு பஸ்நிலையத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளது.
அந்த பகுதியை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பஸ் நிலையம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே தற்போது அதனை திறப்பதில் சாத்தியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணம்:
கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் அய்யப்பன் பேசுகையில், தனது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடைப்பை சரிசெய்ய வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் பத்மகுமரேசன் பேசுகை யில், தாராசுரம்பகுதி கும்பகோணம்மாநகரா ட்சியால் புறக்கணிக்க ப்படுகிறது என்றே நினைக்க தோன்றுகிறது. தாராசுரம் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் ஆதிலட்சுமி பேசுகையில், கூட்டத்தில் முக்கியமான பொருளை விவாதத்திற்கு கொண்டு வந்துள்ள போது அது குறித்து விவாதிக்காமல் கூட்டத்தை முடித்து தீர்மானங்களை நிறைவேற்றுவது கண்டிக்க த்தக்கது என்றார்.
இதேபோல, கவுன்சி லர்கள் பலர் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். கூட்டத்தில் நகர் நல அலுவலர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் உள்ள பயன்படுத்தாத நிலையில் உள்ள பேட்டரி, கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இந்த முகாமில் கொடுத்து பணமாக பெற்றுக்கொள்ளலாம்.
- பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தரம் பிரித்து அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் அதனை பணமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின்னணு கழிவுகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் ஒருசேர சேகரிக்கும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது . திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பு மூலம் துவங்கப்பட்ட இத்திட்டம் இன்றைய தினம் இரண்டாவது முறையாக சிறப்பு முகாமாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது . பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் உள்ள பயன்படுத்தாத நிலையில் உள்ள பேட்டரி ,கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இந்த முகாமில் கொடுத்து பணமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது .
குப்பைகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தரம் பிரித்து அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் அதனை பணமாகவும் மாற்றிக் கொள்வதோடு இயற்கைக்கு கேடு விளைவிக்காத வகையில் அமைத்துக் கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் ,நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்படுத்தப்படாத மின்னணு கழிவுகளை இன்று மாநகராட்சியில் ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொண்டனர் .இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி , துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அந்த வகையில் இன்று மாவட்டத்தில் மாதிரிகள் எடுக்கப்பட்டதில் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மாநகர பகுதியில் 14 பேரும், அம்பையில் 12 பேரும், சேரன்மகாதேவியில் 11 பேரும், களக்காடு, பாப்பாக்குடியில் தலா 7 பேரும், நாங்குநேரி. ராதாபுரத்தில் தலா 6 பேரும், மானூர், பாளையில் தலா 2 பேரும், வள்ளியூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி 50க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45-வது வார்டு காங்கேயம் ரோடு புளியமரத்தோட்டம் பகுதியில் 25 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பலதரப்பட்ட கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறும்போது , நாங்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் . நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என கூறிக்கொண்டு திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் காலிக்குடத்துடன் கலந்து கொண்டார்.
- தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியம் பேசும் போது, வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.
மருத்துவ உபகரணங்கள்
துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மாநகர பொறியாளர் அசோகன் மற்றும் செயற்பொறியாளர்கள், 4 மண்டல உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், 55 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ரூ.9.92 கோடி மதிப்பில் மாநகராட்சி பகுதியில் உள்ள 9 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காலி குடத்துடன்...
மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்கள், சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்வதற்கு சுயஉதவிக்குழுக்கள் மூலம் 645 நபர்களை நியமிக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற 32-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் காலிக்குடத்துடன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது கடந்த ஒருவாரத்திற்கு மேலாக எங்களது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியம் பேசும் போது, வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பாலபாக்யா நகரில் விடுபட்ட இடங்களில் சாலை கள் அமைக்க வேண்டும். விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தார்சாலைக்கு பதிலாக பேவர் பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
26-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரபா சங்கரி, 30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன்நாதன் என்ற கணேசன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 10 மணிக்கு வந்தனர். ஆனால் 10.25 மணி வரை கூட்டம் நடைபெறாததால் அவர்கள் கையெழுத்திட்டு சென்றனர்.
- மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.
- பருவமழை காலங்களில் பாதிக்கப்படாமல் இருக்க மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி யின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்றது. மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.
ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி,
அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை கலந்து கொண்டனர். மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டப் பணிகளை, மாநகராட்சிக்கு வருவாய் நிதி இழப்பை ஏற்படுத்தி யவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி நிவாரண நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 15-வது நிதிக்குழு மானியம் மூலம் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 5 பஞ்சாயத்துகளில் ஊராட்சி செயலாளர்களாக இருந்தவர்களுக்கு மாநகராட்சியின் பணி வழங்குதல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கரபேரி, முத்தையாபுரம், மீளவிட்டான் உள்ளிட்ட பஞ்சாயத்து பகுதிகளில் பருவமழை காலங்களில் பாதிக்கப்படாமல் இருக்க மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுத்தல், உட்பட வளர்ச்சி பணிகள் குறித்து 16 வகையான பொருள் குறிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட 36-வது வார்டுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட 36-வது வார்டுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று காலை 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க. வேட்பாளர் சுதா என்கின்ற சுப்பராயன் வந்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நரசிங்கராயர் தெரு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் 4 கிராம் தங்க மோதிரம் கேட்பாரற்று கிடந்தது. அதனை எடுத்த சுப்பராயன் இதுபற்றி மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தார். பின்னர் அவர் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகரை நேரில் சந்தித்து மோதிரத்தை வழங்கினார். அப்போது நெசவாளர் அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கர், கார்த்திக் உடன் இருந்தனர்,
- மாநகர பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு முககவசம் அணிவித்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முககவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
விழிப்புணர்வு
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் முககவசம் அணிந்து செல்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன.
அதன்ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு முககவசம் வினியோகிக்கும் நிகழ்ச்சியை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, நகர்நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரதவீதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், தள்ளவண்டிகடைகளில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி, தொற்று மீண்டும் அதிகரிப்பதால் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு முககவசம் அணிவித்தனர்.
இதேபோல மாநகர பகுதி முழுவதும் பொது மக்களுக்கு முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாநகராட்சி சார்பில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.