search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barrier fence"

    • ராமேசுவரத்தில் தடுப்பு வேலியை திறந்துவிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தடுப்பு வேலியை மீண்டும் அடைத்து பக்தர்கள் முறை யாக செல்ல வழி வகை செய்தார்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தொடர் விடு முறை காரணமாக 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பக்தர் கள் வருகை தந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி பின் னர் ராமநாதசுவாமி கோவி லுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராட ஒரே நேரத்தில் பக்தர்கள் குவிந்த னர்.

    இதனால் வடக்கு ராஜ கோபுரம் பகுதியில் எங்கு பார்த்தலும் பக்தர்களாக காணப்பட்டனர். கோவி லுக்கு உள்ளேயும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இருந் தனர். இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டு வரிசை யாக நீராட அனுமதிக்கப் பட்ட னர்.

    இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் திடீரென தடுப்பு வேலியை திறந்து விட்டதால் பெரும் கூட்டமாக கோவிலுக்குள் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தனர்.

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப ட்டது. இதனைத் தொட ர்ந்து, அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தடுப்பு வேலியை மீண்டும் அடைத்து பக்தர்கள் முறை யாக செல்ல வழி வகை செய்தார். அங்கிருந்த இன்ஸ் பெக்டர் முருகேசன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.

    • மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதை தடுக்க கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
    • அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    கோவை,

    கோவையில் நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று பலியானது. மின் கம்பம் உடைந்து யானையின் மீது விழுந்ததில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

    இதையடுத்து மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய வழிமுறைகளை பின்பற்ற கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வனப்பகுதியை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளை வரையறுத்து அந்த பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்தல், உயரமான மின் கம்பங்களை அமைப்பது, காப்பிடப்பட்ட மின் கம்பிகளை பயன்படுத்துதல், மின் கம்பங்களை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    வனத்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகள் மற்றும் மின் கம்பிகளை ஆய்வு செய்ய கூட்டு புலத்தணிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    மேலும் மனித - வன விலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பது குறித்து தாசில்தார், வனச்சரக அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர், மின்வாரிய அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

    • பழனி செல்லும் வாகனங்களை பார்க்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • ஒரு காவலரை நிறுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலையிலிருந்து பழனி செல்லும் ரோட்டின் தெற்கு பகுதியில் தடுப்பு வேலி இல்லாததால் தெற்கிலிருந்து கொழுமம் ரோடு மற்றும் அரசு குடியிருப்பு பகுதி வழியாக வடக்காக வரும் வாகனங்கள் எதிரே உடுமலையிலிருந்து அதிவேகமாக பழனி செல்லும் வாகனங்களை பார்க்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    மேலும் இந்த பகுதியில் குடியிருப்பு மற்றும் வங்கி மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் உள்ள பகுதி என்பதால் இந்த பகுதியை அடிக்கடி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கவும் தடுப்பு வேலி அமைக்கவும் பள்ளி துவங்கும் மற்றும் பள்ளி விடும் நேரங்களில் நிரந்தரமாக ஒரு காவலரை அந்த பகுதியில் நிறுத்தி கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×