search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பழனி  ரோட்டில் விபத்துக்களை தடுக்க  தடுப்பு வேலி  அமைக்கப்படுமா?
    X

    விபத்து ஏற்படும் பழனி- உடுமலை சாலை.

    உடுமலை பழனி ரோட்டில் விபத்துக்களை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

    • பழனி செல்லும் வாகனங்களை பார்க்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • ஒரு காவலரை நிறுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலையிலிருந்து பழனி செல்லும் ரோட்டின் தெற்கு பகுதியில் தடுப்பு வேலி இல்லாததால் தெற்கிலிருந்து கொழுமம் ரோடு மற்றும் அரசு குடியிருப்பு பகுதி வழியாக வடக்காக வரும் வாகனங்கள் எதிரே உடுமலையிலிருந்து அதிவேகமாக பழனி செல்லும் வாகனங்களை பார்க்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    மேலும் இந்த பகுதியில் குடியிருப்பு மற்றும் வங்கி மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் உள்ள பகுதி என்பதால் இந்த பகுதியை அடிக்கடி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கவும் தடுப்பு வேலி அமைக்கவும் பள்ளி துவங்கும் மற்றும் பள்ளி விடும் நேரங்களில் நிரந்தரமாக ஒரு காவலரை அந்த பகுதியில் நிறுத்தி கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×