என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாநகராட்சி"
- தீர்மானத்தை அனைவரும் ஆதரித்து நிறைவேற்றி அரசிதழில் வெளியாவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
- சிறப்பு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2-வது மண்டல குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை (தி.மு.க.) சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில், தமிழக முதலமைச்சரால் தகைசால் தமிழர் விருது பெற்ற சுதந்திர போராட்ட வீரர் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரான ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவருமான என்.சங்கரய்யா கடந்த மாதம் 15-ந்தேதி மரணம் அடைந்தார். மறைந்த என்.சங்கரய்யா மாநகராட்சி-2 பகுதியில் உள்ள குரோம்பேட்டை நியூ காலனியில் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வந்தவர்.
எனவே மறைந்த என். சங்கரய்யாவை என்றென்றும் நினைவு கொள்ளும் வகையில், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் வாழ்ந்த குரோம்பேட்டை நியூ காலனி பகுதியை சங்கரய்யா நகர் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.
இந்த தீர்மானத்தை அனைவரும் ஆதரித்து நிறைவேற்றி அரசிதழில் வெளியாவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இதையடுத்து இந்த சிறப்பு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
- மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- பொதுமக்கள் பூங்கா முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இதனை தடுக்கும் விதமாக மாநகர பகுதியில் சுற்றித்தெரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவிட்டார். அதன் பேரில் 4 மண்டலங்களிலும் மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்து பூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான குழுவினர் பிடித்து மேகலிங்கபுரம் ரேஷன் கடை எதிரே அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் அடைத்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பூங்கா முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்காமல் வீடுகளில் நின்ற மாடுகளை பிடித்து வந்து அடைத்து உள்ளதாகவும், உடனடியாக அனைத்து மாடுகளையும் விடுவிக்கும்படியும் கூறினர்.
அப்போது சுகாதார ஆய்வாளர் முருகன் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை மட்டுமே பிடித்துள்ளோம். உரிய அபராதமாக ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு மாடுகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும், இனிமேல் சாலைகளில் மாடுகளை சுற்றி திரிய விடமாட்டோம் என எழுதி தரும்படியும் அறிவுறுத்தினார்.
எனினும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- வடக்கு மண்டல தலைவர் தகவல்
- மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்தது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு உறுப்பினரும், வடக்கு மண்டல தலைவருமான ஜவஹர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் வார்டு பகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி ஹனிபா நகரில் மேடுபள்ளமாக இருந்த பகுதிகள் சீர் செய்யப்பட்டு கழிவுநீர் பாய்ந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜோதி தெருவில் மழைநீர் வடிகால்கள் சீர் செய்யப்பட்டது.
16-வது வார்டு சுத்தம், சுகாதாரம் நிறைந்த வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. 2 போர்வெல்களில் இருந்து வரும் தண்ணீர் இணைக்கப்பட்டு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படுகிறது. இம்மானுவேல் தெரு, ேஜாதி தெரு பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டும், நிலை உயர்த்தப்பட்டும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
அடுத்து 2 மாத காலத்திற்குள் புத்தன் அணை குடிநீர் திட்டம் அமலுக்கு வரும்போது தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும், வார்டு பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருகின்றன. கே.பி.ரோடு, எம்.எஸ்.ரோடு, கிறிஸ்டோபர் தெரு ஓடைகள் புதுப்பிக்கப்படும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையோரம் நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
16-வது வார்டு பகுதியில் சுகாதார மையம் இல்லை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மையம் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். அதனை போன்று 2 அங்கன்வாடிகள் உள்ளது. அவை மோசமான நிலையில் உள்ளது. அதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நூலக கட்டிடம் அருகே அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளும் மேயரின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. 16-வது வார்டில் மட்டும் இதுவரை ரூ.2.50 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.
எம்.எஸ்.ரோட்டில் கிறிஸ்துநகர் முன்பு ஓடைகள் முறையாக சீரமைக்கப்படாததால் இந்த பகுதியில் 20 வருடங்களாக தண்ணீர் தேங்கும். மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்தது. தற்ேபாது வடிகால் சீர் செய்யப்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது. ரூ.1.86 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த பணிகளை, மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, மாநகராட்சி தொழில்நுட்ப அதிகாரி பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூரான் நகரில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி,
நாகர்கோவில், நவ.22-
நாகர்கோவில் மாநக ராட்சி 17-வது வார்டுக் குட்பட்ட நெசவாளர் காலனி குறுக்கு தெருக்களில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபட்டுள்ள அலங்கார தரைகற்கள் மறுசீரமைக்கும் பணி,
46-வது வார்டுக்குட்பட்ட வடக்கு சூரங்குடி, வி.ஐ.பி. கார்டன் மெயின் ரோட்டில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி. 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூரான் நகரில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி,
28-வது வார்டுக்குட்பட்ட சவேரியார் கோவில் பின்பு றம் உள்ள தெருக்களில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
மாமன்ற உறுப்பினர்கள் கவுசிகி, வீரசூரபெருமாள், ரமேஷ், அனந்த லெட்சுமி, மாநகர துணைச்செயலாளர் ராஜன், பகுதி செயலாளர் சேக் மீரான், ஜீவா, துரை, அணிகளின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சரவணன், பீட்டர் வட்டச் செயலாளர்கள் பிரபாகரன், பெரி, முருகன், முத்து கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து நடக்கும் அபாயம் ஏற்படுகிறது.
- உயிர்பலி ஏற்படும் முன் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
மதுரை
தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகளின் ஆக்கிரமிப்பால் அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக நாள்தோறும் செய்திகள் வெளி யாகி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த மாதம் மாடுகள் முட்டியதில் பெண்கள் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். நாகப்பட்டினத்தில் நேற்று சாலையில் சுற்றிதிரிந்த மாடு முட்டியதில் கீழே விழுந்த ஒருவர் அரசு பஸ்சின் டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
2-வது பெரிய மாநகராட்சி யாக உள்ள மதுரையில் சாலை கள் படுமோசமாக உள்ளது. தற்போது மழை காரணமாக இருப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் காணப்படுகிறது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்து வருகின்றனர்.
இதுபோதாதென்று சாலைகளில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பும்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மதுரை நகரில் மாடுகள் வளர்ப்போர் தங்களது இஷ்டத்துக்கு மாடுகளை முக்கிய சாலைகள், தெருக்களில் அவிழ்த்து விடு கின்றனர்.
அவைகள் சர்வ சாதாரணமாக சாலைகளில் அமர்ந்தும், குறுக்கே இடைமறித்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் அவதி அடைகின்றனர்.
பெரியார் பஸ் நிலையம், 4 மாசி வீதிகள், 4 வெளிவீதிகள், காமராஜர் சாலை, வில்லா புரம்-அவனியாபுரம் ரோடு, திருப்ப ரங்குன்றம், கைத்தறி நகர், காளவாசல், பை-பாஸ் ரோடு களில் மாடுகள் அணிவகுத்து செல்வதை அடிக்கடி பார்க்க முடியும்.
குப்பை தொட்டிகளை தேடி செல்லும் மாடுகள் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் நடுரோட்டி லேயே மாடுகள் சண்டையிடு வதும், சில நேரங்களில் மிரள் கின்றன.இதனால் வாகனங்கள் மீது மாடுகள் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை யில் ஆயிரக்கணக்கான வாக னங்கள் சென்று வருகின்றன. வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில் மாடுகள் முகாமிடு கின்றன. பல மணிநேரம் சாலை யில் அசைபோட்டவாறு நிற்கின்றன. இதனால் வாகன ஒட்டிகள் தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பூமார்க்கெட், சிக்னல் பகுதிகளில் மாடுகளின் தொல்லையால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வேகமாக வரும் வாகனங்கள் மாடுகளின் இடையூறால் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சென்னையில் மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். சாலைகள் மற்றும் பொது இடங்களில் மாடுகளில் பால் கறந்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள் அதனை கொட்டகையில் அடைக்காமல் ரோட்டில் விடுகின்றனர். அவைகள் சிறிய தெருக்கள் முதல் முக்கிய சாலை வரை ஆக்கிரமித்து பொதுமக்க ளுக்கு தொல்லை ஏற்படுத்தி வருகிறது. எனவே மதுரை நகரில் மாடுகள் வளர்ப்போரை கணக்கெடுத்து அவர்கள் மாடுகளை ரோட்டில் விடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகளை வெளியே விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மாடுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.
பை-பாஸ் ரோட்டில் மாட்டு கொட்டகைகள்
மதுரை பை-பாஸ் ரோடு பொன்மேனி சர்வீஸ் சாலைகளை மாடு வளர்ப்போர் சிலர் கொட்டகையாக பயன்படுத்தி மாடுகளுக்கு தீணிகள் மற்றும் தண்ணீர் வைத்து அங்கேயே பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மழை காலங்களில் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி சாலைகளில் மாடுகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 7-வது வார்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில், நவ.7-
நாகர்கோவில் மாநகராட்சி 7-வது வார்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 37-வது வார்டு சமரச வீதி குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சி லர்கள் மேரி ஜெனட் விஜிலா, செல்வலிங்கம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகளின் நிர்வாகி கள் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- ரூ.13.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு சாலைப் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து வருகிறார். இன்று 6-வது வார்டுக்குட்பட்ட நீல நாடார் தெரு, மூன்லைட் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.13.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 7-வது வார்டுக்குட் பட்ட பள்ளிவிளை, ஆதி சக்தி தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி போன்றவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
மண்டல தலைவர் ஜவகர், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர் பால் தேவராஜ் அகியா, பகுதி செயலாளர் சேக் மீரான், மாநகர துணைச் செயலாளர் வேல்முருகன், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவதால் ரத்து.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாந கராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும், மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
வருகிற 28-ந்தேதி விளை யாட்டு துறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள வருவதால், நாளை (26-ந்தேதி) நடைபெற இருந்த, பொதுமக்கள் குறைதீர் முகாம் அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
- சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
சேலம்:
சேலம் மாநகரில் பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். ேமலும் பொது இடங்களில் அசுத்தம் செய்து வந்தனர். இதனால் பல பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டது .
இதனை கவனித்த சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் மக்கள் கூடும் இடங்களில் ரெடிேமடு சுகாதார வளாகங்களை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
இதற்கு தேவையான தண்ணீரை அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் இருந்து எடுத்து பயன்படுத்தும் வகையில் பைப் லைன் அமைக்கவும் நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகரத்தில் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என்பதால் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.Salem District News, சேலம், மாநகராட்சி, 11, சுகாதாரம், வளாகங்கள், Salem, Corporation, 11, Health, Complexes,