என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி"

    • அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன.
    • ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    * அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவு நீர் தங்கு தடையின்றி கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

    * நெமிலிச்சேரி ஏரி முழுவதும் வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை கொடிகளை பொதுமக்கள் ஒன்று கூடி மிகுந்த சிரமங்களுக்கு இடையே அகற்றினர். ஆனால், ஆளுங்கட்சியின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், இந்த ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.

    * அஸ்தினாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற் கொள்ளாத காரணத்தால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்களும், பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    * குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், உயிர் நீத்தோருக்கான இறுதிச் சடங்குகளை மக்கள் மிகவும் அச்சத்துடன் செய்து வருகின்றனர்.

    * அஸ்தினாபுரம் பகுதியில் நாள்தோறும் 5 எண்ணிக்கையில் மினி பஸ்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    * இப்பகுதி முழுவதும் முறையாக குப்பைகள் அள்ளப்படாத காரணத்தால், அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. இதனால், பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அஸ்தினாபுரம் பகுதிக் கழகத்தின் சார்பில் வருகிற 11-ந் (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணியளவில், ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபட வேட்டம்மன் கோவில் சந்திப்பு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயககுமார் தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கொடி கம்பங்கள் அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் ஊழியர்கள், ஜே.சி.பி. வாகனத்துடன் சென்றனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.

    கடலூர்:

    பொது இடங்களில் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த நிர்வாகத்தினர் கொடி கம்பங்கள் அகற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கடலூர் முதுநகர் அடுத்த சோனாங்குப்பம் பகுதியில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் ஊழியர்கள், ஜே.சி.பி. வாகனத்துடன் சென்றனர். பின்னர் அங்குள்ள கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தேசியக்கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் திடீரென்று இடித்து அகற்றினார்கள்.

    இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கடும் கோபம் அடைந்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஜே.சி.பி. வாகனத்தை சிறை பிடித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.

    பின்னர் பொதுமக்கள் ஜே.சி.பி. வாகனம் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை விடுவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.
    • பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது.

    கே.பி.அக்ரஹாரா:

    பெங்களூரு கே.பி.அக்ரஹாரா மாகடி ரோட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி கே.பி.அக்ரஹாரா, மாகடி ரோட்டை சேர்ந்த இளைஞர்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மைதானத்தில் தினமும் ஏராளமானோர் விளையாடி வருகிறார்கள். இங்கு பொதுமக்கள் அமருவதற்காக இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் தற்போது அந்த மைதானம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அங்குள்ள இருக்கைகள் சேதமடைந்து கிடப்பதுடன், செம்மண் நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

    மேலும் பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது. சில கம்பிகள் சரியான பிடிப்பு இல்லாமல் உள்ளன. இதற்கிடையில் இரவு நேரத்தில் சிலர் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து மதுபானம் குடிப்பதுடன், கஞ்சா புகைக்கின்றனர். இதனால் கல்வி நிலையம், விஷமிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அங்கு கிடக்கும் மதுபான பாக்கெட்டுகள், சிகரெட்டுகளை பார்த்து மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடும்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் விளையாட்டு மைதானத்துக்குள் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், இருக்கையையும் சீரமைத்து கொடுக்க வேண்டும். அதேபோல மைதானத்தில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.
    • மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.

    மும்பை:

    மும்பை மலபார்ஹில் பகுதியில் அரபிக்கடலையொட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.

    அடர்ந்த மரங்களுக்கு இடையே கடல் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் இந்த மரப்பாலம் ரூ.25 கோடி செலவில் 470 மீட்டர் நீளத்தில் 2.4 மீட்டர் அகலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.

    இந்த பாலம் அமைக்கும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. விரைவில் இது பொதுமக்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் மரப்பாலத்தில் நடந்தபடி இயற்றை அழகை ரசிக்க 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

    மரப்பால திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம் மும்பை சுற்றுலாவுக்கு ஊக்கமாக இருக்கும். பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது" என்றார்.

    • சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
    • பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

    மும்பை:

    மும்பையில் ஆண்டு தோறும் மழைக்காலத்துக்கு முன் சாக்கடை கால்வாய்கள், மித்தி நதியை மும்பை மாநகராட்சி தூர்வாரி வருகிறது. இந்த பணிக்காக அதிகளவில் நிதி செலவிடப்படுகிறது. எனினும் பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

    இதன் காரணமாக மாநகராட்சி அதிக செலவு செய்து தூர்வாரும் பணியை மேற்கொண்டும், சாக்கடை கால்வாய்களில் குப்பை குவிந்து கிடப்பதால் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

    இதையடுத்து பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், கரையோரங்களில் தடுப்பு வேலி அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாாி ஒருவர் கூறுகையில், "சாக்கடை கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள், சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. வலை, இரும்பு தகடு மூலம் சாக்கடை கால்வாய் ஓரம் 10 அடி உயரம் வரையில் வேலி அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.

    தடுப்பு வேலி வலை திருட்டை தடுக்க, அவை பழைய இரும்புக்கு விற்பனை ஆகாத அல்லது மறு விற்பனை ஆகாத பொருட்கள் மூலம் செய்யப்பட்டதாக இருக்கும். முதல் கட்டமாக அதிகளவில் குப்பை கொட்டப்படும் இடங்களில் தடுப்பு வேலி அமைக்க உள்ளோம். அதன்பிறகு மற்ற இடங்களில் வேலி அமைக்கப்படும்" என்றார்.

    • புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த்மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ஜவகர், முத்துராமன், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா,அக்சயா கண்ணன், டி.ஆர். செல்வம், ரமேஷ், அய்யப்பன், நவீன் குமார், அனிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறியதாவது:-

    ஒழுங்கினசேரி சந்திப்பு முதல் கோட்டார் போலீஸ் நிலையம் வரை உள்ள அவ்வை சண்முகம் சாலையில் உள் சாலையில் இருபுறமும் உள்ள கழிவு நீர் ஓடையை தூர்வாரி நடை மேடை அமைத்து இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பல இடங்களில் மின் விளக்குகள் எரிய வில்லை. சரி செய்ய பல முறை கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை.

    நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டுவதில் விலக்கு அளிக்க வேண்டும்.50-வது வார்டுக்கு உட்பட்ட முகிலன்விளை பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்பட்ட பிறகும் கழிவுநீர் ஓடை சீரமைக்கப்பட வில்லை. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள திட்டங்களை செயல்படுத்த கவுன்சிலர்களை ஒருங்கி ணைத்து கமிட்டி அமைக் கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி இதுவரை கூட்டப் படவில்லை.

    மாநகராட்சி கவுன்சிலுக்கு புதிய சட்டம் இயற்ற அதிகா ரம் இருக்கிறது. அதை பயன்படுத்தி ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தங்க ளது வார்டுகளில் ரூ.50 ஆயிரம் அளவிலான சின்ன சின்ன வேலைகள் செய்ய அதிகாரம் சட்டத்தை இயற்ற வேண்டும். வேலைகள் செய்து முடித்த பிறகு அதற்கான பில்லை வழங்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 52 வார்டு களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண் டப்பட்டு மூடப் பட்டுள்ள மூடிகள் சாலை யின் மட்டத்தை விட மேல் உள்ளது. இதனால் விபத்துக்கள் அந்த பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தெங்கம் புதூர் ஆளுர் பேரூராட்சிகள் நாகர்கோவில் மாநக ராட்சியுடன் இணைக் கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தற்போது தண்ணீர் கட்டணம் மாநகராட்சி யுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. அதை மறுபரிசீலனை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஒவ்வொரு வார்டாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இதைத் தொடர்ந்து அனைத்து பணிகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதிக்கு வருகிற 2-ந் தேதி அமைச்சர் நேரு வருகை தர உள்ளார். அவரிடம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்குவது தொடர்பாக கவுன்சிலர் அனைவரும் ஒன்றிணைந்து மனு அதிக நிதி பெற வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 4 மண்டல அலுவலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மண்டல அலுவலகம் திறக்கப்படும். ஏற்கனவே இரண்டு இடங்களை ஆய்வு செய்துள்ளோம்.

    மேலும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மண்டல அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். மற்றொரு இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் பிறகு அனைத்து கமிட்டி களையும் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மேல் குற்றம் சாட்டும் போது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்ட கூடாது. ஆதாரத்துடன் குற்றச்சாட்டினால் அந்த அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தொடர்ந்து மேயர் மகேஷ் பேசுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் மாற்றப்பட்டு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.14 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • ஏற்கனவே ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில்மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 40-வது வார்டுக்குட்பட்ட வைத்திய நாதபுரம், வடலிவிளை, இசங்கன்விளை, பறக்கை ரோடு பகுதிகளில் இன்று காலை கவுன்சிலரும் மண்டல தலைவருமான அகஸ்டினா கோகிலவாணியுடன் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த பகுதியில் கழிவுநீர் ஓடை சீரமைப்பு பணி சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை முன்பு அமைக்கப்பட உள்ள ரவுண்டானாவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணி நடந்து வருகிறது. தற்போது சாலை சீரமைப்பு பணிக்கு ஏற்க னவே ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.தற்போது மேலும் ரூ.10 கோடியே 80 லட்சம் நிதி வந்துள்ளது. மொத்தத்தில் தற்பொழுது ரூ.41 கோடியே 80 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த நிதியின் மூலமாக எந்தெந்த வார்டுகளில் எந்தெந்த சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு முதற்கட்டமாக அந்த சாலைகள் சீரமைக்கப்படும். நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ரவுண்டானா ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இந்த ரவுண்டானா 30 அடி சுற்றளவில் அமைக்கப்படும்.

    கலெக்டர் அலுவலக முன்பகுதியில் உள்ள ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியில் நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எந்த வகையான நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அந்த நினைவு தினம் அந்த பகுதியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கவுன்சிலர் விஜிலா ஜஸ்டஸ், பால்அகியா, பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உடனிருந்தனர்.

    • அரசாணை 152 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 1539 பணியிடங்களில் 254 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழக அரசு கடந்த மாதம் 22ஆம் தேதி கொண்டுவரப்பட்ட அரசாணை 152 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த அரசாணை காரணமாக சென்னை தவிர்த்து மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் 35,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் 3,417 பணியிடங்களாக குறைக்கப்பட்டும். திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 1539 பணியிடங்களில் 254 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 1285 பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பணியாளர்கள் பாதிக்கப்படுவதோடு , மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் எனவே இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் தனியார் மயமாக்கப்படும் சூழல் ஏற்படுவதாகவும் எனவே தமிழக அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்வதற்கான அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சங்கத்தின் தலைவர் சுஜாத் அலி, செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் முருகன், அமைச்சூர் சங்க செயலாளர் தங்கவேல், வருவாய் ஊழியர்கள் சங்க தலைவர் ராஜு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரம ணியம் ஆகியோரிடம் மனு கொடு த்தனர்.

    • திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது.
    • கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது. 4 மண்டலங்களிலும் கீழ்கண்டவாறு சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

    மேலும் எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம். இணையதள முகவரி Use Quick Payment" or Register & Login" to. https://tnurbanepay.tn.gov.in.

    இவற்றில் சொத்துவரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.92.16 கோடியும், காலியிட வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.7.82 கோடியும், தொழில் வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.2.32 கோடியும், குடிநீர் கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.18.44 கோடியும். குத்தகை இனத்தில் 2022-23ம் ஆண்டுக்குநிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.8 கோடியும் திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.5.14 கோடியும், பாதாள சாக்கடை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.1.75 கோடியும் வசூல் நிலுவையாக உள்ளது.

    திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் வரி திருத்தம் செய்யப்பட்டு கேட்புகள் சரி செய்யப்பட்டு வருவதால் நிலுவை தொகையை செலுத்தவும்.மேலும் 17.11.2022 அன்று அனைத்து மண்டலங்களிலும் நடக்கவிருக்கும் சிறப்பு முகாம்களில் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • பின்னர் மீண்டும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கரூருக்கு புறப்பட்டனர்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை–பகுதியை சேர்ந்தவர் துரைசாமி.இவர் கரூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலைப்பார்த்து வந்தார்.

    நேற்று இவர் தனது மருமகன் சரவணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொடுமுடிக்கு ஒரு வளை–காப்பு நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர் மீண்டும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கரூருக்கு புறப்பட்டனர்.

    அப்போது அவர்கள் சோளக் காளி பாளையம் என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த னர். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.அப்போது எதிர்பாராத வகையில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டது.

    இந்த விபத்தில் துரைசாமி படுகாயம் அடைந்தார். இதை யடுத்து கொடுமுடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் துரைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கொடு முடிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மேயர் மகேஷ் தகவல்
    • 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் மேயர் மகேஷ் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இன்று 33-வது வார்டுக்கு உட்பட்ட தொல்லவிளை, குருசடி, மேலச்சூரங்குடி பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது மூவேந்தர் நகர் பகுதியில் செயல்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை பார்வையிட்ட அவர் அதன் விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

    மேலும் 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது. அந்த சாலைகளை சீரமைக்கவும் பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்த மேயர் மகேஷ் அதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வார்டுகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது சாலை சீரமைப்புக்கு ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் எந்த ஒரு பாகுபாடும் இன்றி நிதி சரிவர பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாகர்கோ வில் மாநகரப் பகுதியிலுள்ள 52 வார்டுகளில் என்னென்ன வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து நானே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.

    இன்று வரை 50 வார்டுகளில் ஆய்வு முடிவு பெற்றுள்ளது. இன்னும் எனது வார்டான 4-வது வார்டு மற்றும் 5-வது வார்டு மட்டும் ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஆய்வு பணி நிறைவடையும். மாநகர வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்படுவதாக மேயர் மகேஷ் பேட்டி
    • ஆய்வின்போது ஆணையாளர், மாநகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி மேயராக மகேஷ் பொறுப்பேற்றதும் நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக 52 வார்டுகளிலும் நேரில் ஆய்வு செய்து என்னென்ன வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்தி வந்தார். கடந்த 2 மாத காலமாக இந்த ஆய்வு பணி நடந்தது. 51 வார்டுகளில் நேற்றுடன் ஆய்வு பணி நிறைவடைந்து இருந்தது. இன்று மேயர் மகேஷ் வார்டான 4-வது வார்டில் தெரு தெருவாக சென்று ஆய்வு மேற் கொண் டார்.

    அப்போது மக்களின் குறைகளை கேட்டு அறிந் தார். கிறிஸ்டோபர் காலனி, வெள்ளாளர் தெரு பகுதி களில் ஆய்வு மேற் கொண்ட மேயர் மகேஷ் அந்த பகுதி யில் உள்ள பூங்காவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து பெருவிளை அரசு பள்ளி காம்பவுண்ட் சுவரை சீர மைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் மகேஷ் அதை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். குப்பை இல்லா மாநகராட்சியாக மாற்றும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிடித்து பொதுமக்களிடம் இருந்து வாங்கப்பட்டு வரு கிறது. பிளாஸ்டிக் முற்றிலு மாக ஒழிக்கப்பட்டு உள் ளது. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள வார்டுகளில் என்னென்ன வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளவேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் கவுன்சி லருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் அனைத்து வார்டுகளிலும் நேரில் சென்று நான் ஆய்வு மேற்கொண்டேன். பல்வேறு பொதுமக்களை சந்தித்து பேசினேன்.

    அப்போது பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதிகள் குறித்து தகவல் தெரிவித்தனர். எந்தெந்த வார்டுகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனித்தனியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்பொழுது நாகர் கோவில் மாநகராட்சி யில் சாலை சீரமைப்பிற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி அனைத்து வார்டு களுக்கும் பகிர்ந்து அளிக் கப்பட்டு உள்ளது. விரை வில் அந்த பணிகள் தொடங்கப்படும். ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணி யில் அதிகாரி கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எந்த ஒரு பார பட்சமும் இன்றி ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    தற்போது 52 வார்டுகளி லும் கழிவு நீர் ஒடைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் ஒடைகளில் கிடந்த மணல்கள் அப்புறப்படுத்தப் பட்டு அதை சீரமைத்து உள்ளோம். அடுத்த கட்டமாக சாலை சீரமைப்பிற்கான நிதிகள் ஒதுக்கப்படும். 52 வார்டுகளுக்கும் எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பது குறித்த பட்டியல் இன்னும் ஒரு இரு நாட் களுக்குள் இறுதி செய் யப்பட்டு முதல்-அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அரசிடம் இருந்து நிதி பெற்று அனைத்து பணிகளும் விரை வில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆணையாளர் ஆனந்த்மோகன், மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×