search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி தூய்மை பணியாளர் பலி
    X

    மாநகராட்சி தூய்மை பணியாளர் பலி

    • பின்னர் மீண்டும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கரூருக்கு புறப்பட்டனர்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை–பகுதியை சேர்ந்தவர் துரைசாமி.இவர் கரூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலைப்பார்த்து வந்தார்.

    நேற்று இவர் தனது மருமகன் சரவணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொடுமுடிக்கு ஒரு வளை–காப்பு நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர் மீண்டும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கரூருக்கு புறப்பட்டனர்.

    அப்போது அவர்கள் சோளக் காளி பாளையம் என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த னர். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.அப்போது எதிர்பாராத வகையில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டது.

    இந்த விபத்தில் துரைசாமி படுகாயம் அடைந்தார். இதை யடுத்து கொடுமுடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் துரைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கொடு முடிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×