என் மலர்
நீங்கள் தேடியது "அ.தி.மு.க.ஆர்ப்பாட்டம்"
- அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன.
- ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:-
* அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவு நீர் தங்கு தடையின்றி கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
* நெமிலிச்சேரி ஏரி முழுவதும் வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை கொடிகளை பொதுமக்கள் ஒன்று கூடி மிகுந்த சிரமங்களுக்கு இடையே அகற்றினர். ஆனால், ஆளுங்கட்சியின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், இந்த ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.
* அஸ்தினாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற் கொள்ளாத காரணத்தால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்களும், பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
* குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், உயிர் நீத்தோருக்கான இறுதிச் சடங்குகளை மக்கள் மிகவும் அச்சத்துடன் செய்து வருகின்றனர்.
* அஸ்தினாபுரம் பகுதியில் நாள்தோறும் 5 எண்ணிக்கையில் மினி பஸ்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
* இப்பகுதி முழுவதும் முறையாக குப்பைகள் அள்ளப்படாத காரணத்தால், அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. இதனால், பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அஸ்தினாபுரம் பகுதிக் கழகத்தின் சார்பில் வருகிற 11-ந் (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணியளவில், ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபட வேட்டம்மன் கோவில் சந்திப்பு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயககுமார் தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
- நகர செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலை அரசு மகளிர் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் சொத்து வரி, மின் கட்டண உயர்வை, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கண்ணியப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, நகர செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமீர்ஜான் நன்றி கூறினார்.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
- அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
கோவில்பட்டி:
தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. மேலும், மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை திணித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது.
திறமையான காவல்துறை இருந்தாலும், அந்த துறையை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் கண்டு காணாததும் போல் இருப்பதால் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.
கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகமாக மக்கள் நடமாடும் இடங் ளில் தாராளமாக கிடைக்கின்றன. மாணவர்களை குறி வைத்தே பொருட்கள் விற்பனை நடக்கின்றன. இதனை தடுக்க இந்த அரசு திராணியற்று இருக்கிறது.
கோடை காலமான தற்போது அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வருமான வரித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னிச்சையான அமைப்பு. வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு யாரை வேண்டுமென்றாலும் சோதனையிட உரிமை உள்ளது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதுதான் மரபு.
இதையெல்லாம் பின்பற்றும் வழக்கம் தி.மு.க.வு.க்கு கிடையாது. அதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






