என் மலர்
நீங்கள் தேடியது "நாகர்கோவில்"
- ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்தனர்.
- விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறினர்.
நாகர்கோவில்:
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிலரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை கண்டறிய, அவர்களது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் செல்போன் மூலம் யார் யாருடன் பேசினார்கள்? சமூக வலைதளங்களில் யாரையெல்லாம் பின் தொடர்ந்தனர்? மேலும் யாரெல்லாம் கைதானவர்களை பின் தொடர்ந்தார்கள்? என்பது குறித்து தீவிர ஆய்வு நடந்தது.
அப்போது கைதான ஒருவருடன் குமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் வாலிபரின் வீட்டை கண்டறிந்து சோதனை நடத்த அங்கு சென்றனர். ஆனால் அந்த வாலிபர் வீட்டில் இல்லை.
அவரது பெற்றோர் மட்டும் வீட்டில் இருந்தனர். வாலிபரை பற்றி அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களது மகன் வேலை விஷயமாக சென்னை சென்றிருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை 9 மணி வரை நடைபெற்றது.
அப்போது வாலிபர் குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட வாலிபரின் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- வழக்கறிஞர் அமர போடப்பட்டிருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 36). இவர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக உள்ளார்.
இவர் மீது கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்குக்காக அருணாச்சலம் நாகர்கோவில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது மாடியில் செயல்படும் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை சட்டம்) சிறப்பு அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது வழக்கறிஞர் அமர போடப்பட்டிருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் அங்கு அமரக்கூடாது எனக் கூறினார்கள். இதையடுத்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .
அப்போது நீதிமன்ற அலுவலர், அருணாச்சலத்திடம் அமைதி காக்க கூறினார். அவரிடமும் அருணாச்சலம் வாக்குவாதம் செய்தார். அங்கு வந்த கோட்டார் போலீசார் அருணாச்சலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சிறப்பு நீதிமன்ற சிரஸ்தார் சிபு, கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் அருணாச்சலத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அருணாச்சலத்தை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
- தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- கார் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் ஷோரூமில் இருந்து திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த காவலாளிகள் அங்கிருந்த தீயணைப்பு கருவி மூலமாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தீ மளமளவென்று பரவியது. காரில் இருந்த பெட்ரோல் டீசல் டேங்கில் வெடித்து சிதறியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. உடனே காவலாளிகள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தீ வேகமாக எரிந்து கொண்டு இருந்தது. தீயை கட்டுப்படுத்த அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். 2 தீயணைப்பு வண்டிகளில் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 4 வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்க முயன்றனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சர்வீஸ் ஸ்டேஷன் நிறுத்தப்பட்ட 16 கார்கள் எரிந்து சேதமடைந்தது.

காரின் இருக்கைகள் உள்பட அனைத்து பகுதிகளும் எரிந்து சேதம் ஏற்பட்டது. தீயில் எரிந்து சாம்பலான கார்கள் எலும்புக்கூடுகள் போல உள்ளது. 25-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் இன்றி தப்பியது. இது பற்றி தகவல் அறிந்ததும் நேசமணிநகர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கார் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
- ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுன் ரெயில் நிலையங்களில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள பழையாற்றில் பழைய இரும்பு பாலம் உள்ள நிலையில் புதிதாக 2 பாலங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பழைய பாலத்தின் தூண்களை பலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.

பழையாற்றை ஒட்டி உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்ல வசதியாக புதிய பாலத்தில் தண்டவாளத்தின் கீழ் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பழைய தண்ட வாளத்தின் கீழ் பகுதியிலும் புதிதாக குழாய் அமைக்க ரெயில்வே துறை நேற்று நடவடிக்கை எடுத்தது. குழாய் அமைக்க வேண்டிய பகுதியில் தண்டவாளத்தை முற்றிலும் அகற்றிவிட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி அதன் பிறகு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் அந்த நேரத்தில் பணியை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் நேற்று இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தை அப்புறப் படுத்திவிட்டு அந்த பகுதியில் 12 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பணியின் போது இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களான கோவையைச் சேர்ந்த ஜானகிராமன் (வயது47), பாளையங்கோட்டையை சேர்ந்த சிங்கராஜா (39), மதுரையை சேர்ந்த பால கிருஷ்ணன் (42) ஆகியோர் சிக்கி கொண்டனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்ணுக்குள் சிக்கிய 3 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு 108 ஆம்பு லன்சு மூலமாக சிகிச்சைக் காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மண்சரிவு ஏற்பட்டதை யடுத்து அந்த பகுதியில் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு உடனடியாக ரெயில் போக்குவரத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தோண்டப்பட்ட பள்ளம், மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டது. இந்த பணி முடிய காலை 6 மணி வரை ஆகிவிட்டது. இதன் காரணமாக நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன.
சென்னை, பெங்களூரூ, கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாங்குநேரி, மேலப்பாளையம், நெல்லை, கோவில்பட்டி நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் வந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட னர்.
மண் சரிவு சரி செய்யப்பட்ட பின்பு தான் இந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. மேலும் பணி நடத்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட்டன. அந்த பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு அதி காலை 4.40 மணிக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு வந்தடைந்தது.
இதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக காலை 8.05 மணிக்கு தான் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
தாம்பரம்-நாகர்கோவில் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் 8.45 மணிக்கும், பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்தது. வழக்கமாக இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையம் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.15 மணிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக மும்பை செல்லும் சிறப்பு ரெயில் இன்று காலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதற்கிடையில் இணைப்பு ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகள் ரெயில், நாகர்கோவில்-கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
- 2026-ல் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
- ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவனால் அமைதி உருவாகும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்று வருகிது. விழாவில் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு தலைவரும், தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக வெற்றி கழகம் என்றதும் மாணவர்கள் மத்தியிலுள்ள ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. உங்களது வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி விழா என்பதால் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் சொல்லாமல் இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தேன். ஆனால் விழாவில் விஜய் என்று கூறியதும் மாணவர்கள் மத்தியில் கடும் எழுச்சி தெரிகிறது.
தமிழகத்தில் எத்தனையோ கட்சி உள்ளது. 2026 ஆட்சி விஜய்யின் ஆட்சியாக அமையும். மாணவர்களின் எழுச்சி எனக்கு உற்சாகத்தை தருகிறது. இந்த கல்லூரி நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லூரி ஆகும். ஆண், பெண் பாகுபாடு இன்றி இந்த கல்லூரி உள்ளது. தரமான கல்வியை இந்த கல்லூரி வழங்கி வருகிறது என்றார்.
இதை தொடர்ந்து மாண வர்களுடன் அவர் கலந்து ரையாடினார். அப்போது மாணவ-மாணவிகள், கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ஆதவ் அர்ஜூனா பேசிய தாவது:-
நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். சாதிக்க வேண்டும் என்ற உணர்வு டன் படித்தேன். பொலிட்டி க்கல் சைன்ஸ் படித்ததுடன் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன்.எல்லா விஷயங்களையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாடும் மண்ணும் முன்னேற நல்ல தலைவர்கள் வேண்டும்.
அரசியல் என்பது சயின்ஸாகும். தலித் மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளார்கள்.சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி யில் நானும் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டோம். அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பிறகு தான் நான் விஜய் உடன் இணைந்து பயணிக்க விரும்பினேன்.
அவரிடம் கற்றுக்கொண்ட நல்ல விஷயம் என்ன வென்றால் எல்லோரும் சமம் என்று கூறுகிறார். மதத்தால் ஜாதியால் அனைவரும் ஒன்றே என்று விஜய் கூறி வருகிறார். இளைஞர்களை நம்பி மாற்றத்தை உருவாக்கும் கட்சியாக விஜய் கட்சி உருவெடுத்து உள்ளது. 2026-ல் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அமைதியாக இந்த கட்சி உருவாகி வருகிறது.
விஜய் என்று கூறியதும் இளைஞர்கள் மத்தியில் அவரது குரல் எதிரொலிக்கிறது. இந்த கல்லூரியில் பார்க்கும் போதும் மாணவர்களின் குரல் ஒலிப்பதை பார்க்க முடிகிறது. நம்முடைய தாய்மொழி தமிழை எல்லோரும் படிக்க வேண்டும்.
வணிக ரீதியான மொழி, வெற்றியடைய கூடிய மொழி, உலகம் முழுவதும் உள்ள மொழி ஆங்கிலம் ஆகும். இந்தி என்பது தேசிய மொழி கிடையாது.
ஒரு நாட்டிற்கு சென்றால் ஒவ்வொருவரும் அவரவர் மொழியையே பேசி வருகிறார்கள். அந்த மொழியை எடுத்து வந்து நம்மிடம் திணிக்க பார்க்கிறார்கள். நாம் எல்லா மொழிகளையும் வரவேற்போம்.
ஆனால் நம்மிடம் ஒரு மொழியை திணிக்க கூடாது. முதல்வர், அமைச்சர் பதவியை விட கொள்கை ரீதியான பயணத்தை தமிழகம் முழுவதும் உருவாக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஊழல் செய்து விட்டு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் கொடுப்பது சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. மக்களின் சமூக கொள்கையை நோக்கி எனது பயணம் இருக்கும்.
2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. நிச்சயமாக வெற்றி பெறும். அதில் சந்தேகம் இல்லை. 2 மாதம் நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மாணவர்கள் இறங்கினால் என்ன ஆகும் என்று எல்லோருக்கும் தெரியும்.
கனிமவளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் தனியார் வசம் இருப்பதை தடுத்து நிறுத்தி அரசுடமையாக்கப்படும். அதன் மூலமாக வரும் வருவாய் ஏழை-எளிய மக்களுக்கு பயன்படுத்தப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
டாஸ்மாக் மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவனால் அமைதி உருவாகும். நீங்கள் த.வெ.க உறுப்பினராக வேண்டும். த.வெ.க. தலைவர் , நிர்வாகிகளை நியமனம் செய்யும்போது எத்தனை வருடமாக இவர் நம்முடன் பயணம் செய்தவர்? யார் என்பதை அறிந்து தான் அவர்களுக்கு பதவி வழங்கியுள்ளார்.
விஜய் கட்சியில் சென்னை மாவட்ட தலைவர், ஆட்டோ டிரைவராக உள்ளார். நீங்கள் அனைவரும் த.வெ.க.வில் உறுப்பினராக சேரலாம். பிரதமரிடம் கூட நீங்கள் கேள்வி கேட்கலாம். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
- அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக உணவு தயாரித்து வழங்கும் பெட்டிகள் (பேண்டரி கார்) இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆர்டர் பெற்று உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இதேபோல் ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு உதவ ஊழியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
நேற்று கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பணியில் இருந்த உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்கள் பயணிகளை பற்றி கவலைப்படாமல் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ரெயில் 5.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கும் சில பயணிகள் ரெயிலில் ஏறினர். அப்போதும் ஊழி யர்கள் மோதல் நின்ற பாடில்லை. இதனை மற்ற ரெயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்ள வில்லை.
தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் அந்த ரெயில் நடுவழியில் நின்றது. சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதிக்கும் இடையே ரெயில் நின்றதால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து சென்று ரெயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஓடும் ரெயிலில் மோதலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த மேலும் 2 பேர் வந்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டதாலும் ரெயிலில் பயணம் செய்தவர்களில் சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நின்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திப்ரூ கரை சேர்ந்த தீப் கோகாய் (வயது28), அயன் கோகாய் (28) மற்றும் உணவக பிரிவில் பணியாற்றும் மேற்கு வஙகாளத்தை சேர்ந்த தபான் மொண்டல் (30), பீகாரை சேர்ந்த கைப் (20) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் கைதான 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயிலில் பணி யாற்றிய ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
+2
- புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த்மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ஜவகர், முத்துராமன், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா,அக்சயா கண்ணன், டி.ஆர். செல்வம், ரமேஷ், அய்யப்பன், நவீன் குமார், அனிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறியதாவது:-
ஒழுங்கினசேரி சந்திப்பு முதல் கோட்டார் போலீஸ் நிலையம் வரை உள்ள அவ்வை சண்முகம் சாலையில் உள் சாலையில் இருபுறமும் உள்ள கழிவு நீர் ஓடையை தூர்வாரி நடை மேடை அமைத்து இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பல இடங்களில் மின் விளக்குகள் எரிய வில்லை. சரி செய்ய பல முறை கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை.
நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டுவதில் விலக்கு அளிக்க வேண்டும்.50-வது வார்டுக்கு உட்பட்ட முகிலன்விளை பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்பட்ட பிறகும் கழிவுநீர் ஓடை சீரமைக்கப்பட வில்லை. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள திட்டங்களை செயல்படுத்த கவுன்சிலர்களை ஒருங்கி ணைத்து கமிட்டி அமைக் கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி இதுவரை கூட்டப் படவில்லை.
மாநகராட்சி கவுன்சிலுக்கு புதிய சட்டம் இயற்ற அதிகா ரம் இருக்கிறது. அதை பயன்படுத்தி ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தங்க ளது வார்டுகளில் ரூ.50 ஆயிரம் அளவிலான சின்ன சின்ன வேலைகள் செய்ய அதிகாரம் சட்டத்தை இயற்ற வேண்டும். வேலைகள் செய்து முடித்த பிறகு அதற்கான பில்லை வழங்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 52 வார்டு களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண் டப்பட்டு மூடப் பட்டுள்ள மூடிகள் சாலை யின் மட்டத்தை விட மேல் உள்ளது. இதனால் விபத்துக்கள் அந்த பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெங்கம் புதூர் ஆளுர் பேரூராட்சிகள் நாகர்கோவில் மாநக ராட்சியுடன் இணைக் கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தற்போது தண்ணீர் கட்டணம் மாநகராட்சி யுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. அதை மறுபரிசீலனை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஒவ்வொரு வார்டாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இதைத் தொடர்ந்து அனைத்து பணிகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் மாநகரப் பகுதிக்கு வருகிற 2-ந் தேதி அமைச்சர் நேரு வருகை தர உள்ளார். அவரிடம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்குவது தொடர்பாக கவுன்சிலர் அனைவரும் ஒன்றிணைந்து மனு அதிக நிதி பெற வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 4 மண்டல அலுவலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மண்டல அலுவலகம் திறக்கப்படும். ஏற்கனவே இரண்டு இடங்களை ஆய்வு செய்துள்ளோம்.
மேலும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மண்டல அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். மற்றொரு இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் பிறகு அனைத்து கமிட்டி களையும் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மேல் குற்றம் சாட்டும் போது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்ட கூடாது. ஆதாரத்துடன் குற்றச்சாட்டினால் அந்த அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
தொடர்ந்து மேயர் மகேஷ் பேசுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் மாற்றப்பட்டு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.14 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
- கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் அந்தந்த துறைகளின் சார்பில் பதிலளித்திருந்தனர்.
கூட்டத்தில் மீனவர்கள் பேசியதாவது:-
கடலோர கிராமங்களில் உள்ளாட்சி வார்டுகளை ஒழுங்குப்படுத்தி வாக்காளர் எண்ணிக்கையை முறைப் படுத்த வேண்டும், கன்னியாகுமரி ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.
குளச்சல் முதல் மண்டைக்காடுபுதூர் வரை உள்ள ஏ.வி.எம். சானலை தூர்வார வேண் டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்ப டாமல், ஏற்கனவே அளித்த பதில்களையே அதிகாரிகள் வந்து கூறுகி றார்கள்.
பெரிய காடு மீன வர் கிராமத்தில் போடப் பட்டுள்ள தூண்டில் வளைவை சீரமைத்து 100 மீட்டர் நீளத்திற்கு நீட்டித்து தர வேண்டும். பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலம் கடற்கரை பகுதிகளை மிடாலம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதிகாரிகள் பேசி யதாவது:-
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை மற்றும் பாலங்கள் அமைத்திடும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் ஏற்கனவே இரண்டு மூன்று முறை போடப்பட்டு இன்னும் ஒப்பந்த முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. விரைவில் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த ஒரு முறையான உத்தரவும் இன்னும் வரவில்லை. அவ்வாறு உத்தரவு வரப்பெற்றால் வாக்காளர் பட்டியல் மற்றும் வார்டுகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் நடைபெறும் .
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
- கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்தனர்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட னர். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசா ரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையத் அலி (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியதை ஒப்பு கொண்டார். போலீசார் அவரிடம் இருந்து 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர் கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
- நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட இடங்களில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆய்வு
- நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில் தெரு, பார்வதிபுரம், நெசவாளர் காலனி உள்ளிட்ட இடங்களில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வீடுகளில் இருந்து கழிவு நீர் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். தெருக்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்று மேயர் வலியுறுத்தினார். மேலும், மோசமான சாலைகள், தெருக்கள் சீரமைக்க தேவையான மதிப்பீடுகள் தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் ரூ.11 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் .
பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறுகையில்:-
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தூய்மைப்பணி மேற்கொண்டு வருகிறோம்.வார்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. வருகிற 2-ந்தேதி நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு குமரி மாவட்டம் வருகிறார் .அவரிடம் நாகர்கோவில் மாநகராட்சியில் மேற் கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி நிதி கேட்கப்படும்.குடிநீர் பிரச்சனை உட்பட அடிப்படை பிரச்சி னைகளை தீர்க்கவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
நகர் நல அலுவலர் ராம்குமார், மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் கவுசிக் , ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஷேக் மீரான், மாநகர துணை செயலாளர் வேல் முருகன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன், வட்ட செய லாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும்.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்மல் அறிவியல் கழகம் செய்திருந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளரும் இல்ல அதிபருமான ஜெரோம் ஆசி வழங்கினார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெரோம் சேவியர் விழாவில் பங்கேற்று பேசுகையில், அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும். மாணவர்கள் படிக்கும் பருவத்திலேயே படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தலைமை ஆசிரியர் மரிய பாஸ்டின், உதவி தலைமை ஆசிரியர் ஜேசு நேசம், கூடுதல் உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெரோம், ஜான் உபால்டு, அமல்ராஜ், ஆசிரியர் அலுவலகச் செய லர் பபிலன், அறிவியல் கழகத் தலைவர் பாபு சைமன் ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பினுமோன், டைட்டஸ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாணவர்களுடைய அறிவியல் படைப்புகளை வெளிப்படுத்தக்கூடிய கண்காட்சியை ஜெரோம் சேவியர் தொடங்கி வைக்க, திருச்சிலுவைக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் செபஸ்டின் அம்மாள், லெஸ்லி பாத்திமா, ஜெரோம் கல்லூரி பேராசிரியர் ரதி ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்மல் அறிவியல் கழகம் செய்திருந்தது.
- திற்பரப்பில் குளிக்க தடை நீடிப்பு
- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
நாகர்கோவில்:
வடகிழக்கு பருவமழை நாளை முதல் தீவிரமடையும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில் மாவட் டம் முழுவதும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அசம்பு ரோடு கோட்டார் சாலைகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் ஆறாக ஓடியது.
கொட்டாரம், மயிலாடி, சாமிதோப்பு, தக்கலை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. நாகர்கோவிலில் அதிகபட்ச மாக 19.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருங் சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணை களின் நீர்மட் டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக் கேற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
பேச்சிப்பாறை அணை யில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. இதனால் குழித்துறை ஆறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று அருவியல் குளிப்ப தற்கு ஏராளமான சுற்று லாப் பயணிகள் வந்தி ருந்தனர். அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட தையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.29 அடியாக உள்ளது. அணைக்கு 897 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 383 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியா கவும் 2014 கனஅடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.50 அடியாக உள்ளது. அணைக்கு 479 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.33 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.43 அடியாகவும் உள்ளது.
4 அணைகளின் நீர்மட்ட மும் நிரம்பி வருவதையடுத்து நான்கு அணைகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொய்கை அணை நீர்மட் டம் 16.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.30 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாகவும் உள்ளது.






