என் மலர்
நீங்கள் தேடியது "தண்டவாள பராமரிப்பு பணி"
- இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
- ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுன் ரெயில் நிலையங்களில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள பழையாற்றில் பழைய இரும்பு பாலம் உள்ள நிலையில் புதிதாக 2 பாலங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பழைய பாலத்தின் தூண்களை பலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.

பழையாற்றை ஒட்டி உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்ல வசதியாக புதிய பாலத்தில் தண்டவாளத்தின் கீழ் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பழைய தண்ட வாளத்தின் கீழ் பகுதியிலும் புதிதாக குழாய் அமைக்க ரெயில்வே துறை நேற்று நடவடிக்கை எடுத்தது. குழாய் அமைக்க வேண்டிய பகுதியில் தண்டவாளத்தை முற்றிலும் அகற்றிவிட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி அதன் பிறகு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் அந்த நேரத்தில் பணியை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் நேற்று இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தை அப்புறப் படுத்திவிட்டு அந்த பகுதியில் 12 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பணியின் போது இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களான கோவையைச் சேர்ந்த ஜானகிராமன் (வயது47), பாளையங்கோட்டையை சேர்ந்த சிங்கராஜா (39), மதுரையை சேர்ந்த பால கிருஷ்ணன் (42) ஆகியோர் சிக்கி கொண்டனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்ணுக்குள் சிக்கிய 3 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு 108 ஆம்பு லன்சு மூலமாக சிகிச்சைக் காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மண்சரிவு ஏற்பட்டதை யடுத்து அந்த பகுதியில் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு உடனடியாக ரெயில் போக்குவரத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தோண்டப்பட்ட பள்ளம், மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டது. இந்த பணி முடிய காலை 6 மணி வரை ஆகிவிட்டது. இதன் காரணமாக நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன.
சென்னை, பெங்களூரூ, கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாங்குநேரி, மேலப்பாளையம், நெல்லை, கோவில்பட்டி நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் வந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட னர்.
மண் சரிவு சரி செய்யப்பட்ட பின்பு தான் இந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. மேலும் பணி நடத்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட்டன. அந்த பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு அதி காலை 4.40 மணிக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு வந்தடைந்தது.
இதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக காலை 8.05 மணிக்கு தான் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
தாம்பரம்-நாகர்கோவில் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் 8.45 மணிக்கும், பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்தது. வழக்கமாக இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையம் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.15 மணிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக மும்பை செல்லும் சிறப்பு ரெயில் இன்று காலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதற்கிடையில் இணைப்பு ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகள் ரெயில், நாகர்கோவில்-கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
- போத்தனூர் ரெயில் நிலையத்தில் பாலம், தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது.
- ஈரோடு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், கோவை வரை மட்டும் இயக்கப்படும்.
திருப்பூர் :
போத்தனூர் ரெயில் நிலையத்தில் பாலம், தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால், வருகிற 30-ந் தேதி ரெயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து, ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக பயணிக்காது. மாறாக சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும். அங்கிருந்து கேரளா நோக்கி செல்லும்.சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு செல்லும் ரெயில் திருச்சியில் இருந்து திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கேரளா சென்று மங்களூரு செல்லும்.
வழக்கமான வழித்தடமான குளித்தலை, கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை, போத்தனூர் ரெயில் நிலையம் செல்லாது. ஈரோடு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், கோவை வரை மட்டும் இயக்கப்படும்.பாலக்காடு செல்லாது.
ஷாலிமர் - நாகர்கோவில், திப்ரூகர் - கன்னியாகுமரி, இரு ரயில்களும் வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.புது டெல்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 30 நிமிடம், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.
நாளை 30-ந் தேதி பாட்னா - எர்ணாகுளம் நான்கு மணி நேரம், சில்சார் - திருவனந்தபுரம் ரெயில்கள் 3 மணி நேரம் 20 நிமிடம், புதுடில்லி - திருவனந்தபுரம், கேரளா எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் 30 நிமிடம், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் வழித்தடத்தில் ஏதுவான பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக, சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜோத்பூர்- தாம்பரம் (06056) இடையேயான சிறப்பு ரெயில் நாளை 30, மே 7 ஆகிய தேதிகளில் மாலை 5:30 மணிக்கு ஜோத்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 7:15மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் தாம்பரம்- ஜோத்பூர் (06055) சிறப்பு ரெயில் மே 4-ந் தேதி பிற்பகல் 2மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு சனிக்கிழமை மாலை 5:20 மணிக்கு ஜோத்பூர் சென்றடையும்.இந்த ெரயில், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி, பன்வால், சூரத், அகமதாபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை, பாலக்காடு உள்ளிட்ட ரெயில்கள் வழக்கம் போல் கோவை ரெயில் நிலையம் வரை இயக்கப்படும்.
- பயணிகள் வசதிக்காக ரெயில் இம்மாதம் 16, 23 மற்றும் 30 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் மதுரை, பாலக்காடு உள்ளிட்ட ரெயில்கள் வழக்கம் போல் கோவை ரெயில் நிலையம் வரை இயக்கப்படும் என சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை- போத்தனுார் இடையே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்ததால், 1ந் தேதி முதல் 20ந் தேதி வரை பாலக்காடு- கோவை (06806), சொரனூர்- கோவை (06458), மதுரை- கோவை (16722), கோவை- கண்ணூர் (16608) உள்ளிட்ட 6 ெரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்ததால் பழைய அட்டவணை படி ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜபல்பூர் - கோவை வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11:50 மணிக்கு ஜபல்பூரில் இருந்து புறப்பட்டு ஞாயிறு கோவை வந்தடையும். பயணிகள் வசதிக்காக இந்த ெரயில் இம்மாதம் 16, 23 மற்றும் 30 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் கோவை - ஜபல்பூர் ரெயில், கோவையிலிருந்து திங்கட்கிழமை புறப்பட்டு ஜபல்பூரை புதன்கிழமை சென்றடையும்.கோவையில் இருந்து புறப்படும் ரெயில் வருகிற 19, 26, ஜூலை 3 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அறிவு திருக்கோயில் அருகே சிதறி கிடக்கும் மணல் மற்றும் ஜல்லிக்கற்களை வாகனங்கள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
- இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுக்கு உட்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்-பழனி ரெயில் தண்டவாள பகுதியில் அறிவு திருக்கோயில் அருகே சிதறி கிடக்கும் மணல் மற்றும் ஜல்லிக்கற்களை வாகனங்கள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் மணல் தூசியுடன் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுக்கு உட்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
ஆகவே முன்னறிவிப்பு செய்து இந்த பணிகளை ரெயில்வே நிர்வாகம் தொடர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






