என் மலர்
நீங்கள் தேடியது "Trains cancelled"
- விழுப்புரம்-காரக்பூர், திருச்சி-ஹவுரா உள்ளிட்ட 11 ரெயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
- பெங்களூரு – மால்டா டவுன், வாஸ்கோடகாமா – ஷாலிமர் ரெயில்கள் 12 மணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 230 கி.மீ., காக்கிநாடாவில் இருந்து 310 கி.மீ. தூரத்தில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது. புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும்போது மழையின் தீவிரம் அதிகம் இருக்கும். இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரிக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோன்தா புயல் எதிரொலியாக ஆந்திராவில் இன்றும் நாளையும் 67 ரெயில்களின் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
* சென்ட்ரல் - ஹவுரா, சென்ட்ரல்-விசாகப்பட்டினம், விழுப்புரம்-காரக்பூர், திருச்சி-ஹவுரா உள்ளிட்ட 11 ரெயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
* ஆந்திராவின் காக்கி நாடா அருகே மோன்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் 2 நாட்களுக்கு 67 ரெயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* மழை காரணமாக சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் சூப்பர் பாஸ்ட் ரெயில், புவனேஸ்வர் – புதுச்சேரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி – புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* பெங்களூரு – நியூ தின்சுகியா ஜங்ஷன், பெங்களூரு – ஹாதியா, பெங்களூரு – அகர்தலா, பெங்களூரு - ஹவுரா ஜங்ஷன், பெங்களூரு – ஹவுரா ஜங்ஷன், பெங்களூரு – மால்டா டவுன், வாஸ்கோடகாமா – ஷாலிமர் ரெயில்கள் 12 மணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
* பெங்களூரு – ஹாடியா எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயவாடா, வாராங்கல், சந்த் போர்ட், பிலாச்பூர், ஜர்சுகுடா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
- சென்னையில் இன்று முதல் வரும் 18-ந் தேதி வரை 17 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ரத்து செய்யப்பட்டுள்ள 17 புறநகர் ரெயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னையில் இன்று முதல் வரும் 18-ந் தேதி வரை 17 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் இடையே நடைபெறும் பொறியியல் பணி காரணமாக 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள 17 புறநகர் ரெயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
- ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுன் ரெயில் நிலையங்களில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள பழையாற்றில் பழைய இரும்பு பாலம் உள்ள நிலையில் புதிதாக 2 பாலங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பழைய பாலத்தின் தூண்களை பலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.

பழையாற்றை ஒட்டி உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்ல வசதியாக புதிய பாலத்தில் தண்டவாளத்தின் கீழ் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பழைய தண்ட வாளத்தின் கீழ் பகுதியிலும் புதிதாக குழாய் அமைக்க ரெயில்வே துறை நேற்று நடவடிக்கை எடுத்தது. குழாய் அமைக்க வேண்டிய பகுதியில் தண்டவாளத்தை முற்றிலும் அகற்றிவிட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி அதன் பிறகு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் அந்த நேரத்தில் பணியை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் நேற்று இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தை அப்புறப் படுத்திவிட்டு அந்த பகுதியில் 12 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பணியின் போது இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களான கோவையைச் சேர்ந்த ஜானகிராமன் (வயது47), பாளையங்கோட்டையை சேர்ந்த சிங்கராஜா (39), மதுரையை சேர்ந்த பால கிருஷ்ணன் (42) ஆகியோர் சிக்கி கொண்டனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்ணுக்குள் சிக்கிய 3 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு 108 ஆம்பு லன்சு மூலமாக சிகிச்சைக் காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மண்சரிவு ஏற்பட்டதை யடுத்து அந்த பகுதியில் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு உடனடியாக ரெயில் போக்குவரத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தோண்டப்பட்ட பள்ளம், மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டது. இந்த பணி முடிய காலை 6 மணி வரை ஆகிவிட்டது. இதன் காரணமாக நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன.
சென்னை, பெங்களூரூ, கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாங்குநேரி, மேலப்பாளையம், நெல்லை, கோவில்பட்டி நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் வந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட னர்.
மண் சரிவு சரி செய்யப்பட்ட பின்பு தான் இந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. மேலும் பணி நடத்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட்டன. அந்த பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு அதி காலை 4.40 மணிக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு வந்தடைந்தது.
இதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக காலை 8.05 மணிக்கு தான் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
தாம்பரம்-நாகர்கோவில் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் 8.45 மணிக்கும், பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்தது. வழக்கமாக இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையம் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.15 மணிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக மும்பை செல்லும் சிறப்பு ரெயில் இன்று காலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதற்கிடையில் இணைப்பு ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகள் ரெயில், நாகர்கோவில்-கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
- வேலூர் மாவட்டம், திருவலம் இடையே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.
- கோவை மெயின் லைனில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு சில ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் - வேலூர் மாவட்டம், திருவலம் இடையே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால் திருப்பூர் வழியாக சென்னை - கோவை மெயின் லைனில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு சில ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023 ஜனவரி 3 மற்றும், 4ந் தேதி 2நாட்களும், சென்னையில் காலை 6:10 மணிக்கு புறப்பட்டு மதியம், 2:05 மணிக்கு கோவை வரும் கோவை எக்ஸ்பிரஸ், மதியம் 3:15 மணிக்கு கோவையில் புறப்பட்டு இரவு 10:50 மணிக்கு சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.ஜனவரி 4ந் தேதி காலை 7:10 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மதியம் 2:15 மணிக்கு கோவை வரும் சதாப்தி சூப்பர்பாஸ்ட் (12243) இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பயணிகள் கடும் அவதி
- புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது
அரக்கோணம்:
சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கத்துக்கும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்ப ரத்துக்கும் தினமும் 500-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆயிரக்க ணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், புறநகர் மின்சார ரெயில்களின் கால அட்டவணை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இதன்படி, சில நாட்களுக்கு முன்பு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் மொத்தமுள்ள புறநகர் மின்சார ரெயில் சேவையில் 54 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 16 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கும், பின்னர் அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை செல்லும் ரெயில்களில் அதிகளவு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளா கியுள்ளனர்.
- வடக்கு ரெயில்வேயில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
- ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெல்லி செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும்.
மதுரை
ரெயில்களை பாதுகாப்பாக இயக்க, வடக்கு ரெயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரெயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரெயில் நிலைய பிரிவில் ரெயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரெயில் கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் கன்னியா குமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி -டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 பிப்ரவரி 4 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை-டெல்லி நிஜா முதீன் எக்ஸ்பிரஸ் (12651), டிசம்பர் 6,
ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687), ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திரு நெல்வேலி-ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் (16787) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642), ஜனவரி 16, 18, 23, 25, 30 பிப்ரவரி 1, 6 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை எக்ஸ்பிரஸ் (12652), டிசம்பர் 11, ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய நாட்களில் சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் (12688), ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.
இத்தகவலை தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
- மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது.
- இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கோவை:
மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது. இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இன்று காலை 6 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரெயில் (எண் 20644) ரத்து செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12680) ரத்தானது.
இதேபோல சென்னையில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675), காலை 7.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675) ரத்து செய்யப்பட்டன.
இதுதவிர மிச்சாங் புயல் காரணமாக கோவை வழியாக இயக்கப்படும் 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மிச்சாங் புயல் காரணமாக கோவையில் இருந்து வருகிற 6-ந் தேதி பரௌனி புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 03358), கோட்டயத்தில் இருந்து இன்று நரசாபூர் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07120), கொல்லத்தில் இருந்து நாளை செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07130), கொச்சுவேலியில் இருந்து வருகிற 6-ந் தேதி கோரக்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்12512), திருவனந்தபுரத்தில் இருந்து இன்று புதுடெல்லி புறப்பட்டுச் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12625), புதுடெல்லியில் இருந்து நாளை மற்றும் 6-ந் தேதிகளில் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12626) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் ஷாலிமரில் இருந்து வருகிற 6-ந் தேதி நாகர்கோவில் புறப்பட்டு வரும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12660), தன்பாத்தில் இருந்து இன்று ஆலப்புழா புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13351), ஆலப்புழாவில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் தன்பாத் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13352), செகந்திராபாத்தில் இருந்து இன்றும், நாளையும் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17230), திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 5,6,7-ந் தேதிகளில் செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17229), எர்ணாகுளத்தில் இருந்து நாளை டாடா நகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 18190) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் திப்ருகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22503) ரத்து செய்யப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து நாளை நெல்லை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22619), எர்ணாகுளத்தில் இருந்து இன்று பாட்னா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22643), பாட்னாவில் இருந்து வருகிற 7-ந் தேதி எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22644), கொச்சுவேலியில் இருந்து இன்று கோர்பா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22648), கோர்பாவில் இருந்து வருகிற 6-ந் தேதி கொச்சுவேலி புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22647), பாட்னாவில் இருந்து நாளை எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22670), பிலாஸ்பூரில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22815), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி பிலாஸ்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22816), ஹதியாவில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22837), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி ஹதியா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22838) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில்கள் ஜூன் 20 முதல் ஜூலை 8 வரை ரத்து செய்யப்படும்.
- பாலா்ஷா வழியாக வருவதற்கு பதிலாக வாராங்கல், நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும்.
சென்னை:
செகந்திராபாத் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் தெற்கு ரெயில்வேக்குட்பட்ட தமிழ்நாடு, கேரளம் மற்றும் கா்நாடக மாநிலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரெயில்களின் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் விவரம்:-
சென்னை சென்ட்ரல்-ஜெய்ப்பூா் இடையே வாரம் இரு முறை இயக்கப்படும் விரைவு ரெயில் (எண் 12697/12698) ஜூன் 21 முதல் ஜூலை 7 வரை முற்றிலும் ரத்து செய்யப்படும். மைசூரில் இருந்து தா்பங்காவுக்கு ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக செல்லும் பாக்மதி விரைவு ரெயில் ஜூன் 25, ஜூலை 2 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 28, ஜூலை 5-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.
திருநெல்வேலி-பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரெயில் ஜூன் 23, 30 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 25, ஜூலை 2 தேதிகளிலும் ரத்து செய்யப்படும். மன்னாா்குடியில் இருந்து பகத் கி கோதி செல்லும் விரைவு ரெயில் ஜூன் 24, ஜூலை 1-ந் தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 27, ஜூலை 4-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.
மதுரை-பிகானோ் (ராஜஸ்தான்) இடையே இயக்கப்படும் அனுவ்ரத் விரைவு ரெயில் ஜூன் 20, 27, ஜூலை 4-ந்தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 23, 30, ஜூலை 7-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படும். ஜபல்பூா்-மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் ஜூன் 20, 27, ஜூலை 4 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 22, 29, ஜூலை 6 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.
அதேபோல், கேரளத்தின் கொச்சுவேலி, எா்ணாகுளம் மற்றும் கா்நாடகத்தின் பெங்களூா், யஷ்வந்த்பூரில் இருந்து பாட்னா, பாடலிபுத்திரம், பிலாஸ்பூா், இந்தூா், கோா்பா, தானாப்பூா், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில்கள் ஜூன் 20 முதல் ஜூலை 8 வரை ரத்து செய்யப்படும்.
புதுடெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ராஜ்தானி அதிவிரைவு ரெயில் ஜூலை 3, 5 தேதிகளில் பாலா்ஷா வழியாக வருவதற்கு பதிலாக வாராங்கல், நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரெயில் ஜூலை 2, 3, 4-ந்தேதிகளில் பாலா்ஷா வழியாக செல்வதற்கு பதிலாக வாராங்கல், பேடப்பள்ளி, நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரெயில் (12657) வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- ஒயிட்பீல்டு-கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
பெங்களூரு:
பெங்களூரு யார்டு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட்-கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையங்கள் இடையே உள்ள பாலங்கள் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில ரெயில்கள் முழுவதுமாகவும், பகுதியாகவும் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
* கே.எஸ்.ஆர். பெங்களூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்: 12658) வருகிற 30-ந்தேதி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6 மற்றும் 13-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரெயில் (12657) வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரெயில் (12657) வருகிற 30, அடுத்த மாதம் 6 மற்றும் 13-ந்தேதிகளில் ஒயிட்பீல்டு வரை மட்டும் இயக்கப்படும். ஒயிட்பீல்டு-கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* லோக்மானிய திலக் டெர்மினஸ் (மும்பை)-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (11013) வருகிற 29, அடுத்த மாதம் 5 மற்றும் 12-ந்தேதிகளில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆர். பெங்களூரு வழியாக இயங்குவதற்கு பதிலாக கவுரிபித்தனூர், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, ஓசூர் வழியாக இயக்கப்படும்.
* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) வருகிற 30, அடுத்த மாதம் 6, 13-ந்தேதிகளில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட் வழியாக இயங்குவதற்கு பதிலாக கே.ஆர்.புரம், பையப்பனஹள்ளி, பானசவாடி, ஹெப்பால், யஷ்வந்தபுரம், கே.எஸ்.ஆர். பெங்களூரு வழியாக மாற்று பாதையில் இயங்க உள்ளது.
* மைசூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) வருகிற 30, அடுத்த மாதம் 6 மற்றும் 13-ந்தேதிகளில் பெங்களூரு கன்டோன்மென்ட் வழியாக இயங்குவதற்கு பதிலாக கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், ஹெப்பால், பானசவாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது.
- சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னை:
ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

பல ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது. சில ரெயில்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களுக்கு செல்லும் பெரும்பாலானா ரெயில்கள் ஆந்திரா வழியாத்தான் கடந்து செல்ல வேண்டும்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.
தண்ட வாளத்தில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் ரெயில்களை இயக்க முடியாத நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்ட்ரல்-பூரி, அகமதாபாத்-சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ், சென்ட்ரல்-சாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மைசூரு-ஹவுரா, ஹவுரா-மைசூரு எக்ஸ்பி ரஸ், ஐதராபாத்-தாம்பரம், சென்ட்ரல்-சாப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், சாப்ரா-சென்ட்ரல், சென்ட்ரல்-டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ் பிரஸ், டெல்லி-சென்ட்ரல் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ஐதராபாத், சென்ட்ரல்-டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொச்சுவேலி-கோர்பா எக்ஸ்பிரஸ், பிலாஸ்பூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், காக்கிநாடா-பெங்களூரு சேஷாத்திரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ஆகியவை 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் நேற்று முதல் ரத்து செய்யப் பட்டதால் சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் பயணத்தை தொடர முடியாமல் தவிக்கின்றனர்.
முன்பதிவு செய்த பயணிகள் சொந்த ஊர் செல்ல முடியாமல் சென்ட்ரல் நிலையத்தில் தங்கி உள்ளனர்.
பயணிகளுக்காக உதவி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. சென்ட்ரல் நிலையத்தில் 044-25354995, 044-25354151 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேசினால் தகவல் கிடைக்கும்.
இதுதவிர விஜயவாடா, ராஜ முந்திரி, ஒங்கோல், தெனாலி, நெல்லூர், கூடூர், குடிவாடா, குண்டூர், ஐதராபாத், செகந்திரபாத் உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்களை தொடர்பு கொள்ளவும் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல ஆந்திரா மார்க்கமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பிற நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. 15 ரெயில்கள் வேறு வழிகளில் மாற்றி விடப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். அவர்களை நிலையத்திற்குள் விடாமல் முன் பகுதியிலே ரெயில்வே ஊழியர்கள் தகவல்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ரெயில்கள் ரத்து, தாமதம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள 'கியூ ஆர் கோடு' வசதியை சென்ட்ரல் நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்திருந்தனர்.
இதனை ஸ்கேன் செய்தால் ரெயில்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ரெயில் நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டால் நெரிசல் ஏற்படும் எனக் கருதி முன்எச்சரிக்கையாக இந்த நடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
- திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில், சென்னையில் கனமழை பெய்து வருவதாலும், பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ரெயில் நிலையம் இடையே தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சென்னை- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி ரெயில்,
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயில்
சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ்
சென்னையில் இருந்து மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில் சேவையில் மாற்றம்.
- எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை இயக்க ஏற்பாடு.
புதிய தண்டவாள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரெயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயணகள் நலன் கருதி கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






