என் மலர்
நீங்கள் தேடியது "Red Alert"
- டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டேராடூனில் நேற்று மேகவெடிப்பால் அதிக மழை கொட்டித் தீர்த்த நிலையில், மீண்டும் அங்கே அதிக மழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன 2 பெரிய பாலங்கள் இடிந்து விழுந்ததால், நகரத்தை சுற்றியுள்ள பிற பகுதிகளுடன் இணைக்கும் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றம் உணவு கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் மீண்டும் அங்கு கன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
- ரெயில் தண்டவாளங்களில் 17 அங்குலம் வரை தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
- மும்பை மோனோ ரெயில் ஒன்று நடுவழியில் அந்தரத்தில் சிக்கிய நிலையில் அதில் இருந்த சுமார் 500 பயணிகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.
மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. நகரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
இந்நிலையில் அடுத்த 48 மணிநேரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையால் மிதி (Mithi) நதி அபாயக்கட்டத்தை தாண்டியதால், அப்பகுதியில் இருந்த 400 முதல் 500 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மும்பை விமான நிலையத்தில் 304 புறப்படும் விமானங்களும், 198 உள்வரும் விமானங்களும் தாமதமாகின. 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் தண்டவாளங்களில் 17 அங்குலம் வரை தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
தாழ்வான பகுதிகளான தாதர், மாதுங்கா, பரேல், சியோன் போன்ற இடங்களில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கி வருகிறது.
இதற்கிடையே மும்பை மோனோ ரெயில் ஒன்று நடுவழியில் அந்தரத்தில் சிக்கிய நிலையில் அதில் இருந்த சுமார் 500 பயணிகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.
- தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே காலநிலை முற்றிலும் மாறி காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், மிதமான மழையும் பெய்த வண்ணம் இருக்கிறது. மழையால் மாவட்டம் முழுவதுமே மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.
குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, மஞ்சூர், கூடலூர் என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்தது. இரவிலும் சாரல் மழை நீடித்தது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.
அதிகபட்சமாக மாவட்டத்தில் கொடநாட்டில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண்சரிவு, மரங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் வெறிச்சோடியது.
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் வாட்ஸ் அப் எண்ணான 9488700588க்கும் தகவல் அளிக்கலாம். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஊட்டி கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு-0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261296, ஊட்டி வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநகரை பொறுத்தவரை நேற்று காலை முதலே இதமான காலநிலை நிலவியது.
இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலையம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை, சத்தி சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீரும் தேங்கி நின்றது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொடநாடு-53, பார்சன்வேலி-26, கோத்தகிரி-23, கெத்தை-22, மசினகுடி-20, ஊட்டி-18.6, நடுவட்டம்-15, போர்த்தி மந்து-10, குன்னூர்-10.
- நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களும் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிப்பு.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களும் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் மழை குறைந்தநிலையில், தற்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.
பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாலக் காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
காசர்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள், ஆலப்புழா மவட்டத்தில் குட்டநாடு மற்றும் அம்பலப்புழா தாலுகாக்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
கோழிக்கோடு மற்றும் கணணூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. பலத்த மழை காரணமாக கொல்லம் அருகே உள்ள போலயாதோடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- அபாயகரமான பகுதிகளை 43 மண்டல குழுக்கள் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
தென்னிந்திய கடலோர பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நிவாரண முகாம்களும் தயார் செய்யப்பட்டு உள்ளது.
மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்புக்குழுவினர் நீலகிரி மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். அவர்களுடன் தீயணைப்பு, வருவாய், காவல்துறையினரும் முகாமிட்டு உள்ளனர்.
மேலும் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. நீலகிரியில் நேற்றும், இன்றும் மழை மிதமான அளவிலேயே பெய்துள்ளது. மழை அதிகரிக்கும்பட்சத்தில் சுற்றுலாதலங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது.
மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் அபாயகரமான பகுதிகளை 43 மண்டல குழுக்கள் கண்காணித்து வருகின்றனர். மழையின் தீவிரத்தை பொறுத்து சுற்றுலாதலங்களை மூடுவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு உடனடியாக அறிவிக்கப்படும். நீலகிரிக்கு சுற்றுலா வர திட்டமிடும் மற்றும் வந்துள்ள சுற்றுலாபயணிகள் மழை சம்பந்தமான வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை அறிந்து கொண்டு அதற்கேற்ப பயணங்களை திட்டமிட வேண்டும் என்றார்.
அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கமாண்டர் கோபிநாத் தலைமையில் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர். கமாண்டர் கோபிநாத் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் 283 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் அபாயகரமான மரங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். பேரிடா் மீட்புக் குழுவினா் 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா். நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடங்களுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளோம். தீயணைப்பு, வருவாய்த் துறையினருடன் இணைந்து அவ்வப்போது மழை வெள்ளம், இயற்கை சீற்றம் குறித்த தகவல்களை பகிா்ந்து வருவதால் அதி கனமழையை எதிா்கொள்ள தயாராக உள்ளோம் என்றாா்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 7 செ.மீ. மழை கொட்டியது. அவலாஞ்சியில் 6 செ.மீ, சேரங்கோட்டில் 5, தேவாலாவில் 5, அப்பர்பவானியில் 4 செ.மீ. மழையும் பெய்து இருந்தது.
கோவை மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்படும் வால்பாறை, மேட்டுப்பாளையம் பகுதிக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர்.
மழை எச்சரிக்கையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் இன்றும், நாளையும் மூடப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பில்லூர் அணையில் நீர்மட்டம் உயரும்போது உபரிநீர் வெளியேற்றம் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமத்தூர் பகுதியில் இருந்து சமயபுரம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சினம்பா ளையம் உள்ளிட்ட ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 19 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வால்பாறை தாலுகா சின்னக்கல்லாரில் 5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
- தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 430 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழைக்கு பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மண்சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
சில வாரங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் ஆந்திர கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
மாவட்டம் முழுவதும் 253 பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை கண்காணிப்பதற்கு என மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 430 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ள முகாம்களுக்கு சென்று தங்குமாறும் அறிவுறுத்தி வருகிறது.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மழையில் மண்சரிவு, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள பொக்லைன் எந்திரங்கள், மின்சார வாகனங்கள், மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் உள்ளனர். மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க 1077 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மழை பாதிப்புகள் ஏதாவது இருந்தால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மாவட்டத்தில் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் பேரிடர் உபகரணங்களுடன் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றனர்.
- உதகையில் இருந்த வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுகிறது.
- போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
அபாயகரமான பாறைகள் அகற்றும் வரை கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அரசுப் பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
உதகையில் இருந்த வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுவதாக கூறப்பட்டு்ளது.
மேலும், மேலும், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது.
- நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது.
- நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.






