தமிழகத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்ப வேண்டும்.
தமிழகத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

வடகிழக்கு பருவமழை குறித்து சென்னையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது அவர்," தமிழ்நாட்டில் வரும் 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் சில மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்ப வேண்டும்.

மீட்பு மற்றும் நிவாரண மையங்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com