என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட் அலர்ட்"

    • பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் மழை குறைந்தநிலையில், தற்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.

    பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் பாலக் காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    காசர்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள், ஆலப்புழா மவட்டத்தில் குட்டநாடு மற்றும் அம்பலப்புழா தாலுகாக்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    கோழிக்கோடு மற்றும் கணணூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. பலத்த மழை காரணமாக கொல்லம் அருகே உள்ள போலயாதோடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
    • அபாயகரமான பகுதிகளை 43 மண்டல குழுக்கள் கண்காணித்து வருகின்றனர்.

    ஊட்டி:

    தென்னிந்திய கடலோர பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நிவாரண முகாம்களும் தயார் செய்யப்பட்டு உள்ளது.

    மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்புக்குழுவினர் நீலகிரி மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். அவர்களுடன் தீயணைப்பு, வருவாய், காவல்துறையினரும் முகாமிட்டு உள்ளனர்.

    மேலும் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. நீலகிரியில் நேற்றும், இன்றும் மழை மிதமான அளவிலேயே பெய்துள்ளது. மழை அதிகரிக்கும்பட்சத்தில் சுற்றுலாதலங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது.

    மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில் அபாயகரமான பகுதிகளை 43 மண்டல குழுக்கள் கண்காணித்து வருகின்றனர். மழையின் தீவிரத்தை பொறுத்து சுற்றுலாதலங்களை மூடுவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு உடனடியாக அறிவிக்கப்படும். நீலகிரிக்கு சுற்றுலா வர திட்டமிடும் மற்றும் வந்துள்ள சுற்றுலாபயணிகள் மழை சம்பந்தமான வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை அறிந்து கொண்டு அதற்கேற்ப பயணங்களை திட்டமிட வேண்டும் என்றார்.

    அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கமாண்டர் கோபிநாத் தலைமையில் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர். கமாண்டர் கோபிநாத் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் 283 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் அபாயகரமான மரங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். பேரிடா் மீட்புக் குழுவினா் 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா். நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடங்களுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளோம். தீயணைப்பு, வருவாய்த் துறையினருடன் இணைந்து அவ்வப்போது மழை வெள்ளம், இயற்கை சீற்றம் குறித்த தகவல்களை பகிா்ந்து வருவதால் அதி கனமழையை எதிா்கொள்ள தயாராக உள்ளோம் என்றாா்.

    கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 7 செ.மீ. மழை கொட்டியது. அவலாஞ்சியில் 6 செ.மீ, சேரங்கோட்டில் 5, தேவாலாவில் 5, அப்பர்பவானியில் 4 செ.மீ. மழையும் பெய்து இருந்தது.

    கோவை மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்படும் வால்பாறை, மேட்டுப்பாளையம் பகுதிக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர்.

    மழை எச்சரிக்கையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் இன்றும், நாளையும் மூடப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    பில்லூர் அணையில் நீர்மட்டம் உயரும்போது உபரிநீர் வெளியேற்றம் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

    நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமத்தூர் பகுதியில் இருந்து சமயபுரம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சினம்பா ளையம் உள்ளிட்ட ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 19 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் வால்பாறை தாலுகா சின்னக்கல்லாரில் 5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. 

    • தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 430 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழைக்கு பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மண்சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.

    சில வாரங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.

    இந்த நிலையில் ஆந்திர கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    மாவட்டம் முழுவதும் 253 பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை கண்காணிப்பதற்கு என மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 430 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ள முகாம்களுக்கு சென்று தங்குமாறும் அறிவுறுத்தி வருகிறது.

    மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மழையில் மண்சரிவு, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள பொக்லைன் எந்திரங்கள், மின்சார வாகனங்கள், மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் உள்ளனர். மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க 1077 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மழை பாதிப்புகள் ஏதாவது இருந்தால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மாவட்டத்தில் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் பேரிடர் உபகரணங்களுடன் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றனர்.

    • நேற்றும் வால்பாறை, பொள்ளாச்சியில் கனமழை பெய்தது.
    • நெகமம் பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு தென்னந்தோப்புகளில் மரம் முறிந்து விழுந்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பெய்யும் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளில் விழுந்துள்ளன. சில எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்கள் மரம் விழுந்து, அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    மழையால் வால்பாறையில் உள்ள நடுமலையாறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    நேற்றும் வால்பாறை, பொள்ளாச்சியில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மரங்களை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பொள்ளாச்சி நகரில் பெய்த கனமழைக்கு பாலக்காடு சாலை, பல்லடம் சாலை, கோவை சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் அந்த சாலைகளில் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.

    பொள்ளாச்சி நகராட்சி 33-வது வார்டில் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.

    நெகமம் பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு தென்னந்தோப்புகளில் மரம் முறிந்து விழுந்தது. நெகமத்தில் இருந்து பெரியபெட்டி செல்லும் ரோட்டில் என்.சந்திராபுரத்தில் உள்ள பழமையான மரம் வேருடன் சாய்ந்து அருகே இருந்த மின்கம்பம் மீது விழுந்தது.

    தகவல் அறிந்த மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெகமம் செட்டியாக்காபாளையம், கக்கடவு, காணியாலம்பாளையம் பகுதிகளில் மழைக்கு 3 வீடுகள் சேதம் அடைந்தன.

    • உதகையில் இருந்த வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுகிறது.
    • போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

    அபாயகரமான பாறைகள் அகற்றும் வரை கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அரசுப் பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    உதகையில் இருந்த வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் சாலை இரவு நேரத்தில் மூடப்படுவதாக கூறப்பட்டு்ளது.

    மேலும், மேலும், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது.
    • ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறிகள் சேதமடைந்துள்ளன.

    ஊட்டி:

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் முதல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குந்தா அணை முழுவதுமாக நிரம்பி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்ட்டுள்ளது.

    அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அவை வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. ஊட்டியில் இருந்து உல்லத்தி கிராமத்திற்கு செல்லும் சாலை, புதுமந்து செல்லும் சாலை, ஜல்லிக்குழி செல்லும் சாலை உள்பட பல்வேறு கிராமபுறங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.

    அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    மஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழைக்கு ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தது. கிண்ணக்கொரை பகுதியில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு குன்னூர், ஊட்டி, கூடலூர், குந்தா, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வரை 67 மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. மரங்கள் விழுந்த இடங்களில் எல்லாம் தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

    பலத்த மழைக்கு ஊட்டி அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகே மண்சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து பத்திரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதேபோல் இத்தலார்-பெம்பட்டி சாலையில் 100 அடி தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டு அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பொக்லைன் வாகனம் மூலம் மண்சரிவை சீரமைத்தனர். பந்தலூர் நாயக்கன் சோலை, ஊட்டி மஞ்சனக்கொரை அன்பு நகர், சேரனூர், பிக்கட்டி பகுதிகளிலும் சாலையோரங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. தேவாலா அட்டியில் கனமழையால் வேலு என்பவரின் வீட்டின் அருகே மண் சரிவு ஏற்பட்டதால் வீடு அந்தரத்தில் தொங்குகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியது முதல் பெரியளவில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகமான காரணத்தால் நஞ்சநாடு, கப்பத்தொரை, பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    ஓடைகள் முழுவதும் நிரம்பி வெள்ளம், ஓடைகளையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இந்த பகுதிகளில் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்பட்டு இருந்தன.

    இந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறிகள் சேதமடைந்துள்ளன.

    குறிப்பாக முத்தொரை பாலடா பகுதியில் பெரும்பாலான விவசாய நிலங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பந்தலூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு சாகுபடிக்கு தயாராக நின்ற 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

    கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள கில்லூர், தேவன் எஸ்டேட், ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மின் வயர்கள் மரங்கள் மீது விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் எல்லாம் மின்சாரம் தடைபட்டுள்ளது.

    சேரனூர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மீது ராட்சத மரம் விழுந்தது. இதனால் சேரனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 3 கிராமங்களில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. இதேபோல் தங்கநாடு தோட்டம், மட்டகண்டி, கோரகுந்தா பகுதிகளிலும் மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி நகர பகுதியில் நேற்று முதல் இன்று வரை 2 நாட்களாக மின்சாரம் வினியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல பகுதிகளில் இருளில் மூழ்கியுள்ளனர்.

    தொடர்ந்து இன்று 4-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, மஞ்சூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இன்றும் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பத்தினம்திட்டா, காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
    • கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 8 நாட்கள் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள்து. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வெள்ளம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலாத்தலங்கள் நாளை ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • மின்சார கம்பங்கள், மரங்களுக்கு அருகே பொதுமக்கள் நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்.

    நீலகிரிக்கு நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளது.

    அதன்படி, உதகையில் 2 நாட்கள் படகு சவாரி சேவையும், 3 நாட்கள் மலையேற்ற சவாரியும் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

    மேலும், பைன் மரக்காடுகள், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் நாளை ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கனிமழையின்போது மின்சார கம்பங்கள், மரங்களுக்கு அருகே பொதுமக்கள் நிற்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    • 8 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
    • மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 8 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

    * மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    * தூத்துக்குடி, பாம்பனில் 3ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    * நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை கொட்டும். இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    * கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.

    * நீலகிரி, கோவையில் 27ஆம் தேதி மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும்.

    * கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு மே வரையிலான காலத்தில் 92 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு பதிவு.

    இவ்வாறு அனுஜா தெரிவித்துள்ளார்.

    • கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை முதல் மிக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்.
    • கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

    மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ந்தேதி வாக்கில் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளத கூறப்பட்டுள்ளது.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை முதல் மிக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மை துறை ஆலோசனை நடத்தியுள்ளது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், கோவை, நீலகிரிக்கு 3 மாநில பேரிடர் மீட்பு படையும், ஊட்டி, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்புதுறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை என அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

    • ரஜோரி, ஜம்மு, பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் குண்டுவீச்சு தாக்குதலில் அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
    • பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்வதால் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது.

    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குலை வானிலேயே இந்தியா அழித்தது.

    தொடர்ந்து குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் எல்லையில் நேற்றிரவு முதல் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். ரஜோரி, ஜம்மு, பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் குண்டுவீச்சு தாக்குதலில் அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தான் அத்துமீறலை தொடர்ந்து பஞ்சாபின் 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தல் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்வதால் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் பஞ்சாபின் 3 மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    ×