என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா தளம்"

    • நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    • காஷ்மீரின் 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடிவிட்டனர்.
    • பெதாப் பள்ளத்தாக்கு, பூங்காக்கள், வெரினாக், கோகர்னாக் மற்றும் அச்சாபல் தோட்டங்கள் திறக்கப்படும்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ள 16 சுற்றுலாத் தலங்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.

    சுற்றுலாத் தலங்கள் படிப்படியாக திறக்கப்படும் என்று சின்ஹா கூறினார். முதல் கட்டமாக, அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் சந்தைக்கு அருகிலுள்ள பெதாப் பள்ளத்தாக்கு, பூங்காக்கள், வெரினாக், கோகர்னாக் மற்றும் அச்சாபல் தோட்டங்கள் திறக்கப்படும்.

    ஏப்ரல் 22 தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரின் 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடிவிட்டனர். இந்நிலையில் பஹல்காம், குல்மார்க், சோனாமார்க் மற்றும் தால் ஏரி போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் ஏற்கனவே திறந்திருந்ததாகவும், சில முக்கிய இடங்கள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 5 மணியளவில் சேலம் மாநகரில் திடீரென மழை பெய்தது.

    அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை , ஜங்சன். கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியே சாலைகளில் சென்றனர்.

    ஏற்காட்டில் நேற்று மாலை 5 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இன்று காலையும் குளிர் நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 5.6 மி.மீ. மழையும், ஓமலூரில் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 7.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழையை தொடர்ந்து நேற்றிரவு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    • திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது
    • இன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.

    தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் படகு போடி நடப்பது வழக்கம்.

    இன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட படகு போட்டி மீண்டும் மே 25-ம் தேதி நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று பகல் முழுவதும் வானம் மப்பும்மந்தாரமாக காட்சியளித்தது.
    • சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம்

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று பகல் முழுவதும் வானம் மப்பும்மந்தாரமாக காட்சியளித்தது.

    இதனால் பகல் முழு வதும் வெயிலையே பார்க்க முடியவில்லை. இடை இடையே சாரல் மழையின் தூரல் விழுத் தது. காலையில் மழை பெய்ததால் மழைமேகத்தின் காரணமாக சூரியன் உதய மாகும் காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மாலையிலும் மேக மூட்டத்தின் காரணமாக சூரியன் மறையும் காட்சி தெளிவாகத் தெரியவில்லை. இந்த காட்சியையும் பார்க்க முடியாமல் சுற்று லாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழை தூரலின் காரணமாக மாலையில் கடுமையான குளிர்காற்று வீசியது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல கடற்கரையில் குளிர் வாட்டி வதைத்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜுகளுக்கு திரும்பிச் சென்ற வண்ணமாக இருந்தனர். இரவு முழுவதும் கன்னியாகுமரியில் பனிப்பொழி வாகவே இருந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி முழுவதும் ஒரே பனி மூட்ட மாக காட்சி அளித்தது.

    சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்தலங்களை சுற்றி பார்க்க முடியாமல் லாட்ஜுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

    ×