search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourist places"

    • காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர்.
    • சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    சேலம்:

    காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் தங்களது காதலர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் காதலை பரிமாறிக்கொண்டனர். மேலும் காதலர்கள் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க தங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு காலை முதலே படையெடுத்தனர்.

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் காதல் ஜோடிகள் வந்தனர். இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும், சாரையாக காதல் ஜோடிகள் வந்தனர். மேலும் காதல் திருமணம் செய்தவர்களும் அங்கு குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் காதல் ஜோடிகள் மற்றும் இளம் ஜோடிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    ஏற்காட்டில் குவிந்த காதல் ஜோடிகள் அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளையும் ஆனந்தமாக சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் முக்கியமான பகுதிகளில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் குரும்பப்பட்டியில் இயற்கை சூழலில் அனைவரையும் கவரும் வகையில், உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் காதல் ஜோடிகள் இன்று காலை முதலே அதிக அளவில் அங்கு வந்தனர்.

    மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகள் முன்பும் நின்று காதல் ஜோடிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள், குரங்குகள், மயில்கள், மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்ததுடன் உற்சகாமாக பொழுதை கழித்தனர்.

    காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து தங்களுக்கு பிடித்த மீன்கள் மற்றும் உணவுகளையும் வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.

    இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புல் தரையில் அமர்ந்தும், செயற்கை நீரூற்று முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் காலை முதலே அண்ணா பூங்காவில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் திரண்டு தங்களுக்கு பிடித்த சினிமாக்களை பார்த்து மகிழ்ந்தனர்.

    • 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
    • வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

    தற்போது மழை குறைந்து, பகல் நேரங்களில் மிதமான வெயிலும், இரவில் நீர்ப்பனியும் நிலவி வருகிறது.இந்த இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

    இந்த ஆண்டு முதல் கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கடந்த 2 மாதங்களாக இடைவிடாது மழை கொட்டியது. மேலும் கடும் குளிரும் காணப்பட்டதால், சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடியது.

    கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை விடப்பட்டதால் கடந்த 3 தினங்களாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    இதனால் லவ்டேல் சந்திப்பு முதல் படகு இல்லம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதைத் தொடா்ந்து போலீசாா் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனா்.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

    கடந்த 3 நாள்களில் மட்டும் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 20,000 சுற்றுலாப் பயணிகளும், ரோஜா பூங்காவுக்கு 8,000 சுற்றுலாப் பயணிகளும், ஊட்டி படகு இல்லத்துக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்த நிலையில், பைக்காரா படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

    அதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

    • ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி தலையூற்று அருவி உள்ளது
    • இதனை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாச்சி ஊரா ட்சியில் நங்காஞ்சியாற்றின் மறுகரையில் ஆதிதிரா விடர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் மழைக்காலத்தில் நங்காஞ்சி யாற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அமைச்சர் அர.சக்கரபாணியிடம் அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து நபார்டு வங்கி உதவியுடன் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே ரூ.2.23 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்ட பொதுப்பணி த்துறை அனுமதி வழங்கியது. அதன் பேரில் ஞாயிற்று க்கிழமை விருப்பாச்சி நங்காஞ்சியாற்றின் கரையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் அமைச்சர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:

    விருப்பாச்சி பாரம்பரிய கிராமமாகும். இக்கிராமம் ஒட்டன்சத்திரத்துக்கு இணையாக வளர்ச்சி அடையப் போகிறது. இங்கு அரசு தொழிற்பயிற்சிக் கூடம் போக்குவரத்து பணி மனை ஆகியவை அமைக்க ப்படும். அதேபோல் தலையூற்று அருவி சுற்றுலா தலமாக்கப்படும்.

    பரப்பலாறு அணை தூர்வார அனுமதி கிடைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. 10 தினங்களுக்குள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று அணை தூர்வாரப்பட உள்ளது என்றார்.

    அதனைத் தொடர்ந்து பெருமாள் குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் நங்காஞ்சி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை அவர் தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொது ப்பணித்துறை செயற்பொறி யாளர் கோபி, உதவி பொறி யாளர் கோகுலகண்ணன், உதவி பொறியாளர் நீதிபதி, மாவட்டக் கவுன்சிலர் சங்கீதா பழனிச்சாமி, ஒன்றியக் கவுன்சிலர் சின்னத்தாய் தங்கவேல், தி.மு.க. ஒன்றியச் செய லாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜன், விருப்பாச்சி ஊராட்சித் தலைவர் மாலதி சந்திரன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நாளை காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #KaanumPongal
    சென்னை:

    உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது, இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நகர்ப்புறங்களை விட கிராமப் பகுதியில் மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    நாளை காணும் பொங்கல் தினத்தில் குடும்பமாக பொழுதுபோக்கு மையங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள்.

    கூட்டு குடும்பமாகவோ, நண்பர்களாகவோ வீடுகளில் உணவினை சமைத்து பாத்திரங்களில் எடுத்து சென்று கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.

    சென்னையில் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் காணும் பொங்கல் தினத்தில் மக்கள் குவிந்து விடுவார்கள். சென்னை மக்களின் பொழுதுபோக்கு மையமாக இருப்பது மெரினா கடற்கரையாகும்.

    மோட்டார் சைக்கிள், கார்களில் இங்கு மக்கள் அதிகமாக வருவார்கள். ஏழை-எளிய மக்கள் மாநகர பஸ்களில் பயணம் செய்வார்கள். மெரினா தவிர அரசு பொருட்காட்சி, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம், மகாபலிபுரம், பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளுக்கும் செல்வார்கள்.



    மேலும் வி.ஜி.பி., எம்.ஜி.எம்., குயின்ஸ்லேண்ட் போன்ற பொழுதுபோக்கு மையங்களில் அதிகளவு கூடுவார்கள். பொதுமக்கள் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை நகரின் அனைத்து பஸ் நிலையங்களில் இருந்தும் காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் கூடுதலாக பஸ்கள் விடப்படுகிறது.

    நாளை காலையில் இருந்து நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பிராட்வே, கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், கே.கே.நகர், அடையார், ஆதம்பாக்கம், வடபழனி, அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. #KaanumPongal

    மார்க்கெட்டுகள், சுற்றுலா தலங்களை குறிவைத்து இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை கோவையில் கைதான கும்பல் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். #fakecurrency
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியில் கள்ளநோட்டுகள் அச்சடித்த ஆனந்த்(வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38), கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த கிதர் முகமது (55) ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 2 மாதங்களாக சாய்பாபா காலனி அருகே வேலாண்டிபாளையத்தில் அறை எடுத்து தங்கி கள்ளநோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட், கோவை மேட்டுப்பாளையம் மார்க்கெட், ஈரோடு ஜவுளி மார்க்கெட் உள்ளிட்ட தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு தமிழகம் மட்டுல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்வார்கள். இங்கு வழக்கமாக லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனையும் நடைபெறும் என்பதால் கள்ள நோட்டுகளை எளிதாக புழக்கத்தில் விட்டுள்ளனர்.



    மேலும் ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி என சுற்றுலா தலங்களை குறி வைத்தும் இந்த கும்பல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கமி‌ஷன் அடிப்படையில் ஊழியர்களை நியமத்து கள்ளநோட்டுகளை மாற்றி உள்ளனர். அந்த ஊழியர்கள் யார்-யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிதர் முகமது ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி, போத்தனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கோவை மற்றும் ஈரோட்டில் பலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் மூலம் தற்போது கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கலாம் என கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

    தலைமறைவான சுந்தர், கிதர் முகமது ஆகியோர் பிடிபட்டால் தான் இந்த கும்பலின் பின்னணி பற்றி முழு தகவல்களும் தெரியவரும். இவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் கேரளா, ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

    இருவரின் செல்போனும் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடைசியாக யார்-யாரிடம்? பேசினார்கள் என பட்டியல் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கிதர் முகமது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியவர். தற்போது இந்த கும்பல் கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர். அதிலும், யாரும் எளிதில் கண்டுபிடித்து விடாதபடி, குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன வெள்ளை காகிதங்களை பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    குஜராத்தில் இருந்து இந்த கும்பலுக்கு நவீன காகிதங்களை சப்ளை செய்தது யார்? என்பது மர்மமாக உள்ளது. இதன்பின்னணயில் மிகப் பெரிய கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் கள்ள நோட்டு வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. #fakecurrency

    தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். #ministervijayabasker
    சென்னை:

    பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவுப் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கு உணவு பாதுகாப்பு குறித்த நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையத்தினை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    விடுமுறை மாதமான இந்த மாதத்தில் பெருமளவு மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் உணவு பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.

    சென்னையில் உள்ள 5 சுற்றுலா இடங்களையும் சேர்த்து தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 53 சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையங்கள் இன்று முதல் செயல்படும்.

    சுற்றுலா தலங்களில் உள்ள அனைத்து உணவு வணிகர்களையும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு பெறச் செய்து, பொது மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு வழங்குவதை உணவு பாதுகாப்பு மையம் உறுதி செய்யும்.



    சென்னையில், மெரினா கடற்கரை, எலியாட்ஸ் கடற்கரை, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் தியாகராயர் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் உணவு பாதுகாப்பு மையங்கள் செயல்படும்.

    சுற்றுலா தலங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையம் அமைக்கப்படும்.

    தெருவோர உணவு கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவகங்களில் கவனிக்க வேண்டியவை, பழம், பழச்சாறு, குளிர்பானக் கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவு பொட்டலங்களின் விபரச் சீட்டில் கவனிக்க வேண்டிய விவரங்கள் கொண்ட பலகைகள் காட்சிக்கு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministervijayabasker

    ×