என் மலர்
நீங்கள் தேடியது "fake currency"
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம், கொப்பம் ஆகிய பகுதிகளில் செர்புழச்சேரி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 2 முறை நடத்திய சோதனையில் ரூ.70 ஆயிரம் மற்றும் ரூ.82 ஆயிரம் கள்ளநோட்டுக்கள் சிக்கியது.
இதனை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கள்ளநோட்டு சிக்கியது. கள்ளநோட்டு தயாரிக்கும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருச்சூர் காட்டூர் தோட்டப்பள்ளியை சேர்ந்த மணி (வயது 45) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டு பறிமுதல் செய்தனர்.
மேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், இங்க், காகிதங்களை பறிமுதல் செய்தனர். மணியிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பரான சதானந்தம் (46) என்பவரும் கள்ளநோட்டு அச்சடிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது வீட்டிலும் சோதனை செய்தபோது அங்கு ரூ.40 ஆயிரம் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு அச்சடித்த மணி மற்றும் சதானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து செர்புழச்சேரி போலீசார் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்கள் அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகள். வங்கி அதிகாரிகளே திணறும் அளவுக்கு மிக நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. பல நாட்கள் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டதால் பாலக்காடு, ஒற்றப்பாலம், பொள்ளாச்சி கிராம பகுதி மற்றும் கோவை எல்லையோர பகுதிகளில் அதிகம் புழக்கத்தில் விட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
எனவே பொதுமக்கள் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளி நபர்களிடம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நன்கு தெரிந்த நபர்களிடமே 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். #FakeCurrency

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கள்ள நோட்டு கும்பல் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது ராஜதானி பகுதியில் 4 பேர் சந்தேகப்படும்படி திரிந்தனர். அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த சட்டைப் பைகளில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உஷாரான போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ராஜதானி அருகே உள்ள வீரசின்னம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் (வயது 21), வசந்தகுமார் (31), ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பாலு (31), திருப்பூர் புழுவபட்டியைச் சேர்ந்த குமரேசன் என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.1.44 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. எனினும் கள்ள நோட்டுகளை எங்கிருந்து வாங்கி வந்தனர்? இதனை அச்சடித்தது யார்? இதற்கு மூளையாக இருப்பது யார்? என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் வனிதா (வயது 30).
இவர் நேற்று முன்தினம் அமைந்தகரை மேத்தாநகர் ரெயில்வே காலனி 3-வது தெருவில் உள்ள மருந்துக் கடையில் 2000 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றார்.
அப்போது மருந்து கடை ஊழியர்களும், அக்கம் பக்கத்தினரும் வனிதாவை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வனிதாவை கைது செய்து விசாரணை நடத்தினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கொளத்தூரை சேர்ந்த சத்தியலட்சுமி என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
சத்தியலட்சுமி வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி கள்ளநோட்டு தயாரித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளநோட்டு வழக்கில் கைதான வனிதா போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
நானும் சத்யலட்சுமியும் கடந்த 2006-ம் ஆண்டு அண்ணா நகரில் உள்ள துணிக் கடை ஒன்றில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம்.

பிறகு சத்யலட்சுமி திருமணம் முடிந்து மாதவரம் பகுதியில் குடியேறிவிட்டார். அதன்பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. அவரது கணவர் அமெரிக்காவில் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அடிக்கடி நாங்கள் இருவரும் சந்தித்து பேசுவது வழக்கம்.
நான் பின்னர் சேலை, பெட்ஷீட் மற்றும் தலையணை வியாபாரம் செய்து வந்தேன். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் பிரச்சினையால் தவித்து வந்தேன்.
எனது தாய் அண்ணா நகர் சாந்தி காலனி பகுதியில் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தோம்.
இந்த நிலையில் தான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யூடியூப் மூலம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் வீடியோ ஒன்றை பார்த்தேன்.
இதுகுறித்து சத்யலட்சுமியிடம் கலந்து ஆலோசித்து அவரிடம் இருந்து பண உதவி பெற்று ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து நோட்டு அச்சடிக்கும் மெஷின்கள் வாங்கினேன்.
பின்னர் சத்யலட்சுமி மூலம் அவர் வசித்து வரும் வீட்டின் அருகில் 18-வது குறுக்கு தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக குடியேறினேன்.
கடந்த 10 நாட்களாக ரூபாய் நோட்டு அச்சிட்டு வந்தேன். தினமும் நானும் சத்யலட்சுமியும் ஆளுக்கொரு சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்று பணத்தை மாற்றி செலவு செய்து வந்தோம்.
நேற்று முன்தினம் மேத்தா நகர் மெடிக்கல் கடையில் நோட்டை மாற்றும் போது நான் சிக்கிவிட்டேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார். #FakeCurrency #arrest
குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த இடத்தில் இருந்து 66 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பு கொண்ட புதிய இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்த போலீசார் ஜாகித் ஷேக் என்பவரை கைது செய்துள்ளனர்.
ஜாகித் ஷேக் 10 வருடங்களுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர் என்பதும், கடந்த 1 மாதங்களாக கள்ள நோட்டுகளை அச்சடித்து பயன்படுத்தி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #Gujarat #FakeCurrency
கோவை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியில் 3 மாதங்களாக தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்கினார். பின்னர் ரூ.5 ஆயிரத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
அப்போது அதில் சில நோட்டுகள் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று பிரகாஷை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் பிரகாஷ் வீட்டில், 500 ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து கடைகளில் மாற்றியும், பைனான்சுக்கு பணம் கேட்பவர்களுக்கு அந்த கள்ள நோட்டுகளை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு கள்ள நோட்டுகளை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஸ்கேன் எந்திரம், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 16-ஐ பறிமுதல் செய்தனர்.
கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (வயது 38), வடவள்ளியை சேர்ந்த கிதர் முகமது(58) ஆகிய இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் இருவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தப்பட்டது. கேரளாவில் இருந்து புற்றுநோய் மருந்து வாங்கி விற்பனை செய்வதற்காக கடை வேண்டும் என சுந்தர் கேட்டதால் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு இந்த கடையை வாடகைக்கு எடுத்து கொடுத்ததாக ஆனந்த் ஏற்கனவே போலீசாரிடம் கூறி இருந்தார்.
சுந்தரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து ஜெராக்ஸ் எந்திரங்கள், கள்ளநோட்டு அச்சடிப்பதற்காக வெள்ளை காகிதங்களை வாங்கி வந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து கள்ளநோட்டு அச்சடித்ததாக கூறி உள்ளார்.
இதுவரை அச்சடித்த நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக ஏஜெண்டுகளிடம் பேசி வந்த நிலையில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் திருப்பூரை சேர்ந்த உதய் பிரகாஷ், விஜயகுமார் ஆகிய இருவரும் கள்ள நோட்டுகளை அச்சடிப்பதற்காக நவீன ஜெராக்ஸ் எந்திரங்களை இவர்களுக்கு வாங்கிக் கொடுத்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் இருவரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர். இவர்கள் இதற்கு முன்பு யார்-யாருக்கெல்லாம் கள்ள நோட்டு அச்சடிப்பற்காக ஜெராக்ஸ் எந்திரங்களை வாங்கி கொடுத்தார்கள்? இவர்களுடன் கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த யார்-யார் தொடர்பில் இருந்தார்கள்? என்று விசாரணை நடத்துவதற்காக இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
குமபல் தலைவன் சுந்தர் மற்றும் கிதர் முகமதுவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இருவரையும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
கறுப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்டது. இரவு 8 மணியளவில் மக்கள் மத்தியில் உரையாடிய நரேந்திர மோடி பயங்கரவாதிகள் மத்தியில் பணநடமாட்டத்தை குறைக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அதிக அளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாகவும் மத்திய அரசின் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பு இந்திய அரசின் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏஜெண்ட்கள் மூலம் வாங்கிக்கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை அவர்கள் மூலம் விநியோகம் செய்வது தெரியவந்துள்ளது.
இந்த கள்ள ரூபாய் நோட்டுகள் ரூ,500 ரூ 2000 மற்றும் 50 ரூபாய் என அச்சடிக்கப்பட்டு டி-கம்பெனி முகவர்களின் உதவியுடன் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள முகவர்கள் இந்த அமைப்பிற்கு உதவி செய்தாக கூறியுள்ளது.
உளவுத்துறை அமைப்புகள் ஏற்கனவே கடத்தப்பட்டுள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை ஈடுபட்டு வருகிறது.
கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38) எர்ணாகுளத்தில் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.
இக்கும்பல் கடந்த 2 மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து 4 மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்ததாக தகவல் வெளியாகியது.
இதைத்தொடர்ந்து கிதர் முகமதுவிடம் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். கோவை-கேரள எல்லையை ஒட்டிய மலை கிராமங்களில் சுந்தர், கிதர் முகமது ஆகியோர் அதிக நாட்கள் இருந்துள்ளனர். எனவே அங்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் விட்டார்களா? என விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் போலீசில் பிடிபட்ட தகவலறிந்து ஏஜெண்டுகள் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கடைசியாக யார்- யாரிடம் பேசினார்கள்? என பட்டியல் சேகரித்து விசாரணை நடந்து வருகிறது.
மத்திய அரசு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதன்பிறகு இந்த கும்பல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் அடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்காக சுந்தர் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.
சுந்தர் மீது கோவை போத்தனூர், சரவணம்பட்டி, வெரைட்டிஹால் போலீஸ் நிலையங்கள், சி.பி.சி.ஐ.டி. பிரிவு மட்டுமல்லாது கேரளாவிலும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் கும்பல் மற்றும் ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளது.
கோவை பீளமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் நோட்டு கண்டுகளை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த தஸ்தா கீர்(40) என்பவர் தலைமையில் காரில் வந்த 6 பேர் கும்பல் இந்த நோட்டுகளை மாற்றுவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
பழைய ரூபாய் நோட்டுகளை தற்போது எங்குமே மாற்ற முடியாது என்ற நிலையிலும் அவர்கள் எதற்காக கொண்டு வந்தார்கள்? என்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து கள்ள நோட்டுகளை வாங்கிச் செல்வதற்காக வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாய் பாபா காலனியில் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது தெரியாமல் இந்த கும்பல் பழைய நோட்டுகளை கொண்டு வந்திருக்கலாம் எனவும், கோவை வந்த பிறகு தகவல் கிடைக்கவே அவர்கள் தப்பிச்சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #FakeCurrency