search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 6 பேர் கைது
    X

    கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 6 பேர் கைது

    • கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக ஐதராபாத் கிழக்கு மண்டல அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • புகாரின் பேரில் போலீசார் ஐதராபாத்தில் உள்ள குடோனுக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மர்ம கும்பல் ஒன்று கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக ஐதராபாத் கிழக்கு மண்டல அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புகாரின் பேரில் போலீசார் ஐதராபாத்தில் உள்ள குடோனுக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

    கள்ள நோட்டு அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.36.35 லட்சம் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம் மற்றும் பேப்பர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×