search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Markets"

    • கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
    • 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.

    மேலும் ஆந்திரா, பெங்களூரு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் உழவர் சந்தைகள் மற்றும் திருமணிமுத்தாறு ஆற்றோரம், வ.உ.சி, பால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை சற்று உயர்ந்துள்ளது.

    தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்கிறது. கேரட் கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.100, அவரை ரூ.50, உருளை ரூ.56, பாகற்காய் ரூ.35, கத்தரி ரூ. 24, வெண்டைக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.50 முதல் ரூ.80 வரை, சுரக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.20, மாங்காய் கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • சில வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக குளங்கள் வறண்டுவிட்டது. இதனால் காய்கறிகள், கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முற்றிலும் ஓய்ந்துவிட்டது.

    நெல்லை:

    சில வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    தக்காளி, இஞ்சி விலை உயர்வு

    அதே நேரத்தில் தமிழகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக குளங்கள் வறண்டுவிட்டது. இதனால் காய்கறிகள், கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முற்றிலும் ஓய்ந்துவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் கிணற்றில் இருக்கும் நீரின் அளவை பொறுத்து குறைவாக காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்னர்.

    வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மானூர், அழகியபாண்டியபுரம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், கொத்தமல்லி இலை, சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விளைந்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும்.

    ஆனால் மழை இல்லாததால் போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு சில காய்கறிகளின் விலை ரூ.100 முதல் ரூ.180 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் வகையில் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலையை கட்டுப்படுத்த ரூ.60 என்ற விலையில் ரேசன் கடைகளில் அரசு விற்பனை செய்த நிலையில் தக்காளி விலை வெளி சந்தைகளில் சற்று குறைய தொடங்கியது.

    மீண்டும் உயர்வு

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் அவற்றின் விலை உயர தொடங்கி உள்ளது. இன்று நெல்லை மாவட்ட உழவர்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.116-க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் ரூ.64, சின்ன வெங்காயம் ரூ.72, அவரைக்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.32, வெண்டை ரூ.28 என்ற விலையில் விற்பனையானது.

    அதே நேரத்தில் இன்று பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் தரத்திற்கேற்ப விற்பனையாகிறது. பீன்ஸ் ஒருகிலோ ரூ.100-க்கும், கேரட் ஒரு கிலோ ரூ.70-க்கும், இஞ்சி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை சற்று குறைந்ததால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மார்க்கெட்டுகள், சுற்றுலா தலங்களை குறிவைத்து இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை கோவையில் கைதான கும்பல் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். #fakecurrency
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியில் கள்ளநோட்டுகள் அச்சடித்த ஆனந்த்(வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38), கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த கிதர் முகமது (55) ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 2 மாதங்களாக சாய்பாபா காலனி அருகே வேலாண்டிபாளையத்தில் அறை எடுத்து தங்கி கள்ளநோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட், கோவை மேட்டுப்பாளையம் மார்க்கெட், ஈரோடு ஜவுளி மார்க்கெட் உள்ளிட்ட தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு தமிழகம் மட்டுல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்வார்கள். இங்கு வழக்கமாக லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனையும் நடைபெறும் என்பதால் கள்ள நோட்டுகளை எளிதாக புழக்கத்தில் விட்டுள்ளனர்.



    மேலும் ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி என சுற்றுலா தலங்களை குறி வைத்தும் இந்த கும்பல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கமி‌ஷன் அடிப்படையில் ஊழியர்களை நியமத்து கள்ளநோட்டுகளை மாற்றி உள்ளனர். அந்த ஊழியர்கள் யார்-யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிதர் முகமது ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி, போத்தனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கோவை மற்றும் ஈரோட்டில் பலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் மூலம் தற்போது கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கலாம் என கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

    தலைமறைவான சுந்தர், கிதர் முகமது ஆகியோர் பிடிபட்டால் தான் இந்த கும்பலின் பின்னணி பற்றி முழு தகவல்களும் தெரியவரும். இவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் கேரளா, ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

    இருவரின் செல்போனும் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடைசியாக யார்-யாரிடம்? பேசினார்கள் என பட்டியல் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கிதர் முகமது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியவர். தற்போது இந்த கும்பல் கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர். அதிலும், யாரும் எளிதில் கண்டுபிடித்து விடாதபடி, குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன வெள்ளை காகிதங்களை பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    குஜராத்தில் இருந்து இந்த கும்பலுக்கு நவீன காகிதங்களை சப்ளை செய்தது யார்? என்பது மர்மமாக உள்ளது. இதன்பின்னணயில் மிகப் பெரிய கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் கள்ள நோட்டு வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. #fakecurrency

    ×