search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sold"

    • பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் குப்பாண்டபாளையம் பகுதியில் பள்ளிக்கு அருகே இருந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்ததில் போதை பொருளான குட்கா உள்ளிட்டவை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் உடனிருந்தார். இது குறித்து உணவுப்பொருள் அலுவலர் ரங்கநாதன் கூறுகையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் என மொத்தம் ரூ.39ஆயிரத்து 736-க்கு விற்பனையானது.
    • 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.99-க்கும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்து 765-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குஇந்த வாரம் நடந்த ஏலத்தில் 15.41 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 510 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.88-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் என மொத்தம் ரூ.39ஆயிரத்து 736-க்கு விற்பனையானது.

    அதேபோல் 119.90 குவிண்டால் எடை கொண்ட 255 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.29-க்கும், சராசரி விலையாக ரூ.88.39-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.99-க்கும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்து 765-க்கு விற்பனையானது.

    அதேபோல் 30.08 குவிண்டால் எடை கொண்ட 41 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.162.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.128.69-க்கும், சராசரி விலையாக ரூ.159.69-க்கும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 704-க்கு விற்பனையானது.

    இதன்படி சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.14 லட்சத்து 16 ஆயிரத்து 205-க்கு விற்பனையானது.

    • கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது.
    • வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளன்று கால்நடை வார சந்தைக்கு சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது. வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதன் காரணமாக கொளத்தூர் கால்நடை வார சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகளவில் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்ததால் ஆடுகளின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

    • கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
    • 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.

    மேலும் ஆந்திரா, பெங்களூரு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் உழவர் சந்தைகள் மற்றும் திருமணிமுத்தாறு ஆற்றோரம், வ.உ.சி, பால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை சற்று உயர்ந்துள்ளது.

    தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்கிறது. கேரட் கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.100, அவரை ரூ.50, உருளை ரூ.56, பாகற்காய் ரூ.35, கத்தரி ரூ. 24, வெண்டைக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.50 முதல் ரூ.80 வரை, சுரக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.20, மாங்காய் கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • கோவையில் ஆயுதபூஜை கோலாகலம்
    • மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதுகிறது

    கோவை,

    கோவை மாவட்டத்தில் நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர்.

    அம்மன் கோவில்களிலும் தினமும் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. இந்த நிலையில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை ஆகியவை வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

    ஆயுதபூஜையை முன்னிட்டு பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள், கடைகள் என அனைத்தும் மலர்கள், வண்ண காகிதங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு வாழை தோரணங்கள் அமைத்து வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவர்.

    வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை வருவதால் இன்றே பல நிறுவனங்கள், கம்பெனிகளில் இன்றே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

    ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஆயுத பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொரி, பொரிகடலை, அவல், வாசலில் கட்டப்படும் வாழை இலை, அலங்காரம் செய்வதற்கு தேவையான தென்னங்குருத்து, மாவிலை தோரணங்கள் போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன.

    இதுதவிர பழங்கள், பூக்கள் விற்பனையும் மார்ககெட்டில் சூடுபிடித்துள்ளது. மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    பொதுமக்கள் அங்கு பூஜைக்கு தேவையான பொரி, பொரிகடலை, அவல், வெத்தலை, பாக்கு, ஆப்பிள், மாதுளை, அன்னாசி பழங்கள், வாழைப்பழங்கள், மல்லிகை, செவ்வந்தி, ஜாதிப்பூ உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர். இதேபோல் பேக்கரிகளிலும் இனிப்பு பலகாரங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    கோவை பூ மார்க்கெட்டில் ஆயுதபூஜை காரணமாக பூக்கள், பழங்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை பூ மார்க்கெட்டில் விற்பனை யாகும் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

    செவ்வந்தி-ரூ..320, சம்பங்கி-ரூ.300, அரளி-ரூ.480, ரோஜா-ரூ.320, தாமரை 1-ரூ.50, செண்டுமல்லி-ரூ.100, முல்லை-ரூ.600, கோழிகெண்டை-ரூ.100, மஞ்சை அரளி-ரூ.450, மரிகொழுந்து 1 கட்-ரூ.40க்கு விற்பனையாகிறது.

    இதுதவிர வாழைகன்று 1-ரூ.30, வெள்ளை பூசணி 1 கிலோ ரூ.35, பொரி 1 பக்கா-ரூ.30. பொரிகடலை- 1 கிலோ ரூ.200,மாவிலை- 1 கட்டு ரூ.20, தென்னங்குருத்து- 4 எண்ணம் ரூ.20, எலுமிச்சை- 1 கிலோ ரூ.120

    மாதுளை-1 கிலோ ரூ.220, ஆப்பிள்-1 கிலோ ரூ.180, சாத்துக்குடி-1 கிலோ ரூ.100, திராட்சை-1 கிலோ ரூ.200, கொய்யா-1 கிலோ ரூ.200, தேங்காய்-1 கிலோ ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது.

    • ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி விலை உச்சத்தில் இருந்த போது, அறுவடை செய்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து பலர் லட்சத்தில் சம்பாதித்தனர்.

    இந்நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகரிக்கவே இங்கிருந்து ஏற்றுமதியான தக்காளி குறையத்தொடங்கிய நிலையில் தற்போது 15 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தக்காளி ரூ. 400-க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த தக்காளி மொத்த வியாபாரி எஸ்.ஆர்.எம். ரவி கூறும்போது, தக்காளி விலை படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது ஒரு டிப்பர் தக்காளி நல்ல ரகம் ரூ. 400-க்கு விற்பனையாகிறது. ரூ. 28 முதல் ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்படும் தக்காளி, தற்போது வெளிச்சந்தையில் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது. 2 மற்றும் 3-ம் ரக தக்காளிகள் ஒரு டிப்பர் ரூ. 200க்கு கொள்முதல் செய்யப்பட்டு, வெளிச்சந்தைகளில் ரூ. 20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் விலை உச்சத்தில் இருந்தபோது, விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு இங்கிருந்து சென்ற தக்காளி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அறுவடை தொடங்கிவிட்டதால், இங்கு பற்றாக்குறை இல்லை. ஆகவே விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செஞ்சுடையாம்பாளை யத்தில் உள்ள பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்டுள்ள மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் பிரேம்குமார் (29) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • 6 உழவர் சந்தைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை உச்சத்தை எட்டி உள்ளது. அங்கு ஒரு கிலோ ரூ.120 முதல் 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து, பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது என்று தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகியவை முடிவு செய்தன.

    அதன்படி கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் சுமார் 1800 கிலோ தக்காளிப் பழங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. அதன்பிறகு இவை உழவர் சந்தைக்கு கொண்டுவரப் பட்டது. அங்கு உள்ள கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை மாவட்ட வெளிமார்க்கெட் சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், அங்கு உள்ள 6 உழவர் சந்தைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தக்காளிப்பழங்களை குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். இதனால் ஒரே நாளில் 1800 கிலோ தக்காளிப்பழங்கள் விற்று தீர்ந்து உள்ளன.

    கோவை மாவட்ட உழவர் சந்தைகளில் இன்றும் தக்காளி விற்பனையில் ஈடுபடுவது என்று தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது.
    • தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    குடிமங்கலம்:

    தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு 60 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்தது.

    மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறைந்த வட்டி கடன் திட்டங்கள், மானியத் திட்டங்கள் போன்றவற்றையும் செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் மிக எளிதாக மளிகைக் கடை, பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கும் எலி மருந்தைப் பயன்படுத்தி பல தற்கொலைகள் நிகழ்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடோல்) பூச்சி மருந்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.அதேநேரத்தில் தடையை மீறி இந்த எலி மருந்தை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எலிகளைக் கட்டுப்படுத்த தோட்டம் மற்றும் வீடுகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது.மஞ்சள் பாஸ்பரஸ்க்கு எதிர்வினை மருந்து இல்லாததால் சில நேரங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிறது.இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    எனவே 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் மருந்தை பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் விற்பனை செய்யக் கூடாது.மீறி விற்பனை செய்யும் பூச்சிக்கொல்லி மருந்து வினியோகஸ்தர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

    குடிமங்கலம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்து விற்பனை செய்தால் குடிமங்கலம் வட்டார வேளாண்மை அலுவலரை 9788425208 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது.
    • கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.

    திருப்பூர் :

    ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை திருப்பூர் கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. பாரம்பரியமான இச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் என 500க்கும் அதிகமானோர் வருகின்றனர்.கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது. இந்த வாரம் சந்தை துவங்குவதற்கு முன்பாக 8 மணிக்கே ஆட்டோக்கள் பெருந்தொழுவு ரோட்டில் நீண்ட வரிசையில் இரண்டரை கி.மீ., தூரத்துக்கு காத்திருந்தது.வழக்கமாக மதியத்துக்குள் வாகனங்கள் வருகை முடிந்து விடும். சந்தை முடிவு தருவாயை எட்டும் வரை தொடர்ந்து ஆட்டோ, வேன்களில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    1,100 மாடுகள் வரத்தாக இருந்தது. சந்தை வியாபாரிகள், விவசாயிகள் கூட்டம் நிறைந்திருந்ததால் கடந்த வாரம் 8முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. 40 முதல் 42 ஆயிரம் விற்ற மாடுகள் 46 முதல் 48 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மாடுகள் விலை 2,000 முதல் 4,000 வரை உயர்ந்ததால் சந்தை ஏற்பட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் ரூ. 1.90 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

    • ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
    • தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை செய்ததில் வெள்ள கடை கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் (வயது 40), கோவில் மேடு பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் (49) ஆகிய இரு வரும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, ஏற்காடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாட்டரி விற்ற இருவரையும் கைது செய்தனர்.

    • 71 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
    • சந்தையில் அதிகபட்சமாக ரூ. 71 ஆயிரத்துக்கு செவலை வகைப்பசு விற்பனையானது.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 71 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 51 மாடுகள் மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு விற்பனையாயின.

    இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ. 71 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.

    ×