என் மலர்
நீங்கள் தேடியது "விளைபொருட்கள்"
- கனமழையால் விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் வீடியோ வைரலானது.
- விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்த்துறை அமைச்சர் பேசினார்.
மகாராஷ்டிராவில் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் மனதை உலுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில், விவசாயி கௌரவ் பன்வார், கனமழையால் தான் கொண்டு வந்திருந்த வேர்கடலைகள் அடித்து செல்லப்படுவதை பார்த்து தனது வெறும் கைகளால் அதை காப்பாற்ற முயற்சிக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்கள் இதயத்தை உலுக்கியது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்த்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வீணான விளைபொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
விவசாயியுடன் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் சிவராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.
- ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.
- ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.இவற்றின் எடை 4,743 கிலோ.தேங்காய் கிலோ ரூ.21.10 முதல் ரூ.27.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.24.65. 51 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 980 கிலோ.கொப்பரை கிலோ ரூ.61.15 முதல் ரூ.85.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.78.85.ஏலத்தில் 96 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.






