search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivraj Singh Chouhan"

    • பாராளுமன்ற தேர்தலுக்கான 195 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
    • ம.பி.யின் விதிஷா தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் போட்டியிடுகிறார்.

    போபால்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான 195 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு 24 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    முன்னாள் முதல் மந்திரியான சிவராஜ் சிங் சவுகான், விதிஷா தொகுதியில் போட்டியிடு கிறார். அவர் ஏற்கனவே இந்த தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். தற்போது 5-வது முறையாக அந்த தொகுதியில் நிற்கிறார்.

    கடந்த 1996-ல் இந்த தொகுதியில் இருந்து தான் வாஜ்பாய் வெற்றிபெற்றார். இதேபோல், சுஷ்மா சுவராஜ் 2009 மற்றும் 2014-ல் இங்கு இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சவுகான் கூறுகையில், மத்திய பிரதேச மக்களின் நெஞ்சில் பிரதமர் மோடி இருக்கிறார். இதனால் பா.ஜ.க. 29 தொகுதிகளிலும் வெற்றி பெறும். நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்றது.
    • மோகன் யாதவ் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

    அங்கு மோகன் யாதவ் புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா இருவரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், விதிஷா தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல் மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் அங்கு நடந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அங்கிருந்த பெண் தொண்டர்கள் பலர் முதல் மந்திரி பதவி மாற்றப்பட்டதால் வருந்தி கண்ணீர் விட்டுக் கதறினர். அப்போது பேசிய சிவராஜ் சிங் சவுகான், நாங் இங்கிருந்து எங்கும் போகமாட்டேன், உங்களோடு தான் இருப்பேன் என அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    பெரும்பாலும் மாநில தேர்தலின்போது பா.ஜனதா முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறிப்பிடுவதில்லை. கட்சியின் கொள்கை, பிரதமர் மோடியின் பிம்பம் ஆகிவற்றை முன்னிறுத்திதான் தேர்தலை சந்திக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக இருக்கிறார். அவர்தான் தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படடது. சத்தீஸ்கரில் மட்டும் யாரை தேர்வு செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

    இதனால் 3-ந்தேதி தேர்தல் முடிவடைந்த ஒரிரு நாட்களுக்குள் முதலமைச்சர்கள் யார் என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புதுமுகம் அல்லது மாற்று நபருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அந்தந்த மாநில தலைவர்கள் ஒன்றிரண்டு பெயர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

    இருந்த போதிலும் வசுந்தரா ராஜே சிந்தியா ராஜஸ்தானில் முதல் தேர்வாக இருந்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதல் தேர்வாக இருந்து வருகிறார்.

    டெல்லியில் பா.ஜனதா உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தி வந்தது. முதலமைச்சர்கள் யார் என்பதை பிரதமர் மோடி அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இதுவரை முதலமைச்சர்கள் பட்டியல் தயாராகவில்லையாம். பா.ஜனதா இன்று மூன்று மாநிலங்களுக்கும் பார்வையாளர்களை நியமிக்க இருக்கிறது. இந்த பார்வையாளர்கள் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை நடத்தி அதன்பின் மேலிடத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் கட்சி மேலிடம் முதலமைச்சர்கள் பட்டியலை வெளியிடும்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், நேற்ற ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த முறை 109 தொகுதிகளை பிடித்திருந்தது.
    • தற்போது 150 இடங்களை தாண்டி பிடிக்கும் நிலையில் உள்ளது.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்யா சிந்தியா 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

    தற்போது எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கடும் தேர்தல் பிரசாரம் செய்தது. இருந்தபோதிலும், தேர்தல் முடிவில் அந்த கட்சிக்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா முன்னிலை வகித்தது. நேரம் ஆகஆக பா.ஜனதாவின் முன்னிலை அமோகமாக இருந்தது.

    11 மணி நிலவரப்படி 155 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 46 இடங்கள் அதிகமாக பெறும் நிலையில் உள்ளது. இதனால் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது.

    • மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெரிய நடிகர். அவர் அமிதாப்பை மிஞ்சி விடுவார்- பிரியங்கா
    • பிரியங்கா காந்தி தேர்தலை பெரிதாக கொள்ளவில்லை. தேர்தல், மக்கள், ஜனநாயகத்தை பொழுதுபோக்கு போன்று கருதுகிறார்- சவுகான்

    மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பா.ஜனதா- காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போட்டி பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரத்தின்போது, "மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெரிய நடிகர். அவர் அமிதாப்பை மிஞ்சி விடுவார். பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்கள் அவதூறாக பேசுவதாக அழுது கொண்டிருக்கிறார். அவரை வைத்து மேரே நாம் படத்தை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் சிவராஜ் சவுகான், பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் "பிரியங்கா காந்தி தேர்தலை பெரிதாக கொள்ளவில்லை. தேர்தல், மக்கள், ஜனநாயகத்தை பொழுதுபோக்கு போன்று கருதுகிறார். அதனால்தான் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்தார். இது அவளுடைய மோசமான சிந்தனையின் பிரதிபலிப்பு.

    மாநிலத்தில் உள்ள தீவிர பிரச்சினைகள் குறித்து பேசுங்கள். முதல்வர் படத்தில் நடிப்பது குறித்த விவகாரத்தை வைத்து தேர்தலில் போட்டியிட முடியுமா?. நடிப்பது, மோடியை வைத்து படம் எடுக்கலாம் குறித்து பேசுவது அரசியல் பிரச்சினையா? என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் தேர்தலை கேலி செய்கிறார். இது ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் அவமரியாதை'' என்றார்.

    • ம.பி.யில் நவம்பர் 17 அன்று 230 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
    • சீனர்கள் ம.பி. எங்குள்ளது என கேட்கும் நாள் வர வேண்டும் என்றார் ராகுல்

    இந்தியாவில் அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 2023 இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று, டிசம்பர் 3 அன்று முடிவுகள் வெளியிடப்படும்.

    அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக 5 மாநில தேர்தல்களை இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும் கருதுவதால், சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 17 அன்று 230 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க.வை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகன் முதல்வராக உள்ளார்.

    இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    "உங்கள் செல்போனின் பின்புறம் பாருங்கள்; அதில் 'மேட் இன் சீனா' (Made In China) என குறிப்பிடப்பட்டுள்ளது தெரியும். ஆனால், எந்த மொபைல், சட்டை, காலணி, கேமிரா பின்னாலும் 'மேட் இன் மத்திய பிரதேசம்' (Made In Madhya Pradesh) என குறிப்பிடப்பட்டு இருக்காது. அந்த 'மேட் இன் சீனா' எனும் குறிப்பை 'மேட் இன் மத்திய பிரதேசம்' என காங்கிரஸ் மாற்ற விரும்புகிறது."

    "இங்குள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி இருக்க கூடாது. அவர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்ய வேண்டும். சீனாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் மொபைல் போன் பின்னால் பார்க்கும் போது, 'மேட் இன் மத்திய பிரதேசம்' என குறிப்பிடப்பட்டிருப்பதை காண வேண்டும். அதனை கண்டு, 'நமது நாட்டின் அனைத்து வேலை வாய்ப்புகளையும் கொண்டு சென்று விட்ட இந்த மத்திய பிரதேசம் எங்கிருக்கிறது' என கேட்க வேண்டும். அப்படி ஒரு நாள் வர வேண்டும். இதைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது."

    "இங்கு எந்த புது தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை என மத்திய பிரதேச மக்கள் அறிவார்கள். ஆனால், பிரதம மந்திரி இங்கு 500 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதாக பொய் சொல்கிறார்."

    இவ்வாறு ராகுல் கூறினார்.

    • பரிசோதனைக்காக கூட வாய்ப்பு கொடுக்காதவர்
    • பேட்டை எடுத்தால் ஹிட்அவுட் ஆவார்

    மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சிவராஜ் சிங் சவுகானுக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது.

    தேதி அறிவிக்கப்படாத நிலையிலும், பா.ஜனதா தலைவர்கள் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், சிவராஜ் சிங் சவுகானின் தலைமையை (Leader) வெகுவாக பாராட்டினார். அத்துடன் டோனியுடன் ஒப்பிட்டார். டோனி இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்தி 2011 உலகக்கோப்பையை வென்றார். அதேபோல் சிவராஜ் சிங் சவுகான் வரவிருக்கும் தேர்தலில் வெற்றி வாகை சூடுவார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சியின் சுர்ஜேவாலா, டோனியுடன் ஒப்பிடுவது, நட்சத்திர வீரர்களை மிகப்பெரிய அளவில் அவமதிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுர்ஜேவாலா கூறுகையில் ''இந்த ஒப்பீடு மிகப்பெரிய வீரருக்கு மிகமிகப்பெரிய அவதிப்பாகும். சவுகான், பரிசோதனை அடிப்படையில் கூட ஒருவருக்கும் வாய்ப்பு வழங்காதவர். எப்போதெல்லாம் அவர் பேட்டிங் பிடிப்பாரோ?- அப்போதெல்லாம் அவராகவே ஹிட் விக்கெட் ஆவார். இங்கே மத்திய பிரதேச அரசு ஹிட் விக்கெட் ஆகிறது'' என்றார்.

    மேலும், இந்தியா பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வரும் செய்தி குறித்து கேட்டதற்கு ''பா.ஜனதா வேலைவாய்ப்பின்மை, விவசாயம், வறட்சி, இழப்பீடு, பணவீக்கம், வெறுப்பு, வளர்ச்சி போன்றவற்றை பற்றி ஒருபோதும் பேசியது கிடையாது. இதுபோன்ற வலை (சதி), பிரசாரத்தில் மக்களை மத்திய அரசு சிக்க வைக்கும். இது சகுனி வலை போன்றது.'' என்றார்.

    • பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என்றார் திக்விஜய் சிங்.
    • கொரோனா வைரசை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரசின் கொரோனா வைரஸ் என மத்திய பிரதேச நீர்வளத்துறை மந்திரி துளசிராம் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த திக்விஜய் சிங், பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என தெரிவித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அவர் (திக்விஜய் சிங்) ஒரு சரியான ஒப்பீடு செய்துள்ளார். ஒப்பிடுவதற்கு அவர் வேறு எந்த வைரசையும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா வைரசை மட்டுமே கண்டுபிடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத் இருவரும் கொரோனா வைரஸை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

    • பேருந்து விபத்தில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல்
    • உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் சிவராஜ் சிங் சவுகான்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கிய நிலையில் டம்டாவில் இருந்து யமுனோத்ரி நோக்கி 28 பக்தர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மாநில காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இது குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக உத்தரகாண்ட் விபத்து குறித்து வருத்த தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உத்தர காண்ட் விபத்தில் உயிரிழந்த பக்தர்களுக்கு, மத்திய பிரதேச அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உத்தரகாண்ட் அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், உடல்களை மத்திய பிரதேசத்திற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் போது ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவு தலைப்பில் பிரதமர் மோடியின் பாதுகாவலர் சிவராஜ் சிங் சவுகானை தடுத்து நிறுத்தினார் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் பதிவு குறித்த இணைய தேடல்களில், வீடியோவில் சிவராஜ் சிங் சவுகானுடன் பேசிய போபால் மாவட்ட கலெக்டர் அவினாஷ் லாவினா வைரல் பதிவுகளில் உண்மையில்லை என தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கலெக்டர் அவினாஷை பிரதமரின் பாதுகாவலர் என வைரல் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

     வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 15 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று இருந்தார். அங்கு பிர்சா முண்டா பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட வீடியோவே தவறான தலைப்பில் வைரலாகி வருகிறது.

    உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து, பா.ஜ.க. தலைவர் சிவராஜ்சிங் சவுகான் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்காள அரசு அனுமதி மறுத்துள்ளது. #MamataBanerjee #ShivrajSinghChouhan
    கொல்கத்தா:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என பா.ஜ.க தீவிரமாக வேலை செய்துவருகிறது. இதற்காக, பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கி வருகின்றனர்.

    இதற்கிடையே, மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஹராம்பூர், கரக்பூர் ஆகிய இரு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் திட்டமிட்டு இருந்தார்.

    ஆனால் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் பஹராம்பூர் கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக மாநில பா.ஜ.க அறிவித்துள்ளது.



    இந்நிலையில், கரக்பூர் பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில்  சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது மம்தாவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மாநில அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது என தெரிவித்தார்.

    ஏற்கனவே, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  #MamataBanerjee #ShivrajSinghChouhan
    பாஜக தலைவர்களான சிவராஜ்சிங் சவுகான், ரமண்சிங் மற்றும் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோரை தேசிய துணை தலைவர்களாக நியமனம் செய்துள்ளது. #BjP #NationalVicePresident #ShivrajSinghChouhan #RamanSingh #VasundharaRaje
    புதுடெல்லி:

    சமீபத்தில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆட்சியில் இருந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, ம.பி., ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.



    இந்நிலையில், சிவராஜ்சிங் சவுகான், ரமண்சிங் மற்றும் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோரை பாஜக தேசிய துணை தலைவர்களாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #BjP #NationalVicePresident #ShivrajSinghChouhan #RamanSingh #VasundharaRaje
    ×