என் மலர்
நீங்கள் தேடியது "shivraj singh chouhan"
- மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழாவில் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டார்.
- சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார்.
மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- VB-G RAM G பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம், உங்களால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முடியாது.
- அதற்குப் பதிலாக காங்கிரஸ் பலவீனம்தான் ஆகும் என மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் (MGNREGA) கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக VB-G RAM G என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், MGNREGA திட்டத்தை காப்போம் (MGNREGA Bachao Sangram) என்ற பெயரில் கடந்த 10-ந்தேதியில் இருந்து 45 நாட்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் VB-G RAM G திட்டம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பொய் கூறி வருகின்றனர் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சிவராஜ் சவுகான் கூறியதாவது:-
VB-G RAM G பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம், உங்களால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக காங்கிரஸ் பலவீனம்தான் ஆகும் என மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
காங்கிரஸ் கட்சி தனது சிந்தனை, சித்தாந்தம் மற்றும் லட்சியத்தை கைவிட்டுவிட்டது. சிந்தனை என்பது தேசம் முதன்மை, நாட்டின் வளர்ச்சி. VB-G RAM G கிராமங்களின் வளர்ச்சிக்கானது.
MGNREGA-ஐ சிறந்ததாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்கு சாட்சி காங்கிரஸ் அரசாங்கம் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே இத்திட்டத்திற்கு செலவழித்த நிலையில், நாங்கள் 9 லட்சம் கோடி ரூபாய் செலவழித்துள்ளோம். வேலைக்கான உரிமை பறிக்கப்படும் என்ற கங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு பொய்யானது.
100 நாட்களுக்குப் பதிலாக நாங்கள் 125 நாட்கள் வேலை கொடுக்க இருக்கிறோம். வேலைக்கான உரிமை மட்டுமல்ல, 12 நாட்களுக்குள் வேலைவாய்ப்பின்மைக்கான அலவன்ஸ் கொடுக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். நீங்கள் பேப்பரில் உரிமையை கொடுத்தீர்கள். நாங்கள் அதை களத்தில் வலுப்படுத்தியுள்ளோம்.
ஒரு குறிப்பிட்ட பஞ்சாயத்துகளில் மட்டுமே வேலை வழங்கப்படும் என தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இந்த திட்டம் அனைத்து பஞ்சாயத்திற்கும் என்ற அளவில் அமல்படுத்தப்படும் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். மாநிலங்களுக்கு கூடுதல் சுமை கிடையாது, மத்திய அரசு ஏற்கனவே அதிக நிதி கொடுத்து வருகிறது. மாநிலங்களுக்கான முதலீடு கிராமங்களில் கட்டமைப்புகளை வலுப்படுத்தும்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
- தவறான தகவல் மற்றும் பொய்களை பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொள்கிறேன்.
- அதற்குப் பதிலாக இந்த திட்டத்தை சிறந்ததாக உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட, விபி-ஜி ராம் ஜி சட்டம் சிறந்தது எனத் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் இந்த திட்டம் குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறது என குற்றம்சாட்டினார்.
இது தொர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை காப்போம் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது உண்மையில் ஊழலை பாதுகாக்கும் பிரசாரம் ஆகும்.
MGNREGA ஊழலுக்கு இணையான ஒன்றாகிவிட்டது. கிராம சபைகளால் நடத்தப்பட்ட சமூகத் தணிக்கைகளின் கீழ், 10 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன. ஒரே வேலை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. வேலை இயந்திரம் மூலம் செய்யப்பட்டது. கால்வாய்கள் மற்றும் சாலைகளைச் சுத்தம் செய்வதாகக் கூறி பணம் முறைகேடாகப் பெறப்பட்டது.
30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 60 வயதிற்கு மேலானவர்கள். மோடி அரசின் கீழ் 8.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியல் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டனவா? அந்தப் பணத்தை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியுமா?
காங்கிரஸ் ஒரு பொய்களின் தொழிற்சாலை. இப்போது அவர்கள் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது என்று கூறுகிறார்கள்.
VB-G RAM G திட்டத்தின் கீழ் ஊழியர்களின் நலன் சிறப்பாக பாதுகாக்கப்படும். அடுத்த நிதியாண்டில் 1,51,282 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதில் மத்திய அரசின் பங்கீடு 95,600 கோடி ரூபாயாக இருக்கும். 125 நாட்கள் வேலைக்கான போதுமான பணம் உள்ளது. இது கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட விபி-ஜி ராம் ஜி சிறந்த திட்டமாக இருக்கும். தவறான தகவல் மற்றும் பொய்களை பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பதிலாக இந்த திட்டத்தை சிறந்ததாக உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
- அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
உளவுத்துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் ஐ.எஸ்.ஐ.யால் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைகளால் போபாலில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தற்போதுள்ள பாதுகாப்புக்கு கூடுதலாக மேலும் சில வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இன்று, போபாலில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ், 10க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுடன், தற்காப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற்ற மொத்தம் 55 பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த செயல் விவசாயிகளுடன் நகைச்சுவைக்காக விளையாடுவது போன்றது.
- இது நடக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சேதங்களை முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும்.
விவசாயிகளின் பயிர்களுக்கு அரசு உதவியுடன் காப்பீடு செய்யப்படுகிறது. இயற்கை சீற்றத்தால் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக இந்த காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், சேதமடைந்த பயிர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய், 20 ரூபாய் இழப்பீடு தந்துள்ளதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.
விவசாயிகள் புகாருக்கு சிவராஜ் சிங் சவுகான் அளித்த பதில் பின் வருமாறு:-
இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இந்த செயல் விவசாயிகளுடன் நகைச்சுவைக்காக விளையாடுவது போன்றது. இது நடக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சேதங்களை முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு அரசு உத்தரவிடுகிறது. PMFBY திட்டத்தில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், தேவையான மாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
- கனமழையால் விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் வீடியோ வைரலானது.
- விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்த்துறை அமைச்சர் பேசினார்.
மகாராஷ்டிராவில் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் மனதை உலுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில், விவசாயி கௌரவ் பன்வார், கனமழையால் தான் கொண்டு வந்திருந்த வேர்கடலைகள் அடித்து செல்லப்படுவதை பார்த்து தனது வெறும் கைகளால் அதை காப்பாற்ற முயற்சிக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்கள் இதயத்தை உலுக்கியது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்த்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வீணான விளைபொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
விவசாயியுடன் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் சிவராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.
- அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது
- அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.
பஞ்சாப் விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களாக நடத்தி வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடித்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறிப்பாக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வலியுறுத்தி அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இருப்பினும் மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவரின் போராட்டம் தொடர்ந்து வந்தது. 70 வயதான அவர் ஏற்கனவே உடல்நலப்பிரச்னைகளுடன் இருந்த நிலையில் உண்ணாவிரதத்தால் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவனமயில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று பஞ்சாபின் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிசான் மகாபஞ்சாயத்தின் போது ஜக்ஜித் சிங் தல்லேவால் தனது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், பஞ்சாப் மற்றும் முழு நாட்டையும் சேர்ந்த விவசாயிகள் ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பேரில், இன்று எனது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர முழு மனதுடன் முடிவு செய்துள்ளேன். ஆனால் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். போராட்டதின் வடிவம் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அது முடிந்துவிடவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசை விமர்சித்து பேசிய அவர், ஒருபுறம் அரசாங்கம் எங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறது என்றும் மறுபுறம் எங்கள் போராட்டம் இரவில் வலுக்கட்டாயமாக கலைக்கப்படுகிறது. அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடுவதற்காக மகாபஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டுள்ளன.
முன்னதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதவில், விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் முன்னரே திட்டமிடப்பட்ட தேதியின்படி மே 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாய அமைப்புகளுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதாக உறுதியளித்தார். தல்லேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.
கடைசியாக கடந்த மார்ச் 19 அன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
- எனது கூட்டத்திற்கே தமிழக அமைச்சர்கள் வரவில்லை என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் குற்றச்சாட்டு
- இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது.
மக்களவையில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "நானே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். ஒரு முறை வேளாண் துறை பணிக்காகவும், ஒரு முறை ஊரக வளர்ச்சிக்காகவும் வந்தேன். இப்போது நான் எந்த குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை, ஆனால், இரண்டு முறையும் ஊரக வளர்ச்சி அமைச்சரோ அல்லது வேளாண் அமைச்சரோ எனது கூட்டத்திற்கு வரவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்கு வந்த போது தனது கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று சமீபத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.அவருக்கு சில தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை. இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது
MGNREGS-கீழ் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் முதல் ஒன்றிய அரசினால் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை 2,839கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டின் முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கும்,எங்கள் மாநில நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்
கனிமொழி அவர்களும் நேரில் வலியுறுத்தியதற்கும் பதில் என்ன? இதையெல்லாம் மறைத்து, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.
அவர் தமிழ்நாடு வந்தபோது,குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா அரசு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். ஆனாலும் அவருடன் தொலைபேசியில் உரையாடி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நான் முன்வைத்ததை அவர் ஏனோ மறந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது. துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசியதையும் கூட அறிவார்.
இது தவிர, காணொலி வாயிலான ஆய்வுக்கூட்டங்களிலும் நான் அவருடன் கலந்துகொண்டுள்ளேன்.
இருப்பினும் தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிப்பதைப் பற்றி வாய்திறக்காமல், திட்டமிட்டு நான் ஏதோ சொந்தப்பணிக்காகத் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதைப் போல பேசியுள்ளது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல
இந்த கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுட்டெரிக்கும் வெயிலில் தங்களது உடல் உழைப்பை தந்து விட்டு ஊதியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள பாக்கியை வழங்குவதில் இதே ஆர்வத்தை அவர் காட்டியிருந்தால் நாம் பாராட்டியிருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
- பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என்றார் திக்விஜய் சிங்.
- கொரோனா வைரசை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ளது.
போபால்:
மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரசின் கொரோனா வைரஸ் என மத்திய பிரதேச நீர்வளத்துறை மந்திரி துளசிராம் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த திக்விஜய் சிங், பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அவர் (திக்விஜய் சிங்) ஒரு சரியான ஒப்பீடு செய்துள்ளார். ஒப்பிடுவதற்கு அவர் வேறு எந்த வைரசையும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா வைரசை மட்டுமே கண்டுபிடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத் இருவரும் கொரோனா வைரஸை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.
- பரிசோதனைக்காக கூட வாய்ப்பு கொடுக்காதவர்
- பேட்டை எடுத்தால் ஹிட்அவுட் ஆவார்
மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சிவராஜ் சிங் சவுகானுக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது.
தேதி அறிவிக்கப்படாத நிலையிலும், பா.ஜனதா தலைவர்கள் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், சிவராஜ் சிங் சவுகானின் தலைமையை (Leader) வெகுவாக பாராட்டினார். அத்துடன் டோனியுடன் ஒப்பிட்டார். டோனி இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்தி 2011 உலகக்கோப்பையை வென்றார். அதேபோல் சிவராஜ் சிங் சவுகான் வரவிருக்கும் தேர்தலில் வெற்றி வாகை சூடுவார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் சுர்ஜேவாலா, டோனியுடன் ஒப்பிடுவது, நட்சத்திர வீரர்களை மிகப்பெரிய அளவில் அவமதிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுர்ஜேவாலா கூறுகையில் ''இந்த ஒப்பீடு மிகப்பெரிய வீரருக்கு மிகமிகப்பெரிய அவதிப்பாகும். சவுகான், பரிசோதனை அடிப்படையில் கூட ஒருவருக்கும் வாய்ப்பு வழங்காதவர். எப்போதெல்லாம் அவர் பேட்டிங் பிடிப்பாரோ?- அப்போதெல்லாம் அவராகவே ஹிட் விக்கெட் ஆவார். இங்கே மத்திய பிரதேச அரசு ஹிட் விக்கெட் ஆகிறது'' என்றார்.
மேலும், இந்தியா பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வரும் செய்தி குறித்து கேட்டதற்கு ''பா.ஜனதா வேலைவாய்ப்பின்மை, விவசாயம், வறட்சி, இழப்பீடு, பணவீக்கம், வெறுப்பு, வளர்ச்சி போன்றவற்றை பற்றி ஒருபோதும் பேசியது கிடையாது. இதுபோன்ற வலை (சதி), பிரசாரத்தில் மக்களை மத்திய அரசு சிக்க வைக்கும். இது சகுனி வலை போன்றது.'' என்றார்.
- ம.பி.யில் நவம்பர் 17 அன்று 230 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
- சீனர்கள் ம.பி. எங்குள்ளது என கேட்கும் நாள் வர வேண்டும் என்றார் ராகுல்
இந்தியாவில் அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 2023 இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று, டிசம்பர் 3 அன்று முடிவுகள் வெளியிடப்படும்.
அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக 5 மாநில தேர்தல்களை இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும் கருதுவதால், சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 17 அன்று 230 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க.வை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகன் முதல்வராக உள்ளார்.
இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
"உங்கள் செல்போனின் பின்புறம் பாருங்கள்; அதில் 'மேட் இன் சீனா' (Made In China) என குறிப்பிடப்பட்டுள்ளது தெரியும். ஆனால், எந்த மொபைல், சட்டை, காலணி, கேமிரா பின்னாலும் 'மேட் இன் மத்திய பிரதேசம்' (Made In Madhya Pradesh) என குறிப்பிடப்பட்டு இருக்காது. அந்த 'மேட் இன் சீனா' எனும் குறிப்பை 'மேட் இன் மத்திய பிரதேசம்' என காங்கிரஸ் மாற்ற விரும்புகிறது."
"இங்குள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி இருக்க கூடாது. அவர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்ய வேண்டும். சீனாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் மொபைல் போன் பின்னால் பார்க்கும் போது, 'மேட் இன் மத்திய பிரதேசம்' என குறிப்பிடப்பட்டிருப்பதை காண வேண்டும். அதனை கண்டு, 'நமது நாட்டின் அனைத்து வேலை வாய்ப்புகளையும் கொண்டு சென்று விட்ட இந்த மத்திய பிரதேசம் எங்கிருக்கிறது' என கேட்க வேண்டும். அப்படி ஒரு நாள் வர வேண்டும். இதைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது."
"இங்கு எந்த புது தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை என மத்திய பிரதேச மக்கள் அறிவார்கள். ஆனால், பிரதம மந்திரி இங்கு 500 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதாக பொய் சொல்கிறார்."
இவ்வாறு ராகுல் கூறினார்.
- மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெரிய நடிகர். அவர் அமிதாப்பை மிஞ்சி விடுவார்- பிரியங்கா
- பிரியங்கா காந்தி தேர்தலை பெரிதாக கொள்ளவில்லை. தேர்தல், மக்கள், ஜனநாயகத்தை பொழுதுபோக்கு போன்று கருதுகிறார்- சவுகான்
மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பா.ஜனதா- காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போட்டி பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரத்தின்போது, "மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெரிய நடிகர். அவர் அமிதாப்பை மிஞ்சி விடுவார். பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்கள் அவதூறாக பேசுவதாக அழுது கொண்டிருக்கிறார். அவரை வைத்து மேரே நாம் படத்தை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிவராஜ் சவுகான், பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் "பிரியங்கா காந்தி தேர்தலை பெரிதாக கொள்ளவில்லை. தேர்தல், மக்கள், ஜனநாயகத்தை பொழுதுபோக்கு போன்று கருதுகிறார். அதனால்தான் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்தார். இது அவளுடைய மோசமான சிந்தனையின் பிரதிபலிப்பு.
மாநிலத்தில் உள்ள தீவிர பிரச்சினைகள் குறித்து பேசுங்கள். முதல்வர் படத்தில் நடிப்பது குறித்த விவகாரத்தை வைத்து தேர்தலில் போட்டியிட முடியுமா?. நடிப்பது, மோடியை வைத்து படம் எடுக்கலாம் குறித்து பேசுவது அரசியல் பிரச்சினையா? என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் தேர்தலை கேலி செய்கிறார். இது ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் அவமரியாதை'' என்றார்.






