search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mp assembly polls"

    • பரிசோதனைக்காக கூட வாய்ப்பு கொடுக்காதவர்
    • பேட்டை எடுத்தால் ஹிட்அவுட் ஆவார்

    மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சிவராஜ் சிங் சவுகானுக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது.

    தேதி அறிவிக்கப்படாத நிலையிலும், பா.ஜனதா தலைவர்கள் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், சிவராஜ் சிங் சவுகானின் தலைமையை (Leader) வெகுவாக பாராட்டினார். அத்துடன் டோனியுடன் ஒப்பிட்டார். டோனி இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்தி 2011 உலகக்கோப்பையை வென்றார். அதேபோல் சிவராஜ் சிங் சவுகான் வரவிருக்கும் தேர்தலில் வெற்றி வாகை சூடுவார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சியின் சுர்ஜேவாலா, டோனியுடன் ஒப்பிடுவது, நட்சத்திர வீரர்களை மிகப்பெரிய அளவில் அவமதிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுர்ஜேவாலா கூறுகையில் ''இந்த ஒப்பீடு மிகப்பெரிய வீரருக்கு மிகமிகப்பெரிய அவதிப்பாகும். சவுகான், பரிசோதனை அடிப்படையில் கூட ஒருவருக்கும் வாய்ப்பு வழங்காதவர். எப்போதெல்லாம் அவர் பேட்டிங் பிடிப்பாரோ?- அப்போதெல்லாம் அவராகவே ஹிட் விக்கெட் ஆவார். இங்கே மத்திய பிரதேச அரசு ஹிட் விக்கெட் ஆகிறது'' என்றார்.

    மேலும், இந்தியா பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வரும் செய்தி குறித்து கேட்டதற்கு ''பா.ஜனதா வேலைவாய்ப்பின்மை, விவசாயம், வறட்சி, இழப்பீடு, பணவீக்கம், வெறுப்பு, வளர்ச்சி போன்றவற்றை பற்றி ஒருபோதும் பேசியது கிடையாது. இதுபோன்ற வலை (சதி), பிரசாரத்தில் மக்களை மத்திய அரசு சிக்க வைக்கும். இது சகுனி வலை போன்றது.'' என்றார்.

    • கடந்த மூன்று ஐந்து வருடங்களாக என்னுடைய வேதனையை முதல்வர் கேட்கவில்லை
    • தனது தொகுதியில் புதிதாக சேர்ந்தவர்களால் ஓரம் கட்டப்படுகிறேன்

    மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு குறைவாக இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க சிவராஜ் சிங் சவுகான் வியூகம் வகுத்து வருகிறார். பா.ஜனதாவும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.

    இந்த நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

    மத்திய பிரதேசம் ஷிவ்புர் மாவட்டத்தில் உள்ள கோலாரஸ் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., வீரேந்திர ரகுவான்ஷிதான் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் விஷ்னு தத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    மேலும், தான் கடந்த மூன்று- ஐந்தாண்டுகளாக சந்தித்து வந்த வேதனை குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தெரிவித்திருந்தேன். அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குவாலியர்- சம்பல் பகுதியில் என்னைப் போன்ற கட்சியினர், புதிதாக பா.ஜனதா கட்சிக்கு வந்தவர்களால் ஓரம் கட்டப்படுகிறோம். நாங்கள் 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்காக உழைத்தவர்கள்.

    கோலாரஸ் பகுதிகளில் ஊழல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, என்னால் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. என்னையும், என்னுடன் பணியாற்றுபவர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, 2020-ல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த போது, விவசாயிகளுக்கான 2 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றார். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைத்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி பற்றி பேசவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டசபை தேர்தல் நடைபெற 3 மாதங்கள் இருக்கும் நிலையில் மந்திரி சபை விரிவாக்கம்
    • தற்போது மந்திரி சபையில் 34 பேர் இடம் பிடித்துள்ளனர்

    மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    பிரதமர் மோடி சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் சென்று நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் சூழ்நிலை வரை கட்சிகள் சென்றுள்ளன.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தனது மந்திரி சபையில் புதிதாக மூன்று பா.ஜனதா எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்ப வழங்கியுள்ளார். இதனால் மந்திரிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மங்குபாய் பட்டேல் மூன்று பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மந்திரிகளாக பதவி ஏற்ற ராஜேந்திர சுக்லா முன்னாள் மந்திரியாவார். இவர் நான்கு முறை ரெவா பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    கவுரிசங்கர் பிசேன் ஏழு முறை பாலகாட் தொகுதியில் இருந்து ஏழு முறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராகுல் லோதி கார்காபூரில் இருந்து முதல்முறையாக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார்
    • பிரசாரத்தில் பிரதமர் மோடிதான் முன்னிலை படுத்தப்படுவார் என அமித்ஷா சூசக தகவல்

    மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இதனால் மீண்டும் சிவராஜ் சவுகான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பா.ஜனதா எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக தொடருவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் முடிவுக்கு பின்னர்தான், முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

    மேலும், ''சிவராஜ் சவுகான் முதலமைச்சராக இருக்கிறார். இது எங்கள் கட்சியின் வேலை. நாங்கள் முடிவு செய்வோம். அவர் முதலமைச்சர். நாங்கள் தேர்தலில் இருக்கிறோம். பிரதமர் மோடி மற்றும் சவுகான் தலைமையிலான ஆட்சியில் நாம் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். ஆகவே, வளர்ச்சி தேர்தல் நிகழ்ச்சி நிரலாக அமைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பிரதமர் மோடி, பிரசாரத்தின்போது முன்னிலைப் படுத்தப்படுவார்'' என்றார்.

    பா.ஜனதா எப்போதுமே, தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. மீண்டும் ஆட்சியை பிடித்தால், ஏற்கனவே முதல்வராக இருக்கும் நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருந்தாலும், பா.ஜனதாவின் பாராளுமன்ற குழுதான் இறுதி முடிவு எடுக்கும்.

    மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 42 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MPAssemblyPolls #Congress
    போபால்:

    230 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.

    மறுபுறம் காங்கிரசும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலையை காங்கிரஸ் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் பிரசார வியூகம் அமைத்து செயல்படுகிறது. 

    தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் 70 முதல் 80 பேருக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது.

    இந்நிலையில், 57 உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, 42 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்க தயாராக உள்ளது. 42 எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என நிர்வாகி ஒருவர் கூறினார். சரியான காரணம் எதுவும் இல்லாமல் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பதை மாநில தலைவர் கமல் நாத் விரும்பவில்லை. 

    71 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MPAssemblyPolls #Congress
    ×