search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ம.பி.-யில் தேர்தலுக்கு 3 மாதம் உள்ள நிலையில், மந்திரி சபை விரிவாக்கம்
    X

    ம.பி.-யில் தேர்தலுக்கு 3 மாதம் உள்ள நிலையில், மந்திரி சபை விரிவாக்கம்

    • சட்டசபை தேர்தல் நடைபெற 3 மாதங்கள் இருக்கும் நிலையில் மந்திரி சபை விரிவாக்கம்
    • தற்போது மந்திரி சபையில் 34 பேர் இடம் பிடித்துள்ளனர்

    மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    பிரதமர் மோடி சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் சென்று நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் சூழ்நிலை வரை கட்சிகள் சென்றுள்ளன.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தனது மந்திரி சபையில் புதிதாக மூன்று பா.ஜனதா எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்ப வழங்கியுள்ளார். இதனால் மந்திரிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மங்குபாய் பட்டேல் மூன்று பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மந்திரிகளாக பதவி ஏற்ற ராஜேந்திர சுக்லா முன்னாள் மந்திரியாவார். இவர் நான்கு முறை ரெவா பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    கவுரிசங்கர் பிசேன் ஏழு முறை பாலகாட் தொகுதியில் இருந்து ஏழு முறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராகுல் லோதி கார்காபூரில் இருந்து முதல்முறையாக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

    Next Story
    ×