search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • இந்தியா கூட்டணியில் "ஒரு வருடம் ஒரு பிரதமர் (One Year One PM)" பார்முலாவை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை.
    • ஒரு வருடம் ஒரு பிரதமர் என்பதை உலகம் கேலி செய்யும்.

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் பீட்டலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் "ஒரு வருடம் ஒரு பிரதமர் (One Year One PM)" பார்முலாவை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக சில மீடியாக்கள் தெரிவிக்கின்றன. இதன் அர்த்தம் முதல் வருடம் முதல் பிரதமர், 2-வது வருடம் 2-வது பிரதமர், 3-வது வருடம் 3-வது பிரதமர், 4-வது வருடம் 4-வது பிரதமர், ஐந்தாவது வருடம் ஐந்தாவது பிரதமர். அவர்கள் பிரதமர் இருக்கைக்கான ஏலத்தில் மும்முரமாக உள்ளனர்.

    ஒரு வருடம் ஒரு பிரதமர் என்பதை உலகம் கேலி செய்யும். ஒவ்வொரு வருடத்திற்கும் புதிய பிரதமரை என்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, அவர்கள் முதலில் ஆந்திர மாநிலத்தில் மதம் அடிப்படையிலான ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார்கள். அந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. காங்கிரஸ் இன்னும் அந்த விளையாட்டை விளையாட விரும்புகிறது. ஓபிசி-யினர் பெற்று வந்த இடஒதுக்கீட்டை பங்கை காங்கிரஸ் பறித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு மூலம் ஓபிசியினர் கர்நாடகாவில் பெற்று வந்துள்ள நிலையில், ஓபிசியில் முஸ்லிம்களை சேர்த்துள்ளது. காங்கிரசின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள ஓபிசி சமுதாயத்திற்கான எச்சரிக்கை மணி.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

    • கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது
    • மதத்தின் அடிப்படையில் யாருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது

    கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்தது.

    வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு-1ல் 17 முஸ்லிம் சமூகங்களும், பிரிவு-2ல் 19 முஸ்லிம் சமூகங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இவ்வாறு தெரிவித்தார்.

    அக்கூட்டத்தில் பேசிய மோடி, "மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காத மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து பின்கதவு வழியாக இடஒதுக்கீடு கொடுங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிசி மக்களிடமிருந்து பெருமளவிலான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் எதிர்கால தலைமுறைகளை அழிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. 2004ல் கர்நாடகாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, அரசியல் சாசன சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை முதுகில் காங்கிரஸ் குத்தியது

    மதத்தின் அடிப்படையில் யாருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது. பாபாசாகேப் அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு எதிரானவர். ஆனால் காங்கிரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்ற ஆபத்தான தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற பல்வேறு யுக்திகளை கையாள்கிறது.

    கர்நாடகாவில், காங்கிரஸ் சட்டவிரோதமாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. முஸ்லிம்களின் அனைத்து சாதியினரும் ஓபிசி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஓபிசியினருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய உரிமைகள் பறிக்கப்பட்டு, மதத்தின் அடிப்படையில் அவ்வுரிமைகள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறையை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.

    "ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. காங்கிரஸ் சமூக நீதியை கொலை செய்துள்ளது. அரசியலமைப்பை மீறி பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் மத்தியப் பிரதேசம் பின்தங்கிய மாநிலமாக அறியப்பட்டது, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இங்கு வளர்ச்சி தொடங்கியது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • மத்தியப் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
    • தேர்தல் பணியை முடித்துவிட்டு சொந்த மாவட்டத்திற்கு திரும்பியபோது விபத்து.

    மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் பேருந்தை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 21 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் காயமடைந்துள்ளனர்.

    போலீசார் தங்கள் தேர்தல் பணியை முடித்துவிட்டு மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த மாவட்டமான ராஜ்கருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, போபால்- பேதுல் நெடுஞ்சாலையில் பரேதா காட் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி ஷாலினி பராஸ்தே தெரிவித்தார்.

    விபத்து குறித்து அவர் மேலும் கூறுகையில், " ஐந்து காவலர்கள் மற்றும் மீதமுள்ள வீட்டுக் காவலர்கள் உட்பட மொத்தம் 40 ஜவான்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சிந்த்வாராவில் தேர்தல் பணி முடிந்து ராஜ்கருக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

    இதில், பலத்த காயம் அடைந்த 8 பேர் பெதுலில் உள்ள மாவட்ட மருத்துவமனையிலும், சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் ஷாபூர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஏதிரே வந்த லாரியை இடிக்காமல் செல்ல முயன்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது" என்றார்.

    • நாங்கள் இந்து- முஸ்லிம் என பாகுபாடு பார்ப்பதில்லை.
    • பாரத்தில் (இந்தியாவில்) பிறந்த அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என நாங்கள் நம்புகிறோம்.

    மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆளும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர்களும் ஆளும் பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்கின்றன.

    அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, காங்கிரஸ் துருப்பிடித்த இரும்பு என விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறுகையில் "நாங்கள் இந்து- முஸ்லிம் என பாகுபாடு பார்ப்பதில்லை. பா.ஜனதா எப்போதும் இந்து மற்றும் முஸ்லிம்களை பற்றி பேசுகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். நாங்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என பாகுபாடு பார்ப்பதில்லை என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    பாரத்தில் (இந்தியாவில்) பிறந்த அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. மக்களை ஏமாற்றி நாங்கள் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வரவில்லை. அது எங்களுடைய தீர்மானம் மற்றும் வார்த்தையாக இருந்தது.

    தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். அதனால் நான் பா.ஜனதா 24 காரட் தங்கம் போன்றது எனச் சொல்கிறேன்.

    இந்தியாவில் மற்றும் உலகத்தில் உள்ள யாராலும் பா.ஜனதா கறை படிந்தது என விரலை தூக்கி காண்பிக்க முடியாது. காங்கிரஸ் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அவர்களால் நாட்டைய உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதனால் அவர்களை துருப்பிடித்த இரும்பு எனச் சொல்கிறேன்" என்றார்.

    • வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவில். அப்பகுதியில் மிகவம் பிரபலமான இந்த கோவிலில் ரீல்ஸ் எடுப்பதை தடுத்த காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவத்தன்று மகாகாலேஸ்வரர் கோவிலில் தடை செய்யப்ட்ட பகுதியில் பெண்கள் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். இதனை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமைடந்த பெண்கள் இருவரும் அங்கிருந்த வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    பாலக் மற்றும் பாரி என இரு பெண்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பெண் காவலர்கள் காயமுற்றனர். கோவிலில் பெண் காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மஹாகல் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

    • பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

    குவாலியர்:

    கடந்த 1995 முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வாங்கியது தொடர்பாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு குவாலியர் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக நிரந்தர கைது உத்தரவை கோர்ட்டு பிறப்பித்தது.

    ஒருவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டால் அவரை கைது செய்யும் போது கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பு சிறப்பு வக்கீல் அபிஷேக் தெரிவித்தார்.

    • க்யூஆர் குறியீடுகள் மூலம் மக்களிடம் பந்தயத் தொகைகளைப் பெற்றதாக தகவல்.
    • கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 22 மொபைல் போன்கள் பறிமுதல்.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கோடிக்கணக்கான ரூபாய் பந்தயம் கட்டும் மோசடியை முறியடித்ததாக இந்தூர் போலீசார் கூறி, இது தொடர்பாக 8 பேரை கைது செய்தனர்.

    இதுதொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள லசுடியா பகுதியில் உள்ள பல மாடி கட்டிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நேற்று இரவு 8 பேர் ஐபிஎல் போட்டிகளை இணையதளம் மூலம் ஆன்லைனில் பந்தயம் கட்டும்போது கைது செய்யப்பட்டதாக, கூடுதல் துணை ஆணையர். காவல்துறை, குற்றப்பிரிவு, ராஜேஷ் தண்டோடியா கூறினார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலியான பெயர்களில் மொபைல் போன் சிம் கார்டுகளைப் பெற்று, க்யூஆர் குறியீடுகள் மூலம் மக்களிடம் பந்தயத் தொகைகளைப் பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 22 மொபைல் போன்கள், 17 காசோலை புத்தகங்கள், 5 லேப்டாப்கள், 21 வங்கி பாஸ்புக்குகள், 31 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல கோடி ரூபாய் ஆன்லைன் சூதாட்ட கணக்கு அடங்கிய பதிவேடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    • இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் மிகவும் அதிகமாக இருந்தது என்றாலும், அவர்கள் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
    • நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    ஸ்மார்ட்போன்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில், சமூக வலைதளங்களில் நேரத்தை அதிகம் செலவிடுபவர்களும் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் அகர் மாவட்டத்தின் மகாரியா கிராமத்தை சேர்ந்த 80 வயதான பலுராம் பக்கிரி என்ற முதியவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த 34 வயதான ஷீலா இங்கிள் என்ற பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


    சில நாட்களில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் மிகவும் அதிகமாக இருந்தது என்றாலும், அவர்கள் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக இருவரும் திருமணம் செய்து மண வாழ்க்கையில் இணைய முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அங்குள்ள கோர்ட்டு வளாகத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மேஜையானது அதிநவீன கண்ணாடி ஸ்டாண்டுகள் மற்றும் பிற சுவையான உணவு பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
    • அரண்மனையில் உள்ள சாப்பாட்டு அறையில் விருந்துகளின் போது சுமார் 150 விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிடும் வசதி கொண்டது.

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரண்மனையில் அற்புதமான உணவு அனுபவத்தை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் ஆர்.ஜி.பி. குழும தலைவரான ஹர்ஷ்கோயங்கா பகிர்ந்துள்ள வீடியோவில் அரண்மனையில் விருந்தினர்களுக்கு விருந்து பரிமாறுவதற்காக உள்ள மிகப்பெரிய மேஜையில் வெள்ளி பொம்மை ரெயில் சுற்றி வரும் காட்சிகள் உள்ளது.

    அதில், விலை உயர்ந்த மதுபாட்டில்கள் மற்றும் உலர் பழங்கள் எடுத்து செல்லப்படுகிறது. மேஜையில் அமர்ந்திருக்கும் விருந்தினர்களுக்கு அந்த பொம்மை ரெயில் மூலம் விருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படும் காட்சிகள் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக உள்ளது. 'சிந்தியா' என்று பெயரிடப்பட்ட இந்த மினியேச்சர் ரெயில் மூலம் உணவு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பரிமாறப்படும் காட்சிகள் வியப்பில் ஆழ்த்துகிறது.

    மேஜையானது அதிநவீன கண்ணாடி ஸ்டாண்டுகள் மற்றும் பிற சுவையான உணவு பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அரண்மனையில் உள்ள சாப்பாட்டு அறையில் விருந்துகளின் போது சுமார் 150 விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிடும் வசதி கொண்டது. இங்கு சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கு என்று தனித்தனியாக பிரிவுகள் உள்ளன.

    இணையத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ 3.79 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதனைப்பார்த்த பயனர்கள் பலரும் அரண்மனைக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சாந்தி பானி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவர் தனது இந்த காலணி பரிசை தாய்க்கு வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
    • சொர்க்கம் பெற்றோரின் காலடியில் உள்ளது என்பதை நான் சமூகத்துக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார்.

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்தவர் ரவுனக் குர்ஜார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை ரவுடிகள் பட்டியலில் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவர் தனது சொந்த தோலில் இருந்து செய்யப்பட்ட காலணிகளை தனது தாய்க்கு பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

    ரவுனக் குர்ஜார் ஒரு முறை போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவரது தொடைப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில், அதில் தோல் அகற்றப்பட்டது. அந்த தோலை செருப்பு தொழிலாளியிடம் கொடுத்து காலணியாக தைக்குமாறு ரவுனக் குர்ஜார் கூறி உள்ளார். அதன்படி அந்த தொழிலாளி அவரது தோலை காலணியாக வடிவமைத்து கொடுக்க, அதனை அவர் தாய்க்கு பரிசாக வழங்கினார். சாந்தி பானி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவர் தனது இந்த காலணி பரிசை தாய்க்கு வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.


    இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராமாயணத்தை தவறாமல் பாராயணம் செய்வேன். மேலும் ராமரின் கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். தாயாருக்கு தன் தோலினால் செருப்பை செய்தாலும் போதாது என்று ராமரே கூறி உள்ளார். எனவே இந்த யோசனை என் மனதில் தோன்றியது. அதன்படி எனது தோலில் இருந்து காலணிகளை உருவாக்கி என் அம்மாவுக்கு பரிசளிக்க முடிவு செய்தேன். சொர்க்கம் பெற்றோரின் காலடியில் உள்ளது என்பதை நான் சமூகத்துக்கு சொல்ல விரும்புகிறேன் என்றார்.

    குர்ஜாரின் தாயார் கூறுகையில், ரவுனக் போன்ற ஒரு மகனை பெற்றதை நான் பாக்கியமாக கருதுகிறேன். கடவுள் அவரை எல்லா கஷ்டங்களில் இருந்தும் பாதுகாத்து எந்த துக்கமும் இல்லாத வாழ்க்கையை அவருக்கு ஆசீர்வதிக்கட்டும் என்றார்.

    • எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
    • அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள்.

    இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்டில் உள்ள பட்டியலின பெண்களிடம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உரையாடிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், செருப்பு இல்லாமல் நாங்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் எங்களை 'கெட்ட சகுணம்' என கூறுவார்கள். செருப்பு இல்லாமல் ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்?' என கேட்பார்கள் என ஒரு பெண் கூறுகிறார்.

    அதற்கு, உங்கள் சமூகத்தில் மொத்தம் எத்தனை பேர்? என்று ராகுல்காந்தி கேட்கிறார். மொத்தம் 4 குடும்பங்கள் உள்ளன என அப்பெண் பதில் அளிக்கிறார்.

    மேலும், தண்ணீர் இறைக்க கிணற்றுக்கு சென்றால் கூட மணிக்கணக்கில் காத்திருக்க சொல்வார்கள். தூரமா சென்று உட்கார் என துரத்துவார்கள் எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.

    அதற்கு, யார் உங்களை இப்படி செய்கிறார்கள்? என்று ராகுல்காந்தி கேள்வி கேட்க, உயர்சாதியை சேர்ந்த மக்கள் தான். பிராமணர்கள், தாகூர், அகிர் சமூகத்தினர் தான் எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள்.

    அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள். இல்லையென்றால் கால்வாய் அருகே அமர சொல்வார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது சார். எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது

    இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கி கொண்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. இது சுதந்திர நாடு என சொல்கிறார்கள். ஆனால் இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.

    நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன்... இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன் என அப்பெண் சொல்ல, செருப்பை அணிந்து கொள்ளுங்கள் என்று அப்பெண்ணுக்கு ராகுல்காந்தி செருப்பு அணிவிக்கிறார்.

    இறுதியில் எங்கள் பிரச்சினைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று அப்பெண் ராகுல்காந்தியிடம் கோரிக்கை வைக்கிறார்.

    வட மாநிலங்களில் உள்ள பட்டியலின மக்களின் மோசமான நிலையை இந்த வீடியோ நமக்கு எடுத்து காட்டுகிறது. 

    • தலைமை செயலகமான வல்ல பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது?

    மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்ல பவன் (Vallabh Bhavan), உள்ளது. இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    தீ விபத்து குறித்து பேசிய ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பட்வாரி, "ஏற்கனவே தலைமை செயலகமான வல்லப் பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பது? ஆனால் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் உமாங் சிங்கார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், முதலமைச்சர் மோகன் யாதவுக்கும் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அதனால் தான் சிவராஜ் சிங் சவுகான் தனது ஊழல் கோப்புகளை வல்ல பவனில் வைத்து எரித்து வருகிறார். பாஜக அரசின் உள்கட்சி பிரச்சினைகளால் லட்சக்கணக்கான மக்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மோசடி செய்து தீ வைப்பது பாஜக அரசின் பழைய வழக்கம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    ×