என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • வலியால் அவர் துடித்தபோதும் மான் சிங் தொடர்ந்து அவரை தாங்கியபடி இருந்தார்.
    • கண்ணீருடன் தனது பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நொண்டியபடி சென்றார்.

    பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஒரு மாற்றுத்திறனாளியிடம் ரெயில்வே போலீஸ்காரர் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாக்டா ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தை ஒரு பயணி தனது தொலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

    பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளியை நோக்கி கோபத்துடன் வந்த சீருடையில் இல்லாத ஆர்பிஎஃப் தலைமை கான்ஸ்டபிள் மான் சிங் அவரை உதைத்து அங்கிருந்து விரட்டினார். வலியால் அவர் துடித்தபோதும் மான் சிங் தொடர்ந்து அவரை தாக்கியபடி இருந்தார்.

    மான் சிங்கால் தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, கண்ணீருடன் தனது பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நொண்டியபடி சென்றார்.

    இதற்கிடையில் மான் சங், மாற்றுத்திறனாளி நபர் குடிபோதையில் இருந்ததாகவும், நடைமேடையில் மக்களை தொந்தரவு செய்ததாகவும் , அதனாலேயே இவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

    ஆனால் உயர் அதிகாரிகள் இந்த விளக்கத்தில் திருப்தி அடையதாக நிலையில் அவரை இடைநீக்கம் செய்து சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டனர். 

    • ரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடந்து வருகிறது.
    • வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அந்த வகையில் ஆளும் பாஜக தலைமையிலான அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை வேண்டுமென்றே நீக்குவதாக கூறி SIRக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் காங்கிரஸ் இளைஞரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் தடுப்புகளில் ஏறியதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இதேபோன்ற ஒரு போராட்டம் உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கேயும் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் குழப்பமான சூழல் நிலவியது.

    SIR-க்கு எதிராக காங்கிரஸ் வாக்கு திருடனே, நாற்காலியை விட்டு வெளியேறு என்ற தலைப்பில் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

    வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களாக ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக SIR நடைபெற்ற பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
    • பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது,"ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்குக் கொடுக்கும் வரை அல்லது அவருடன் உறவை வளர்த்துக் கொள்ளும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதால், வர்மாவின் பேச்சை பிராமண அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. சந்தோஷ் வர்மாவின் கூற்று ஆபாசமானது, சாதிய ரீதியானது மற்றும் பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    விரைவில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பிராமண சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என அகில இந்திய பிராமண சங்கத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

    • வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி
    • ஏற்றுமதி குறைவால், உள்நாட்டில் இருப்பு கூடி, மண்டிகளில் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாக விவசாயிகள் வேதனை.

    விலைச்சரிவால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவை கூட எடுக்க முடியவில்லை என விரக்தியில், வெங்காயத்திற்கு விவசாயிகள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தின் தம்னார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுதான் இது. கிராமத்தில் உள்ள தகன மைதானத்தில் ஒரு பாடையில் வெங்காயத்தை கொட்டி, அதற்கு பூமாலை போட்டு, மனிதருக்கு இறுதி சடங்கு செய்வது போல அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் நிமர் பகுதிகள் இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வெங்காயத்திற்கு சரியான விலை கிடைக்காததால் இந்த நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு 1 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சிலர் 1 -2 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  

    நியாயமான விலை கிடைக்காததால் இந்த வெங்காய ஊர்வலம் நடத்தப்பட்டது. எங்களுக்கு நிறைய நஷ்டம் ஆகியுள்ளது. அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என இறுதிச் சடங்கில் பங்கேற்ற விவசாயி பத்ரி லால் தாக்கட் தெரிவித்தார்.

    "இந்த நூதன போராட்டம் தொடர்பாக பேசிய மற்றொரு விவசாயி, "வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. இந்த விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி. அதிக கனமழையால் இரண்டாவது பயிரும் வீணானது. இப்போது வெங்காயமும் காய்ந்துவிட்டது. அதனால்தான் இறுதி ஊர்வலம் நடத்தினோம். எங்கள் செலவை ஈடுகட்டும் விலையைக்கூட அரசு வழங்கவில்லை" என தெரிவித்தார்.

    வெங்காயத்தின் மீதான நீண்டகால வரியால்தான் சர்வதேச சந்தைகளில் இந்தியா போட்டியிட முடியவில்லை எனவும், இதன் விளைவாக ஏற்றுமதி சரிந்து உள்நாட்டில் இருப்பு அதிகமாவதால், மண்டியில் குறைவான விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இறுதி ஊர்வலம் வெறும் ஆரம்பம்தான் எனவும், நியாயமான விலை உறுதி செய்யப்படாவிடில் பிராந்தியம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

    • முகாமிற்கு ராகுல் காந்தி 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.
    • கடந்த ஆண்டு அரியானா தேர்தலில் நடந்த வாக்கு திருட்டை பற்றி விளக்கினார்.

    மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் ராவ் தலைமை தாங்கினார். முகாமிற்கு ராகுல் காந்தி 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.

    இதை பார்த்த சச்சின் ராவ் முகாமின் நடத்தை விதிகளின்படி யார் கூட்டத்திற்கு தாமதமாக வந்தாலும் அவர்களுக்கான தண்டனை உண்டு. அப்போதுதான் கட்சி தொண்டர்களும் ஒழுங்கை கடைப்பிடிப்பார்கள் என்று சிரித்தபடி சொன்னார்.

    நேராக தனது சீட்டில் உட்கார சென்ற ராகுல் காந்தி சச்சின் ராவை பார்த்து இதற்கான அர்த்தம் என்ன, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

    கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கு தண்டனையாக 10 முறை தண்டால் போட வேண்டும் என்று சொல்லி சச்சின் ராவ் மீண்டும் சிரித்தார்.

    தலைவர் சொன்னதை கேட்ட ராகுல் காந்தி கூட்டத்தின் நடுவே தண்டால் எடுத்தார். இதை பார்த்த அனைத்து காங்கிரஸ்காரர்களும் கைதட்டி உற்சாபடுத்தி ஆரவார கோஷம் எழுப்பினர். இது கூட்டத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    பின்னர் பேசிய ராகுல்காந்தி சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கடந்த ஆண்டு அரியானா தேர்தலில் நடந்த வாக்கு திருட்டை பற்றி விளக்கினார்.

    மேலும், அடுத்தடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் தேர்தல் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்ட அந்த உணவுகளை மாணவர்கள் உண்ணும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.

    இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஷியோபூர் மாவட்ட ஆட்சியர், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் சம்பவம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 



    • பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
    • இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    மத்தியப் பிரதேசத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.

    அப்போது அவர் கிரேனில் சிக்கிக் கொண்டதால் ஆத்திரத்தில் ஆப்ரேட்டரை அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 5 மாத பெண் குழந்தை ரூஹிக்கு இருமல் மற்றும் சளி இருந்தது.
    • மருந்து குடித்த சில மணி நேரங்களுக்குள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது.

    மத்தியப் பிரதேசத்தில் போலி இருமல் மருந்துகளால் அண்மையில் 24 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    இந்த சர்ச்சை தொடரும் நிலையில் தற்போது ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 5 மாத குழந்தையின் உயிரிழந்தது அதிர்ச்சிய ஏற்படுத்தி உள்ளது.

    சிந்துவா மாவட்டத்தில் உள்ள பிச்வா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் மினோட்டின் 5 மாத பெண் குழந்தை ரூஹிக்கு இருமல் மற்றும் சளி இருந்தது.

    இதன் காரணமாக, அக்டோபர் 27 அன்று உள்ளூர் மருத்துவக் கடையில் கடைக்காரரின் ஆலோசனையின் பேரில் ஆயுர்வேத இருமல் சிரப்பை வாங்கி குழந்தையை அருந்த செய்துள்ளனர்.

    மருந்து குடித்த சில மணி நேரங்களுக்குள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. குழந்தை உடனடியாக உள்ளூர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருமல் மருந்து விற்கப்பட்ட மருத்துவக் கடை சீல் வைக்கப்பட்டு, மீதமுள்ள இருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.

    மருந்து மாதிரிகள் அரசு ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன. குடும்ப உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில் பிச்வா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • திருடியவற்றைத் திருப்பித் தருமாறு பிரமிளா கேட்டுள்ளார்.
    • தலைமறைவான அவரைப் பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மத்திய பிரதேச மாநிலத்தின் ஜஹாங்கிராபாதில் துணை காவல் ஆய்வாளராக (டிஎஸ்பி) பணிபுரிபவர் கல்பனா ரகுவன்ஷி (56).

    கல்பனாவும், அவரது தோழியான பிரமிளா திவாரியும் நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில், செப்டம்பர் 24 ஆம் தேதியில் பிரமிளா வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டுக்குள் நுழைந்த கல்பனா, பிரமிளாவின் பணப்பையிருந்து ரூ. 2 லட்சம் பணத்தையும், மொபைல் போனையும் திருடியுள்ளார்.

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கல்பனாவின் கையில் பணத்தை எடுத்துச் செல்வது உறுதியானவுடன், திருடியவற்றைத் திருப்பித் தருமாறு பிரமிளா கேட்டுள்ளார். இருப்பினும், மொபைல் போனை மட்டும் கல்பனா கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து, தனது மகளின் பள்ளிக் கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை திருடியதாக, கல்பனா மீது காவல் நிலையத்தில் பிரமிளா புகார் அளித்தார்.

    சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக எகொண்டு, டிஎஸ்பி கல்பனா மீது போலீசார் திருட்டு வழக்கை பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து தலைமறைவான அவரைப் பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கல்பனா திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    • என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை
    • மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    மத்தியப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பாஜக தலைவரும் அவரது ஆதரவாளர்களும் ஒரு விவசாயியை கொடூரமாகக் கொலை செய்தனர்.

    குணா மாவட்டம், கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் ஸ்வரூப் (40 வயது). இவரின் நிலத்தை கேட்டு உள்ளூர் பாஜக பூத் கமிட்டி தலைவர் மகேந்திரா நாகர் தகராறு செய்து வந்தார். ஆனால் ராம் ஸ்வரூப் அதற்கு உடன்படவில்லை. 

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பாஜக தலைவர் மகேந்திரா நாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவசாயி ராம ஸ்வரூப்பை கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கினர்.

    மேலும் அவர்கள் வந்திருந்த தார் ஜீப்பை ராம் ஸ்வரூப் மீது ஏற்றினர். இதில், படுகாயமடைந்த ராம் ஸ்வரூப்பை கிராம மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது துப்பாக்கிகளை காட்டு மிரட்டி சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

    முன்னதாக தந்தை ராம் ஸ்வரூப்பை காப்பாற்ற ஓடிவந்த அவரது மனைவி மற்றும் 2 மகள்களும் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

    இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராம் ஸ்வரூப்பின் மகள், "என் தந்தையைக் காப்பாற்ற நான் சென்றபோது, அவர்கள் என்னைத் தள்ளி கீழே தள்ளிவிட்டு, என் மீது அமர்ந்து என் உடையைக் கிழித்தனர்.

    எங்களை அச்சுறுத்தத் துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

     

    மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் மகேந்தர் நாகர், அவரது மகன்கள், மனைவி உள்ளிட்ட 14 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு மானபங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், மகேந்திரா நாகரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கக் கோரி மூத்த தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக குணா மாவட்ட பாஜக தலைவர் தர்மேந்திர சிகார்வார் தெரிவித்துள்ளார்.  

    • இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு
    • ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை கஃபேவுக்கு செல்ல வெளியே வந்தபோது, இரு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதில் ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கை மற்றும் காலில் மாவுக்கட்டுடன் குற்றவாளியை போலீசார் அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து பேசிய மத்தியபிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இது ஒரு பாடம். கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கு மிகப்பெரிய மோகம் இருப்பதால், அவர்கள் பொதுவெளியில் வருவதற்கு முன்பு பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை இது வீரர்களுக்கு நினைவூட்டும் என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில், வீரர்கள் தங்கள் பிரபலத்தை உணர மாட்டார்கள். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுகிறார் என பாஜக அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "பெண்கள் மெல்லிய ஆடைகளை அணிவதை தனக்குப் பிடிக்காது என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளி மாணவிகள் மாணவிகள் மதுபானம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.
    • விற்பனையாளர் கேள்வியின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்கியது கேள்விகளை எழுப்பியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் தங்கு தடையின்றி அரசு கடையில் மதுவாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் வழி தவறி செல்லும் அதிர்ச்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை பார்க்க முடிகிறது. சில மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, சிலர் மற்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்துள்ளன.

    பள்ளி மாணவர்கள் தவறான வழிக்கு செல்லக்கூடாது என அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறது. வயது நிரம்பாதவர்கள் போதைப்பொருட்கள் வழங்கினால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. விற்பனையாளர்களை தண்டிக்க சட்டமும் வழிவகை செய்கிறது.

    இந்த நிலையில்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் மதுபானம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மாநிலத்தின் சட்டம் மற்றும் சமூக வழிப்புணர்வு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.

    மண்ட்லா மாவட்டத்தில் உள்ள நைன்பூரில் மாணவிகள் அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்குகின்றனர். இதில் என்ன அவலம் என்றால், கடைக்காரர் எந்தவித கேள்வியின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்கியதுதான்.

    சமூக வலைத்தளங்களில் பரவியதால், உள்ளூர் அதிகாரிகள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், துணை கலெக்டர், தாசில்தான், உள்ளூர் போலீசார் அந்த மதுபான கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதிகாரிகள் வீடியோவை பரிசோதனை செய்ததில், விற்பனையாளர் மதுபானம் வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. இது பொது உரிமம் நிபந்தனைகள் மீறுவதாகும். மதுபான சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

    இதுதொடர்பாக கலால்துறை விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த மாணவிகள் மது அருந்தினரா? அல்லது யாருக்காவது வாங்கி சென்றார்களா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ×