search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்றம்"

    • இருவரும் 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

    திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரி இருவரும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதைதொடர்ந்து, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி மாதம் 20ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதேநேரம், செந்தில் பாலாஜி கீழ் கோர்ட்டை நாடலாம். அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

    செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி 14-வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதன் வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஜனவரி 11ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • இருவரும் தினமும் பணத்தை வசூல் செய்யும் பணிசெய்து வந்தனர்.
    • இதற்காக பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியதாக ஈஸ்வரன், அருண்குமார் கூறியுள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் உள்ள பாப்பான்குளத்தில் வசிப்பவர் பழனிசாமி (வயது 41). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து தினமும் வசூல் செய்யும் தொழில் செய்து வருகிறார். தேனி மாவட்டம் தேவாரம் வட்டம் உத்தபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் (25), திண்டுக்கல் மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்த அருண்குமார் (27) ஆகிய இருவரும் தினமும் பணத்தை வசூல் செய்யும் பணிசெய்து வந்தனர்.

    இவ்விருவரும் நேற்று முன்தினம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசூலுக்கு சென்றனர். இரவு 9 மணிக்கு விழுப்புரத்திற்கு லேசான காயங்களுடன், முன்பக்கம் உடைக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளுடன் திரும்பினர். நாங்கள் இருவரும் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இருவேல்பட்டு ஏரிக்கரை அருகே வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பலை தங்களை வழிமறித்து தாக்கியதாகவும், பையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாகவும், உயிர் பிழைத்து வந்ததாகவும் பைனான்ஸ் உரிமையாளர் பழனிச்சாமியிடம் கூறினர்.

    இதையடுத்து பைனான்ஸ் உரிமையாளர் பழனிச்சாமி, 2 பேரையும் ஆபீஸ் ரூமிற்குள் அழைத்து சென்று விசாரணை நடத்தினார். தீபாவளி செலவுக்கும் பணம் இல்லை. இதற்காக பணம் கொள்ளையடி க்கப்பட்டதாக நாடகமாடியதாக ஈஸ்வரன், அருண்குமார் கூறியுள்ளனர். மேலும், பணத்தை இருவேல்பட்டு ஏரிக்கரை அருகேயுள்ள பனைமரத்தின் கீழ் பள்ளம் தோண்டி புதைத்து உள்ளதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு இருவேல்பட்டு ஏரிக்கரைக்கு விரைந்த பழனிசாமி, பனைமரத்தின் அடியில் புதைத்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த சம்பவங்களை கூறி போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார், பணம் திருடு போனதாக நாடகமாடிய ஈஸ்வரன், அருண்குமார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • நெல்லையை சேர்ந்த அய்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
    • இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும் திரைப்படங்களின் ரசிகர்கள் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த உத்தரவிட கோரி நெல்லையை சேர்ந்த அய்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் சிறப்பு காட்சியின் போது, திரையரங்குகள் முன்பு 24 மணி நேரமும் பெரும் கூட்டமாக நின்று கொண்டு பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ், கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதால், போக்குவரத்தும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இந்த காட்சிகளை முறைப் படுத்த விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

    தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போதும், நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், பொது அமைதியை பேணவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் விதிகள் வகுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இதுசம்பந்தமாக உள்துறை செயலாளருக்கு தான் அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரசிகர்கள் காட்சிகளால் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என மனுதாரர் விளக்கவில்லை. அரசு உள்துறை செயலாளர் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

    • அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
    • 1237 வழக்குகளுக்கு தீர்வு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு மாநில சட்ட பணிகள் ஆனைக்குழு வழி காட்டுதலின் பேரில் அரிய லூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்ற ங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.அரியலூர் ஒருங்கிணை ந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற த்தை மாநில சட்ட பணிகள் ஆனைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான கிரிஸ்டோபர் தலைமை யேற்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் குற்றவியல் தலைமை குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி, ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜசேகர் மற்றும் நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்கள்,வக்கில் சங்க பிரதிநிதிகள் நீதிமன்ற ஊழியர்கள் கலந் துகொண்டனர்.இச்சிறப்பு மக்கள் நீதிம ன்றத்தில் 6 காசோலை வழக்கு, ஒரு குடும்பநல வழக்கு, 28 சிவில் வழக்கு, 10 மோட்டார் வாகனவிபத்து, 212 சிறுகுற்ற வழக்கு, 2 வருவாய்த்துறை வழக்கு. 12 வங்கி வழக்குகள் 966 ஜெயங்கொண்டம் நிலம் கையகப்படுத்திய வழக்குகள் ஆக 1237 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    • கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 971 வழக்குகளில் ரூ.3.83 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
    • இது 5-வது சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஆகும்.

    கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமனற வளாகத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் வழிகாட்டுதலின் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய் பிரியா முன்னி லையில், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது அவர் பேசுகையில், இந்த வருடத்தில் இது 5-வது சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஆகும்.

    வழக்கா டிகள் நிலுவை யில் உள்ள தங்கள் வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காணலாம். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்களின் முன் சமரசங்களின் வாயிலாக 99 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 11 லட்சத்து 48 ஆயிரத்து 619 வசூல் ஆகியுள்ளது.

    எனவே, இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துக்கொள்ள முன்வர வேண்டும். இது குறித்து மற்றவர்க ளுக்கும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    நேற்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்ச ம்பள்ளி, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற ங்களில் நிலுவை யில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் ஆகியவை விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 971 வழக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 28 ஆயிரத்து 271-க்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும், முதன்மை மாவட்ட நீதிபதி, குடும்ப நல வழக்கில் இணைந்த ஜோடிக்கு இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கியும், பாகப்பிரிவினை வழக்கில் இணைந்த குடும்பத்திற்கு இனிப்புகள் வழங்கியும் வாழ்த்தினார்.

    இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெனிபர், நீதித்துறை நடுவர் எண்.1 கார்த்திக் ஆசாத், வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ராமசந்திரன், செயலாளர் சத்தியநாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவால் செய்யப்பட்டிருந்தது.

    • அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சீமான் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது.

    இதன்படி இன்று காலை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
    • பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் கண் மற்றும் பல் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. மற்றும் அக்குபஞ்சர், பிசியோதெரபி சிகிச்சை நடத்தப்பட்டது.இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், உடுமலை ஜே.எம். எண்-1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே.எம். எண்-2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி, உடுமலை வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், பொருளாளர் பிரபாகரன், அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிசந்திரன், திருப்பூர் மாவட்ட வக்கீல் அருணாசலம் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    • பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது
    • பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 77-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது விழாவுக்கு பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார். இதில் மாவட்ட குடும்ப நல நீதிபதி தனசேகரன் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி மூர்த்தி, சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலா ளரும், சார்பு நீதிபதியு மான ராஜா மகேஷ்வர் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள் அ ட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அதே போல் மதனகோபாலசுவாமி கோவிலில் சுதந்திர தி னவிழா கொ ண்டாடப்பட்டது. பெரம்ப லூரில் உள்ள மரகதவ ல்லித்தாயார் சமேத மதனகோ பாலசுவாமி கோவிலில் 77-வது சுதந்திரதினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கம்பத்து ஆஞ்சநேயர் சன்னதியை ஒட்டிய ராஜகோபுரம் அருகே கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில், கோவில் பரம்பரை ஸ்தானீகர் பொன்.நாராயணன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன், கோவில் பரிஜாரகர் சம்பத், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்றது.
    • மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.

    திருப்பூர்:

    தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின்பேரில், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரத்துக்குரிய குற்றவழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 2,387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.

    இதில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, கூடுதல் மகளிா் நீதித் துறை நடுவா் காா்த்திகேயன், நீதித்துறை நடுவா் முருகேசன், வழக்குரைஞா்கள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

    • பெண்ணை பிரிந்த கணவர் பராமரிப்பு மற்றும் பிற அடிப்படை தேவைகளை வழங்குவதாக உறுதி அளித்தார்.
    • தன் மீதான குற்றச்சாட்டுகளை பெண்ணின் கணவர் மறுத்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    இந்நிலையில் அந்த பெண், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் பிரிவு 12-ன் கீழ் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், தனது வயது, உடல் நிலை பிரச்சினை மற்றும் தான் வளர்க்கும் 3 ராட்வீலர் வகை நாய்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு இருந்தார்.

    இந்த வழக்கை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் கோமல்சிங் ராஜ்புத் விசாரித்தார். இந்த வழக்கில் பெண் சார்பில் ஆஜரான வக்கீல் ஸ்வேதா மோரே வாதாடுகையில், இருவருக்கும் 1986-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களின் 2 திருமணமான மகள்கள் இப்போது வெளிநாட்டில் உள்ளனர்.

    இரு தரப்புக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அப்போது பெண்ணை பிரிந்த கணவர் பராமரிப்பு மற்றும் பிற அடிப்படை தேவைகளை வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால் அதை அவர் பின்பற்றவில்லை.

    அவர்கள் ஒன்றாக இருந்த போது பெண் மீது குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது எந்த வருமானமும் இல்லை. அவருக்கு சில உடல் நிலை பிரச்சினைகளும் உள்ளது. மேலும் அவர் 3 நாய்களை வளர்த்து வருகிறார்.

    அதே நேரம் மனைவியை பிரிந்த நபர் தற்போது வேறு ஒரு நகரத்தில் தொழில் செய்து வருகிறார். அவருக்கு வருமானமும் வருகிறது. எனவே அவர் இடைக்கால பராமரிப்பு செலவாக மாதம் ரூ.70 ஆயிரம் செலுத்த வேண்டும் என வாதிட்டார்.

    ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை அந்த பெண்ணின் கணவர் மறுத்தார். தனக்கு நிலையான வருமானம் எதுவும் இல்லை என கூறிய அவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே பராமரிப்பு தொகையை வழங்க முடியாது என கூறினார்.

    அவரின் இந்த வாதத்தை கோர்ட்டு ஏற்க மறுத்தது. மேலும் குடும்ப வன்முறைக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, அந்த பெண் இடைக்கால நிவாரணத்திற்கு தகுதி பெற்றவர் என தெரிவித்ததோடு, அந்த பெண் வளர்க்கும் 3 நாய்களுக்கு ஆகும் பராமரிப்பு செலவை கொடுக்க வேண்டும் என கணவருக்கு உத்தரவிட்டார்.

    ×