search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advocate"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளியில் "லிப் ரீடிங்" முறையில் விடாமுயற்சியுடன் கல்வியை பயின்றார்
    • 2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்

    கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரூவை சேர்ந்தவர் 27 வயதான சாரா சன்னி (Sarah Sunny).

    இவருக்கு மரியா சன்னி எனும் சகோதரியும் பிரதிக் குருவில்லா எனும் சகோதரனும் உள்ளனர். பிரதிக் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மரியா பட்டய கணக்காளராக பணிபுரிகிறார்.

    இவர்கள் மூவருக்கும் சிறு வயது முதலே இரண்டு செவிகளிலும் கேட்டல் குறைபாடு உண்டு. இருந்தும்  அதனை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை இவர்கள் அடைந்தனர்.

    இவர்களது பெற்றோர், கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரத்யேக பள்ளிகளில் இவர்களை படிக்க வைக்காமல், இத்தகைய குறைபாடுகள் உள்ளவர்களையும் பிற குழந்தைகளுடன் படிக்க அனுமதிக்கும் பள்ளிகளிலேயே இவர்களை சேர்த்தனர்.

    பள்ளியில் சாரா "லிப் ரீடிங்" (lip reading) எனும் உதடுகளின் அசைவை உணரும் வழிமுறை மூலமாக கல்வி கற்று கொண்டார். பெங்களூரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சட்ட கல்வியில் சேர்ந்தார். அங்கும் அதே முறையில் பயின்றார்.

    2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பாக தனது கட்சிக்காரருக்காக வாதாடினார்.

    சாராவிற்காக ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளரை (sign language interpreter) வைத்து கொள்ள உச்ச நீதிமன்றம் உதவியது. சைகை மொழி மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் இவர் தனது வாத பிரதிவாதங்களை வைக்க, அதனை தலைமை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

    இந்திய சட்ட வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய குறைபாடு உள்ள ஒருவர் வாதாடியது இதுவே முதல் முறை.

    சன்னிக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவில் எதிர்காலத்தில் சட்டத்துறையில் கல்வி பெறவும், வழக்கறிஞராக பணியாற்றவும் இவரை போன்ற பலர் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

    • மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர்.
    • இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ் (56). இவரது மனைவி சாந்தி(52). இவர்கள் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பொதிகை நகரில், ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக ஷோ ரூம்கள் அமைக்க ஏஜென்டுகள் தேவை என்றும் கடந்த 2020-ம் ஆண்டு விளம்பரம் செய்தனர்.

    இதனை நம்பி ஜவுளி விற்பனை மையம் அதைப்பதற்காக திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த வக்கீல் அரசபிரபாகரன் இவர்களை அணுகி உள்ளார். ஒரு கிளைக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தால், தேவைப்படும் இடத்தில் கடையின் உள்அலங்காரம் செய்து கொடுப்பதுடன், தங்கள் நிறுவனத்தின் தரமான வேட்டி, சட்டை, பனியன், ஜட்டி மற்றும் மாஸ்க் உள்ளிட்ட தயாரிப்புகளை யாரும் தர முடியாத அளவில் குறைந்த விலைக்கு விற்பனைக்காக தருவதாகவும் கூறி உள்ளனர்.

    இதனை நம்பி அரசபிரபாகரன் மற்றும் அவரது 4 நண்பர்கள் சேர்ந்து 5 கிளைகள் அமைப்பதற்காக ரூ. 61 லட்சத்தை மணிராஜ்-சாந்தியிடம் கொடுத்துள்ளனர்.

    மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர். அதன் பின் ஷோரூம் அமைத்துதராமல் காலம் தாழ்த்தி வந்ததால் அரசபிரபாகரன் பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மட்டும் திருப்பி தந்துள்ளனர். மீதி தொகையாக ரூ. 59 லட்சத்து 25 ஆயிரம் தராமல் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனால் அரசபிரபாகரன் ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார், ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த மணிராஜ் மற்றும் சாந்தியை நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்களின் மகள் மற்றும் மருமகனை தேடி வருகின்றனர். மணிராஜ் மற்றும் சாந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • கருப்பு ‘கோட்’ மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்.

    சென்னை :

    கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், மார்ச் முதல் ஜூலை மாதம் வரை வக்கீல்கள் கருப்பு 'கவுன்' அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் பார் அசோசியேசன் என்ற வக்கீல் சங்கம் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை கடிதம் வழங்கும். அந்த வகையில், அண்மையில், ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இந்த மனுவை அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "கோடைகாலம் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வருகிற ஜூன் 30-ந்தேதி வரை 'கவுன்' அணிவதில் இருந்து வக்கீல்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம் கருப்பு 'கோட்' மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்'' என்று கூறியுள்ளார்.

    • வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் நடந்தது. இதில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் வடிவேல்சாமியை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பழனியை சேர்ந்த வக்கீல்கள் சுரேந்திரன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் போலீசாரை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் படியும், கூட்டுக்குழு கேட்டுக்கொண்டதன்பேரில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சார்பில் வக்கீல்கள் பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து கோர்ட்டு பணிகளையும் புறக்கணிப்பு செய்தனர். இதனால் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன."

    • போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • குற்றாலம் போலீசார் ஷேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஐந்தருவியில் மட்டும் 2 கிளைகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.

    இந்நிலையில் நேற்று அருவியில் குளிப்பதற்காக தென்காசி செங்குந்தர் முதலியார் தெருவை சேர்ந்த வக்கீலான ஷேக் என்ற அயூப்(வயது 38) என்பவர் சென்றுள்ளார்.

    அப்போது அவர் அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீசார் ஷேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை ஆதீனத்தின் விஷம பிரசாரத்தை திராவிட பாசறை முறியடிக்கும் என்று வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
    • மதுரை ஆதீனம் தி.மு.க.வையும், தமிழக அரசையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்க றிஞர் சே. பசும்பொன் பாண்டியன் இன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய பா.ஜனதா அரசுக்கு ஆதீனங்கள் வக்காலத்து வாங்கி வருவதால் அவர்களது ஆன்மீக ப்பணி பயங்கர வாத ஆர்.எஸ்.எஸ். பணியாக மாறும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மதுரையில் விஷ்வ இந்து பரிஷத் ஆதரவோடு நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும், கம்யூனிஸ்ட்கள் ஆபத்தானவர்கள் என்றும் குறிப்பாக மதுரை ஆதீனம் தி.மு.க.வையும், தமிழக அரசையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

    துறவிகள் தி.மு.க. அரசை மிரட்டி பேசியதோடு ஒட்டு மொத்தத்தில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் வெறுப்பைக் கக்கும் மாநாடாக நடந்துள்ளது. சிறுபான்மையினரை வசைமாறி பொழிந்ததோடு மதுரை மீனாட்சி அம்மனையும் கேலி செய்து அவதூறு சேற்றை அள்ளி வீசி இருக்கிறார்கள், ஆதீனங்கள் சைவத்தையும் தமிழையும் வளர்க்கின்ற பணியை மட்டுமே செய்ய வேண்டும்.

    ஆதீனங்கள் ஆன்மீக பணியை விட்டு ஆர்.எஸ்.எஸ். பணியில் ஈடுபட்டால் மக்கள் சக்திக்கு முன் ஆதீனங்கள் தாக்க பிடிக்க முடியுமா? கோவில் நிலங்க ளை தங்களி டம் ஒப்படைக்க வேண்டு மென மதுரை ஆதீனம் கூறுகின்றார்.

    ஏற்கெனவே ஊழல் முறைகேடு நடைபெற்றதால் தான் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அறநிலையத்துறையால் தான் கோவில்களை பாதுகாக்க முடியும். மதுரை ஆதீனத்துக்கு நிலங்கள் எப்படி வந்தது ? அவர் யார் யாருக்கு நிலங்களை கொடுத்துள்ளார் என்று பொதுவெளியில் விவாதிக்க தயாரா ?

    தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசாக நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர் தொடங்கிய அறநிலையத்துறையை பாதுகாத்து வருகிறார். அந்த ஆட்சிக்கு எதிராக துறவிகள் மாநாடு என்ற பெயரில் மதுரை மண்ணில் விஷத்தை கக்கினால் அதை முறியடிப்பதற்கு திராவிட பட்டறை உரிய முறையில் ஆதீனங்களை சந்திப்போம் என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்,

    மதுரை ஆதீனம் ஆர்.எஸ்.எஸ்.சின் அறிவிக்கப்படாத செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வருவதோடு மதுரை ஆதீனமடத்தை ஆர்.எஸ்.எஸ்.சின் பயங்கரவாத கூடாரமாக மாற்றி வருவதை மதுரை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மதுரை ஆதீனத்தின் விஷம பிரசா ரத்தை திராவிட பாசறை முறியடிக்கும் என மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தர்மபுரி புதிய கோர்ட்டு வளாகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு வளாகம் தடங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ட்டு வளாகம் கடந்த சில மாதங்களாக செயல்பட தொடங்கி உள்ளது. இந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் எழில்சுந்தரம், பொருளாளர் சந்தோஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். புதிய கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கான சேம்பர் அமைக்க வேண்டும். அந்த வளாக பகுதியில் செல்போன்கள் தங்குதடையின்றி செயல்பட வசதியாக புதிய செல்போன் கோபுரத்தை அமைக்க வேண்டும்.

    கோர்ட்டு வளாகத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் தார்சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களையும், நீதித்துறை பணியாளர் காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 2 புதிய கோர்ட்டுகளை உடனடியாக திறக்க வேண்டும்.

    கோர்ட்டுக்கு செல்லும் சாலையை பென்னாகரம் சாலையுடன் இணைக்க வேண்டும்.

    வக்கீல் சங்கத்தினர் கேன்டீன் அமைக்க கோர்ட்டு வளாகத்தில் இலவசமாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 
    ஆர்டர்லி முறை தமிழகத்தில் ஒழிக்கப்பட்டு விட்டதாக டி.ஜி.பி. பொய் சொல்வதாகவும், ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் இப்போதும் ஆர்டர்லிகளாக 4 போலீஸ்காரர்கள் பணி செய்கின்றனர் என்றும் ஐகோர்ட்டில் வக்கீல் வாதிட்டார்.
    சென்னை:

    போலீசாரின் பணி நேரத்தை வரையறை செய்வது தொடர்பான வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக டி.ஜி.பி. பதில் மனுவை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். ஆனால், சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வுபெற்ற கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் வீட்டில் இப்போதும் 4 போலீஸ்காரர்கள் ‘ஆர்டர்லி’ வேலை செய்கின்றனர் என்று கூறி பெயர், புகைப்பட ஆதாரத்துடன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இதையடுத்து அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், போலீஸ்காரர்களுக்கு வார விடுமுறை வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவுக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதி, தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையாக போலீசாருக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா? இதில் வித்தியாசம் உள்ளதா? அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறை வழங்குவது போல, போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறையும், மற்றொரு நாள் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியமும் வழங்கினால் என்ன? இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    மேலும் வழக்கு விசாரணையின்போது, அண்மையில் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதற்கு முந்தைய ஆட்சியில், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த கைதியை அமைச்சர் நேரில் சென்று பார்த்த சம்பவம் நடந்தது. அரசியல்வாதிகள், இதுபோன்று ரவுடிகளை ஊக்குவிப்பதால் தான் சமுதாயத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். 
    ×