search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian women"

    • 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 301 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்களாம்.
    • படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது குறித்து மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.பி.எஸ்.) மற்றும் டாடா இன்ஸ்டியூடிட் சோசியல் சைன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின.

    இதில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 10 மடங்கு அதிகமாக வீட்டு வேலைகளை செய்வது தெரிய வந்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆண்கள் வீட்டு வேலைகளுக்கு 98 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள்.

    அவர்களுடன் ஒப்பிடுகையில் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 301 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்களாம்.

    இதன் மூலம் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்திய பெண்கள் ஊதியம் இல்லா வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பில் ஆண்களை விட 10 மடங்கு அதிகமாக வேலை செய்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

     

    இருப்பினும் படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெண்கள் ஆண்களை விட 3 மடங்கு அதிக நேரத்தை வீட்டு மற்றும் பராமரிப்பு வேலைகளில் செலவிடுகிறார்கள்.

    ஆனால் இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் 10 மடங்கு அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று குடும்பம் மற்றும் பொருளாதார சிக்கல்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி வயது குழந்தைகளின் இருப்பு, ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் பெண்கள் நேரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தில் வாழும் பெண்கள் சராசரியாக, பல தலைமுறை குடும்பங்களில் வசிப்பவர்களை விட அதிக ஊதியம் பெறாத வேலைகளை கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளியில் "லிப் ரீடிங்" முறையில் விடாமுயற்சியுடன் கல்வியை பயின்றார்
    • 2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்

    கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரூவை சேர்ந்தவர் 27 வயதான சாரா சன்னி (Sarah Sunny).

    இவருக்கு மரியா சன்னி எனும் சகோதரியும் பிரதிக் குருவில்லா எனும் சகோதரனும் உள்ளனர். பிரதிக் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மரியா பட்டய கணக்காளராக பணிபுரிகிறார்.

    இவர்கள் மூவருக்கும் சிறு வயது முதலே இரண்டு செவிகளிலும் கேட்டல் குறைபாடு உண்டு. இருந்தும்  அதனை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை இவர்கள் அடைந்தனர்.

    இவர்களது பெற்றோர், கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரத்யேக பள்ளிகளில் இவர்களை படிக்க வைக்காமல், இத்தகைய குறைபாடுகள் உள்ளவர்களையும் பிற குழந்தைகளுடன் படிக்க அனுமதிக்கும் பள்ளிகளிலேயே இவர்களை சேர்த்தனர்.

    பள்ளியில் சாரா "லிப் ரீடிங்" (lip reading) எனும் உதடுகளின் அசைவை உணரும் வழிமுறை மூலமாக கல்வி கற்று கொண்டார். பெங்களூரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சட்ட கல்வியில் சேர்ந்தார். அங்கும் அதே முறையில் பயின்றார்.

    2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பாக தனது கட்சிக்காரருக்காக வாதாடினார்.

    சாராவிற்காக ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளரை (sign language interpreter) வைத்து கொள்ள உச்ச நீதிமன்றம் உதவியது. சைகை மொழி மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் இவர் தனது வாத பிரதிவாதங்களை வைக்க, அதனை தலைமை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

    இந்திய சட்ட வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய குறைபாடு உள்ள ஒருவர் வாதாடியது இதுவே முதல் முறை.

    சன்னிக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவில் எதிர்காலத்தில் சட்டத்துறையில் கல்வி பெறவும், வழக்கறிஞராக பணியாற்றவும் இவரை போன்ற பலர் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

    ×