என் மலர்
நீங்கள் தேடியது "Lawyer"
- தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.
- வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியை வழக்கறிஞர் ஒருவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 16 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ராஜேஷ் குமாருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலுவையில் உள்ள கட்டணங்கள் காரணமாகத் துண்டிக்கப்பட்ட தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், மொத்த நிலுவைத் தொகையில் 50 சதவிகிதம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பை நீதிபதி குமார் மேற்கோள் காட்டினார்.
இறுதியில், வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் அந்த தொகையை டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.
ஆனால் வழக்கறிஞர் மகேஷ் திவாரி தனது வாதங்களை முன்வைத்த விதம் குறித்து நீதிபதி குமார் ஆட்சேபம் தெரிவித்தார். நீதிமன்றத்தில் இருந்த ஜார்க்கண்ட் மாநில வழக்கறிஞர் கவுன்சிலின் தலைவரை அழைத்து, வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.
அப்போது மகேஷ் திவாரி, நீதிபதி இருக்கையை நோக்கிச் சென்று, "நான் என் வழியில்தான் வாதிடுவேன்" என்றும் நீதிபதியைப் பார்த்து "வரம்பை மீறாதீர்கள்" என்றும் எச்சரித்தார். மேலும் "நாடு நீதித்துறையால் எரிந்துகொண்டிருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் வழக்கறிஞர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிந்துள்ளது.
- திருமாவளவன் வந்த கார் தனது பைக் மீது மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- இதை பார்த்த விசிகவினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீது சனாதன ஆதரவு வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்திய முயற்சியை கண்டித்து நேற்று விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த தனது பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை பார்த்த விசிகவினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணையில், பைக்கில் வந்தவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீலான ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "எனது வண்டியின் முன்னாள் இருசக்கர வண்டியின் ஒரு இளைஞர் போய் கொண்டிருந்தார். அந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் எனது வண்டியை கவனித்து திடீரென வாகனத்தை நிறுத்தி விட்டு எனது வாகனத்தை நோக்கி வந்து சத்தம் போட்டார்.
நான் நமது வையை நிறுத்தாமல் செல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் வாகனம் செல்லமுடியாதபடி அந்த இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
இதை அறிந்து எனது பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அந்த இளைஞரை தள்ளிபோகுமாறு கூறினர். ஆனால் நான் காருக்குள் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டே அந்த இளைஞர் சத்தம் போட்டு பேசிக்கொண்டே இருந்தார்.
நமது கட்சியை சேர்ந்த தோழர்கள் அவரிடம் தள்ளிபோகுமாறு கூறியுள்ளனர். அனால் அவர்களிடமும் அவர் முறைத்து பேசியிருக்கிறார். அப்போது அந்த இளைஞருக்கும் கட்சி தோழர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவப்பட்ட கட்சி தோழர்கள் அந்த இளைஞரை அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் அந்த இளைஞரை கூட்டி கொண்டு சென்றனர். இது தான் நடந்தது.
பிரச்னை செய்தது அந்தத் தம்பிதான். இருசக்கர வாகனம் மீது எனது கார் மோதியதாக வெளியான தகவல் தவறு. ஆனால் ஊடகங்கள் இதை பெருக்கி, நாம் திட்டமிட்டே அந்த இளைஞரை அடித்தது போல அவதூறு செய்திகளை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞரின் பைக் மீது மோதவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை விசிக தியூனை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- த.வெ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் சோக சம்பவத்துக்கு காரணம்.
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்படுகிறது.
கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வலியறுத்தி த.வெ.க. வக்கீல் பிரிவினர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வந்தனர்.
அப்போது த.வெ.க. வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது காவல்துறை கடமையாற்ற தவறி உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.
விஜய் பிரசாரத்தின்போது கூடி இருந்தவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் இறந்தது தொடர்பாக தடயங்களை அழிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
த.வெ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் சோக சம்பவத்துக்கு காரணம். கூட்டத்தில் விஜய் பேசியபோது மர்ம நபர்கள் செருப்பு வீசினார்கள். இந்த சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்படுகிறது. உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம்.
த.வெ.க. கூட்டத்தில் குண்டர்கள் பலர் கல்வீச்சிலும், செருப்புகளையும் வீசி தொண்டர்களை தாக்கியுள்ளனர். சதி திட்டம் தீட்டி இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது முன்கூட்டியே ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்திருந்ததும் சதி திட்டத்திற்கான ஆதாரங்களாக அமைந்துள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் போதுமான காவலர்களை பணியமர்த்தாததும் முன்னேற்பாடுகளை செய்யாததும் இந்த சம்பவத்துக்கு காரணமாகும்.
எனவே இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிப்படும். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.
தொடர்ந்து எங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்து வாதாடி மேற்கண்ட குற்றத்துக்கு காரணமானவர்களை வெளிக் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மார்கன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி அவரது 26- வது படமான லாயர் திரைப்படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
மார்கன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி அவரது 26- வது படமான லாயர் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜென்டில்வுமன் திரைப்படத்தை இயக்கிய ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் டைட்டிலை கடந்த வாரம் வெளியிட்ட நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் ஃபர்ஸ்ட் ஷாட்டை படக்குழு வீடியோ எடுத்து வெளியீட்டுள்ளது. படத்தில் இந்தி நடிகையான ரவீனா டாண்டன் இணைந்துள்ளார். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- விஜய் ஆண்டனி அவரது 26- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தை ஜென்டில்வுமன் திரைப்படத்தை இயக்கிய ஜோஷ்வா சேதுராமன் இயக்கவுள்ளார்.
மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `ககன மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .
அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி அவரது 26- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜென்டில்வுமன் திரைப்படத்தை இயக்கிய ஜோஷ்வா சேதுராமன் இயக்கவுள்ளார். படத்தின் டைட்டில் அறிவிப்பை தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தையும் விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு லாயர் என தலைப்பு வைத்துள்ளனர். படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன.
- நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
வேளச்சேரி, அடுத்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது43). வக்கீலானா இவர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராக இருந்தார்.
இவர், விருகம்பாக்கம் கணபதிராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலகம் நடத்தி அங்கேயே தங்கி இருந்தார். கடந்த 2 நாட்களாக பூட்டி கிடந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு தலைமையில் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது, வக்கீல் வெங்கடேசன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் வெட்டிய கத்தியை அப்படியே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.
கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன. அவரை கொலையாளிகள் சித்ரவதை செய்து கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சம்பவத்தன்று 4 பேர் கும்பல் வெங்கடேசனை கொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்து தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கொலையுண்ட வெங்கடேசன் மீதும் குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது நண்பரான சேதுபதி என்பவருடன் சேர்ந்து வக்கீல் அலுவலகம் நடத்தி வந்து உள்ளார். கடந்த மாதம் சேதுபதி மர்ம கும்பலால் நெல்லையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக வெங்கடேசனின் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள்.
கொலை தொடர்பாக வெங்கடேசனின் நண்பர்கள் உள்பட 4 பேர் மீது போலீசாருக்கு சந்கேதம் ஏற்பட்டு உள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட வக்கீல் வெங்கடேசன் மனைவி சரளா விருகம்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் கொலையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உடன் இருந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கடேசனிடம் ஓட்டுநகராக இருந்த கார்த்திக் மற்றும் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வைத்து இருவரையும் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- பெற்றோர் வீட்டில் தங்கி பி.எஸ்.சி படித்து வருகிறார்.
- அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கோவை,
கோவை ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் அக்ஷய் (வயது 27). வக்கீல். இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த அனுதர்ஷினி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அனுதர்ஷினி தனது பெற்றோர் வீட்டில் தங்கி பி.எஸ்.சி படித்து வருகிறார். இந்நிலையில், அக்ஷயுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. செல்போனில் பேசும்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோன்று சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அக்ஷய் விரக்தியடைந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (31). மாநகராட்சி ஒப்பந்த பணியாளர். இவர் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 வழக்குகள் இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் ரத்தினபுரியில் பிரியாணி ஓட்டல் நடத்தி வந்தார். அதில் போதிய வருமானமில்லாமல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் மணிகண்டன் விரக்தி அடைந்த அவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே விஷம் குடித்து மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
- பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் அமிர்நிஷா (21). இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தங்களது வக்கீல் அலுவலகத்தில் இருந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர்.அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த வக்கீல் ரகுமான்கான் (26) என்பவர் ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். மேலும் தடுக்க வந்த ஜமீலாபானுவுக்கும் தலை, கையில் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அங்கிருந்து ரகுமான்கான் தப்பினார்.
இதில் படுகாயம் அடைந்த தாய்-மகள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அமிர்நிஷா சேலம் கட்டக்கல்லூரியில் படிக்க சென்றபோது, ரகுமான் கான் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரகுமான்கானை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரகுமான் கான் கோபத்தில் தாய்-மகளை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ரகுமான் கானை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகுமான் கான் திருப்பூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு பார்கவுன்சில் அவரை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. தாய்-மகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ரகுமான் கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அத்துமீறி வக்கீல் அலுவலகத்துக்குள் நுழைந்த குற்–றத்–துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், பெண்களை தொல்லை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வழக்கில் உதவுவதற்காக பெண் வக்கீலகள் சத்யா, பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மாதத்துக்குள் சாட்சி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுபோல் கொலைமுயற்சி வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்குவது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.
- ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி:
புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.
நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.
இந்த ரெயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனே கோட்டை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.
பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ரெயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டவர்.
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சங்கருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
- தலைமறைவாக உள்ள சரண்யாவின் கணவா் சங்கரை போலீசார் தேடி வருகின்றனா்.
அவிநாசி:
அவிநாசி செம்பியநல்லூா் ஊராட்சி முத்தம்மாள் நகரை சோ்ந்த லட்சுமணன் மகள் சரண்யா (வயது 25), வக்கீல். இவருக்கும் திருப்பூரை சோ்ந்த கட்டடப் பொறியாளா் சங்கருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து பெற்றோா் வீட்டில் வசித்து வந்த சரண்யா, கடந்த ஜூலை மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும், சப்-கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.இதற்கிடையில், இவ்வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவிநாசி சிஐடியூ., கட்டட கட்டுமான தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய சரண்யாவின் மாமனாரான திருப்பூா் கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மணி (65), இவரது மகள் கோபிசெட்டிபாளையம் அங்காளம்மன் நகரைச் சோ்ந்த லாவண்யா (26), இவரது கணவா் மெளலி சங்கா்(28) ஆகியோரை போலீசார் இரவு கைது செய்தனா்.
தலைமறைவாக உள்ள சரண்யாவின் கணவா் சங்கரை போலீசார் தேடி வருகின்றனா்.
- மத்திய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதை கண்டித்து செங்கோட்டையில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவா் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
செங்கோட்டை:
மத்திய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதை கண்டித்து செங்கோட்டையில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவா் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் முத்துக் குமாரசாமி, செயலாளா் அருண், பொருளாளா் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா். மூத்த வக்கீல் கிருஷ்ண மூர்த்தி வரவேற்று பேசினார்.
இதில் வக்கீல்கள் சங்கரலிங்கம், ஆதிபால சுப்பிரமணியன், இளங்கோ, சிதம்பரம், சத்தியசங்கர், நல்லையா, சுபசேகர், ஆசாத், வெங்கடேஷ், முகம்மது சிராஜ், ராம லிங்கம், குமார், வீரபாண்டியன், வைரவன், ராஜா, சிவ சுந்தரவேலன், முத்துராஜ், மாலதி, இசக்கி இந்திரா, கலீலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
- நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்றது
கரூர்
மத்திய அரசு இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் 3 முக்கிய பிரிவான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சியை சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் உள்ள சரத்துகளில் பல்வேறு மக்கள் விரோத சட்டவிரோத சரத்துகளும் புதிதாக திணிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் கருத்துகளை கேட்காமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினை உடனே திரும்ப பெற கோரியும் நேற்று கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு கரூர் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் பார்த்திபன், செயலாளர் தமிழ்வாணன், நன்மாறன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.






