search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court verdict"

    • ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாஸ். வக்கீலான இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி வீட்டில் இருந்த ரஞ்சித் சீனிவாசை, அவரது மனைவி மற்றும் தாய்-மகள் முன்னிலையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்தது. ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்புகளை சேர்ந்த நிஜாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல்கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சபரூதின், மன்சாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நஸீர், ஜாஹீர்உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷரப் ஆகிய 15 பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சேர்க்கப்பட்ட முதல் 8 பேர் கொலையில் நேரடியாக ஈடுபட்டதும், மற்றவர்களுக்கு கொலை சதியில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    அதனடிப்படையில் 15 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்பு அனைவரின் மத்தியிலும் எழுந்தது. இதனால் மாவேலிக்கரை கோர்ட்டில் இன்று பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதன்படி குற்றவாளி 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
    • பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் அமிர்நிஷா (21). இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தங்களது வக்கீல் அலுவலகத்தில் இருந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர்.அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த வக்கீல் ரகுமான்கான் (26) என்பவர் ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். மேலும் தடுக்க வந்த ஜமீலாபானுவுக்கும் தலை, கையில் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அங்கிருந்து ரகுமான்கான் தப்பினார்.

    இதில் படுகாயம் அடைந்த தாய்-மகள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அமிர்நிஷா சேலம் கட்டக்கல்லூரியில் படிக்க சென்றபோது, ரகுமான் கான் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரகுமான்கானை கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரகுமான் கான் கோபத்தில் தாய்-மகளை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ரகுமான் கானை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகுமான் கான் திருப்பூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு பார்கவுன்சில் அவரை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. தாய்-மகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ரகுமான் கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அத்துமீறி வக்கீல் அலுவலகத்துக்குள் நுழைந்த குற்–றத்–துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், பெண்களை தொல்லை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வழக்கில் உதவுவதற்காக பெண் வக்கீலகள் சத்யா, பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மாதத்துக்குள் சாட்சி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுபோல் கொலைமுயற்சி வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்குவது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.

    • ஐகோர்ட்டு தீர்ப்பின்படி மதுரை வீரருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.
    • இந்த பரிசை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    மதுரை

    கடந்த 2021-ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 மாடுகளைப் பிடித்த மதுரை விராட்டிபத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த வீரர் யார்? என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

    இதையடுத்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கண்ணனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் சிறந்த வீரருக்கான கார் பரிசை, மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    காளைகளை வாடி வாசலில் திறந்து விட்டு, ஒரு வரலாற்றை உருவாக்கி, முதல் முதலாக அந்த விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் பெயரில் கார் பரிசு வழங்குகிற முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்த பெருமைக்கும், வரலாற்றுக்கும் சொந்தக்கரார் எடப்பாடி பழனிசாமி ஆவார்.

    2021-ம் ஆண்டு வழங்குகிற முதல் பரிசு காரை வழங்குவதற்கு, கோர்ட்டில் வழக்கு இருந்த காரணத்தால் தொடர்ந்து பாதுகாத்து வைக்கப்பட்டது. கண்ணன் என்கிற அந்த காளை பிடிவீரர் சிறந்த வீரராக ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் மாடுபிடி வீரர் கண்ணனிடம் முதல் பரிசான கார் ஒப்படைக்கப்பட்டது.

    உலக பிரசித்தி பெற்ற வாடிவாசல் என்று சொன்னால் அது அலங்கா நல்லூர் வாடிவாசல் ஆகும். இந்த வாடிவாசலில் களம் காண்கிற அந்த காளைகளுக்கு மிகப்பெரிய சிறப்புகள் உண்டு. இந்த வாடிவாசலில் நடைபெறுகிற உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு ஒரு அரங்கத்துக்குள் அடக்கி விடுவார்களோ என்ற அச்சம் இன்றைக்கு இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

    அது மட்டுமல்ல அலங்கா நல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கிற இடம் வனப்பகுதி ஒட்டி அரசு இடமாக அது இருக்கிறது. ஒரு கால்நடை பண்ணை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 66 ஏக்கரில் உள்ள அந்த இடத்தில் குளம் இருக்கிறது. நீர்நிலைகளில் எப்படி அமைக்க முடியும்? அதுபோல அரசு வேலைவாய்ப்புகளை விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்க நிர்ணயம் செய்யப்படும், முழுமையாக செயல்படுத்தும் போது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.

    விளையாட்டு துறையில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகளும், அரசு வேலையும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று பல வாக்குறுதிகள் விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது அமைச்சராகி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகிறார். விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதிஇளைஞர்களை ஏமாற்றாமல் ஏதாவது அறிவிப்பு கொடுப்பாரா? அப்படி கொடுத்தால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×