என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கு தண்டனை"

    • தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
    • இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

    மதுரை:

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட பாளையஞ்செட்டிகுளத்தில் தேர்தல் முன்விரோதத்தால் 2016-ல் பெருமாள் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் தரப்பினர் கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    இந்த வழக்கில், அதே ஊரைச் சேர்ந்த ராமசுப்பு மகன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வைகுண்டம் என்பவர், செல்வராஜ் தரப்பினருக்கு எதிராக சாட்சியளித்தார். இதனால், வைகுண்டம் மீது செல்வராஜ் தரப்பினர் ஆத்திரமடைந்தனர். நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இருந்தபோதிலும் வைகுண்டம் செல்வராஜ் தரப்பிற்கு எதிராக சாட்சி அளித்துள்ளார்.

    2022 மார்ச் 10-ந்தேதி பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள கால்வாயில் வைகுண்டம் குளித்துக் கொண்டிருந்தார். அங்கு சென்ற செல்வராஜ் (43), அந்தோணி ராஜ் (எ) பிரபாகரன் (46), தேவதாஸ் என்பவரின் மகன்களான அருள் பிலிப் (31), அன்டோ நல்லையா (28), திரவியம் என்பவரின் மகன் பாபு அலெக்சாண்டர் (41), கோவில்பிச்சை என்பவரின் மகன் ராஜன் (70), ராஜன் மனைவியான லீலா (60), தேவதாஸ் மனைவி ஜாக்குலின் (59) ஆகிய 8 பேரும், வைகுண்டத்துடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் வைகுண்டம் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வராஜ் உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சுமத்தப்பட்ட செல்வராஜூக்கு தூக்கு தண்டனையும், அந்தோணி ராஜ், அருள் பிலிப், அன்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டர் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ராஜன், செல்வலீலா, ஜாக்குலீன் ஆகிய மூவருக்கும் 2 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்தநிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் வேல்முருகன் நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின் போது அரசு தரப்பில் தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, நீதிமன்றத்தின் விசாரணையின் போது எதிரிகள் குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு குற்றம் குற்றம் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் செல்வராஜூக்கு தூக்கு தண்டனை மற்றும் மற்ற எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

    எனவே குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டனர். இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

    இதனால் செல்வராஜூக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும் ஆண்டனி ராஜ் உள்ளிட்டோருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    • பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஆதாரங்களை அழிக்க முயன்றார்.
    • விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

    தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    2017-ல் நடந்த இந்த கொடூர சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம், 2020-ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

    தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்வார்.

    இறந்தவர்களில் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவர். பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பின்னரே அவர் அவர்களைக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஆதாரங்களை அழிக்க முயன்றார்.

    2017ல் போலீசார் ஷிரைஷியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியபோது இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    வீட்டை சோதனை செய்தபோது, குளிர்சாதன பெட்டிகளில் ஒன்பது உடல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

    ஜப்பானில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகிலேயே அதிக தற்கொலை விகிதங்களில் ஜப்பான் ஒன்று. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.

    • ஈரான் - இஸ்ரேல் நாடுகள் 10 நாட்களுக்கும் மேலாக சண்டையிட்டு வந்தன.
    • டிரம்பின் தலையீட்டை தொடர்ந்து 2 நாடுகளும் போர்நிறுத்ததை அறிவித்துள்ளன.

    ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டை தொடர்ந்து 2 நாடுகளும் போர்நிறுத்ததை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், இஸ்ரேலுக்காக உளவு வேலை பார்த்த 3 பேருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.

    இஸ்ரேலுக்காக உளவு பார்த்து, அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியாக ஈரான் அரசு குற்றம் சாட்டி இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

    இதே குற்றச்சாட்டுகளுடன் ஏற்கனவே 3 பேருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
    • 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    கோலாலம்பூர்:

    தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா்.

    இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா். இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

    அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, உயா்நீதி மன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018-ல் தீா்ப்பு அளித்தது.

    இந்நிலையில், தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) நிறைவேற்றப்பட உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    • அதிகாரத்தை பல தருணங்களில் ஜனாதிபதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை.
    • தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-ம் பிரிவின்படி, ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த அதிகாரத்தை பல தருணங்களில் ஜனாதிபதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை.

    கருணை மனுக்கள் மீதான ஜனாதிபதியின் முடிவே இறுதியானது என்று புனிதப்படுத்துவதன் மூலம், குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் வாழும் உரிமையை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. பல தருணங்களில் ஜனாதிபதிகளால் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அதை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளின் போது, அதை கனிவுடன் பரிசீலிக்கும் சுப்ரீம் கோர்ட்டு, தண்டிக்கப்பட்ட மனிதர்களின் தண்டனையை குறைத்தோ, ரத்து செய்தோ ஆணையிடுகின்றன. அண்மைக்காலங்களில் கூட தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர்.

    எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இது தொடர்பாக செய்யப்பட உள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் தண்டனையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
    • கேரள மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 26 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மகளான 5 வயது சிறுமி, கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

    மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த அஸ்பாக் ஆலம்(வயது28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் சிறுமியை மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச்சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது.

    அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்பாக் ஆலமிற்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார்.

    அவர் மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளில் 13 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், கொலை குற்றச்சாட்டுக்கு தூக்கு தண்டனையும், மற்ற குற்றச்சாட்டுகளுக்கு 5 ஆயுள் தண்டனைகள், 49 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ7.20லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    சம்பவம் நடந்த 110 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அஸ்பாக் ஆலமிற்கு தூக்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து அஸ்பாக் ஆலம் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்களின் தண்டனையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அதன்படி அஸ்பாக் ஆலம் மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 26 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். கடந்த 32 ஆண்டுகளாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பல குழந்தைகளை கொன்ற களியக்காவிளையை சேர்ந்த அழகேசன் என்பவர் 1979-ம்ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

    14 பேரை கொடூரமாக கொன்ற சந்திரன் என்பவர் 1991-ம் ஆண்டு கண்ணூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். அதன்பிறகு பல வழக்குகளில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்படவில்லை. மாநிலத்தில் உள்ள 4 சிறைகளிலும் 21 மரண தண்டனை கைதிகள் தூக்கிற்காக காத்திருக்கிறார்கள்.

    திருவனந்தபுரம் பூஜாப்புரா சிறையில் 9 பேரும், திருச்சூர் விய்யூரில் 5 பேரும், கண்ணூரில் 4 பேரும், விய்யூர் உயர் பாதுகாப்பு சிறையில் 3 பேரும் உள்ளனர். நீதிமன்றங்களில் மேல்முறையீடு உள்ளிட்ட காரணங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    • ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாஸ். வக்கீலான இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி வீட்டில் இருந்த ரஞ்சித் சீனிவாசை, அவரது மனைவி மற்றும் தாய்-மகள் முன்னிலையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்தது. ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்புகளை சேர்ந்த நிஜாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல்கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சபரூதின், மன்சாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நஸீர், ஜாஹீர்உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷரப் ஆகிய 15 பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சேர்க்கப்பட்ட முதல் 8 பேர் கொலையில் நேரடியாக ஈடுபட்டதும், மற்றவர்களுக்கு கொலை சதியில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    அதனடிப்படையில் 15 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்பு அனைவரின் மத்தியிலும் எழுந்தது. இதனால் மாவேலிக்கரை கோர்ட்டில் இன்று பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதன்படி குற்றவாளி 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2022-ம் ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு மாணவி சத்ய பிரியா தள்ளிவிட்டு கொல்லப்பட்டார்.
    • சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிபதி குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரம் 30-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.

    சென்னை:

    2022-ம் ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு மாணவி சத்ய பிரியா தள்ளிவிட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சதீஷ் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, சதீஷும், சத்யாவும் காதலித்து வந்ததாகவும் பிறகு சதீஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு பிரிய துவங்கியிருக்கிறார் சத்யா. இதை ஏற்றுக்கொள்ள முடியாத சதீஷ், அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.

    எனினும் சத்யப்ரியா சதீஷின் காதலை ஏற்கவேயில்லை. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரெயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்று கொண்டிருந்த மின்சார ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இதனை தொடர்ந்து கைதான சதீஷ் பல முறை ஜாமினுக்கு முயன்றும் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து சதீஷ் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டதாகவும், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 27ஆம் தேதி அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

    இதையடுத்து கடந்த 27 தேதிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார். சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிபதி குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரம் 30-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

    இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்தின் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SC #Daswanth
    புதுடெல்லி:

    சென்னை போரூரை சேர்ந்த ஹாசினி என்ற 7 வயது சிறுமி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவரை மாங்காடு போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இதற்கிடையே தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொலை செய்து விட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர் அவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

    சிறுமி ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது.

    இந்த வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.

    தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டு அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை கடந்த ஜூலை 11-ந்தேதி உறுதி செய்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. இந்த அப்பீல் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    இந்த வழக்கு முடியும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும், ஒரு வேளை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் மனுவை விசாரணைக்கு ஏற்று இருக்க மாட்டோம் என்றும், மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #SC #Daswanth
    மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆசிரியருக்கு குறிப்பிட்ட தேதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #MahendraSinghGond #JabalpurCentralJail
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் என்பவர் பாடம் சொல்லி கொடுக்க சென்றார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்து விட்டு தப்பி சென்றார். படுகாயத்துடன் சிறுமி மயங்கிய நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்தாள்.

    பின்னர் சிறுமியை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை மத்திய பிரதேச அரசு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தது. அங்கு சிறுமிக்கு பல ஆபரேசன் செய்யப்பட்டது.

    தப்பி ஓடிய ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் மகேந்திர சிங் கோன்ட்டுக்கு தூக்கு தண்டனை விதித்து சாத்னா கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இதை எதிர்த்து மத்திய பிரதேச ஐகோர்ட்டில் மகேந்திரசிங் கோன்ட் அப்பீல் செய்தார். இதை விசாரித்த மத்திய பிரதேச ஐகோர்ட்டு, ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அவரை வருகிற மார்ச் 2-ந்தேதி ஜாபல்பூர் சிறையில் தூக்கில் போட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

    அந்த சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் வழங்கப்பட்ட 9-வது தூக்கு தண்டனை இதுவாகும்.

    இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை என்றால் மார்ச் 2-ந்தேதி தூக்கில் போடப்படுவார். அப்படி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் புதிய சட்டத்தின் கீழ் முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றம் இதுவாக இருக்கும் என்றனர். #MahendraSinghGond #JabalpurCentralJail
    பாகிஸ்தானில் நாளை மறுநாள் தூக்கிலிடவிருந்த போலீஸ்காரரின் மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #Pakistanchiefjustice #staysexecution
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர்  கிசார் ஹயாத் என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். தன்னுடன் பணியாற்றிய சகப்போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டதாக கிசார் ஹயாத் கைது செய்யப்பட்டார். லாகூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து, லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். கடந்த 2008-ம் ஆண்டு தீவிரமான மனநோயாளியாக மாறிய கிசார் ஹயாத்துக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என  கிசார் ஹயாத்தின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இதற்கிடையில், 15-1-2019 அன்று காலை அவரை தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது.

    மனநிலை சரியில்லாதவரை தூக்கிலிட்டு கொல்வதற்கு சர்வதேச சட்டங்கள் இடமளிக்காததால் இந்த தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என பல்வேறு தர்ப்பினரிடம் இருந்தும் பிறநாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தும் கோரிக்கை எழுந்தது.


    இவற்றை எல்லாம் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி சகிப் நசிர், கிசார் ஹயாத்துக்கு நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

    லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சென்று பார்வையிட வேண்டும். அங்குள்ள மனநல மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது? என்று அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த கிசார் ஹயாத்தின் தாயார் மனுமீது நாளை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ளது.

    கிசார் ஹயாத்தின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கு விசாரணையும் நாளை நடைபெறுகிறது.  #Pakistanchiefjustice #staysexecution #mentallyill #mentallyillpoliceman
    சீனாவில் 11 பெண்களை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. #DeathPenalty

    பெய்ஜிங்:

    சீனாவின் காங்சூ பகுதியை சேர்ந்தவர் கயோ செங் யாங் (54). இவர் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்தார். இவர் 11 பெண்களை கற்பழித்து கொலை செய்தார்.

    அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக சிதைத்தார். கொலை செய்யப்பட்டவர்களில் ஒரு சிறுமியும் அடங்குவார். இக்கொலை சம்பவங்கள் கடந்த 1988 முதல் 2002-ம் ஆண்டு வரை நடந்தது.

    சிவப்பு நிற ஆடை அணிந்த பெண்களை பின் தொடர்ந்து இப்படுகொலையை அவர் நிகழ்த்தினார். இவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. #DeathPenalty

    ×