search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child molestation"

    • ராஜம் கோடி முனை திரும்பி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
    • அண்ணன்-தம்பியான சிறுவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குளச்சல்:

    மதுரை சொக்கலிங்கம் நகர் 5-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ராஜம் (42). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021-ல் இந்த தம்பதியினர் குடும்பத்துடன் குமரி மாவட்டம் குளச்சல் அருகே கோடிமுனை வந்து அங்கு வசித்து வருகின்றனர்.

    இதில் 16 வயது சிறுவன் தவிர மற்ற குழந்தைகள் பனவிளை சரல்விளையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். 16 வயது சிறுவன் மதுரையில் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளான். கோடிமுனைக்கு வந்தப்பின் பள்ளிக்கு செல்லாமல் உள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுவர்களின் தாய் ராஜம் மதுரைக்கு சென்றார். இவரை 16 வயது மற்றும் 9 வயது சிறுவன் ஆகியோர் குளச்சல் பஸ் நிலையத்தில் பஸ் ஏற்றிவிட்டனர். பின்னர் சிறுவர்கள் வீட்டுக்கு திரும்பி செல்லவில்லை.

    இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாத குழந்தைகள் குறித்து ராஜா, ராஜத்திற்கு தகவல் தெரிவித்தார். ராஜம் கோடி முனை திரும்பி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவர்களை தேடி வருகின்றனர். அண்ணன்-தம்பியான சிறுவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆசிரியருக்கு குறிப்பிட்ட தேதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #MahendraSinghGond #JabalpurCentralJail
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் என்பவர் பாடம் சொல்லி கொடுக்க சென்றார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்து விட்டு தப்பி சென்றார். படுகாயத்துடன் சிறுமி மயங்கிய நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்தாள்.

    பின்னர் சிறுமியை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை மத்திய பிரதேச அரசு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தது. அங்கு சிறுமிக்கு பல ஆபரேசன் செய்யப்பட்டது.

    தப்பி ஓடிய ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் மகேந்திர சிங் கோன்ட்டுக்கு தூக்கு தண்டனை விதித்து சாத்னா கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இதை எதிர்த்து மத்திய பிரதேச ஐகோர்ட்டில் மகேந்திரசிங் கோன்ட் அப்பீல் செய்தார். இதை விசாரித்த மத்திய பிரதேச ஐகோர்ட்டு, ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அவரை வருகிற மார்ச் 2-ந்தேதி ஜாபல்பூர் சிறையில் தூக்கில் போட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

    அந்த சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் வழங்கப்பட்ட 9-வது தூக்கு தண்டனை இதுவாகும்.

    இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை என்றால் மார்ச் 2-ந்தேதி தூக்கில் போடப்படுவார். அப்படி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் புதிய சட்டத்தின் கீழ் முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றம் இதுவாக இருக்கும் என்றனர். #MahendraSinghGond #JabalpurCentralJail
    ×