search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanged"

    • 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அருண்குமார் (35), டிரைவர் இவரது மனைவி உஷா

    இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    தற்போது இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக அருண்குமாருக்கு சரியாக வேலை இல்லாததால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

    மேலும் அருண்குமார் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிடையே சண்டை ஏற்பட்டு வந்தது. கடன் தொல்லையும் அதிகமாகியுள்ளது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அருண்குமாரின் மாமியார் லீனாதேவி நேற்று வீட்டிற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்துவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு உஷா தனது குழந்தை களுடன் படுக்கை அறையிலும் அருண்குமார் வீட்டு வராண்டாவிலும் தூங்கினர்.

    இந்த நிலையில்  குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில்

    உஷா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருண்குமார் உஷாவை மீட்டு புதுவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து முத்தியால் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபக் மாலை 5 மணி ஆகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த தீபக்கின் அண்ணன் ஆனந்த் மாடிக்கு சென்று கதவை தட்டினார்.
    • தீபக்கின் அண்ணன் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை திருமுடி சேதுராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தே தீபக் வேலை செய்து வந்தார். இதற்கிடையே தீபக்கை திருமணம் செய்து கொள்ளும்படி அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்தனர்.

    ஆனால் தீபக் தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தனது பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவரது பெற்றோர் அதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் அடிக்கடி தீபக்குக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து கொண்டே இருந்து வந்தது.

    பின்னர் தீபக்கின் பெற்றோர் சமாதானம் அடைந்து அந்த பெண்ணையே திருமணம் செய்து தருவதாகவும் ஆனால் சில காலம் பொறுத்து கொள்ளும்படி தெரி வித்தினர்.

    ஆனால் தீபக் தனது பெற்றோர் வெறும் வார்த்தையால் சொல்கி றார்கள் என்று தவறாக நினைத்து மன உளைச்சலுடன் இருந்து வந்தார். வழக்கம்போல் தீபக் நேற்று காலை வீட்டின் மாடி அறைக்கு சென்றார்.அவர் கம்பெனி வேலை செய்ய செல்கிறார் என்று பெற்றோர் நினைத்து கொண்டனர்.

    ஆனால் தீபக் மாலை 5 மணி ஆகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த தீபக்கின் அண்ணன் ஆனந்த் மாடிக்கு சென்று கதவை தட்டினார்.

    நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாததால் ஆனந்த் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தீபக் தனது வேட்டியால் மின்விசிறியில் தூக்கில் தொங்குவைதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீபக்கை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிேசாதித்த டாக்டர்கள் தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தீபக்கின் அண்ணன் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டி வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சுந்தர மூர்த்தி விநாயக புரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது தந்தை சங்கர் வயது 48 இவர் அங்குள்ள பூக்கடையில் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள சங்கர் அடிக்கடி மது குடித்து விட்டு குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அசோக்கும் அவரது மனைவியும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பிய போது படுக்கை அறையில் மின் விசிறியில் சங்கர் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அசோக் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கிலிருந்து சங்கரை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு உயிரை மாய்த்த பரிதாபம்
    • கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 32) பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வனிதா (36) இவர்களுக்கு 2 குழந்தைகள உள்ளனர்.

    வனிதா வீட்டிலேயே பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கலிய பெருமாள் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கலியபெருமாள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு 2 முறை அரளி விதை அரைத்து குடித்தும், தூக்குபோட்டும் தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றினர்.

    இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டு மதியம் கலியபெருமாள் வீட்டுக்கு வந்தார். அப்போது வனிதா வீட்டின் கதவை உள்பக்க மாக பூட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். இதனை அறியாமல் கலியபெருமாள் அருகில் உள்ள வனிதாவின் தாய் வீட்டுக்கு சென்று விசாரித்தார்.

    அங்கு மனைவி இல்லாததால் மீண்டும் கலியபெருமாள் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வனிதா வீட்டில் இருந்ததால் அவரை எங்கு சென்றாய் என கேட்டு அவரது நடத்தையில் சந்தேக மடைந்தார்.

    இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வனிதா பள்ளிக்கு சென்று குழந்தைகளை அழைத்து வர சென்றார். அந்த நேரத்தில் கலியபெருமாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்த வனிதா கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் வனிதா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரத்தை பல தருணங்களில் ஜனாதிபதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை.
    • தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-ம் பிரிவின்படி, ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த அதிகாரத்தை பல தருணங்களில் ஜனாதிபதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை.

    கருணை மனுக்கள் மீதான ஜனாதிபதியின் முடிவே இறுதியானது என்று புனிதப்படுத்துவதன் மூலம், குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் வாழும் உரிமையை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. பல தருணங்களில் ஜனாதிபதிகளால் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அதை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளின் போது, அதை கனிவுடன் பரிசீலிக்கும் சுப்ரீம் கோர்ட்டு, தண்டிக்கப்பட்ட மனிதர்களின் தண்டனையை குறைத்தோ, ரத்து செய்தோ ஆணையிடுகின்றன. அண்மைக்காலங்களில் கூட தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர்.

    எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இது தொடர்பாக செய்யப்பட உள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கணவருக்கு டிபன் கொடுத்து விட்டு அங்கிருந்து வேலைக்கு சென்றார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது44). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கோமதி ஒதியம்பட்டில் உள்ள தனியார் கம்பெனி யில் வேலை செய்து வருகிறார்.

    முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு நீரழிவு நோய், ரத்த அழுத்த நோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய் இருந்து வந்தது.

    இந்த நோய் காரணமாக கடந்த சில நாட்களாக முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் கொடுமையால் முருகன் மனவிரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை கோமதி புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கணவருக்கு டிபன் கொடுத்து விட்டு அங்கிருந்து வேலைக்கு சென்றார்.

    முருகன் மனைவிக்கு போன் செய்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து வேலை முடிந்து கோமதி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் கணவர் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலை விபத்தில் சுகந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
    • இந்த நிலையில் சுகந்திக்கு மீண்டும் தலையில் பாதிப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு வீதியை சேர்ந்தவர் மணி. மீனவர். இவரது மூத்த மகள் சுகந்தி(வயது35). இவருக்கும் காரைக்காலை சேர்ந்த நாகமுத்து என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த ஆண்டு காரைக் காலில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுகந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்த நிலையில் சுகந்திக்கு மீண்டும் தலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற  காரைக்காலில் இருந்து சுகந்தி நல்லவாட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் பயண களைப்பாக உள்ளதாக கூறி சுகந்தி படுக்கை அறைக்கு தூங்க சென்றார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் முத்து லட்சுமி படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது சுகந்தி மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுகந்தியை தூக்கில் இருந்து மீட்டு ஆட்டோவில் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுகந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை மணி கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு மருத்துவ மனையில் ஆபரேஷன் செய்து கொண்டார்.
    • அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ராஜூவை மீட்டனர். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர் பாளையம் பகுதியை ராஜூ (வயது 65).

    இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு புதுவை அரசு மருத்துவ மனையில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பின்பு அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு கொண்டிருந்தது. சரியாக சாபிடமுடியாமல் இருந்தார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி ஜெயா வீட்டிற்கு வந்த போது ராஜூ தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ராஜூவை மீட்டனர். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜூவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து உருளைபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் சில நாட்கள் கழித்து அழைத்து வருவதாக தந்தையிடம் தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பலராமன் (வயது64). இவருக்கு செல்வி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகன் மற்றும் வள்ளி மற்றும் துர்கா ஆகிய மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வி தனது இளையமகள் துர்கா வீட்டுக்கு சென்றிருந்தார். பலராமன் தனது மனைவி செல்வியை வீட்டுக்கு அழைத்து வருமாறு மகனிடம் கூறி வந்தார்.

    அதற்கு மணிகண்டன் சில நாட்கள் கழித்து அழைத்து வருவதாக தந்தையிடம் தெரிவித்தார். ஆனால் இதனை பலராமன் ஏற்காமல் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டு வராண்டாவில் பலராமன் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.வெளியில் சென்றிருந்த மணிகண்டன் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பலராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நோய் குணமாகவில்லை. இதனால் குப்பம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
    • மனைவி தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை 4 வது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குப்பம்மாள் (வயது 51) இவர் புதுவை மரியாள் நகரில் உள்ள அங்கவாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

    இவர்களுக்கு காயத்திரி என்ற மகள் உள்ளார். இவர் புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    குப்பம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் குப்பம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த குப்பம்மாள் வீட்டின் மாடியில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய சரவணன் மனைவியை காணாததால் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது மனைவி தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குப்பம்மாளை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்பம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது.52). பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு பூரணி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். நாராயணமூர்த்தி தொடர்ந்து மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் மது பழக்கத்தை கைவிடவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி பூரணி கண்டித்தார். இதனால் மனமுடைந்த நாராயணமூர்த்தி தற்கொலை கொள்ள முடிவு செய்து மனைவி வெளியே சென்ற நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை கொண்டார்.

    இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    • மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் வேதனை
    • மீண்டும் மதுகுடிக்க மனைவி மாயாவிடம் பணம் கேட்டார். ஆனால் மாயா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்கமறுத்ததால் இறைச்சி கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது.36). இவர் அப்பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாயா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    ராஜ்மோகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. தினமும் வேலை முடிந்து மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டி ருந்தார். அதுபோல் நேற்று மாலை ராஜ்மோகன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர்  மீண்டும் மதுகுடிக்க மனைவி மாயாவிடம் பணம் கேட்டார். ஆனால் மாயா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதனால் ராஜ்மோகன் மனைவிடம் தகராறு செய்தார். இதையடுத்து மாயா தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை மாயா குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்தார். கணவர் ராஜ்மோகன் மின்விசிறியில் வேட்டியால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    மனைவி மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் ராஜ்மோகன் வேதனையில் இந்த துயர முடிவை எடுத்த கொண்டதாக கூறப்ப டுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×