என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "driver commits suicide"
- பழனிசாமி மின் விசிறியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
- திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பெருந்துறை அருகே உள்ள திங்களூர் அடுத்த திருக்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவருக்கு திரு மணமாகி அன்னக்கொடி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.
இவர் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத் தன்று பழனிசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவ ர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து பழனிசாமியின் மனைவி அன்னக்கொடி கோபித்து கொண்டு மகள்க ளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் பழனிசாமியின் வீடு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீடு உள் பக்கமாக மூடி இருந்தது.
வீட்டிக் கதவை தள்ளி திறந்து பார்த்த போது அங்கு பழனிசாமி மின் விசிறியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்