என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டேங்க் ஆபரேட்டர் தூக்கிட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    டேங்க் ஆபரேட்டர் தூக்கிட்டு தற்கொலை

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த சிவராந்தகம் பேட் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (58). இவர் வில்லியனூர் கொம்யூன் டேங்க் ஆப்ரேட்டராக அரியூர் வள்ளலார் தண்ணீர் டேங்கில் பணியாற்றி வந்தார்.

    அவருக்கு காத்தாயி என்ற மனைவியும், நதியா என்ற மகளும், தேவநாதன் என்ற மகனும் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி யினருக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    வீட்டுக்கு வந்து சாப்பிட்ட பின்னர் அரியூரில் உள்ள தண்ணீர் டேங்குக்கு சென்றவர் டேங்கில் தண்ணீர் ஏற்றவில்லை.

    சக ஊழியர் பாபு அதிகாலை செல்வத்திற்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. உடனே பாபு செல்வத்தின் மகன் தேவநாதனுடன் தண்ணீர் டேங்க் அறையில் சென்று பார்த்த போது செல்வம் அங்குள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.

    இதனை பார்த்துஅதிர்ச்சி அடைந்த தேவநாதன் இது குறித்து அவரது தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். வில்லியனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து செல்வத்தின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×