search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "male"

    • சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர் ? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது.
    • தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.

    சேலம்:

    சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் சீனிவாசன் (வயது 38) என்பது தெரியவந்தது.

    மேலும் அங்குள்ள திண்டில் அமர்ந்து மது குடித்த போது அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றும், இது போல் ஏற்கனவே 4 பேர் அந்த பகுதியில் தவறி விழுந்து இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    6 தீயணைப்பு வீரர்கள் பாலமான் ஓடையில் மிதந்த பிணத்தை மீட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே பாலமான் ஓடை உள்ளது. இதில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதைக் கண்ட பொது மக்கள் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிதம்பரம் நகர தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சிதம்பரம் நகர தீயணைப்பு நிலைய அதிகாரி பழனிச்சாமி தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் வந்து பாலமான் ஓடையில் மிதந்த பிணத்தை மீட்டனர்.

    பிரேதத்தை கைப்பற்றி போலீசார், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மரத்தில் 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மரத்தில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்கவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்தி வேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவில் குதிரை சிலை வாகனம் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இறந்தவர் யார், எந்த ஊர், எப்படி இங்கு வந்தார், எப்படி அவர்இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவில் குதிரை சிலை வாகனம் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். கோவிலுக்கு வந்தவர்கள், இதை கண்டு பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊர்,எப்படி இங்கு வந்தார், எப்படி அவர்இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோடு, குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுப்பற்றி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

    இதுகுறித்து, சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஏற்காடு மலையில் பிணத்தின் மேல் கிடந்த துணிகளை வைத்து இறந்தது ஆணாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
    • 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய நிலையில் எலும்பு கூடு மட்டும் கிடந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது செங்காடு கிராமம். இங்குள்ள வாழவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய நிலையில் எலும்பு கூடு மட்டும் கிடந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து பொதுமக்கள் சிலர் இது குறித்து ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அதன் பின்னர் தடயவியல் நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பிணத்தின் மேல் கிடந்த துணிகளை வைத்து இறந்தது ஆணாக இருக்கலாம் என்றும், 30 வயது மதிக்கதக்க இளைஞராக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

    எலும்பு கூடாக கிடந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து கிடந்தது யார்? அவர் தற்கொலை செய்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து காட்டுக்குள் வீசி சென்றனரா? என்று தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பவானி லட்சுமி நகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமி நகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சித்தோடு:

    பவானி லட்சுமி நகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு பழனிவேல் ராஜன் என்பவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆணின் உடலத்தை கயிறு கட்டி கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமி நகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் (35) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இறந்த மணிவண்ணன் உடலை மீட்ட சித்தோடு போலீசார் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இல்லையேல் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்து விடும்.
    பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் எல்லாம் குற்றம் சுமத்தப்படுபவர்கள் ஆண்கள் என்றால், இன்னொரு பக்கம் ஆண் என்றாலே வில்லன் மாதிரியான மனோபாவம் இருக்கிறது. இதனை தடுக்க சிறுவயதில் இருந்தே ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான சூழலை நாம் தான் ஏற்படுத்த வேண்டும் என்று மனநல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆண், பெண் சமத்துவத்திற்கு ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை:-

    குழந்தைப் பருவத்தில் அவர்கள் கவனம் விளையாட்டில் தான் இருக்கும். ஆண், பெண் குழந்தைகளை ஒன்றாக விளையாட விடுங்கள். ஆண்குழந்தைகளுக்கும் பார்பி பொம்மை பிடிக்கும் பட்சத்தில்,அதை வைத்து விளையாடுவதில் தவறேதும் இல்லை.

    ஆண் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை தான் அழ முடிகிறது. அதற்கு பிறகு அவன் மீது ஆண் என்ற முள் கிரீடத்தைதூக்கி வைத்துவிடுகிறீர்கள் அவனும் அழ மறந்து விடுகிறான். நீ ஆண், அழக்கூடாது என்று எச்சரிக்கைசெய்வதோ, ஆம்பளப்புள்ள எங்கயாவது அழுவாங்களா என்று கேட்டு கிண்டலடிப்பதோ செய்யாமல் அழஅனுமதியுங்கள்.

    மனதில் ஏற்படும் சங்கடங்களை அழுகையின் மூலம் வெளிப்படுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். தன் அறையை சுத்தம் செய்வது, தான் சாப்பிட்ட தட்டுகளை கழுவுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை ஆண்குழந்தைகளை செய்ய அனுமதியுங்கள். அதை பழக்கப்படுத்துங்கள். தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவி செய்வதை உற்சாகப்படுத்துங்கள்.



    அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, சமையல் வேலையாக இருந்தாலும் சரி இன்னொருவரின் கஷ்டத்தில் பங்கெடுப்பதால் அந்த சூழலை சமாளிக்க அவர்களுக்கு பழக்கமாகும். மிக முக்கியமாக பள்ளியில் பெண் தோழிகள் இருந்தால், அதை ஊக்கப்படுத்துங்கள். பெண் குழந்தைகளிடம் சேரக்கூடாது, பேசக்கூடாது என்று மிரட்டி வைக்காதீர்கள்.

    அதே போல பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளிடம் பேச விடுங்கள் ஆண், பெண் சமம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் தூவுங்கள். இன்னொருவரின் மனம் அறிந்து செயல்படும் விதமாக, இன்னொருவரின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக்கொடுங்கள். சுயநலமாக தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதை தவிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் சிந்திக்க வழிவகையாக அமையும்.

    பெண் குழந்தைகளை திட்டினாலோ அவர்களை மரியாதைக்குறைவாக நடத்தினாலோ கண்டியுங்கள். உன்னைப்போலவே தான் அவளும் என்பதை ஆண் குழந்தையிடம் புரிய வையுங்கள். ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இல்லையேல் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்து விடும்.

    ஆண் குழந்தை என்று சொல்லி, சொல்லியே அவர்கள் மீது பொறுப்புகளை திணிக்காமல் அவர்களை கொண்டாடுங்கள். நீ ஆண் பலசாலி, தைரியசாலி என்று அவன் மீது பெரும் பொறுப்புகளை திணிப்பதை தவிருங்கள். குழந்தைப் பருவத்தை ரசிக்கட்டும். கொண்டாடட்டும்.

    இத்தகைய நடவடிக்கைகள் நல்ல பலனைத்தரும். 
    ×