search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "floating"

    • சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது.
    • தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.

    சேலம்:

    சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் சீனிவாசன் (வயது 38) என்பது தெரியவந்தது.

    மேலும் அங்குள்ள திண்டில் அமர்ந்து மது குடித்த போது அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றும், இது போல் ஏற்கனவே 4 பேர் அந்த பகுதியில் தவறி விழுந்து இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது.
    • சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சேலம் மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், திருமணிமுத்தாறு வழியாக வந்தடைகிறது.

    சமீபத்தில் பெய்த கன மழையால் சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலத்தில் இருந்து வந்த தண்ணீரில் சாயக் கழிவு அதிக அளவில் வந்ததால் மீன்கள் செத்தனவா? அல்லது மர்ம நபர்கள் யாராவது ஏரி தண்ணீரில் விஷம் கலந்தனரா? என்று தெரியவில்லை. எப்படி மீன்கள் செத்தென என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை

    விடுத்துள்ளனர். 

    • பள்ளபாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பள வுள்ள குளம் உள்ளது.
    • நேற்று இந்த குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பள்ளபாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பள வுள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் மீன்கள் வளர்த்து பிடித்து விற்பனை செய்து கொள்வதற்காக, ஒவ்வொரு வருடமும் கபிலர்மலை யூனியன் அலுவலகம் மூலம் டெண்டர் விடப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு குளத்தில் மீன்கள் வளர்ந்து பிடிக்க ரூ. 60 ஆயிரத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை எடுத்தவர், சிறுநல்லிக் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவருக்கு அதை கொடுத்துள்ளார். இதையடுத்து ராஜூ சுமார் 3 லட்சம் மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டு வளர்த்து மீன்பிடித்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று இந்த குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்த மீன்பிடி குத்த கைதாரர், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு கலை யரசன், ஜேடர்பாளையம் மீன்வளத்துறை ஆய்வாளர் கோகிலவாணி மற்றும் மாவட்ட தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் வடிவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    மர்மநபர்கள் யாராவது குளத்தில் விஷம் கலந்தனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஜேடர்பா ளையம் அருகே கரப்பாளை யத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா, கடந்த மார்ச் 11-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு அப்ப குதி விவசாய சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், நித்யாவின் உறவினர்கள் மற்றும் அவ ரது சமூகத்தை சேர்ந்த வர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது குளத்தில் மீன்கள் திடீரென செத்து மிதக்கும் சம்பவம், இப்பகுதியினரி டையே மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பதட்டமான சூழ்நிலையில் உள்ள இந்த பகுதியை அமைதியான சூழ்நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

    அதே சமயம் இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்த மின் கம்பங்கள் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளதால் அடிப்பகுதி பெயர்ந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது.

    சில மின் கம்பங்கள் கம்பிகளின் உதவியுடன் தொங்கியபடி உள்ளன. சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. முற்றிலும் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் நடக்கும், உயிர்ப்பலி ஏற்படும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஏரியில் உள்ள மின்கம்பங்களை மாற்றி வேறு இடத்தில நட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பவானி லட்சுமி நகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமி நகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சித்தோடு:

    பவானி லட்சுமி நகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு பழனிவேல் ராஜன் என்பவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆணின் உடலத்தை கயிறு கட்டி கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமி நகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் (35) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இறந்த மணிவண்ணன் உடலை மீட்ட சித்தோடு போலீசார் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவில் தெப்பத்தில் பிணமாக மிதந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 19-ந் தேதி மாசி மகத்தெப்பத்திரு விழா நடந்தது.

    அதன் பின்னர் தினமும் தெப்பத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து விளக்கேற்றுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல், தெப்பக்குளத்தில் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து திருக்கோஷ்டியூர் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்வையிட்டார். இது தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை, திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் போலீசார் பெண் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மிதந்த பெண் யார்? அவவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி அருகே குளத்தில் வாலிபர் பிணம் ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஒரு வாலிபர் பிணம் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இதுபற்றி புதுப்பட்டினம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குளத்தில் மிதந்த வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்த வாலிபர் , சீர்காழி அடுத்த திருநீலகண்டம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் ராஜசேகர் (வயது 20). என தெரியவந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ராஜசேகர் உடலை பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வாலிபர் ராஜசேகர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஓதவந்தான்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சாராயம் குடித்து விட்டு குளத்தில் குளிக்கும் போது அவர் இறந்து இருக்கலாமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இருப்பினும் உடல் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராஜசேகரின் சாவுக்கான உண்மை காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×