search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pole"

    • கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.
    • இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கரடிக்குப்பம் கிராமத்திலிருந்து நேற்று மாலை கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. அவலூர்பேட்டை செல்லியம்மன் கோவில் அருகில் சென்ற போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரம் இருந்த சிமெண்ட் மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் முறிந்தது.இதுகுறித்து தகவலறிந்த மின்சார துறையினர் விரைந்து செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பெரும் மின் விபத்து தடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரதாப் (வயது23).

    லாரி டிரைவர். இவர் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.

    பூசாரிபட்டி பழைய சினிமா கொட்டாய் பகுதி யில் ஒரு விவசாயிக்கு 5 கட்டுகளை இறக்கிவிட்டு லாரி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் .இந்த விபத்தில் மின் இணைப்பு துணிக்கப்படாமல் இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகல் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

    அதே சமயம் இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்த மின் கம்பங்கள் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளதால் அடிப்பகுதி பெயர்ந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது.

    சில மின் கம்பங்கள் கம்பிகளின் உதவியுடன் தொங்கியபடி உள்ளன. சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. முற்றிலும் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் நடக்கும், உயிர்ப்பலி ஏற்படும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஏரியில் உள்ள மின்கம்பங்களை மாற்றி வேறு இடத்தில நட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் உள்ளன.
    • மின்கம்பங்களை மாற்றி வைக்க மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் செங்கோட்டை காமராஜர் சாலை பக்கத்தில் பூத்திரம் தெரு உள்ளது. இத்தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியையொட்டி வயல்கள் உள்ளதால் இப்பகுதியினர் இவ்வழியாக வயல்வெளிகளுக்கு விவசாய பொருட்கள் கொண்டு செல்வார்கள். இத்தெருவிற்கு செல்லும் வழியில், சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் உள்ளன.

    இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், விவசாய பணிகளுக்காக செல்லும் வாகனங்களுக்கும் மிகுந்த சிரமத்துடன் செல்லும் அவலநிலை உள்ளது. மேலும் விழா காலங்களிலும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அனைத்து தரப்பு மக்களின் நலன்கருதி சாலையின் நடுவில் அமைந்துள்ள 2 மின்கம்பங்களையும் ஓரமாக மாற்றி வைக்க மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வீராம்பட்டினத்தில் முதல் மனைவி இறந்த நினைவில் 2-வது மனைவியும் பிரிந்து சென்றதால் வாலிபர் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    வீராம்பட்டினம் நாகூ ரான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி என்ற கத்திரிமுத்து (வயது 30). ரவுடியான இவர் மீது திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.

    இதற்கிடையே இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்து போனதால் 2-வதாக ஒரு பெண்ணை கார்த்தி திருமணம் செய்தார். அந்த பெண்ணும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் கார்த்தி விரக்தியுடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கார்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறினார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி படுகாயம் அடைந்தார்.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×