search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road"

    • சாலையில் பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. .
    • மணல் சாலையாகவே காட்சி அளிக்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி- பழவேற்காடு சாலை மெதூரில் இருந்து அரசூர் சாலை வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, காட்டாவூர், ஐயநல்லூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இதில் விடதண்டலம், மேல பட்டறை, கொள்ளுமேடு பகுதி மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மெதூர்-அரசூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து மணல் ரோடாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படும் சாலையால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலையில் பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து மெதூர்-அரசூர் சாலையை சீரமைக்க கோரி விடதண்டலம், மேல பட்டறை, கொள்ளுமேடு பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில மாதத்திற்கு முன்பு இந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மெதூரில் பொன்னேரி-பழவேற்காடு செல்லும் 8 அரசு பஸ்களை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்ததை நடத்திய பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மற்றும் வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை சாலை சீரமைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மணல் சாலையாகவே காட்சி அளிக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மெதூர்-அரசூர் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை. அடுத்த கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 4 சாலைகள் மற்றும் ஒரு உயர்மட்ட பாலத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    சென்னை:

    திருநெல்வேலி மற்றும் ஆலங்குளம் வட்டங்களில் 196 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி செங்கோட்டை-கொல்லம் நான்கு வழிச் சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 108 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம்-முடிச்சூர்-ஸ்ரீபெரும்பத்தூர் நான்கு வழிச் சாலை; மதுராந்தகம் உத்திரமேரூர் வட்டங்களில் 54 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புக்கத்துரை உத்திரமேரூர் நான்கு வழிச் சாலை; திருவண்ணாமலை வட்டத்தில் 140 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடலூர் சித்தூர் நான்கு வழிச்சாலை; திருத்தணி நாகலாபுரம் சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 18 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் என மொத்தம் 518 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 4 சாலைகள் மற்றும் ஒரு உயர்மட்ட பாலத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.


    219 இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்ப்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான உன்னத நோக்கத்தின் அடிப்படையில் 213 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திக்கான கடனுதவிக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

    • அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா.
    • வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்களை நினைவு கூர்ந்து வருகிறோம். வீடு கட்டும் கனவை தள்ளிப்போட்டு தனது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி மலை கிராம பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இந்நாளில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    ஆந்திர மாநிலம் அரக்கு அருகே உள்ள அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா. இவருக்கு தோட்ட கோடி புட் மலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடராவ் என்பவருடன் திருமணம் நடந்தது.

    அந்த கிராமத்தில் 10 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வந்தனர். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. சிறிய வழிப் பாதையில் பொதுமக்கள் சென்று வந்தனர்.

    கர்ப்பிணிகள் மற்றும் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அவர்களை டோலிகட்டி தூக்கி சென்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

    திருமணத்திற்கு பிறகு கிராம செவிலியராக பணியில் சேர்ந்த ஜெம்மா சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வைத்திருந்தார்.

    அப்போது தான் அவருக்கு தனக்கு வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருடைய சம்பளத்தில் மாதம் ரூ.4000 சேமிக்க தொடங்கினார்.

    4 வருடங்களாக பணத்தை தொடர்ந்து சேமித்தார். இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அவரது கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணியை தொடங்கினார்.

    வெளியூரில் இருந்து திருமணமாகி வந்த இளம்பெண்ணின் உறுதி அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.

    இதைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக களமிறங்கினார்கள். அவர்கள் சாலை அமைக்கும் பணியில் தங்களது உடல் உழைப்பை அளித்தனர்.

    பழங்குடியின பெண்ணின் இந்த முயற்சி அந்தப் பகுதியில் பரவியது. அவருக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உதவி செய்ய முன்வந்தனர்.

    இந்த திட்டத்திற்கு நன்கொடைகள் வரத் தொடங்கியது. அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஜெம்மா ஒரு மண் சாலையை ஏற்படுத்தினார்.

    இந்த சாலையில் தற்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ போன்றவை எளிதாக மலை கிராமத்திற்கு செல்ல முடிகிறது. இளம் பெண் ஜெம்மா முயற்சியில் உருவான சாலையால் மலை கிராம மக்களுக்கு தற்போது டோலி கட்டி தூக்கி செல்லும் கடினமான பயணம் போன்ற அவலத்தை நீங்கி உள்ளது.

    இந்த சாதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகளிர் தினமான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

    ஜம்மாவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட சாலையை தரமான தார் சாலையாக அமைத்து அதில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சாலையில் சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியது.
    • காரில் இருந்தவர்கள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள விகாஸ் நகரில் தொடர்ந்து மழை பெய்தது.

    இந்நிலையில், விகாஸ் நகரில் உள்ள சாலை ஒன்றில் திடீரென ராசத பள்ளம் ஏற்பட்டது.

    இதில், அந்த வழியாக சென்ற கார் ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    காரில் இருந்தவர்கள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    • சைக்கோ ஆசாமி ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கும் சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
    • மர்ம ஆசாமியை பிடிக்கும் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் ஓ.எம்.ஆர். சாலையில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பணிபுரிபவர்கள் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்கள். பெண் ஊழியர்கள் பலர் விடுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

    அவர்கள் தங்களின் அலுவலகங்களுக்கு, வீடுகள் மற்றும் விடுதிகளில் இருந்து நடந்து செல்வது வழக்கம். தூரத்தில் வசிப்பவர்கள் வாகனங்களில் வந்து பஸ் நிறுத்தத்தில் இறங்கி அலுவலகங்களுக்கு நடந்து செல்வார்கள். இப்படி நடந்து செல்பவர்களை 50 வயது மதிக்கத்தக்க சைக்கோ ஆசாமி ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கும் சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த சைக்கோ ஆசாமி, துரைப்பாக்கம் 200 அடி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தோழிகளுடன் நடந்து சென்ற சுவேதா (வயது 25) என்ற பெண்ணை அந்த சைக்கோ ஆசாமி உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடினார். அவருடன் வந்த தோழிகளும் தப்பி ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சைக்கோ ஆசாமி நின்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்து உருட்டுக்கட்டையை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து விரட்டினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செம்மஞ்சேரியை சேர்ந்த குமரன் என்பவர் துரைப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரைக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே மர்ம ஆசாமி உருட்டுக்கட்டையால் குமரனை தாக்க முயற்சித்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இந்த சைக்கோ ஆசாமி பற்றிய தகவல் தற்போது துரைப்பாக்கம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் துரைப்பாக்கம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள்.

    எனவே போலீசார் மற்றும் அதிகாரிகள், அந்த சைக்கோ ஆசாமியை பிடித்து மனநல காப்பகத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த மர்ம ஆசாமியை பிடிக்கும் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    • சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.
    • சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது போளிவாக்கம் சத்திரம் பகுதி. இங்கு இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் சாலையை போளிவாக்கம் சத்திரம் வழியாக புதுகண்டிகை, குன்னத்தூர், பள்ளகாலனி, மேட்டு காலனி, அழிஞ்சிவாக்கம், ஆஞ்சிவாக்கம், பூவேலி குப்பம் மேட்டுச்சேரி, வெள்ளக்கால்வா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் , மருத்துவசிகிச்சை உள்ளிட்டவைக்கு செல்ல இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.

    இதற்காக கடந்த ஒரு ஆண்டுகுக்கு முன்பே போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து வெள்ளகால்வா வரை 7 கி.மீ தூரம் ஏற்கனவே இருந்த சாலை அகற்றப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன்பிறகு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன.

    தற்போது சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜல்லி சாலையில் முதியோர் பள்ளி மாணவ மாணவிகள், கிராமத்தினர் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    இதையடுத்து சாலை அமைக்கப்படாததை கண்டித்தும், உடனடியாக சாலை அமைக்க கோரியும் போளிவாக்கம் சத்திரம் பகுதி கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • இரவு சிறிய முதலை குட்டி ஒன்று சாலையில் நடந்து சென்றது.
    • பெருங்களத்தூரில் காணப்பட்ட 5-வது முதலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    தாம்பரம்:

    பெருங்களத்தூர் சாலையில் நேற்று இரவு சிறிய முதலை குட்டி ஒன்று சாலையில் நடந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து இரவு 10 மணியளவில் சாலை ஓரத்தில் முட்புதரில் பதுங்கி இருந்த சுமார் 8 ஒன்றரை அடி நீள முதலை குட்டியை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை கிண்டி பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெள்ளத்தின் போது பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றம் சாலையில் சுமார் 10 அடி நீளமுள்ள பெரிய முதலை சாலையில் நடந்து சென்றது. பின்னர் ஆலப்பாக்கத்தில் சுமார் அடிநீளமுள்ள பெரிய முதலை பிடிபட்டது. தற்போது பெருங்களத்தூரில முதலை குட்டி சிக்கி உள்ளது. பெருங்களத்தூரில் காணப்பட்ட 5-வது முதலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பிடிபட்ட முதலை குட்டி சதுப்பு நிலப் பகுதிகளில் காணப்படும் மக்கர் இனத்தைச் சேர்ந்தது. பெருங்களத்தூரில் காணப்பட்ட 5-வது முதலை இதுவாகும். நெடுங்குன்றம் ஏரி, ஆலப்பாக்கம் ஏரிகளில் முதலைகள் உள்ளன என்றார்.

    • தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    • அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமாராபுரம் கிராமத்தில், காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சுமார் 150 மீட்டர் சாலை முற்றிலும் பெயர்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் தூத்துக்குடி, விளாத்திகுளம் செல்வதற்கு பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்வதாகவும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியாத மோசமான சூழ்நிலை இருப்பதால் தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி, காட்டாற்று வெள்ளத்தினால் சாலை அடித்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் ஆகியும் தற்போது வரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    எனவே சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அவரச மருத்துவத் தேவைக்குக்கூட தூத்துக்குடி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் முத்துக்குமாரபுரம் மக்களின் நலன் கருதி உடனடியாக சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • பள்ளத்தை சரி செய்யும் பணியில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
    • வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் சாலை மூடப்பட்டது. மத்திய கைலாசில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அடையாறு பாலம் அருகே சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தை சரி செய்யும் பணியில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் சாலை மூடப்பட்டதால் அப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    • இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
    • சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி தென்பாதி மாளிகை புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது பள்ளியின் அருகே கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசி நோய் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும் இவ்வழியே நடந்து செல்ல பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியு ள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடியாக தார் சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
    • அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, மூல பெல்லூர், டேம் கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    அதே போல் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான அரசநத்தம், கலசப்பாடி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், பென்னாகரம் ஊராட்சியில் கோட்டூர் மலை, அலகட்டுமலை, ஏரிமலை, உள்ளிட்ட மலை கிராமங்களும், ஏரியூர் ஒன்றியத்தில் மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, உள்ளன. மூல பெல்லூர் டேம் கொட்டாய், உள்ளிட்ட மலை கிராமங்களும் இன்று வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.

    அதில் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம் பஞ்சாயத்தில் மூல பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் கால்நடைகள் வளர்ப்பது, விறகு வெட்டுவது, மலை தேன் சேகரிப்பது, சுண்டைக்காய், கிழங்கு வகைகள், கீரை வகைகள் சாகுபடி செய்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் எளிய கிராம மக்களுக்கும் கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தை சுற்றி மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றாலும் கயிறு கட்டில் மற்றும் புடவையில் தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

    இதனால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    பெண்கள் பிரசவ காலங்களில் பெரும்பாலானவர் அரசு சுகாதார நிலையங்களை நாடிச் செல்லாமல் பழைய முறையில் மருத்துவச்சி பெண்களைக் கொண்டு பிரசவம் பார்த்து வருகின்றனர்.

     

    அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.

    அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.

    மேலும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான ஒருவழி பாதையில் செல்வதால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

    பாதியிலேயே பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவதாகவும், இதனால் இப்பகுதி மாணவர்கள் பள்ளியை தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் பெண் பிள்ளைகள் பூப்பெய்தவுடன் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில்;-

    படிப்பறிவு இல்லாததால் தங்களுடைய தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மலை குகைக்குள் இருப்பது போன்றே இருந்து வருகின்றோம். மேலும் எங்கள் குறைகளை தீர்க்க எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் வீடுகளில் அருகே மின்சார கம்பங்கள் இருந்தும் மின் இணைப்பு கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் நெருப்பு மூட்டி தீ வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.

    மத்திய மாநில அரசுகள் மலைவாழ் மக்களுக்கு என்று அடிப்படை தேவைகளுக்காக பல கோடி கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அது எங்கள் அடிப்படை தேவைக்குகூட வந்து சேர்வதில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் வேட்பாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.

    ஆனால் தேர்தல் முடிந்தால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நாங்கள் கோரிக்கையுடன் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இது குறித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி கூறும்போது: ஏரியூர் ஒன்றிய பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவருமே புறக்கணிக்கப்படுகிறார்கள் மலைவாழ் மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இதையே எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி பற்றாக்குறை என கூறி வருகிறது என்றார்.

    சுதந்திரம் பெற்று காலங்கள் கடந்தாலும் மலை கிராம மக்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ஒரு விஷப்பாம்பு சாலையின் குறுக்கே சாலையை கடந்து செல்ல வழி இல்லாமல் தவித்தது.
    • பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில், மோட்டார் வாகன உதிர் பாகங்கள் விற்கும் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் எப்பொழுதும் அதிக அளவில் இருக்கும். மேலும் இரவு நேரம் வேலை முடித்து வீட்டிற்கும் அருகில் உள்ள கிராமத்திற்கும் செல்லும் பொது மக்கள் அந்த சாலையை கடந்து செல்வதால் எப்பொழுதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெருசலாகவும் அந்தப் பகுதி இருக்கும்.சமீபத்தில் அந்த சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் அமைத்து புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த சாலையில் குறுக்கே புகுந்த ஒரு விஷப்பாம்பு சாலையின் குறிக்கே புதிதாக எடுக்கப்பட்ட சுவற்றினால் அந்த சாலையை கடந்து செல்ல வழி இல்லாமல் தவித்தது. மேலும் அந்தப் பாம்பை சுற்றி கூட்டம் கூடி வாகனங்கள் என்றதால் பதற்றம் அடைந்து சாலையில் குறுக்கே அங்குமங்கமாக ஓடியதால் சிறிது நேரம் அந்த பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.அப்பொழுது அந்த இடத்திற்கு வந்த ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் வாகனங்கள் ஏதும் அந்த பாம்பின் மீது ஏறி விடாமல் பாதுகாத்து வாகனங்களை ஒழுங்குபடுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பினை லாவகமாக பிடித்து அருகில் உள்ள காட்டுபகுதியில் விட்டார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.

    ×