என் மலர்
நீங்கள் தேடியது "road"
- சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து பழுதடைந்த நிலையில் உள்ளது.
- புதர்மண்டி கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கட்டலாடியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாட தேவைகளுக்கு கட்டலாடியிலிருந்து ஆண்டிதோப்பு வழியாக திருமருகல் வரும் சாலை உள்ளது.
இந்த சாலையை கட்டலாடி பொதுமக்கள் கடைத்தெரு, ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், வேளாண்துறை அலு வலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வங்கி, பொதுப்பணித்துறை அலுவலகம், பஸ் நிலையம் என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சாலையில் இருபுறமும் செடி,கொடிகள், நாணல், கருவேல மரங்கள் வளர்ந்து பழுதான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு புதர்மண்டி கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.
- 5 ஆயிரம் கன அடி தண்ணீரையாவது முறையாக தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார்.
- தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் பேசும்போது,
குறுவை பயிர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குறுவைக்கு காப்பீடு திட்டத்தை விரைந்து அறிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம், நீர் ஒழுங்காற்று முறை குழு ஆகியவற்றிற்கு தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மாநிலங்களில் உள்ள அணைகளின் விவரத்தை தெரிவித்து நீர் திறக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.
குறுவைக்கு காப்பீடு திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கூறியதாக மத்திய அரசு கூறுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை கூறினால் அந்த போக்கை மாற்றி குறுவைக்கு காப்பீடு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் பேசும்போது :-
தஞ்சை அருகே உள்ள உய்யக்கொண்டான் , புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது . எனவே தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்டா விவசாயிகள் கேட்டது வினாடிக்கு 15000 கன அடி தண்ணீர். தற்போது உத்தரவிட்டதோ அதனைவிட மிக மிக குறைவாகும். எனவே 5000 கன அடி தண்ணீரையாவது முறையாக தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார்.
பாசனதாரர் சங்கத் தலைவர் தங்கவேல் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
ஆம்பலாப்பட்டு தெற்கு- கீழக்கோட்டையில் இருந்து மேல் கிழக்காக ஆலத்தூருக்கு செல்லும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தார் சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த தார் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். என்னை தார் சாலையை உடனே சீரமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கரும்பு விவசாயிகள் சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
- சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மல்லிப்பட்டினம் மனோரா அமைந்துள்ளது.
சுற்றுலா தளம் என்பதால் மனோராவுக்கு தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடல் பகுதியில் நடைமேடை அமைக்கப்பட்டு படகில் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருந்தும் கடல் பகுதியில் அதிகமாக சேர் உள்ளதால் யாரும் இறங்க முடியாத நிலை உள்ளது. இதனால் இங்கு வருவதற்கு பலரும் அச்சப்படுகின்றனர்.
மேலும், மல்லிப்பட்டினம்- மனோரா சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏதுவாக மல்லிப்பட்டினம்- மனோரா சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அரசியல் ஆலோ சனை குழு உறுப்பினர் முகமது காசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
- சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி உள்ளுர் வாகனஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ரோஜா பூங்கா. இதனை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அரசு ரோஜா பூங்கா நுழைவாயில் பகுதியில் இன்டர்லாக் கற்களால் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது கற்கள் முழுவதும் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது.
எனவே பழுதடைந்த இடத்தை கடக்கும்போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படுகிறது. மேலும் சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி உள்ளுர் வாகனஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே ரோஜா பூங்கா நுழைவாயில் இன்டர்லாக் சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் பல இடங்களில் மணல்கள் கொட்டி புழுதி பறக்கிறது.
- மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதற்காக மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம், எச்சூர் பகுதி ஏரிகளில், பொதுப்பணித் துறையினர் சவுடு மண் எடுத்து வருகின்றனர்.
மணல் ஏற்றிச்செல்லும் லாரிகள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமலம் பகல் நேரத்தில் மணல் மீது தார்ப்பாய் போடாமல் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் லாரிகள் அதிவேகமாக செல்வதால் அதில் இருந்த மணல் சாலையில் விழுந்து புழுதியாக மாறிவருகிறது.
இதனால் திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் பல இடங்களில் மணல்கள் கொட்டி புழுதி பறக்கிறது. முக்கியமாக வசந்தபுரி, அம்பாள் நகர் சாலையில் மணல் குவியல் ஏற்பட்டு, தற்போது பெய்த மழையால் சகதியாக மாறி தார்சாலை இல்லாத அளவுக்கு மறைந்துவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மழை பெய்யும் போது அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த மணல் சாலையில் செல்லும்போது வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
- சிமெண்டு சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராமமக்கள் அறிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு வயல்வெளி களுக்கு நடுவில் மயானம் உள்ளது.இந்த மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் வயல் வெளி வழியாக உடலை தூக்கிச் செல்கின்றனர்.இந்த நிலையில் மயானம் செல்வ தற்கு சிமெண்டு சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
இந்த மயானம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் இருந்த தால் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள மயான பாதையை மீட்டு சிமெண்டு சாலை அமைக்கக்கோரி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களின் ஆக்கிரமிப்பு களை திருமருகல் சரக வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி,திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி,ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,கிராம நிர்வாக அலுவலர்கள் குமரேசன்,ரத்தினவேல் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமப்பு களை அகற்றினார்.
- சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
- குடிநீர் குழாய் உடைப்பால் பாரதியார் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொ ண்டார்.
கூட்டத்துக்கு துணை மேயர் ராஜூ, துணை கமிஷனர் தாணு மூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் மனு
நெல்லை டவுன் மண்டலத்துக்குட்பட்ட 28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் அளித்த மனுவில்,
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியான டவுன் பாரதியார் தெருவில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த பகுதியில் பள்ளி மற்றும் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சொக்கப்பனை முக்கு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பாரதியார் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருக்கிறது. எனவே அதனையும் சரி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
டிரைவர்கள் மனு
நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர் அகஸ்டின் என்பவர் தலைமையில் டிரைவர்கள் அளித்த மனுவில், அரசு பல்நோக்கு மருத்துவமனையின் முகப்பு பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தி பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களது சங்கத்தில் சுமார் 35 தொழிலாளர்கள் ஆட்டோக்கள் வைத்து ஓட்டி வருகிறோம்.எங்களுக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
- சாலையை சீரமைக்க கோரி மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வாகன ஓட்டிகளுக்கு அந்த சாலையில் பயணிப் பது சிரமமாக உள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ் சாலை பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக மீண்டும் மீண்டும் குழிகள் தோண்டப் பட்டு அந்த சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. வாகன ஓட்டிகளுக்கு அந்த சாலையில் பயணிப் பது சிரமமாக உள்ளது.
இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து பலமுறை புகார் அளிக்கப் பட்டும் சாலை முழுவதுமாக சீரமைக்கப்பட வில்லை. குழிகளை மட்டும் செப்ப னிடும் பணிகளை செய்வ தால் மீண்டும் சாலை சேதமடைந்து விடுகிறது.தற்போது இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலை துறையினர் உரிய நிதி ஒதுக்கி இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய நெடுஞ்சாலை மந்திரிக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ராஜபா ளையம் நகர் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ராமச்சந்திர ராஜா, மணிகண்டன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு வாரம் தொடர்ச்சியாக மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.
- வணிக நிறுவனங்கள், விடுதிகள் கழிவு நீரையும், கழிப்பிட நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.
- இந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக பாண்டி-கடலூர் ரோடு இருந்து வருகிறது. கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள் கழிவு நீரையும், கழிப்பிட நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.
இந்த நீர் வாய்க்காலை அடைத்து வைத்து பணி செய்து வருவதால், கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி வழிந்து சாலையில் ஓடுகிறது. மேலும் காலிமனைகளிலும் விட்டு உள்ளனர்.
இதனால் பிள்ளையார்குப்பம் வழியாக செல்லும் பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், வாகன ஓட்டிகள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாலையானது கடந்த 8 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது.
- மக்களால் பிராதானமாக பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 55-வது வார்டு, தாம்பரம்-சோமங்கலம் சாலையில் சமத்துவ பெரியார் நகர் உள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி அடையாறு மற்றும் பாப்பன்கால்வாய் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள ராகவேந்திரா பிரதான சாலை சுமார் 740 மீட்டர் தூரத்துக்கு படு மோசமடைந்து மண்பாதையாக காட்சி அளிக்கிறது. தார்சாலை அமைக்கப்பட்ட தற்கான எந்த சுவடுகளும் அங்கு இல்லை. அப்பகுதி மக்களால் பிராதானமாக பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் சாலையே தெரியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாலை கடந்த 8 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது. இதன்பின்னர் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சேதம் அடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால் பொதுமக்களே ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தற்காலிகமாக கற்களை கொண்டு சமன் செய்து வருகிறார்கள்.
மேலும்பருவ மழை காலத்தில் தாழ்வான இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்படும். அந்த நேரத்தில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் இந்த பகுதிக்கு வந்து அடையாறு ஆற்றங்கரைமற்றும் பாப்பன்கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம். ஆனாலும் இங்கு சாலை அமைக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமத்துவ பெரியார் நகர் பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த பெரியார் நகர் பகுதி , அரசு பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் போது பொது மக்களுக்கு வழங்கப்பட்ட இடமாகும்.. கடந்த 2009-ம் ஆண்டு இந்தசாலை அப்போதைய பெருங்களத்தூர் பேரூராட்சியிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அப்போது 2015-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் நிதியில் 740 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை அமைத்து கொடுத்தனர். இதன் பின்னர் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்தது. எனினும் இதுவரை இந்த சாலை சீரமைக்கப்படாமல் மண்பாதையாக மாறி காட்சி அளிக்கிறது. 8 ஆண்டாக மிகவும் மோசமான நிலையில் காணப்படும் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பலமுறை தாம்பரம் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை மேலும் சேதம் அடைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அடையாறு ஆற்றங்கரையில் உள்ள இப்பகுதியை பலமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது சிறு மழைக்கே சாலை சேறும் சகதியுமாக மாறி பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. பருவ மழைக்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.