என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல்"

    • துமாஸ் கடற்கரையில் இளைஞர்கள் சாகசம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • காரை கடற்கரை மணலில் இருந்து எடுக்க இளைஞர்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை

    குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள துமாஸ் கடற்கரையில் சாகசம் செய்வதற்காக ஓட்டிச் சென்ற சொகுசுக் கார், கடல் மணலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் கடற்கரை மணலில் சொகுசு கார் பாதி அளவு சிக்கியுள்ளது.

    துமாஸ் கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் இளைஞர்கள் சாகசம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரை கடற்கரை மணலில் இருந்து எடுக்க இளைஞர்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

    • நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    குன்னம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து வெள்ளை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரியை கரூர் கிருஷ்ணராயபுரம் குப்பனம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் (வயது 23) என்பவர் ஓட்டினார்.

    லாரி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே சென்றபோது எதிர் பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்து தீப்பற்றியது. உடனே டிரைவர் கதிர்வேல் லாரியில் இருந்து கீழே இறங்கினார்.

    சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

    பின்னர் இதுபற்றி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சாலையில் குவிந்த மணல் அகற்றப்பட்டது.
    • தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மணல் குவிந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மணல்களை அகற்றி சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலை வரை மணல் குவியலை அகற்றி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்தது.

    இதே போல் நகராட்சியில் மற்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் மணல் குவியலை அகற்றி சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    • மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
    • சமாதான கூட்டத்தில் எழுத்து பூர்வமாக அறிவிப்பு

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் மாட்டு வண்டிக்கு மணல் குவாரி அமைத்திட வலியுறுத்தி அச்சங்கத்தினர் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். அதற்கு அதிகாரிகள் சமாதானம் பேசுவதும், போராட்டம் தற்காலிகமாக கைவிடுவதும் வாடிக்கையாக இருந்தது.

    அதே போன்று நேற்று சிஐடியு சார்பில் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவித்து, வாயில் முன்பாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாட்டு வண்டிக்கு குவாரி செயல்படும் என முடிவு செய்யப்பட்டு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சமாதானமாக கலைந்து சென்றனர்.

    கூட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் ஸ்ரீதர், சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன், மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட துறை அதிகாரிகள், மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    கரூர்

    கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த, கூடலுார் பகுதியில், இரவு நேரங்களில் சட்ட விரோதமாக கிராவல் மண், காட்டாற்று மணல் கடத்தப்படுவதாக தோகை மலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதனை தொடர்ந்து சப் இன்ஸ் பெக்டர் மாதேஸ்வரி தலைமையில், போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சிவசக்தி ஆகியோர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூடலுார் நெடுஞ்சாலையில் வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் அனுமதியின்றி காட்டாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், டிராக்டர் ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து, மணல் கடத்திய டிராக்டர், டிப்பரை பறிமுதல் செய்து,இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சாத்தம்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் சாத்தம்பாடி கல்லேரி அருகே சென்ற 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி, சோதனை செய்ய முயன்றனர். இதனால் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 3 பேர், அந்த வண்டிகளை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர் போலீசார் அந்த வண்டிகளை சோதனை செய்தபோது, அவற்றில் சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து ஆலம்பள்ளம் பகுதிக்கு மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகிறார்கள். 

    • திருவாடானை அருகே குவாரியில் அதிக மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்ட போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் சிறுகாம்பையூர் அருகே அரசு மணல் குவாரி அமைத்து அதிக அளவு மணல் எடுத்து வருவதை தடுத்து நிறுத்திடக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு ராமநாதபுரம் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அக்கீம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜீவா, திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மர் முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் கணேசன், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து, பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் கர்ண மகாராஜா, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், கீழக்கரை நகரத் தலைவர் அப்துல் லத்தீப், ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராஹிம், நகர தலைவர் ராஜா ரபிக், மண்டபம் ஒன்றிய மாணவர் சங்க செயலாளர் களஞ்சிய ராஜா, ராமேசுவரம் நகர செயலாளர் முருகன், மாவட்ட விவசாய அணி மாயழகு மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

    மாவட்ட மாணவர் சங்க தலைவர் பாலகுமார் நன்றி கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

    • வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.
    • விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேது சாலையில் 3 அரசு வங்கிகள், எம்.எல்.ஏ. அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், திருமண மண்டபங்கள், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துன்ன.

    விழா காலங்களில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது சாலையில் மணல் தேங்கி நிற்பதால் பஸ் மற்றும் லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.

    வாகனங்கள் சேதமடைந்து விடுகிறது.

    விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்பு சுவர் (சென்டர் மீடியன்) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் துரைராஜன் கூறும்பேது, இவ்வழியே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சைக்கிளில் செல்லும் போது மணல் சறுக்கி விழுந்து விடுகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு வழிவிட்டு ஓரமாக செல்லும் போது மணலில் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர்.

    காயங்கள் ஏற்படுகிறது. சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவலநிலை ஏற்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மணலை அப்புறப்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும் என்றார்.

    • மணல் கடத்திய 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டு 4 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • மணல் கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் டிராக்டர்களில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சார்பு ஆய்வா ளர்கள் அசோக்சக்ரவர்த்தி, கார்த்திக், முனியாண்டி ஆகியோர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 டிராக்டர்களை பிடித்தனர். அதிலிருந்த 11 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உச்சிப்புளி காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சுகுமார்,கார்த்திக், பாக்கியராஜ், ராஜா கார்த்திக், பழனிசுவரன், ஜெகதீஸ்வரன், முனியசாமி, பிரகாஷ், உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது.
    • சிதிலம் அடையாமல் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடந்த 8-ந்தேதி அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கரை ஓரம் மணலில் மூன்று சிலைகள் இருப்பதை கண்டறிந்து தகவல் அளித்ததன் பேரில் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் நேரில் சென்று இரண்டு பெருமாள் சிலைகள் மற்றும் ஒரு அம்மன் சிலை ஆகியவைகளை கைப்பற்றி எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிலைகள் அதே கடற்கரையில் இருப்பதாக தகவல் அறிந்த வி.ஏ.ஓ. பவளச்சந்திரன் மற்றும் புதுப்பட்டிணம் போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த 3 அடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் இரண்டடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை ஆகிய இரண்டு சிலைகளையும் எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    ஏற்கனவே மீட்கப்பட்ட மூன்று சுவாமி சிலைகள் குறித்து நடைபெற்ற விசாரணையில் சிலைகள் சீனிவாச பெருமாள், துவாரபாலகர , சிம்மவாகனி என தெரியவந்தது

    மேலும் கிடைக்கப்பெற்ற சிலைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் கடற்கரை மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது. யார் கொண்டு வந்து குறிப்பாக இங்கு போட்டார்கள். எதற்காக போட்டார்கள் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுவாக சிதிலமடைந்த சிலைகளை மட்டுமே கோயில்களில் பயன்படுத்த மாட்டார்கள்.

    ஆனால் இங்கு எடுக்கப்பட்ட அனைத்து சாமி சிலைகளும் சிதிலம் அடையாமல் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.

    ஏன் நல்ல சாமி சிலைகளை இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்ற கோணத்திலும் புதுப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் எந்திரங்களை கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
    • அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே மத்தியக்குடியில் விவசாய நிலங்களுக்கு மையத்தில் குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.

    இங்கு எடுக்கப்படும் மண் குத்தாலம்,திட்டச்சேரி வழியாக பனங்குடி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த குவாரியில் அரசு அனுமதித்ததை விட கூடுதலாக மண் எடுப்பதாகவும், இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து நாகை புள்ளியியல் துறை உதவி புவியியலாளர் சேகர், தா சில்தார் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் மத்தியக்கு டியில் உள்ள குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது உதவி புவியியலாளர் சேகர் கூறியதாவது:-

    மத்தியக்குடியில் உள்ள குவாரி மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.

    இங்கு எடுக்கப்படும் மண் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

    அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மண் எடுத்து கரையில் வைக்கப்பட்டுள்ளது.

    அதிலிருந்து பார்க்கும்போது ஆழமாக தெரிகிறது.

    எனவே அதை உடனடியாக அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு விதிகளுக்கு உட்பட்டுதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை என்றார்.

    • மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.
    • இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமார். இவர் அந்த பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.

    இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது. இதனால் அச்சமடைந்த வினோத்குமார் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.தனக்கு மிரட்டல் விடுத்த மணல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    மேலும் அந்த கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் புகார் தெரிவித்தார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரிக்கு மணல் கடத்தல் அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×