குவாரியில் அதிக மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்

திருவாடானை அருகே குவாரியில் அதிக மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்ட போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் சிறுகாம்பையூர் அருகே அரசு மணல் குவாரி அமைத்து அதிக அளவு மணல் எடுத்து வருவதை தடுத்து நிறுத்திடக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு ராமநாதபுரம் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அக்கீம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜீவா, திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மர் முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் கணேசன், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து, பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் கர்ண மகாராஜா, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், கீழக்கரை நகரத் தலைவர் அப்துல் லத்தீப், ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராஹிம், நகர தலைவர் ராஜா ரபிக், மண்டபம் ஒன்றிய மாணவர் சங்க செயலாளர் களஞ்சிய ராஜா, ராமேசுவரம் நகர செயலாளர் முருகன், மாவட்ட விவசாய அணி மாயழகு மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

மாவட்ட மாணவர் சங்க தலைவர் பாலகுமார் நன்றி கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

X

Maalai Malar
www.maalaimalar.com